Share

Showing posts with label ’இடைவெளி’ சம்பத். Show all posts
Showing posts with label ’இடைவெளி’ சம்பத். Show all posts

May 10, 2020

இடைவெளி சம்பத்



இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில்
மூளை ரத்த நாளச்சேதத்துக்கு ஆளாகி
 1984 ல் மறைந்து விட்டார்.

தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ' இடைவெளி ' நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் அவரது அகால மரணம்.

தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம்
 இவருக்கும் இருந்தது.
'அம்மாவுக்கு ' நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள்.

இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர்.

சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில்
1987ல் ஆதவன் மறைந்தார்.

 தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான்.
சாகிற வயசா ?

இடைவெளி - சாவு பற்றிய சம்பத்தின்
ஆழ்ந்த தவம்.

' சாவு என்னை ஈர்த்தவிதம் -' கடைசியாக எல்லாம் போய்விடுகிறது. இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது.
 இடைவெளி நாவல் - ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை.
விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில்,
மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. '

சம்பத் அவரே சொல்வது போல
அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.

சாவு என்பது இடைவெளி.
வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.

எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை.

இது நாள் வரை தன்னுடைய தன்மையை
மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது.
குறைந்த பட்சம் அதற்கு
 ' போர் ' அடிக்கவில்லை.
 எப்போதுமே ஜெயிப்பது
விடலைத்தனமான காரியம் இல்லையா?

காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார்.
காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை!

கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன்.

இப்படி இடைவெளி நாவலில்
படித்த விஷயங்கள்
இன்றும் மறக்கமுடியவில்லை .

டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :
' மவுண்ட் ரோடு - மதராசின் கனாட் ப்ளேஸ். இதுவும் இதனுடைய மூஞ்சிகளும்!
எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது.

இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது.
" எண்ண ஓட்டங்களுக்கு,
பெரிய எண்ண ஓட்டங்களுக்கு
ஒரு பூ மணப்பின் குணம் உண்டு.
அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது ."

பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா
என பகல் கனவு கண்ட சம்பத்.

சம்பத் தின் இடைவெளி நாவல்
நூறு பக்கங்கள் தான். நாவலில் வாமன அவதாரம்! க்ரியா தான் அப்போது முதல் பதிப்பை
வெளியிட்ட து (August,1984).

அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக இந்திரா பார்த்தசாரதியிடம்
படிக்க கொடுத்திருக்கிறார்.
சில நாளில் இ.பா படித்தவுடன்
அவர் வீட்டிற்கு போகிறார்.

இ .பா நாவல் பற்றி " Rambling ஆ இருக்குடா. நல்லா எடிட் பண்ணனும் ." என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார். சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!
" டே டே .. ஏண்டா " இ.பா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார்.
" குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?" என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.

 கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். '' சாமியார் ஜூவிற்கு போகிறார் '' அடுத்து " பணம் பத்தும் செய்யும் " என்ற குறுநாவல் .
கசடதபற வில் 'கோடுகள் ' என்ற சிறுகதை . ' இடைவெளி ' என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .

சம்பத் எழுதியவற்றை அழகிய சிங்கர் தொகுப்புகளாக விருட்சம் வெளியீடாக
கொண்டு வந்துள்ளார்.
.. 

Oct 6, 2019

சம்பத்தின் ”இடைவெளி” சிறுகதை


சம்பத் ‘இடைவெளி’ சிறுகதையில் தி.ஜானகிராமனின் மூத்த மகன் சாகேதராமன் ஒரு கதாபாத்திரம். சம்பத் நாராயணனே ஒரு பாத்திரம். அப்புறம் கங்காதரன். 
மூவரும் டெல்லியில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். கங்காதரன் அலுவல் விஷயமாக ஜப்பான் போயிருந்த போது அங்கு பயணத்தில் இருந்த ஜானகிராமனை சந்தித்திக்க வாய்த்திருக்கிறது. அதனால் கங்காதரனின் அப்பா கூட இவருக்கு அறிமுகம். ’அம்மா வந்தா’ பற்றி கூட கங்காதரனின் தந்தை ஜானகிராமனுக்கு கடிதமொன்றில் குறிப்பிட்டு எழுதியிருந்திருக்கிறார்.

