Share

Showing posts with label காமராஜர். Show all posts
Showing posts with label காமராஜர். Show all posts

Jul 18, 2018

”பழைய கணக்கு”


தி.மு.கவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னார். 
அ.தி.மு.க திண்டுக்கல் இடைத்தேர்தல் அமோக வெற்றிக்கு பின் காமராஜர் வெறுத்துப்போய் 
“ போங்க.. நாட்ட கூத்தாடி கிட்ட கொடுங்க...அவன் கூத்தியா கிட்ட கொடுத்துட்டு போவான்” என்று சொன்னது தீர்க்கதரிசனம்.


Feb 27, 2017

பழைய கணக்கு


ராஜாஜிக்கு 1930களில் காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தைப்பொருத்தவரை தீரர் சத்தியமூர்த்தி தான் rival. சத்தியமூர்த்தியின் சீடர் தான் காமராஜர் என்பதால் 1950,60களில் எப்போதும் இருவருக்கும் ஏழாம்பொருத்தம் தான்.


காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராயிருந்த போது
ராஜாஜி "காமராஜர் ஆட்சி ஊழல் ஆட்சி" என்றார்.
காமராஜர் அப்போது சொன்னார் " இவர் என்ன பெரிய பரசுராமரா?"
"காமராஜர் திட்டம்" பக்தவத்சலத்தை பின் தமிழக முதல்வராக்கியது.
.................

1967 ல் காங்கிரசை எதிர்த்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.கவுடன் கூட்டு.
ராஜாஜி சொன்னார் : "பிராமணர்கள் ஒரு கையால் பூணூலை பிடித்து கொண்டு மறுகையால் தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்கள். "

காமராஜர் பற்றி ராஜாஜியின் கடுமையான தாக்குதல்
”அந்த கறுப்பு காக்காயை வீழ்த்துங்கள்!”

பெரியார் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்தார். காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் : 'பச்சை தமிழன் காமராஜ்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த பூமியில் தோண்றியிராத அதிசய மனிதர் காமராஜ்! '

தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது. (ஹிந்தி எதிர்ப்பு , காங்கிரஸ் வெறுப்பு என்று காரணம் யாரும் இங்கே தயவு செய்து சுட்டி காட்ட கிளம்பி விட வேண்டாம்.)

கொஞ்ச நாளில் ராஜாஜி சொன்னார்
" திமுக வுடன் தேனிலவு முடிந்து விட்டது."
அண்ணாதுரை விடவில்லை "ஆம். தேனிலவு முடிந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது!"

1971ல் அண்ணா இல்லாத திமுகவை எதிர்த்து பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இணைந்து கருணாநிதியை எதிர்த்து மிக மோசமான படு தோல்வியை தழுவினர்.( பங்களா தேஷ் வெற்றி என்று காரணங்களை அடுக்குவது இரண்டாவது பட்சம்.)


எம்ஜியாரின் எழுச்சியில் ஸ்தாபன காங்கிரசும் சுதந்திரா கட்சியும் காணாமல் போனது.


எம்ஜியார் இருக்கும் வரை கருணாநிதி பருப்பு வேகவில்லை. எம்ஜியாரின் மரணம் மீண்டும் கருணாநிதிக்கு ஆட்சி கிடைத்து கொஞ்ச நாளில் மீண்டும் இழப்பு.

மூதறிஞர் ராஜாஜி , காலா காந்திகாமராஜர் இருவரையும் தோற்கடித்த கருணாநிதிக்கு 20 வருடத்தில் ஜெயலலிதாவிடம் 1991ல் மிக மோசமான தோல்வி ஏற்பட்டது .(ராஜீவ் கொலை தான் என்ற காரணம் இங்கு முக்கியப்படுத்த வேண்டியதில்லை.அது உள்ளங்கை நெல்லிக்கனி.)

கருணாநிதியிடம் ராஜாஜி, காமராஜர் தோல்வி மகத்தான சோகம். ஜெயலலிதாவிடம் கருணாநிதி தோற்றது கேலி கூத்து.

வரலாற்றின் குரங்குத்தனம்!
“Hegal remarks somewhere that history tends to repeat itself. He forgot to add: the first time as tragedy, the second time as farce”
-Karl Marx
............................................

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_3740.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html

 

Sep 15, 2008

காலா காந்தியின் கோட்சே !


இந்த விஷயம் முதல் முறையாக தி.மு.க ஆட்சிக்கு வந்த போது நடந்த விஷயம் .

சிட்டி தான் என்னிடம் சொன்னார். சிட்டியும் அண்ணாத்துரையும் பச்சையப்பன் கல்லூரியில் வகுப்புத்தோழர்கள.

