Share

Showing posts with label எம்.எஸ்.சுப்புலட்சுமி. Show all posts
Showing posts with label எம்.எஸ்.சுப்புலட்சுமி. Show all posts

Jan 29, 2020

Two intelligent teen age girls,

வாலிப சுதந்திர மீறல்
When it's two intelligent teen age girls,
it's quirky,funny and rebellious.
Great Dancer Balaasaraswathy and
Outstanding singer M.S.Subbulakshmi
in their teens.

இந்த புகைப்படம் பாலசரஸ்வதி பற்றி அவருடைய மகளின் கணவர் டக்ளஸ் எம். நைட் எழுதியுள்ள நூலிலேயே உள்ளது.  
டக்ளஸ் தன் நூலில் இந்த புகைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
“பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல்.
தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். 
புகைப்படத்தின் கீழ் உள்ள குறிப்பு :
பதின்ம வயது தோழிகள் எம். எஸ். சுப்புலட்சுமியும் பால சரஸ்வதியும்
கட்டுப்பாடு மிகுந்த குடும்பங்களிலிருந்து வந்த இந்த இருவரும் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்தப் படத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டார்கள்.
மேற்கத்திய உடையணிந்தும், சிகரெட் பிடிப்பது போன்ற பாவனையுடனும்.


Sep 20, 2019

The Significant Other


திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips.
ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே
ஜி என் பி : ஜீவனமுனதன்பே
எம் எஸ் : என் அன்பே
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.
There is an optical illusion about every celebrity.
நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.
அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?
மதுரை மணி ஐயர்.
தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர்.
இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார். எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு ரொம்ப பிடிக்கும்.
அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.
மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார். ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.
பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி ஒரு தகவலை சொன்னார்.அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார். அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.
அந்த கல்லூரி முதல்வரின் பெற்றோர் மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு மதுரை வாசி அவர்.
கல்லூரி முதல்வர் சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு மாமி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வருக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.
ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு “ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.
நான் கேட்டேன். “ ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”
காலேஜ் பிரின்சிபால் சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other.
அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”
இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வரின் கண்கள் குளம் கட்டி விட்டன.
’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த அந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. ரொம்ப நன்னாயிருப்பா. எவ்வளவு பெரிய தியாகம்”
தி.ஜானகிராமன் “மணம்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது.
அந்த ’மணம்’ கதையில் வருகிற நீலா என்ற துணை நடிகை ஒரு Sex worker.
அவள் ஒரு இரவு இருட்டறையில் சந்தித்த மனிதர் குஷ்ட ரோகி என்பது மறு நாள் தெரிய வரும்போதே அதிர்ச்சியாகி அருவருப்பினால் தவிப்பாள்.
நீலாவுக்குநெஞ்சை அடைத்து , தொண்டை வலித்து, கண்ணீர் தளும்பி, உதட்டை கடித்து, அழுகை பீறிக்கொண்டு வரும்.
ஒரே ஒரு இரவுக்கே அப்படி.

Madurai Mani Iyer's significant other was a saint, precisely.

...

மீள் பதிவு

Jan 29, 2019

Significant other


தி.ஜானகிராமன் சாஸ்த்ரிய சங்கீத பாடகர்களை ஆக்ரமிக்கும் Eroticism பற்றி கவனப்படுத்துகிறார் : ''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும் போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தா தேவலை போல இருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒன்னொன்னா கரையும் ...............................................பணமும்,பேரும்,துர்நடத்தையும் எங்கே, எங்கே என்று வாயைப் பிளந்து கொண்டு விழுங்க காத்திருக்கும் கலை இது."
ஏதாவது ஒன்று கெட்டுப்போகும் என்றால் அது கட்டாயம் கெட்டுப்போகும்.

பரதநாட்டியம் பயின்றவர் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு சிலாக்கியமில்லையாம் .
பரதநாட்டியம் பற்றி திஜாவின் 'மலர் மஞ்சம் ' நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம் ,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும் ...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும் , இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும் . நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''
திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips.
ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே
ஜி என் பி : ஜீவனமுனதன்பே
எம் எஸ் : என் அன்பே
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.

There is an optical illusion about every celebrity.
நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.
அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?
மதுரை மணி ஐயர்.
தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர். இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார். எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு ரொம்ப பிடிக்கும். அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.

மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார். ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.
பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி ஒரு தகவலை சொன்னார்.அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார். அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.
அந்த கல்லூரி முதல்வரின் பெற்றோர் மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு மதுரை வாசி அவர்.
 கல்லூரி முதல்வர்  சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு மாமி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வருக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.
ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு “ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.
நான் கேட்டேன். “  ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”
காலேஜ் பிரின்சிபால்  சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other. அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”
இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வரின் கண்கள் குளம் கட்டி விட்டன. ’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. ரொம்ப நன்னாயிருப்பா. எவ்வளவு பெரிய தியாகம்”


தி.ஜானகிராமன் “மணம்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பது ஏனோ நினைவுக்கு வந்தது.

மதுரை மணி ஐயரின் அபிமான ராதையின் அன்பில் திளைத்த ஒரு பரிசுத்த குழந்தையாகவே அந்த கல்லூரி முதல்வரை அப்போது நான் பார்த்தேன்.

https://rprajanayahem.blogspot.com/2018/01/blog-post_29.html


Aug 18, 2009

ஆ.மாதவன் நாவல் "கிருஷ்ணப் பருந்து"

' மனசு மேலே போக போக ,உடம்பு என் பங்கு எங்கே ?என் பங்கு எங்கே ? என்று கேட்குமாம் . பருந்து எவ்வளவு உயரே உயரே பறந்தாலும் அதன் பார்வை கீழே கிடக்கும் செத்த எலி மேலே தான் இருக்குமாம் ' இதை தி.ஜானகிராமன் 'யது நாத்தின் குருபக்தி ' என்ற நேர்த்தியான சிறுகதையில் சொல்வார்.கதையில் வருகிற ராஜகுரு ஒரு தோட்டிபெண்ணோடு படுத்துகிடப்பார் . அது பற்றி தான் ஜானகிராமன் இப்படி சொல்கிறார் . நல்லவேளை ! தி ஜா இந்த கதையை ஐம்பது வருடம் முன் எழுதி விட்டார் .இப்போது என்றால் செத்த எலி , தோட்டிபெண் இரண்டையும் இணைத்து அலசி ஆராய்ந்து திஜாவை ஒரு தலித் விரோதி யாக சித்தரித்திருப்பார்கள் . சுந்தர ராமசாமி 'பிள்ளை கெடுத்தாள் விளை' கதை எழுதிவிட்டு அனுபவித்த வியாகுலம் கொஞ்சமா ?

1989 ல் தி .ஜானகி ராமனுக்கு ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டேன்.ஒவ்வொரு தபாலிலும் ஒரு ரூபாய் ஸ்டாம்பு ஒட்டி அந்த காலத்தில் ஒரு ஆயிரம் பேருக்கு அனுப்பினேன் . அப்போது ஆ .மாதவன் எனக்கு அவர்
1983
ல் வெளியிட்ட தி ஜா நினைவு மலர் ஒன்றை அனுப்பி கடிதம் எழுதியிருந்தார் . அவருக்கும் திஜாவிற்கும் இடையிலான அழகிய நட்பை பற்றி எழுதி அந்த நட்பு தான் இந்த தி ஜா நினைவு மலராக வெளிவந்தது என குறிப்பிட்டு இந்த நினைவு மலர் உங்களை மகிழ்ச்சியடைய செய்யும்
R.P. ராஜநாயஹம் ! என்றும் உற்சாகமாக குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது .
இருபத்தாறு வருடத்திற்கு முன் 1982ல் நான் படித்த கிருஷ்ணப் பருந்து நாவலும் தான் பசுமையாக நினைவில் இருக்கிறது !


கிருஷ்ணப் பருந்து நாவலில்
Protagonistசாமியப்பா நல்ல வாசகர் . நிறைய படிப்பவர் .
Widower .பரோபகாரி . பழைய பாடல் ரசிகர் . சாமியப்பா ரசிக்கும் பாடல் ஒன்று என்
Favourite!
" பிரேமையில் யாவும் மறந்தேனே !ஜீவனமுனதன்பே ! என் அன்பே "
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல் !
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே !
ஜி என் பி : ஜீவனமுனதன்பே !
எம் எஸ் : என் அன்பே !
ஆஹா !ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல். சகுந்தலை படத்தில் எத்தனை முறை இந்த இரண்டு சங்கீத மேதைகள் துஷ்யந்தன் -சகுந்தலையாக பாடுவதை பார்த்தாலும் ஆனந்தம் கூடிக்கொண்டு தான் போகும் .

