Share

Showing posts with label க்ரியா ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label க்ரியா ராமகிருஷ்ணன். Show all posts

Nov 17, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்

 க்ரியா ராமகிருஷ்ணனின் தாயார்

 நான்கு வருடங்களுக்கு முன்பு தான் மறைந்தார். 

இறக்கும் போது அவருக்கு நூறு வயது. 


நிறை வாழ்வு வாழ்ந்த தாயின் மகன் 

நீடித்திருக்க வேண்டிய தன் பல வயதைத் தொலைத்து விட்டு அவசரமாக கிளம்பியிருக்கிறார். 


1989ம் ஆண்டில் அவருடைய க்ரியாவில் 

நான் பங்குதாரராக என்னை இணைத்துக் கொள்வாரா? என்று அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் ஆர்வமாக விசாரித்திருக்கிறேன்.                    பெருந்தொகையைத் தூக்கித் தர தயாராக இருந்தேன். 

ஒத்துக்கொள்ளவே மாட்டார் என்றே                   பட்டென்று பதில் வந்தது. 

இப்படிக்கூட எனக்கு ஆசை விசித்திரமாக. 

எட்டாக் கனவாக

இப்படியெல்லாம் கொஞ்ச நஞ்சமா

அன்றைய கோமாளி தவிப்பு. 


ஏன் இதை சொல்ல வேண்டியிருக்கிறது? 

க்ரியா என்ற அந்த பதிப்பு நிறுவனத்தின் மீது இருந்த கவர்ச்சி, க்ரியா வசீகரம். 


புத்தகம் இப்படியும் நேர்த்தியான உயர்ந்த வடிவமைப்பு கொண்டிருக்க முடியுமா..!


அந்த இளமையில் வாசிப்பு என்பதற்கு கனமான நூல்களை அழகான வடிவில் தந்த போது

 க்ரியா ராமகிருஷ்ணன் மீது ஈர்ப்பு. 


இங்கே அந்த பட்டியல் எழுதி விடக் கூடாது என்று வைராக்கியமாக தவிர்க்க நினைக்கிறேன். 

கேட்லாக் வேலை கூடாது. 


"The BBI combinatory Dictionary of English 

A guide to word combinations " நூலெல்லாம் க்ரியா ராமகிருஷ்ணன் இல்லாமல் கிடைத்திருக்குமா? 


எந்த ஊரில் இருந்தாலும், எந்த வேலையாக சென்னை வந்தாலும் ராயப்பேட்டை க்ரியா

 போக ஒரு தவிப்பு. எப்படியாவது போய் புத்தகங்களை அள்ளிக் கொண்டு தான்

 ஊர் திரும்புகிற காலம் இருந்திருக்கிறது. 

அப்படி முடியாது ஊர் திரும்ப நேர்ந்த போது

 அது பெரிய இழப்பு போல 

அன்று தோண்றியிருக்கிறது. 


கடந்த ஐந்தாண்டுகளில் அவரோடு பழக வாய்ப்பு இருந்தது. 

 க்ரியா பதிப்பித்திருந்த பல நூல்களை

 இந்த ஐந்தாண்டுகளிலே ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறேன். 


பதிப்பாளராக அவருடைய சாதனைக்கு இந்திய அரசாங்கம் உயர்ந்த பத்ம விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன் பதிவில் எழுதியிருக்கிறேன். 



கடந்த முப்பது ஆண்டுகளில் என்னைப் பார்த்து பலரும் சொல்லி, கேட்டு கேட்டு சலித்த                         ஒரு வார்த்தை. 

முத்துசாமி இறந்த வீட்டிற்கு வந்திருந்த போது     க்ரியா ராமகிருஷ்ணன் மற்றவர்களிடம் 'ராஜநாயஹத்திற்கு ஏன் வயதாவதில்லை' என்றார். 

மயானத்தில் வந்திருந்த பல பெரியவர்களிடம் பன்சி உள்பட, என்னை வலிந்து அறிமுகம் செய்தார். 


மூன்று வருடங்களுக்கு முன் ஒரு முறை அவரிடம் சொன்னேன் 'என்னுடைய புத்தகங்கள் க்ரியா பதிப்பாக வர வாய்ப்பு இல்லை' 

உடனே ' ஏன் வராது? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? மெயிலில் அனுப்பி வையுங்கள்.' 

என்றார். 

நான் அனுப்பவில்லை.

