Share

Jul 28, 2024

மூன்று ஜென்மம்

கோகுல ஸ்ரீவத்ஸன்:

சமீபத்தில் படித்தது. 
திரு R.P. ராஜநாயஹம்  அவர்களுடைய மூன்று புத்தகங்கள். 
ஒரு மனிதனுக்கு இவ்வளவு சுவாரஸ்ய அனுபவங்கள் வாய்க்குமா என்று பிரமிப்பை தரும் பத்திகள்.  ஒரு சராசரி தமிழனுக்கு மூன்று ஜென்மம் வேண்டும் இது போன்று அனுபவங்கள் ஏற்பட..
No exaggeration!! Hats off sir! 

இதில் நான் சந்தோஷப்படும் விஷயம் இதை நான் படிப்பதற்கு முன் ராஜநாயஹம் அவர்களுடன் பேசியது. 🙏

Gokula Srivathsan 

 Gokula Srivathsan 

Ashok Sai Ramana Thamburaj

Jul 27, 2024

பூச்சி ஆச்சாரம்

பூச்சி ஆச்சாரம்.
Cockroaches believe in ritual.

Spiders also have different rituals.
 Mating ritual,
Courting ritual.

வேத ஆச்சாரம்?
வைணவ ஆச்சாரம்?
சைவ ஆச்சாரம்?
தட்சிண ஆச்சாரம்?
வாம ஆச்சாரம்?
சித்தாந்த ஆச்சாரம்
கௌலா ஆச்சாரம்?

"Lawless are they that they make their wills their law."
- Shakespeare 
in 
'The two gentlemen of Verona'

பிடிக்காத விஷயம்

பிடிக்காத  விஷயம் எல்லோருக்குமே உண்டு.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பழைய நடிகர் ஸ்ரீகாந்த்" Non veg சாப்பிடுகிற பெண்களை  பார்க்க பிடிக்காது. மாமிசக்கறி, எலும்பு கடிக்கிற பெண்கள்."

துவேஷம்.
இப்படி  இப்போதெல்லாம் யாரும்  சொல்ல முடியாது. 

கமல் ஹாசன்  " பெண்கள் லிப்ஸ்டிக் போடுவது பிடிக்காது"

உடன்பாடு.
லிப்ஸ்டிக் இல்லாமலே பெண்கள் லட்சணமாக இருக்கிறார்கள். லிப்ஸ்டிக் தேவையேயில்லை.


Jul 26, 2024

காம்ரேட் பீலா..

நகரின் பிரதான பகுதியில் ஓடக்குப்பம். 
புறாக்கூடு, 
எலி வளை மாதிரி வீடுகள்.
மிக பிரமாண்டமான Church. அதை ஒட்டியவாறு தான் குப்பம் துவங்குகிறது. 
குப்பத்தின் குறுகிய தெரு வழியாக போனால் நகரின் பிரபலமான Temple.
சாமிங்கல்லாம் வெகு சொகுசு.
மனுஷங்க பெரும் அவதியில்.

'யோவ், இந்த மாதிரி 
சிகப்பு சிந்தனையெல்லாம் அர்த பழசு'

எல்லா ஊர் Churches அருகிலும், எல்லா temples சுற்றிலும் இப்படி தானே.
இதில் என்ன செய்தி?

பல தொழில் நிறுவனங்களின் உள்ளே பிரமாதமான சொகுசு கோயில்கள் இருக்கும். வேலை பார்க்கிறவர்களுக்கான கழிப்பறை முகம் சுழிக்கும்படியாக.

'காம்ரேட் பீலா.. 
இடதுசாரி சேதியெல்லாம் இப்ப யார்யா கேட்டா?'

Jul 25, 2024

Strange reply

Strange reply அடிக்கடி யாரிடமிருந்தாவது கேட்க நேர்கிறது.

"இப்ப இந்த வருஷ விகடன்  தீபாவளி மலர்ல நீங்க லாரி பேக்கர் பத்தி எழுதியிருந்தீங்கள்ள? 
இதே விகடன் தீபாவளி மலர்ல 
  எஸ். வி. ரங்காராவ் பற்றி கட்டுரை எழுதியிருக்கேன் "

நாசர் விசித்திர பதில் "லாரி பேக்கருக்கும், எஸ். வி. ரங்காராவுக்கும் என்ன சம்பந்தம்??"

