Share

Showing posts with label P.கிருஷ்ணமூர்த்தி. Show all posts
Showing posts with label P.கிருஷ்ணமூர்த்தி. Show all posts

Mar 13, 2017

ஓவியர் P.கிருஷ்ணமூர்த்தி


 ஓவியர் P.கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குனராக ஜி.வி.அய்யரின் ஆதி சங்கராச்சாரியா, மத்வாச்சாரியா போன்ற படங்களில் பணியாற்றியவர்.

 பி.வி.காரந்த், பன்ஸி கௌல் நாடகங்களிலும் செட் ப்ராப்பர்ட்டி, ஸ்டேஜ் டிசைன் விஷயங்களை கவனித்தவர். பதினைந்து மலையாளப்படங்களின் கலை இயக்குனர். கேரள அரசின் விருது வடக்கன் வீர கதா உள்ளிட்ட படங்களுக்கு பெற்றிருக்கிறார்.

பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், பாரதிராஜாவின் நாடோடித்தென்றல், சுகாசினி இயக்கிய இந்திரா போன்ற படங்களுக்கும் கிருஷ்ண மூர்த்தி தான் கலை இயக்குனர்.

ந.முத்துசாமி நாடகங்களிலும் கூத்துப்பட்டறையின் ஆரம்ப கால செயல்பாடுகளில் கலை இயக்குனராக பணியாற்றியவர். ’காலம் காலமாக’, ’நாற்காலிக்காரர்’, ’உந்திச்சுழி’ நாடகங்கள்.

சமீபத்தில் மறு பிரசுரமான ’உந்திச்சுழி’ நாடகத்தை ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு – ’சுந்தர ராமசாமியின் கதா பாத்திரம் ஜே.ஜே’ - ந.முத்துசாமி சமர்ப்பனம் செய்திருக்கிறார்.
1980ல் இந்த நாடகம் எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடந்திருக்கிறது. க்ரியா ராமகிருஷ்ணனின் துணைவி விஜயலக்ஷ்மி நடித்தார்.
இந்த நாடகத்தில் முக்கியமான செட் ப்ராப்பர்ட்டி முட்டை! ஒரு பெரிய முட்டை.
ஆர்ட் டைரக்டர் கிருஷ்ண மூர்த்தி மிகுந்த பொறுப்போடு இந்த பெரிய முட்டையை கொசப்பேட்டையிலிருந்து எக்மோர் மியூசியம் தியேட்டருக்கு நடந்தே உருட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.
இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது மலைப்பாய் இருக்கிறது.
கள்ளமின்மையே! உன் பெயர் தான் P.கிருஷ்ணமூர்த்தி!
மியூசியத்திற்குள் முட்டையுடன் நுழைந்த பிறகு தியேட்டருக்குள் அதை கொண்டு வர எப்படியெல்லாம் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது என்பதை லலித் கலா அகாடமியில் இந்த மார்ச் மாத ஆறாம் தேதி மாலை ஞாபகமாக விவரித்தார்.

 ...............

 P.கிருஷ்ணமூர்த்தியின் ஓவியங்கள்












................................................................................



http://rprajanayahem.blogspot.in/2017/03/walking-shadow.html

http://rprajanayahem.blogspot.in/2016/02/blog-post_26.html

 http://rprajanayahem.blogspot.in/…/painting-silent-poetry.h…

http://rprajanayahem.blogspot.in/…/amrita-sher-gils-self-po…
...........................................................

Mar 11, 2017

Walking shadow




ஒரு சினிமா நடிகன் சொன்னான் : ’என்னைப்பாத்தா சிவாஜி கணேசன் மாதிரியே இருக்கிறேன்னு எல்லாரும் சொல்றாங்க. சிவாஜி மகனான்னு கேட்டவங்க உண்டு. நேத்து வாஹினி ஸ்டுடியோவில கூட ஷூட்டிங்ல ஒரு நடிகை என் கிட்ட ”நீங்க அச்சு அசல் சிவாஜி சார் மாதிரியே இருக்கீங்களே”ன்னு மூக்குல விரல் வச்சிட்டாங்க!’

இன்னொரு சினிமா நடிகன் சொன்னான் : ’என்னையும் அப்படித்தான் எவ்வளவோ பேர் சொல்றாங்க.
சிவாஜி மகன் மாதிரியே நான் இருக்கிறேன்னு நேத்து கூட சஃபையர் தியேட்டர்ல ’மரோ சரித்திரா’ படம் பாக்க நான் போயிருந்தப்ப ஒருத்தர் ஆச்சரியப்பட்டாரு!’

நான் சொன்னேன் : ’என்னப்பாத்தா என்னோட அப்பா மாதிரியே இருக்கேன்னு எல்லோருமே சொல்றாங்க!’
Chip off the old block. I'm definitely a chip off the old block.
.....................................................

மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி.
அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.

இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும்.
..................................

எதனை நினைத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை?
1.தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் தேறாத தேமுதிகவை பிரமித்து அதன் பின் வால் பிடித்து சேவகம் செய்ய நின்றதை!

2.இன்றும் தமிழகத்தில் செல்வாக்கில்லாத பி.ஜே.பியை தங்கள் கூட்டணி மூலம் கடந்த காலங்களில் பட்டி தொட்டியெங்கும் அ.தி.மு.க, தி.மு.க கொண்டு சேர்த்தை!

ஒன்னாம் நம்பர் காமெடியன்?
சசிகலாவை ஆதரிக்காவிட்டால் தமிழ் நாட்டில் பி.ஜே.பி வளர்ந்து விடும் என்று சொல்லும் கி.வீரமணி தான் Fool, Clown.

........................................




28 பிப்ரவரி தொடங்கி 6 மார்ச் வரை லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, P.கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சி நடந்தது.
மகத்தான் இரு கலைஞர்கள்.
முதல் நாளும், கடைசி நாளும் ந.முத்துசாமி, மு. நடேஷ் இருவருடன் போய் இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வுகள். எம்.டி.முத்துகுமார சுவாமியை சந்திக்கிற வாய்ப்பு லலித் கலா அகாடமியில் கிடைத்தது.

                                              அல்ஃபோன்ஸோ ஓவியம்




                                               P.கிருஷ்ண மூர்த்தி ஓவியம்
                                             
.............................................................................................................................