 க்ரியா ராமகிருஷ்ணன் பல மாதிரி மாற்றி மாற்றி எழுதச் செய்வார். என் இயல்புக்கு ஒத்து வராது. 


சென்ற ஜனவரி மாதம் புக் ஃபேரில் என்னிடம் 

' உங்க சினிமா எனும் பூதம் ஒரு காப்பி 

வாங்க வேண்டும்' என்ற போது மையமாக சிரித்தேன். 


அது தான் கடைசி சந்திப்பு. 


இந்த கரோனா லாக்டவுன் போது

 பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஒரு பதிவு க்ரியா ராமகிருஷ்ணன் பற்றி ஃபேஸ்புக்கில எழுதியிருந்த விஷயத்தை உடனடியாக செல் பேசியில் தெரிவித்தேன். 

வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பி வைத்தேன். 

ரவிக்குமாரின் 

அந்த பதிவின் லிங்க் 

ட்விட்டரில் நான் ஷேர் செய்ததைப் பற்றி சொன்னேன்.

Nov 30, 2018

Aesthetic and artistic panorama


’முதியோர் இல்லத்துக்கு முன்புறம் வாகனங்கள் தடை செய்யப்பட்டிருந்த சிறிய சதுக்கத்தில் குழந்தைகளின் கூட்டம் ஒன்று விளையாடிக்கொண்டிருக்கிறது.
மொத்தம் ஆறு குழந்தைகள், எல்லாம் சீனக்குழந்தைகள்..
இந்தக்குழந்தைகளின் வயது ஐந்து முதல் பன்னிரெண்டு வரை. கீறல் போன்ற கண்கள், பாதி நெற்றி வரை நேர்கோடாக வெட்டப்பட்ட கருகருவென்ற முடி. பெரியவர்கள், அதாவது இவர்களில் மூத்த ஐந்து பேரும் சைக்கிள் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது ஐந்து பேருக்கும் சேர்த்து ஒரு சைக்கிள். ஆனால் சைக்கிளில் ஒரே சமயத்தில் மூன்று பேர் மட்டும் போகலாம், மற்ற இருவரும் பக்கத்தில் ஓடி வருவார்கள், பிறகு உடனே மாறிக்கொள்வார்கள். அந்தக் கடைசிக் குட்டிப் பையன் மட்டும் தனியாக விடப்பட்டு இருப்பான். இவன் சைக்கிளின் மேல் ஏறுவதும் இல்லை, அதன் பக்கத்தில் கூடவே ஓடுவதும் இல்லை. என்ன பயன்?’
வெ.ஸ்ரீராம் பிரஞ்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்த்துள்ள ”சின்ன சின்ன வாக்கியங்கள்’ என்ற நாவல் பெண் எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் இன்னும் ஆங்கிலத்தில் கூட மொழிபெயர்க்கப்படவில்லை என தெரிகிறது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அற்புதமான பிரஞ்சு படைப்புகளை நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் வெ.ஸ்ரீராம்.

க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். நாவலின் 101ம் பக்கத்தில் மேற்கண்ட காட்சியின்பம்.

Perfection, thy name is Crea Ramakrishnan!
நாற்பத்தைந்து ஆண்டுகளாக இருக்கலாம் என நினைக்கிறேன். பதிப்புத்துறையில்   க்ரியா ராமகிருஷ்ணனின் தனித்துவ மிக்க சாதனை உயர்ந்த அளவில் கௌரவிக்கப்படவேண்டியது அவசியம்.