இது போல் நடிகர் ராஜேஷிடம் அவரறிந்த ரெண்டு பேரை குறிப்பிட்டு கேட்ட கேள்வி
 " இவங்க மொபைல் நம்பர் கிடைக்குமா?"

கிடைத்த விநோத பதிலான கேள்வி 
" என்னோட வேலய அப்புறம் யார் பாக்கறது?"

குழப்பமா ஏதாவது எங்காவது இப்படி அர்த்தமில்லாமல் கேட்க நேரும் போது 'புரியல என்ன சொல்றீங்க?'ன்னு 
எப்போதுமே விளக்கம் தெரிந்து கொள்ள திரும்ப எதுவும் விசாரிப்பதில்லை.


"The pendulum of the mind oscillates between sense and nonsense, not between right and wrong."
- Carl Jung

Jul 24, 2024

காணாமப் போயிட்டு சிரிப்பென்ன வேண்டியிருக்கு

ஊட்டி வரை உறவு
 நாகேஷ் டாக்டர் " என் ஆஸ்பத்ரிக்கி யார் வந்தாலும் நிம்மதியா 'போகணும்' "

பாலையாவும் நாகேஷும் 'செம' லெவல்.

நியூஸ் பேப்பரில் 'காணவில்லை' புகைப்படம் பார்த்தவுடன்
" காணாமப் போயிட்டு சிரிப்பென்ன வேண்டியிருக்கு"

வாக்கிங் போது கண்ணில் தெரிந்த வேன்.
" பெரு நகர மாநகராட்சி மின் துறை பணிக்காக ஸ்ரீ குபேர லக்ஷ்மி துணையென்ன வேண்டியிருக்கு "

ஃப்ரெஞ்ச் ஓவியர் துலூஸ் லாட்ரெக்

ஃப்ரெஞ்ச் ஓவியர் துலூஸ் லாட்ரெக். 
போஸ்ட் இம்ப்ரெஸனிஸ்ட்.



அபூர்வ சகோதரர்கள் சர்க்கஸ் 'அப்பு' போலத்தான் தோற்றம். நிறைய சர்க்கஸ் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.
பாரீஸ் நாடக உலகத்தோடும் அளவு கடந்த ஈடுபாடு. 

19ம் நூற்றாண்டில் வளமான செல்வந்த பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த லாக்ட்ரெக். 
ஏனோ பதின்மூன்றாம் வயதில் ஒரு காலில் தொடை எலும்பை உடைத்துக் கொண்டாராம். பதினான்காம் வயதில் மற்றொரு தொடை எலும்பையும். 
உயரமாக வளர முடியாமல் ஆகி விட்டது.

Sex workers ஓவியங்கள் வரைவதில் பெரும் கவனம். 
கலாச்சார, பண்பழிவாக முகச்சுளிப்புகள்.
விபச்சார உலக ஸ்த்ரிகளோடு மிகுந்த நெருக்கம்.

ஃப்ரெஞ்ச் கவிஞர் ஷார்ல் பாதலேர் அனுபவங்களை ஒத்ததாக லாட்ரெக் பற்றியும் தோன்றுகிறது.

Get Drunk
One should always get drunk.
You must get drunk without cease.

Who cares if you come from Paradise or Hell’

‘Come from Satan, come from God
- who cares! 

- Boudelare

Similarities - Complications due to alcoholism and syphilis.

46 வயதில் பாதலேர் மரணம்.
36 வயதில் லாட்ரெக் சாவு.

2005 ல் லாட்ரெக் வரைந்த பெண் சலவைத் தொழிலாளி ( Washer woman - Laundress)
மிக மிக பெரும் தொகைக்கு ஏலத்தில் போயிருக்கிறது.  ரிக்கார்ட். 
22. 4 million dollars.

https://www.facebook.com/share/p/zH4mjiaB9bM3dKR4/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/jrSfruBhCq8RyVZg/?mibextid=oFDknk

Jul 23, 2024

Seated Clowness

Seated Clowness
Cha - U - Ka  - U
Painting by  Toulouse Lautrec

கோமாளி என்றாலே ஆண் கோமாளிகளைத்தான் சர்க்கஸ்களில் பார்த்திருக்கிற நிலையில் 
ஃப்ரஞ்ச் ஓவியர் துலூஸ் லாட்ரெக் வரைந்த 
Clowness ஓவியம்  பார்க்க கிடைத்தது.
'சா-யு- கா- ஓ' என்பது இந்த பெண் கலைஞர் பெயர். Cha-U-Ka-O. 
பிரபலமான டான்சர். க்ளௌனஸ்.