கதை ஆரம்பிக்கும் போது கங்காதரனின் அப்பாவின் மரணம்.
அந்த பெரியவர் ரிஷி மாதிரி.
An Evolved soul. தாஸ்தயேவ்ஸ்கியின் கரமஸோவ் ப்ரதர்ஸ் நாவல் படித்தவர். இலக்கியம், ரிலிஜன் பற்றி பேசக்கூடியவர். “பிரபஞ்சம் என்ற களேபரத்தில் நாம் அவ்வளவு முக்கியமில்லை”
வார்த்தைகளுக்கு ஒரு அசாத்திய மதிப்பு முந்தைய தலைமுறையான இவர்களால் கொடுக்க முடிந்திருக்கிறது.
சாகேதராமனிடம் ’அப்பா வருகிறாரோன்னா’ ஆனால் தி.ஜா செக்கோஸ்லேவாகியா போயிருக்கிறார்.
இவர்களுடன் வேலை பார்ப்பவர்கள் கூட வரவில்லை.
கங்காதரன் வீட்டுக்கு சாகேதராமனுடன் நாராயணனும் கிளம்புகிறார்.
சாகேத ராமனிடம் டெல்லிக்குளிருக்கான நல்ல ஸ்வெட்டர் இல்லை. நாராயணன் அடுத்த சம்பளத்தில் ஒரு ஸூட் தைத்துக்கொள்ள சொல்கிறார். சாகேதராமன் ஸூட் விலை குறித்து மதராஸில் பட்டுப்புடவைக்கு தான் இப்படி செலவழிப்பார்கள் என சொல்கிறார்.
முதலில் கொஞ்சம் நடந்து
பின்
‘பட்படி’ டெல்லி வாகனத்தில். கரோல் பாக்கில் இறங்கி இழவு வீட்டுக்கு போகிறார்கள். கங்காதரனுடைய மூத்த தமையன் வர வேண்டும். அதன்பின் காரியம் ஆக வேண்டும்.
சாவில் சில சமயங்களில் நாராயணன் காணும் அருவருப்பு, குரூரமான வீர்யம். அகோர வீர்யம்.
கிளம்புகிறார்கள்.
சாகேத்
“Don’t leave me. I feel alone.”
ஒரு ரெஸ்ட்ரண்ட் போகிறார்கள். டான்ஸ் பார்க்கிறார்கள். டான்ஸும் அந்த பெரும் மார்பும்.
சம்பத்திடம் சாகேத்
“You have read lot of books. What they have got to say about death?”
ஹெமிங்க்வே “ Death is a whore”
டால்ஸ்டாய் death process பற்றி நன்றாக விவரிக்கிறார்.
சாகேத் “What about my father?” தி.ஜாவுக்கு மரணம் பற்றி?

“ மோகமுள்ளில் ஒரு பெண் செத்துப் போயிடறா… தற்கொலை. பாபுவுக்கு உடம்பெல்லாம் மணல் பட்டது போன்ற அரிப்பு ஏற்படுகிறது.. ’மலர்மஞ்சம்’ பெண்கள் சாவுப்பட்டியலுடன் துவங்குகிறது. Anyway death was not an obsession with your father. You can speculate it.
நாராயணன் தனக்கு பள்ளியில் ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் பற்றி சொல்கிறார்.
அந்த இரண்டுக்குமே சாரம் “ சாவு ஒரு இடைவெளி”
மயிரிழையில் இரண்டு விபத்தில் இருந்து தப்பிக்கும் சிறுவன்.
இப்போது ரெஸ்ட்ரண்ட்டில் டான்ஸ், கஜல் பாட்டு என்ற நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருக்கும் நாராயாணன் மனதிற்குள் “சாவு ஒரு இடைவெளி” என்று சொல்லிக்கொள்கிறான்.
’அன்றிலிருந்து சொல்ல முடியாத அளவுக்கு உடல் சுகத்தில் அவனுக்கு நாட்டம் விழுந்தது’
– சம்பத்தின் ’இடைவெளி’ சிறுகதையின் கடைசி வரி.

......
சம்பத் ஆயிரம் பக்கத்திற்கு ஒரு நாவல் எழுதிக் கொண்டு வந்து இந்திரா பார்த்தசாரதியிடம் கொடுத்திருக்கிறார்.
அதை படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதி அபிப்ராயமாக '
RAMBLING ஆக இருக்குடா. நாவலை இன்னும் Crisp ஆக edit செய்தால் நன்றாக வரும்' என்று சொல்லிவிட்டு எதற்கோ வீட்டின் உள் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது
சம்பத் வெராண்டாவில் அந்த முழு நாவலையும் கொளுத்திவிட்டு ’குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனிமேல் எதற்கு?’ என்று இந்திரா பார்த்தசாரதியிடம் கூறியிருக்கிறார்.
இ.பா.வே என்னிடம் சொன்ன விஷயம் இது.

