Share

Showing posts with label பாதசாரி. Show all posts
Showing posts with label பாதசாரி. Show all posts

Jun 12, 2017

எடடா!


ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.

பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.

பாரதிதாசனுக்கு உணவு பரிமாறியிருக்கிறார்கள்.
அதில் ஒரு ஈ கிடந்திருக்கிறது. எல்லோரும் பதற்றமாகியிருக்கிறார்கள்.
பாரதி தாசன் அந்த ஈயை தூக்கி போட்டு விட்டு சாப்பிட்டிருக்கிறார்.


”என்னய்யா? கோழி, ஆடு, மீனுன்னு என்னன்னமோ சாப்பிடுறோம்.
ஒரு ஈ உணவில் கிடந்தால் என்ன கெட்டுப்போய் விட்டது?” என்றாராம்.


……………………………



அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா (பின்னாளில் இவர் கல்லூரி முதல்வராய் இருந்தார்) தமிழ் வகுப்பில்
“ கொலை வாளினை எடடா! கொலை வாளினை எடடா......!
கொலை வாளினை எடடா!
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா!”
என்று உணர்ச்சிகரமாக பாரதி தாசன் கவிதையை சொன்ன போது
நான் வயதின் துடுக்குத்தனத்தோடு சொன்னேன் : “ஐயா! டா போடாதீங்க.. எடடான்னு. கொஞ்சம் மரியாதையா கொலை வாளினை எடுங்கன்னு சொல்லுங்க..”


……………………….

"எண்ணம் தானே கொப்பளிக்கிறதா, இல்லை நான் கல் விட்டெறிகிறேனா என்பதிலேயே தெளிவில்லை என்னத்தைச் சொல்ல" – பாதசாரி

.................................

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html