Seated Clowness 

Dared to wear a foolish Clown face.

Jul 22, 2024

பூக்குட்டி பிறந்த நாள்

https://youtu.be/-52VePeKlmU?si=a_ENhGpZ7oU8Qpb

பூக்குட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

Ashwath Camera photography
Wonderful. Extraordinary.
Great!

சினிமா எனும் பூதம் நூல்


கீதப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன்:

சினிமா எனும் பூதம் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத புத்தகம், 

இப்புத்தகம் வாங்குபவர்கள் இரண்டு பிரதி வாங்குவது நன்று, ஒன்று யாராவது படிக்கிறேன் என வாங்கிப்போனாலும் ஒன்று நாம் படிக்க தங்கும், இப்புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் திரும்பத் தரமாட்டார்கள் என்பது கண்கூடு, 

காரணம் ஒவ்வொரு திரை ஆளுமையைப் பற்றிய ஆசிரியரின் தனித்துவமான பார்வை மற்றும் சொற்சிக்கனமான நடையில் எழுதிய ஆழ்ந்த தீர்க்கமான வரிகளைக் கொண்ட கட்டுரைகள் அவை, 

அதற்குள் எத்தனை எத்தனை cross reference, எதுவும் திணித்தலின்றி இயல்பாக பட்டறிவால்  எழுதப்பட்டவை, 

சென்னையின் அண்ணா நூலகம் உள்ளிட்ட பெரிய நூலகங்களில்  சினிமா எனும் பூதம் படிக்க ஆவண செய்ய வேண்டும்,

இனி சினிமா பற்றி புத்தகம் எழுதுபவர்கள்  தம் சினிமா பற்றிய புத்தகத்தை மீள் பிரசுரம் செய்ய விழைபவர்கள் இந்த புத்தகத்தை படித்து விட்டு புத்தகம் வெளியிட வேண்டுமா? அது இத்தனை தரமாக வருமா?  என நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்.

இதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் சிறிதும் கிடையாது, 
ஆட்டுப் புழுக்கை போல ஆண்டுக்கு ஆண்டு சித்திரை மாதம்  புத்தகங்கள் வெளி வருகின்றன,
அதில் இத்தனை தரமாக தனித்துவமாக புத்தகம் வருவது துர்லபம்.

முன்பு சினிமா எனும் பூதம் படித்துவிட்டு எழுதியது இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159287132876340&id=750161339

Jul 21, 2024

R.P. ராஜநாயஹம் - சினிமா எனும் பூதம்

உண்மைச் 
சம்பவங்களைப் புனைவின் வசீகரத்துடன் சொல்ல  அசாத்தியப் படைப்பூக்கம் வேண்டும். 
அது ராஜநாயஹத்துக்கு இயற்கையாய் வாய்த்திருக்கிறது. அசாத்திய திறமைசாலிகளின் தோல்விகளைக் காவிய சோகத்துடன் பதிவு செய்துள்ளார்
(இதில் ராஜநாயஹமும் ஒருவர்தானே).

 வாழ்ந்து வீழ்ந்தவர்கள், வீழ்ந்தவரைத்தாங்கியவர்கள்,
தாங்கியவரைச் சாய்த்தவர்கள், 
ஊதிப் பெருக்கப்பட்ட சித்திரக்குள்ளர்கள், 
பல்கலை வல்லுநர்களாக்கப்பட்ட கோமாளிகள்
 என்று இப்பூதத்தின் திருவிளையாடல்களை ஒரு காவியச் சுவையுடன் எழுதியிருக்கிறார்.

'சினிமா எனும் பூதம்' வெகுகாலம் பேசப்படும் புத்தகமாயிருக்கும்.

