Share

Showing posts with label கவிஞர் தேவதேவன். Show all posts
Showing posts with label கவிஞர் தேவதேவன். Show all posts

Sep 20, 2017

Poetry and Polytricks


மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு தானே
முற்றான கவிதை 
- தேவ தேவன்
நீர் நிலைகளைகளத்தேடி ஆயிரக்கணக்கான மைல்கல் நாடு விட்டு நாடு பயணிக்கும். வேடந்தாங்கல் வரும் பறவைகள்.
அற்ற குளத்துப்பறவை
நீர் நிலை வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வராது நீங்கி விடும்.
மாலதி மைத்ரி கவிதையொன்றில் ஒரு கொக்கு வந்திருக்கிறது.
“ தன் நினைவில் மீன்கள் நீந்த
நீரற்ற நதிக்கரையில்
காத்திருக்கிறது கொக்கு”

ஏன் நீரற்ற நதிக்கரையில் கொக்கு காத்திருக்க வேண்டுமோ?
மாடப்புறா கூடு கட்டாது.கூடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்ட நிர்ப்பந்தம் மாடப்புறாவுக்கு என்பதாக கண்ணதாசன் எழுதிய பாடல்’கோட்டையிலே ஒரு ஆலமரம், அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா”

………………..



’யானைக்கு ஒரு தோட்டா நெத்தியிலே’
18 எம்.எல்.ஏக்களை நீக்கிய சபாநாயகர். சசிகலா கும்பல் அம்பேல்?
பன்னீருக்கு துணை முதல்வர் பதவி
’வெள்ளரிப்பழத்துக்கு பூண் ?’
எடப்பாடி – பன்னீர்
எடப்பாடி புளியங்காய்
பன்னீர் எலுமிச்சை
’அதுக்கு இது நீளந்தான். புளிப்புல அவுங்க அப்பன் தான்.’
ரெண்டு பேருக்கும் பெரிசா பேச்சு வார்த்தயெல்லாம் இல்லையாமே.
’கடுவாப்புலிக்கு காளைக்கோட்டான் எதிரி.’


ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா என்று இருந்த காலம் போய், எடப்பாடி, பன்னீர், ’ஜெயக்குமார திண்டுக்கல் சீனிவாச ஓ.எஸ். மணியம்’, சசிகலா, தினகரன், திவாகரன்,
தீபா, ( தீபா கட்சியும் புருஷன் மாதவன் கட்சியும் இணைந்து விட்டதாமே.) என்று பல பாத்திகள் இன்று.
பல பேர் அதிமுகவிற்கு மானசீக பொறுப்பு வகிக்கிற சூழல். அல்லது பல அண்ணாதிமுக.
’அரண்மனைக்கு ஆயிரம் பாத்தின்னா தோட்டக்காரன் பொறுப்பாவானா?’
தோட்டக்காரன் என்று யாரை சொல்ல முடியும் இங்கு?
…………………………………

Aug 31, 2012

டீ காஃபி


ஏதோ ஒரு ஊரில் ரயில் பின்னிரவில் நிற்கும் போது  ‘டீ , காஃபி’ , ‘ டீ காஃபி’ என்ற கூவல் ரயிலில் அரைத் தூக்கத்தில்  காதில் விழுகிறது.அந்த நேரத்திலும் டீ,காஃபி சாப்பிடும் பயணிகள்.

சென்னையிலிருந்து திருச்சி திரும்பிக்கொண்டிருந்த போது அதிகாலை மூன்று மணி ‘டீ, காஃபி டீகாஃபி என்ற கூப்பாடு.விழித்தபோது தொழுதூர் மோட்டலில் பாட்டு”சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்,கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாள்”
அந்த அதிகாலையில் அந்தப் பாடல் -எவ்வளவோ தடவை கேட்ட பாடல்-
ஆஹா இன்றும் நினைவில்.