பலவருடங்களுக்கு பின் சிட்டியை அண்ணாதுரை முதல்வராக சந்தித்தவுடன் ஆனந்த கண்ணீர் வடித்தாராம். அப்போது சிட்டி அகில இந்திய வானொலி யில் உயர் அதிகாரி . அகில இந்திய வானொலிக்காக அண்ணாவை பேட்டி எடுத்து விட்ட பின், அன்றைக்கு பரபரப்புக்கு காரணமாக இருந்த
விருதுநகர் பெ. சீனிவாசனை பேட்டியெடுக்க நினைத்து அதையும் சிட்டி செயல் படுத்தினார் .

உடனே கருணாநிதி சிட்டியிடம் வந்து ' என்ன சார் .இப்படி செய்திட்டீங்க . அண்ணாவை பேட்டி எடுத்துட்டு அடுத்ததா பெ .சீனிவாசனை பேட்டி எடுக்கிறீங்க .இவன் ஒரு பொறுக்கி சார். இவனுக்கு என்ன யோக்யதை இருக்குன்னு இவனையெல்லாம் பெரிய ஆளாக்கிறீங்க . காமராஜரை அவமானப்படுத்த இவனை அவரை எதிர்த்து தேர்தல்லே நிறுத்தினோம் . ஜெயிச்சிட்டான் . ஜெயிச்சதுக்கு காரணம் இவனா சார் . சும்மா குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை. தமிழகத்திலே எங்க கட்சிக்கு ஆதரவா எழுந்த அலையிலே சும்மா குருட்டு அதிர்ஷ்டத்திலே ஜெயிச்சவன் . "

கருணாநிதியின் முன் ஜாக்கிரதையை இந்த சம்பவம் சுட்டுகிறது .தீர்க்க தரிசனத்தையும் கூட .
ஐம்பெரும் தலைவர்களில் அண்ணா தவிர பிறரை படிப்படியாக பின்னகர்த்தி, அடுத்த இரண்டே வருடத்தில் அண்ணா மறைந்த போது கட்சியையும் ,முதல்வர் பதவியையும் கைப்பற்றிய மிக பெரிய புத்திசாலியின் பதற்றம்!
பெ.சீனிவாசனும் பின்னர் கருணாநிதி சொன்னது சரிதான் என்பதை தன் நடத்தைகளால் நிரூபித்தார் . இப்போது பல இடம் தாவி விட்டு அண்ணா தி.மு.க.வில் இருக்கிறார்.. அல்லது அங்கிருந்தும் விரட்டப்பட்டு விட்டாரா?
சீனிவாசன் , கோவை செழியன் ,ஜி .விசுவநாதன் மூவரும் நாங்கள் தான் உண்மையான அண்ணா தி.மு.க என்று பிரகடனம் செய்து எம்ஜியாருக்கு எதிராக அவர் முதல் முதலாக ஆட்சிக்கு வந்த கட்டத்தில் அடித்த கூத்து ! அதன் பின் சிதறு தேங்கா போல மூவரும் பிரிந்து தனி தனி கட்சி யில் இணைந்தது இதெல்லாம் நினைத்து பார்க்க வேடிக்கையான அரசியல் காட்சிகள்.

பாவம் பெ . சீனிவாசன்! காலா காந்தியை தேர்தலில் தோற்கடித்ததால் தமிழ் நாட்டை பொறுத்தவரை ஏதோ கோட்சே போல் ஆகி மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கூட வெறுத்து ஒதுக்கப்பட்டவர் .
சினிமா நடிகை 'தேன் நிலவு' வசந்தியை திருமணம் செய்து......அப்புறம் ஒரு வேடிக்கை . சிவகாசி யில் 1989 ல் நடிகை ஸ்ரீதேவியின் அப்பா ஐயப்பனையும் சட்ட சபை தேர்தலில் தோற்கடித்தார் .
நல்ல பேச்சாளர் ! பத்து ஆண்டு முன் என்று நினைக்கிறேன்.. ஒரு முறை தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஸ்ரீவில்லி புத்தூரில் முச்சந்தியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த போது தன் திருமணத்திற்காக காமராஜரை அழைக்க போய் பத்திரிகை கொடுத்ததையும் அந்த எளிமையான அருந்தலைவர் பெருந்தன்மையுடன் இவர் திருமணத்திற்கு வந்ததையும் அழகாக விவரித்து பேசினார் பெ . சீனிவாசன்.
" திருமண மேடையில் நான் அமர்ந்திருக்கிறேன் . படிக்காத மேதை , ஏழைபங்காளன், பெருந்தலைவர் அந்த திருமண அரங்கினுள் நுழைந்தார் . நீண்ட நெடிய கொடிமரம் மெல்ல அசைந்து அசைந்து வருவதை போலிருந்த காட்சி இன்றும் என் கண்ணுக்குள் விரிகிறது ."

.................................................