பீச் ரோட்டில் திருமணம்

பெசண்ட் நகர் பீச் வாக்கிங் போகும் போது 
 ரோட்டில் 
 மங்கல காட்சி.

மணமுடித்து புதுப்பெண் காலில் மெட்டி அணிவிக்கும் புது மாப்பிள்ளை.

மணமகன் மெட்டி மாட்டிய பின்  சாஸ்த்ரப்படி புதுப் பெண்ணுக்கு  வானத்தைக் காட்டி
'அதோ பார் அருந்ததி' சொல்வதை
பள்ளியில் ஆசிரியர் ஜெயராமய்யர் 
mono actingல் நடித்தே காட்டுவது பசுமையாக நினைவில்.
அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதோ இல்லையோ, வானத்தைக் காட்டி சொல்கிற சடங்கு.

மனம் நிறைந்த வாழ்த்துகள்

'Poor and Content is rich, and rich enough' 
- Shakespeare
Othello


'How apt the poor are to be proud'
- Shakespeare
Twelfth Night 

.....



Thoatta Jegan comment : 

"Sir, around 2005-2006.. I toured Kerala.. In Thekkadi, I saw a marriage in a vinayakar temple.. மொத்தம் 4 பேர் தான்.. பையன், பையன் அப்பா, பொண்ணு, பொண்ணோட அம்மா.. மலையாளி.. ஒரு நிமிசத்துல கல்யாணம்.. கலங்கிட்டேன்.. கழுத்துல மாலை.. வெறும் திருநீறு வச்சுவிட்டான்.. அதான் கல்யாணம்.. மாத்தி மாத்தி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டாங்க.. பார்த்த உடனே, கலங்கிட்டேன்.. உலகம் சுற்றுவதே நின்னது போல இருந்துச்சு.. மலை வாழ் மக்கள் போல இருந்தாங்க.. என்னடா இவ்வளவு தானா கல்யாணம், இதுக்கேன் இவ்வளவு ஆடம்பரம்னு got stunned.. அப்ப நூறு ரூபா தாள்கள் தான் அதிகம்.. கூப்பிடாத விருந்தாளியா 500/- கொடுத்தேன்.. அப்ப அது அதிகம் தான்.. அவங்களும் கலங்கிட்டாங்க.. அந்த பையனுக்கும் என்னை விட சின்ன வயசு தான் இருக்கும்.. இதை பார்த்தவுடனே அது நியாபகம் வந்திடுச்சு.. A great beauty is in simplicity..."

ராஜநாயஹம் பதில்:

அருமை, பிரமாதம் ஜெகன்.

இந்த புதுப்பெண் புது மாப்பிள்ளை இதுவே தான். நீங்கள் எழுதியபடி தான். 
விரித்து எழுத விருப்பமில்லாமல் மூன்றே வரிகளாக.
வாழ்த்தி ஆசி வழங்கிய போது கண் கலங்கி குரல் தழுதழுத்தது.
ஐம்பது ரூபாய் தான் கொடுக்க முடிந்தது.

இருபது வருடங்களுக்கு முன் நீங்கள் கொடுத்த 500 ரூபாய் பெருந்தொகை.

...

Jul 18, 2024

சந்தேகம்

புக்ஃபேர்

தன் புத்தகம் விலை கொடுத்து வாங்கப்படும் போது
மாஞ்சி மாஞ்சி கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார் எழுத்தாளர்.

அவருடைய நூலொன்றை விலைக்கு வாங்கிக் கொண்ட பின் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது.
" எழுத்தாளரிடம் கையெழுத்து 
வாங்காமல் கூட
ஸ்டாலில் இருந்து 
வெளியே போகலாம் தானே?"

R.P.ராஜநாயஹம் மணல் கோடுகளாய்..ஜெய்ரிகி வெளியீடாக

https://www.facebook.com/share/r/L9ToXimQSUeG1H61/?mibextid=oFDknk

R.P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்.." நூல் சாய் ரமணா ஜெய்ரிகி வெளியீடாக

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் R.P. ராஜநாயஹம் "தழல் வீரம்"

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில்
ஜூலை 21, 2021
ஞாயிற்றுக்கிழமை 


R.P. ராஜநாயஹம் எழுதிய
"தழல் வீரம்"
நூல் பற்றி
சிவகுமார் கணேசன் பேசுகிறார்.


