Share

Showing posts with label அருந்ததி ராய். Show all posts
Showing posts with label அருந்ததி ராய். Show all posts

Dec 15, 2008

“Out Look” ல் அருந்ததி ராய் ‘9 is not 11’

நேற்று “Out Look” பத்திரிகையில் அருந்ததி ராய் மும்பை கலவரத்தை முன் வைத்து எழுதியுள்ள 9 is not 11
கவர் ஸ்டோரி படித்தேன். நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது.
“America is the land of the future, where in the ages that lies before us , the burden of the world’s history shall reveal itself” என்று ஹெகல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி சொல்லமுடிந்தது ?
‘People and Governments have never learned anything from history, or acted on Principles deduced from it.’ இதனை சொன்னது கூட ஹெகல் தான் .
‘Out of the crooked timber of humanity , no straight thing was ever made’ -விரக்தியில் கான்ட் சொல்லியிருப்பது
மீள முடியாத சகதியில் நாடுகள் ( நம் நாடு மட்டும் அல்ல) சிக்கிவிட்ட உண்மையை அருந்ததி ராய் அப்பட்டமாக உணர்த்துகிறார் .
ரொம்ப வேதனையில் அபத்தமாக தத்துவங்களை தான் மனம் அசை போடுகிறது .தத்துவம் என்பது கடும் நெருக்கடியில், மனிதன் முன் நிற்கும் கனமான சவால்களுக்கு கவைக்கு உதவாதது.
உடனே நினைவுக்கு வருவது கீழ்க்கண்ட David Hume சொன்ன தத்துவ வார்த்தைகள் .
‘Generally speaking, the errors in religion are dangerous; those in philosophy only ridiculous’
விடிவு ?
.....................
"கருத்து வெளிப்பாட்டிற்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் அல்ல .நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும் கூட "
- நோம் சோம்ஸ்கி

Nov 4, 2008

A joke is a very serious thing!


மூக்கு கண்ணாடி கைவசம் இல்லாததால் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மெனு கார்டை சர்வரையே வாசித்து காட்ட சொன்ன போது அந்த சர்வர் தன்னிரக்கம் மிகுந்து வழிய வருத்தத்துடன் சொன்னான் . " நானும் உங்களை மாதிரி எழுதபடிக்க தெரியாதவன் தாங்க . எனக்கும் படிப்பு எல்லாம் கிடையாது "

........
இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள் . நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவர் பற்றி ஒரு சுவாரசியம் மிக்க செய்தி படித்தேன் .
அவர் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு தேர்வில் பத்து கேள்விகள் கொடுத்து ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதில் எழுதினால் போதுமானது என்று கொஸ்டின் பேப்பரில் எழுதப்பட்டிருந்ததாம் . சிறுவன் ராஜேந்திர பிரசாத் பத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு மேலே ஏதேனும் ஐந்து பதில்களுக்கு மார்க் போட்டால் போதுமானது என குறிப்பிட்டாராம் !

...
அருந்ததி ராய் நாவலில் ஒரு Anecdote:
ஒரு தகப்பன் . அவனுக்கு இரட்டை குழந்தைகள் . பீட் ஒரு Optimist. ஸ்டுவேர்ட் ஒரு Pessimist. இருவருக்கும் பிறந்த நாள் வந்தது . அப்பா ஸ்டூ வேர்ட் க்கு ஒரு வாட்ச் , சைக்கிள் பரிசு கொடுத்தார் . அந்த பையனுக்கு வாட்ச் மாடல் பிடிக்கவில்லை . சைக்கிள் கூட அவனுக்கு பல குறைகள் உள்ளதாக தோன்றியது . அவன் அழுது புலம்பி கொண்டிருந்தான் .

பீட்டுக்கு பிறந்த நாள் பரிசாக அவன் அறை முழுவதும் குதிரை சாணத்தை அப்பா நிரப்பி வைத்து விட்டார் .
சரி . பீட் என்ன செய்கிறான் . அப்பா அவன் ரூமுக்கு போன போது
அந்த அறையிலிருந்த சாணத்தை அள்ளி அள்ளி வீசிகொண்டிருந்தான் பீட் . இவர் ஆர்வத்துடன் 'பீட் ! என்ன செய்கிறாய்?' என கேட்டதற்கு
உற்சாகமாக பீட் சொன்னான் ' குதிரை யை தேடிகொண்டிருக்கிறேன் அப்பா ! இவ்வளவு சாணம் இங்கே இருக்கிறதென்றால் இங்கே நிச்சயம் ஒரு குதிரை இருக்கும் தானே !'

......

கிரா பேசும்போது ஒரு நடைமுறை யதார்த்தம் பற்றி சொன்னார் .
"குற்றாலத்தில் உள்ளூர்க்காரன் அருவியில் குளிக்கமாட்டான் தெரியுமா !"

........

'முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல ,
மு மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும் !'
-வெங்கட் சாமிநாதன்

......

"நான் செத்த பிறகு தயவுசெய்து எனக்காக இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள் . என்னால் வர முடியாது ."
- நகுலன்

..............

சாரு நிவேதிதா கோணல் பக்கங்களில் அடித்த ஒரு ஜோக் .
ஒரு சர்தாரிணி ப்ரா வாங்க கடைக்கு கிளம்பினாள் .
சர்தார்ஜி ' உனக்கு தான் அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே ! உனக்கு எதற்கு ப்ரா ?'
சர்தாரிணி ' யோவ் , போன வாரம் நீர் ஜட்டி வாங்கினீர் ! நான் ஏதேனும் கேட்டேனா ?'

..............
A lot of lies are going around the world and the worst of it is
Half of them are true !
- Winston Churchill.
ஒரு விஷயம் . இந்த பதிவின் தலைப்பை சொன்னது கூட சர்ச்சில் தான் !