ஊர்,ஊரா எத்தனை டீகடை, காபி கிளப். எப்ப பாத்தாலும் ஏராளமா டீ, காபி சாப்பிட்டுக்கொண்டு  இருக்கிறார்கள்

மதுரை ஏ.ஏ ரோட்டில் டீகடை  வைத்திருந்த குருட்டுபிராசம்-ஷார்ட் சைட், ஆனால் கண்ணை டாக்டரிடம் காட்டமாட்டார். செக் செய்து கண்ணாடி போடவும் மாட்டார். கண்ணை அடிக்கடி இடுக்கி உற்றுப் பார்த்து தான் ஆளை அடையாளம் தெரிந்து கொள்வார்.  பெயர் பிரகாசம். மதுரை சல்லிகளுக்கு குருட்டு பிராசம் போடுவது டீதானா என்ற சந்தேகம்.
காலை எட்டுமணி. பிராசத்தின் கூரைக்கடையில் ஏற்கனவே ஆட்டுமூக்கன்,ஒத்தக்காதன்,மண்டைமூக்கன்,கொலாப்புட்டன் உட்கார்ந்து ரெண்டு வட்டை டீயை பகிர்ந்து குடித்துக்கொண்டு தினமலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

’’யோவ் எம்.ஆர்.ஆர் வாசு செத்துட்டானாம்யா’’
”’ஓவர் குடி! தேங்கா சீனிவாசனும் வாசுவும் சந்திச்சி பேசிக்கிறதை   குமுதத்தில படிச்சேன்.தேங்காக்கிட்ட சொன்னான்.’எனக்கு நாலு பொண்டாட்டி இப்ப. ’ ’மூணு தானே மாப்பிளே’னு தேங்கா சீனிவாசன் கேக்கறான். வாசு’ இப்ப ஒண்ணு ஆசைப்பட்டுச்சி அதையும் முடிச்சிக்கிட்டேன்’னான்.

தொல்லை உள்ளே நுழைந்தான். டீக்கடையில் ஒரு பத்துபேர்.
நல்லா சவுண்டா தொல்லை சொன்னான்”யோவ் ப்ராசம்! குடிக்கிற மாதிரி ஒரு டீ போடுயா”
”இங்க குண்டி கழுவத்தான் டீ போடுறோம்”spontaneous ஆக குருட்டுப்பிராசம் பதில்.


சமயவேல் கவிதை-

வாருங்கள்

உனக்கும் எனக்கும்
எனக்கும் அவனுக்கும்
இவனுக்கும் உனக்கும்
கடைசியில் ஒன்றுமில்லை
என ஆனது

அதனாலென்ன வாருங்கள்
டீ குடிக்கப் போகலாம்
என்றேன் நான்.


தேவதேவன் கவிதை -

ஒரு காதல் கவிதை

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;
ஒரு காபி சாப்பிடலாம், வா.



.“If this is coffee, please bring me some tea; but if this is tea, please bring me some coffee.”
-Abraham Lincoln



http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_07.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_17.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-34.html





Mar 26, 2009

குழந்தை ஒன்று , நிலா ஒன்று


யாராவது உங்களிடம் 'குழந்தை' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் . 'நிலா ' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

'அட போய்யா ? ஏதாவது புதுமையா சொல்லுயா ..' என்று கொட்டாவி விடுவீர்கள் .
ஆனால்
கீழே இரண்டு கவிதைகள் . குழந்தை பற்றி , நிலா பற்றி ஜோரா அசத்தலா எழுதப்பட்டுள்ளவை .

..

புத்தம் புதிய
என் பேனாவை
ஒரு குழந்தையிடம் கொடுத்தேன் .
ஒரு கோட்டோவியம்
ஒரு கவிதை
ஒரு காவியம் எழுதி
என்னைப்பார்த்து சிரித்தது .
அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட படைப்பு
என்னை அழைத்தது

- ஆத்மாநாம்


..

அபூர்வ கனி
நீர்க்கரை மரக்கிளையில் முழு நிலா
அபூர்வமான கனி
நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன் .
உனக்கென நான் அதை
அள்ளி வரத்தான் முடியவில்லை .

-தேவதேவன்


Mar 25, 2009

Carnal Thoughts-18

பெரிதினும் பெரிது கேள்.

"யானை பிழைத்த வேல் அரிது "



பெண் யானை ஒன்று எப்போதும் ஆற்றில் நீர் அருந்திய பின் ஒரு தென்னை மரத்தின் அடியில் இளைப்பாறும்.