I'm humbled

I’m humbled


பெருமை என்பது முறம். புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.

I will survive even Praise.

கட்டுரை என்பதின் சம்பிரதாய வடிவத்தையே                  எழுத்தில் உடைத்தவன் நான்.

2009ல் பஞ்சரு பலராமன் : என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.

நான்கு வருடங்களுக்கு முன் டிசம்பர் 1ம் தேதி ’கூத்தாடி’ ட்விட்டரில் எழுதினார்: இவர் இணையத்தில் இல்லையே என நான் வருத்தப்பட்ட ஒரு நபர் சுஜாதா. இவர் இருக்கிறாரே என அகமகிழ்ந்தது ராஜநாயஹம் சாரைப் பார்த்து. 

லக்கி கிருஷ்ணா:  துணுக்குக்கும் கட்டுரைக்கும் இடையிலான வடிவம் ராஜநாயஹத்துக்கு எப்படி சாத்தியமாகிறது என தெரியவில்லை. எழுதுவதற்கு கடினமான வடிவம் இது.
பழைய டயரியை புரட்டி வாசிப்பதைப் போன்ற சுகமான சுவாரஸ்யம் R.P.ராஜநாயஹம் எழுத்துக்களில் கிடைக்கிறது.
தோழர் ராஜநாயஹத்திற்கு ஒரு தனித்துவம் வாய்த்திருக்கிறது.
மேலும் R.P.ராஜநாயஹம் வலையின் வெற்றியே அவர் தேர்ந்தெடுக்கும் எளிமையான மொழியில் இருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி S : எத்தனையோ ஆயிரம் பேர்கள் தமிழில் வலைப்பூ வைத்துக்கொண்டு பதிவுகள் எழுதுகிறார்கள்.
 ஆனால் ஒரு வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும்  என்பதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால், தமிழில் ஒரு பத்து வலைப்பூ தேறுமா? 
சுருங்கச்சொல்லி, நெத்தியடியாக
 ’பத்தி எழுத்து’ என்றால் அது இப்படித்தான்
 என்று ஒரு உதாரணம் காட்ட வேண்டுமா? இலக்கியம், கவிதை, சினிமா என்று பல தளங்களிலும் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிற ஒரு பதிவரை காட்ட வேண்டுமென்றால் அது R.P.ராஜநாயஹம் ஒருவர் தான்!

ஆல் தோட்ட பூபதி: அனுபவம் எனும்
 அழகிய குழந்தையை 
நீங்கள் அலு(ங்)க்காத நடையில் 
அழைத்து செல்கிறீர்கள்!

Kana Praba: என்ன எழுத்துய்யா… 
அசுரன் ஐயா நீங்கள்!

Selva/வினையூக்கி: The funny thing about ‘Miracles’ is that they happen! R.P.Rajanayahem is one such! You are an Information INTELLECT அமுதசுரபி!

பிரபல ரவுடி : உங்க ப்ளாக்கை 2008ல் இருந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன். 
எழுத்து ராட்சசன்ங்க நீங்க… Awesome

 நல்லவன் : உங்க ஞாபக சக்தி ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும் ஆச்சரியப்படுத்துகிறது.

சித்ரா சம்பத்: ராஜநாயஹம் ’பயன் காணா மேதை’!

ராஜரத்தினம் : இந்த மனுஷனுக்கு (R.P.ராஜநாயஹம்) தெரியாத ஒரு விஷயத்தை கடவுள் கூட தெரிஞ்சிக்க ஆசைப்படமாட்டார்!

ஜெகன் T: சந்தோஷமோ, சோர்வோ – அதிலேயே விழத்தோன்றுகிறது. சந்தோஷம் கூட்டும் சோர்வை குறைக்கும் அந்த அதிசயம் R.P.ராஜநாயஹம் அவர்களின் எழுத்து.

கெக்கெ பிக்கினி : ராஜநாயஹம் பத்தி எழுத்தாளராக தனக்கென தனி இடம் பிடித்தவர். சினிமாச் செய்திகளை சொல்லும் விதமே தனி.