இன்று எல்லோர்க்கும் பார்க்க கிடைக்கும் குட்டி நாவல் ”இடைவெளி”.
’ப்ரக்ஞை’ சிறு பத்திரிக்கையில் எழுதிய சிறுகதையின் தலைப்பையே நாவலுக்கும் வைத்திருந்திருக்கிறார்.
..
30 வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு கடிதம்.டெல்லியிலிருந்து சாகேத ராமன் எழுதியிருந்தார் .தி. ஜானகி ராமனின் மூத்த மகன்.
" அப்பா இறந்து ஏழு வருடமாகி விட்டது. ஆனால் இன்னும் க .நா .சு வும் இந்திரா பார்த்தசாரதியும் எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவே இல்லை '' என்று ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.
Irony என்னவென்றால் க.நா.சு. இறந்து (டெல்லியிலே தான் ) அப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது என்பது தான்.
நான் உடனே "சான்சேஇல்லை. க.நா.சு .இறந்துவிட்டார்''என்று சாகேத ராமனுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினேன்.
சாகேத ராமனின் வருத்தம் பற்றி அப்போது புதுவையிலிருந்த இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டேன் ." எனக்கு இந்த சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது"என்று சொல்லிவிட்டார்.

சாகேதராமனும் மறைந்து விட்டார்.

சம்பத்தும் இல்லை.
……




Oct 21, 2009

இடைவெளி சம்பத்


இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில் மூளை ரத்தநாளச்சேதத்துக்கு ஆளாகி 1984 ல் மறைந்து விட்டார் . தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ' இடைவெளி ' நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் மறைந்து விட்டார்.


தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவருக்கும் இருந்தது . 'அம்மாவுக்கு ' நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள். இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர.
சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில் 45வயதில் 1987ல் ஆதவன் மறைந்தார். தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான். சாகிற வயசா ?

இடைவெளி - சாவு பற்றிய சம்பத்தின் ஆழ்ந்த தவம். ' சாவு என்னை ஈர்த்தவிதம் -' கடைசியாக எல்லாம் போய்விடுகிறது . இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது. இடைவெளி நாவல் - ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை. விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில், மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. '

சம்பத் அவரே சொல்வது போல அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.

சாவு என்பது இடைவெளி . வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.
எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை . இது நாள் வரை தன்னுடைய தன்மையை மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதற்கு ' போர் ' அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது விடலைத்தனமான காரியம் இல்லையா?

காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார் . காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா ? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை !

கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன் .

இப்படி இடைவெளி நாவலில் படித்த விஷயங்கள் இன்றும்
மறக்கமுடியவில்லை .

டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :' மவுண்ட் ரோடு - மதராசின் கனாட் ப்ளேஸ்.இதுவும் இதனுடைய மூஞ்சிகளும் ! எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் . வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது .

இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது ." எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கு ஒரு பூ மணப்பின் குணம் உண்டு . அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது ."

பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா என பகல் கனவு கண்ட சம்பத்.

சம்பத் தின் இடைவெளி நாவல் நூறு பக்கங்கள் தான் . நாவலில் வாமன அவதாரம்! க்ரியா வெளியிட்ட இந்த நாவல் (August,1984) அதன் பிறகு இன்னும் மறுபிரசுரம் செய்யப்படவே இல்லை.

அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக இ . பா.விடம் படிக்க கொடுத்திருக்கிறார் . சில நாளில் இ .பா படித்தவுடன் அவர் வீட்டிற்கு போகிறார் . இ .பா நாவல் பற்றி " Rambling ஆ இருக்குடா . நல்லா எடிட் பண்ணனும் ." என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார் . சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!" டே டே .. ஏண்டா " இபா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார். " குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?" என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.

இன்று சம்பத் எழுதி வாசகர்களுக்கு இந்த இடைவெளி நாவல் தான் மிஞ்சியிருக்கிறது. கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். '' சாமியார் ஜூவிற்கு போகிறார் '' அடுத்து " பணம் பத்தும் செய்யும் " என்ற குறுநாவல் .
கசடதபற வில் 'கோடுகள் ' என்ற சிறுகதை . ' இடைவெளி ' என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .

ஜி . நாகராஜனின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டது போல சம்பத்தின் படைப்புகளும் தொகுக்கப்பட்டால் நல்லது .ரொம்ப சொற்பமாகத்தான் எழுதினார் . அவர் மொத்தப்படைப்புகளும் கூட ஒரு சிறு நூல் அளவுக்குத்தான் வரும் .