ஒரு எலி .நல்ல நினைப்புக்கார எலி. தன் குறுகிய எலி பிரதேசம் தாண்டி பல பரந்த அனுபவம் வேண்டி அலையும் எலி. தேடல்.தவிப்பு .
இந்த எலி திருமணம் ஆனது தான். என்றாலும் இந்த பெண் யானை மீது மையல். கண்ணால் காம வலை வீசியது. கை வசம் இருந்த தேவதேவனின் கவிதையை எடுத்து வீசியது.


"விடைத்து நிற்கும் என் குறி.
உன் ரகஸ்யங்களை உற்று நோக்கும் என் புத்தி .
அடியே ! பீறிடும் எனது இந்திரியமடி இந்த கவிதை !"


தென்னை மரத்தின் அடியில் படுத்த யானைக்கு ஆச்சரியம். ஏன் இந்த எலி இப்படி தன்னை பார்த்து கண்ணடித்துக்கொண்டு இருக்கிறது. கவிதை சொல்கிறது.
'வாப்பா, எலி. ஒரு பொம்பளை தனியா இருக்கிற இடத்தில் வந்து கண் அடித்துக்கொண்டே இருக்கிறாயே. தேவதேவன் எழுதிய கவிதை சொல்கிறாய். என்ன வேண்டும் சொல்"
எலி " உன்னை ஒரே ஒரு தடவை ஜோலி பார்க்க வேண்டும் என்று என் நெடு நாள் தவம். ப்ளீஸ் ..ப்ளீஸ் .."

யானைக்கு ஒரு Curiosity. என்ன தான், எப்படி தான் தன்னோடு இந்த சின்ன எலி உடல் உறவு கொள்ள முடியும் பார்த்து விடுவோமே. " சரி,என் புருஷன் கஜக்கோல் பாண்டியன் (யானை தான்) வர்ற நேரம். அதுக்குள்ளே முடித்து விட்டு ஓடு " பெர்மிசன் கொடுத்து விட்டது.

எலி யானை மேல் ஏறி அதன் முதுகு, வால் அதன் அடிப்பகுதி குண்டி எங்கும் சுற்ற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தென்னை மரத்தில் இருந்து ஒரு இளனி யானையின் தலை மீது விழுந்து விட்டது . யானை உடனே பிளிறியது.


அதன் வால் பகுதியில், குண்டி பக்கம் இருந்த எலி கேட்டது ." என்ன நான் செய்யிறது வலிக்குதா ? சாரி நான் கொஞ்சம் முரட்டு தனமா செஞ்சிட்டேன் .மன்னிச்சிக்க .I apologize" என பவ்யமாக சொல்லி விட்டு கீழே இறங்கி
" நான் புதுமையானவன்.உலகை புரிந்துகொண்டவன்..என்னை தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா?" என உற்சாகமாக பாடிக்கொண்டே தன் எலி வலை நோக்கி ஆடிக்கொண்டே ஓடியது.

எலி வலையில் அதன் 'மனைவி எலி' கண்ணீர் விட்டபடி சரோஜா தேவி போல சோகமாக போஸ் கொடுத்து " என்னை மறந்ததேன் ? தென்றலே சென்று நீ என்னிலை சொல்லுவாய் " என பஞ்சு அருணாசலம் எழுதிய பாடலை பி.சுசிலா குரலில் ரொம்ப உருக்கமாக பாடிக்கொண்டு இருந்தது . Infidelity யை எந்த பெண்ணால் தான் தாங்கிக்கொள்ளமுடியும் சொல்லுங்கள்.

யானையுடன் சல்லாபித்து விட்டு வந்த எலிக்கு புரிந்து விட்டது.
எந்த கேனை எலியோ பார்த்து விட்டு வந்து, அதற்குள் தன் மனைவியிடம் பற்ற வைத்து விட்டது.
தன் மனைவியிடம் அந்த எலி கொஞ்சம் தோரணையுடன் சொன்னது .
" இங்கே பார். என் ரேஞ்சே வேற. யானையே இன்னைக்கு கதறி கூப்பாடு போட்டுருச்சி. கிழிஞ்சிடும். ஜாக்கிரதை "