(சு)வாசிக்கப்போறேங்க! : வலைப்பதிவுகளின் வடிவமும், வெளிப் படுத்துகிற கலையும், புத்தகங்கள், கவிதை எழுதுவதை விட வேறானது. அதைக்கண்டு கொள்வதற்கு ஐம்பதாண்டுகள் போக வேண்டாம். இப்போதே இங்கேயே R.P.ராஜநாயஹம் ஒருவர் இருக்கிறார்!
 அவரை விட வலைப்பதிவுகளைத் திறமையாகக் கையாளத் தெரிந்த வித்தைக்காரரைப் 
பார்ப்பது மிகவும் கடினம்.

மகிழ்வரசு : கண்டிப்பா இணையத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ராஜநாயஹம். 
அப்பப்ப இவரை நான் quote பண்ணுவேன்.

SKP Karuna : உண்மை. இணையத்தில் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் தான். எத்தனை அனுபவம்! எத்தனை நினைவாற்றல்!

செந்தழல் ரவி: R.P.ராஜநாயஹம் இனிமேல் ஒரு நாவல் எழுதினால் அது சாகித்ய அகாடமி பெறக்கூடும்.

Prathipa :எல்லாவற்றையும் பகுத்தறிந்து எழுதுவது சாதாரணம் இல்லை! R.P.ராஜநாயஹம் சார் ப்ளாக் படிங்க. You will learn a lot!

UmamaheshVaran Lao Tsu :  ராஜநாயஹம் ஓர் அற்புதன். அவரை நான் காதலிக்கிறேன். இளவயதில் அந்த Carnal Thoughts
 படிக்காத நாளே இல்லை!

Covai M Thangavel :தமிழ் நாட்டுச் சாராயம் போல இருப்பவர்கள் எல்லோரும் இலக்கிய கர்த்தாக்கள் என்று அலறிக் கொண்டிருக்கும் போது அருமையான உடலுக்கும் உள்ளத்துக்கும்
 உவகை தரும் ஒயின் போத்தலான நீங்கள் அமைதியாக இருப்பதுதான் வேடிக்கை. 
எழுத்தாளர்களின் உச்சம் நீங்கள் தான்.
 இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். உங்களின் அருகில் நிற்க கூட 
எந்த தமிழ் எழுத்தாளருக்கும் தகுதி இல்லை என்றே நினைக்கிறேன்.

https://www.facebook.com/share/p/9YJqapKCTJsm7JzC/?mibextid=oFDknk

.......

Jul 17, 2024

கரும்புச்சாறு


கரும்புச்சாறு கடையில்.
உச்சி வெய்யில்.
பெரியவர் "எங்கிட்ட அஞ்சு ரூபா தான் இருக்கு" 
கடைக்காரர்" இருவத்தஞ்சு ரூபா, கப்புக்கு"

"பாண்டிச்சேரியில இருந்து நடந்தே வர்றேன்."
இது அடையார்.

உண்மையோ பொய்யோ?

"அவருக்கு கரும்பு சாறு குடுங்க"
இருபத்தஞ்சு ரூபா கடைக்காரரிடம் கொடுத்தேன்.

ரசித்து குடிக்கும் போதே பலமான யோசனை. 


.....

"Sorrowing Old Man (At Eternity's Gate)" is an oil painting by Vincent van Gogh, created in May 1890. 

Van Gogh's expressive brushstrokes and vibrant colors highlight the man's sorrowful posture and emotional state. 

This artwork reflects van Gogh's own struggles with mental health and his empathy for human suffering, making it a powerful and poignant piece.

Jul 16, 2024

வேடிக்க

கதிட்ரல் ரோட்டில் வரும்போது 
போயஸ் கார்டனில் நுழைந்து ரஜினி பங்களா, தனுஷ் பங்களா, ஜெயலலிதா பங்களா, சசிகலா பங்களா
எல்லாம் 
டாக்ஸி டிரைவர் கோவிந்தராஜ் காட்டினார்.
"வேடிக்க பாக்றதே எப்பவும்
 ரொம்ப ஜாலியா தான் இருக்கு."

..