நாவலில் ஒரு சின்ன கதை ஆ .மாதவன் சொல்கிறார் .
கவி உள்ளூரின் பக்தி தீபிகையின் கதை !
- சனந்தனன் பண்டித சிரேஷ்டன் . தபஸ்வி . இவன் 'நரசிம்ம அவதாரத்தை ' காணவேண்டும் என்று தீரா ஆசை கொண்டு கானகத்தில் கடும் தவம் செய்கிறான் . மிக கடுமையான தவம் . புற்று வளர்ந்து விடுகிறது .
சாத்தன் என்ற வேடன் இதை பார்த்து விட்டு சனந்தனன் மீது இரக்கம் கொண்டு கேட்கிறான் ' சுவாமி ! தங்களுக்கு ஏதேனும் மிருகம் தேவையானால் நான் கொண்டு வந்து தருவேனே .'
சனந்தனன் கூறுகிறான் ' நான் வேண்டுவது ஒரு மிருகத்தை தான் . நரசிம்மம் !'

வேடன் சாத்தன் உடனே தேடலை ஆரம்பித்து விடுகிறான் .
ஊண் இன்றி உறக்கம் இன்றி நரசிம்ம நாமாவளியுடன் காடு ,மலை ,குகை ,வெட்டவெளி ஒன்று விடாமல் தேடி அலைகிறான் ." ஏய் நரசிம்மமே ! என் மணி சிங்கமே !" கூவிகொண்டே தேடுகிறான் . ஏகாக்கிர தியானம் . சாத்தன் உடைய 'தேடல் தீ ' பாற்கடல் குளிர்ச்சியை சூழ்ந்து எரிக்க ஆரம்பித்தபோது பரந்தாமன் எழுந்து ' என்னடா இது சோதனை ! பாற்கடலுக்கு வந்த சோதனை !' என சலித்து கானகம் வந்து நரசிம்மமாகி சாத்தன் முன் காட்சி தருகிறான் .வேடன் உடனே ஒரு புற்கொடியாலே நரசிம்மத்தின் கழுத்தில் கட்டி சனந்தனன் தவம் செய்யும் இடத்திற்கு இழுத்து கொண்டு வருகிறான் . சனந்தனனுக்கு நரசிம்மம் மேல் கோபம் வந்து விடுகிறது .சடவு . வருத்தம் .
" என்னய்யா . என்னுடைய அந்தஸ்தென்ன , யோக்கியதை என்ன . இப்படி ஒரு வேடன் தானா உம்மை எனக்கு introduce பண்ணிவைக்கணும் ."

நரசிம்மம் சொல்கிறார் " சனந்தனா ! உன் தவம் ' பனி' யாகத்தான் உதிர்ந்ததேயன்றி என்னை இழுத்து வரும் வெள்ளமாக பொங்கவில்லை .வேடன் சாத்தன் என்னை ஆத்மார்த்தமாக தேடினான் . அதனால் நான் கட்டுப்பட்டேன் ."

Snobbery க்கு சரியான சவுக்கடி !

சாமியப்பா கடைசி அத்தியாயத்தில் வேலப்பன் நாயருடைய பெஞ்சாதி ராணி மீது கொள்ளும் மையல் பருந்தின் தேடல் போன்றது . ஆனால் நரசிம்ம அவதாரம் போன்று ரொம்ப Instant !ராணி தன்னுடைய கணவன் வேலப்பன் விடுதலையாக சாமியப்பாவின் உதவியை வேண்டி தன்னையே அவருக்கு தர உடன்படும்போது சாமியப்பா உடனே , உடனே திருந்தி விடுகிற மாதிரி தெரிகிறது .

...

Nov 23, 2008

மீரா படமும் பாரத ரத்னா விருதும்


கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் எம் எஸ் சுப்புலக்ஷ்மி நடித்த "மீரா" படத்தின் ப்ரிவியூ பார்த்து விட்டு வெளியே வரும்போது,
சர் டி விஜயராகவாச்சாரியார் கேட்டார் : “ Now do you surrender the title ‘the nightingale of India’?”
சரோஜினி நாயுடு பதில் :“I have already done it.”

"மீரா " படம் பற்றி

இந்த படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி தவிர இன்னொரு பாரத ரத்னா
சின்ன எக்ஸ்ட்ரா ரோலில் நடித்திருக்கிறார். டி எஸ் பாலையா வின் உதவியாளராக தாடி வைத்த இளைஞர் ஒருவர் வருவார். அவர் தான் இன்னொரு பாரத ரத்னா. எம் ஜி யார்!

பாரத ரத்னா அவார்ட் பற்றி

எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின் இரண்டு வருடம் கழித்துத் தான் ஒரு மகத்தான மனிதருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது!
பி ஆர் அம்பேத்கர்!
எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின்னால், மூன்று வருடம் கழித்துத் தான்
இன்னொருவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது .யார் தெரியுமா ?
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்!

No comments!