ஏர் ஹோஸ்டஸ் வேலய வேண்டாம்னு ஒதறிட்டு ஓட்டல்ல வேல தேடி வரலாமா?என்னா லாஜிக்கு.
வசனம்லா டயலாக்கா இருக்கு.

க்ளைமாக்ஸ் வர படம் நல்ல வேடிக்க.

படம் பிச்சிக்கிட்டு போயிருக்கு.

வாணிஸ்ரீக்கென்னங்க. நம்ம தங்காத்து தங்கச்சி.
ரமாப்ரபா கூட
 தங்கப் பல்லு தங்காத்தோட
 தங்கச்சி தான்.

Jul 15, 2024

Sculpture by Bernini - The Rape of Proserpina

Sculptor Artist Gian Lorenzo Bernini 

 What Shakespeare is to drama, Bernini may be to sculpture. Considered a worthy successor of Michael Angelo.


'The Rape of Proserpina' is made of rare  marble, and was originally placed on a since-destroyed pedestal with a poem by Maffeo Barberini.

(Unable to trace and find Maffio Barberini poem)

This was a poem written by AI 

"The Abduction of Proserpina"

'In the serene and flowery fields of spring, young Proserpina wandered with delight, her laughter echoed where the flowers bring, the promise of the season, pure and bright.

But Fate had woven threads of darker kind, for Pluto rose from shadows deep below, with iron grasp, his claim on her defined, and to his realm of night he made her go.

The Earth lamented, Ceres’ grief was vast, as barren fields replaced the verdant green, the sun withdrew, and winter's chill held fast, till Proserpina was once more seen.

Yet in the cycle, time and fate entwine, for she returns, but bound to both domains, her presence marks where life and death align, and in her story, nature's truth remains.'
- Al 

 This sculpture has been praised for its realism, as the marble mimics other materials like flesh. 

A trickle of tears contributes to the expressiveness of Proserpina's face.
Proserpine’s genuine resistance is traced in all her movements.

Italian artist Gian Lorenzo Bernini, executed between 1621 and 1622.  Finished when Bernini was just 23 years old, depicts 'the abduction of Proserpina', who is seized and taken to the underworld by the god Pluto.

Jul 13, 2024

R.P. ராஜநாயஹம்

R.P. ராஜநாயஹம் பற்றி

மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர்.
அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்.

கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.

அசோகமித்திரன் : நீங்கள் என்னை 
மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். 
தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.

டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: 
அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். 
சரி துணைவேந்தரைத் தவிர 
வேறு யார் பட்டம் கொடுக்க முடியும்?

சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம்.
ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம்.
அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர்! இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

எஸ்.ராமகிருஷ்ணன் : ராஜநாயஹம் ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்.

யமுனா ராஜேந்திரன் அவர்கள் ராஜநாயஹத்துக்கு சூட்டிய பட்டம்
 - ‘எழுத்தாளரின் எழுத்தாளர்’

பாரதி மணி : 'அண்டி உறப்பு 'ராஜநாயஹம்.
சில உண்மைகளையும்,
 தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், 
ஒரு தைரியம் வேண்டும்.
அந்த நெஞ்சுரம், ‘தில்’, 
மலையாளத்தில் ‘அண்டி உறப்பு' 

..............

Jul 12, 2024

அனுகூல தாம்பத்யம் பூலோக சொர்க்கம்


06.07.2024 Evening 

Ragulan daughter grand Marriage Celebration 

Kumbakonam 

OVM resorts

அனுகூல தாம்பத்யம்
பூலோக சொர்க்கம் 

Jul 7, 2024

பொன்னாடை

06.07.2024 
11 am
கும்பகோணம் 

சுகுமார் என்ற 
R. நாராயணசாமி பொன்னாடை போர்த்தி ராஜநாயஹம் மீதான அன்பு, அபிமானம்.
 
ஓய்வு பெற்ற சிட்டி யூனியன் பேங்க் சீனியர் மேனேஜர். கும்பகோணத்துக்காரர்.

உற்ற நண்பர். ஒரே அறையில் இருந்திருக்கிறோம்.
அன்போடு "தம்பி" என்பார்.
1981ம் ஆண்டிற்கு பிறகு பார்த்ததில்லை.
2024ல் சந்திப்பு.

Jul 6, 2024

Jul 4, 2024

கும்பகோணம் - திருவையாறு

தி. ஜானகிராமன் படைப்புகளில்                                        முக்குளித்து எழுந்த ராஜநாயஹம்
கும்பகோணம் பார்த்ததில்லை.

கர்நாடக சங்கீத பரம ரசிகன் ராஜநாயஹம்.
திருவையாறு பார்த்ததில்லை.

பார்க்கிற பாக்யம் வாய்த்ததேயில்லை.


எல்லாமே ரொம்ப முக்கியம் தான்..
ஆனா எதுவுமே அவ்வளவு முக்கியமில்ல.

https://www.facebook.com/share/p/2wnVmTZYcuTeuAVR/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/rf9JaPVmmpWaA74n/?mibextid=oFDknk

Jul 3, 2024

R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள் மூன்று

R.P. ராஜநாயஹம் மூன்று புதிய நூல்கள்

1. டிசம்பர் மார்கழி ஜனவரி

2. தித்தித்தது

3. தூறலாய் சாரல் 

மூன்று புத்தக COMBO முன்பதிவு விரைவில் வெளியிடப்படும்....

அசோக் சாய் ரமணா 
ஜெய்ரிகி பதிப்பகம் வெளியீடு 


கேக்குமா கேக்காதா


கேக்குமா கேக்காதா 


தெய்வத்திற்கு கருணை என்றொரு பேர் எதற்கு 

Jul 1, 2024

சாக்கையார் கூத்து

சாக்கையார் கூத்து

கூத்துப்பட்டறை ந. முத்துசாமி  'Bodyக்கு Intelligence இருக்கு..' 

Light is also an actor. Light also interprets.

"இரண்டு மாதவ சாக்கியார். ஒருத்தருக்கு பூனக் கண்ணு. இன்னொருத்தருக்கு கறுப்புக் கண்ணு" 

மணி மாதவ சாக்கியார். மாதவ சாக்கியார்.

'தொலைவிலிருந்து வருபவனை பக்கத்தில் வரும் வரை பார்ப்பதை' பாவனையில் காட்டியவர் மாதவ சாக்கியார்!

முத்துசாமி திடீர் திடீரென தன் மனதில் ஓடும் காட்சிகளை ராஜநாயஹத்திடம் வெளிப்படுத்துவார்.

ந. முத்துசாமி பொக்கிஷம். 
ராஜநாயஹத்திற்கு பழகக்கிடைத்த பெரும் பாக்யம்.



சாக்கையார் கூத்து கேரள கலை.
கேரள பிராமணர் கலை.
அம்பலவாசிகளான நம்பியாசான், புஷ்பகன்(பூப்பள்ளி), சாக்கியர், பிராமணி அல்லது தெய்வம்படி, அடிகள், நம்பியார், பிஷாரடி, வாரியர், நாட்டுப்பட்டன், தீயாடுன்னி, குருக்கள், பொதுவாள். 

( சோழ நாட்டிலும் சாக்கியார் கூத்து இருந்திருக்கிறதாம்)

ராவணன், அனுமன், விபீஷணன்.
தொன்ம கதாபாத்திரங்கள.

சிலப்பதிகாரம் சாக்கையார் கூத்தை குறிப்பிடுகிறது. 

கண்ணகிக்கு கோயில் கட்ட இமயத்தில் போரிட்டு ஜெயித்து நாடு திரும்பிய செங்குட்டுவன் 
சௌஜன்யமாய் சாக்கியார் கூத்தை பார்த்து ரசித்திருக்கிறான்.

'பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்'.

கூத்தில் சாக்கையார் சம்ஸ்கிருத பாயிர சாற்று கவி பாடும்போதும், கடைசியிலும் பின் பக்கம் இடியோசை முழக்கும் மிளாவு  தட்டும் நம்பியார். முழவு இசைக்கருவி.


'நங்கையர்' ( singular )என்ற ஒரு பெண் சாக்கையார் முன் விக்ரகம் போல ஆடாது அசையாது முக பாவமற்று உட்கார்ந்திருப்பாள். அவள் புன்னகை செய்து விட்டால் உடனே சாக்கையார் கூத்து நிறுத்தப்பட்டு விடும். Pack Up!