Nov 29, 2018

நெகிழ்ச்சியான புத்தக சமர்ப்பணம் ஒன்று



”லே ஒன் வெர்த்திற்கு

இந்தப் புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு: இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர்.
மற்றொரு காரணமும் உண்டு: இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார், குழந்தைகளின் புத்தகங்களைக்கூட.
மூன்றாவது காரணம்: இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை.
இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப் புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்கச் சம்மதிக்கிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் (ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும்).
ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்:
லேஒன் வெர்த்திற்கு
அவர் சிறு பையனாக இருந்தபோது.”
புத்தகத்தை யாருக்காவது சமர்ப்பணம் செய்வது எல்லாருக்கும் வழக்கம். 1981ல் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்ட குட்டி இளவரசன். பிரஞ்சு மொழியிருந்து வெ.ஸ்ரீராமும் மதன கல்யாணியும் நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருந்தார்கள்.
இதை வாங்கி அப்போது முதல் ஒரு பத்து முறையாவது படித்திருப்பேன். அந்த குட்டி இளவரசன் புத்தகத்தை ஆசிரியர் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி லெஒன் வெர்த் என்ற அவருடைய நண்பருக்கு எவ்வளவு அற்புதமாக சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இன்று படிக்கும்போது கூட கண் கலங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வரியுமே தான் எவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு வரியில் இருந்து அடுத்த வரிக்கு சுலபமாக போக முடிவதில்லை.
Eyes are blind. You have to look with heart. Anything essential is invisible to the eyes.
Only the children know what they are looking for.
அந்த்வான் து செந்த்- எக்சுபரியின் நாவல் ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். க்ரியா வெளியீடு. வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு. இரண்டு செவாலியெ விருது பெற்றிருக்கிறார்.

ஒரு செவாலியே விருது நெப்போலியன் காலத்திலிருந்து தரப்படுவது. கல்வித்துறை சம்பந்தப்பட்டது. ஸ்ரீராமின் பிரஞ்சு நாலட்ஜுக்காக தரப்பட்டது.
இன்னொரு செவாலியே விருது 1950 தொடங்கி தரப்பட்டு வருகிறது. கலை இலக்கியத்துறை சாதனையாளர்களுக்கு கௌரவம். சிவாஜி கணேசன், பாலமுரளிக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதும் ஸ்ரீராம் சாருக்கு கிடைத்தது.
ஆஹா.. இந்த ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ புத்தக வாசிப்பு எனும் சுகானுபவம் பற்றி எப்படி சொல்வது? ’சுகி எவ்வரோ’ என்ற தியாகப்பிரும்மத்தின் கானடா ராக பாடல் தான் நினைவு வருகிறது. Wind, Sand and Stars.
அந்த்வான் ஒரு பைலட். இவருடைய ஆகாய பயணங்கள் பற்றியது தான் இந்த நாவல். இவர் பைலட்டாக இருக்கும்போது இரு பெரு விபத்துக்களை எதிர் கொண்டு மீண்ட சாகசத்தை தான் எழுதிச்சென்றிருக்கிறார். அந்தக்கால விமானங்களை இயக்குவதில் இருந்த கடும் அதிர்ச்சிகரமான துயர சவால்கள். பாலைவனத்தொடுவானத்தில் மரணதை எதிர்நோக்கி இருப்பவரின் மனக்கிலேசம், யாரும் செவி மடுக்காத பிரார்த்தனை.
Man finds his supreme joy in adventure and creative action.
இந்த நாவல் தான் குட்டி இளவரசன் படைப்புக்கு ஊற்றுக்கண்.
அந்த்வான் வாழ்வு விமான பயணத்தில் தான் கடைசியில் முடிந்தது. அவர் சென்ற விமானம் என்ன ஆயிற்று என்றே கண்டு பிடிக்கமுடியவில்லை. மறைந்தே போனார்.
Nothing in truth, can ever replace a lost companion. Old comrades cannot be manufactured.
ஐம்பதாம் ஆண்டு நினைவு நாளை கௌரவைக்கும் விதமாக பிரஞ்சு அரசு ஐம்பது ஃப்ராங்க் நோட்டில் அவருடைய உருவப்படம், குட்டி இளவரசன் காட்சிகள் சிலவற்றுடன் வெளியிட்டது.

Jan 29, 2018

பாலசரஸ்வதி


நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி பற்றி ஒரு அருமையான வாழ்க்கை வரலாறு படிக்க கிடைத்திருக்கிறது. 
“பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல்.
தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். க்ரியா வெளியீடு என்பதே அதன் தரத்திற்கு சான்று.
டக்ளஸ் எம். நைட் என்ற அமெரிக்கர் எழுதிய நூல்.

விசேஷம் என்னவென்றால் இவர் பாலசரஸ்வதியின் மகள் லட்சுமியின் கணவர். இந்த நூலை மறைந்து விட்ட தன் மனைவி லட்சுமிக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
வீணை தனம்மாள் வம்ச பரம்பரையில் வந்தவர் பாலசரஸ்வதி. வீணை தனம்மாளின் மகள் ஜெயம்மாவின் மகள். ஒரு காலகட்டத்தில் தனம்மாள் “ நான் பாலசரஸ்வதியின் பாட்டி” என்று தன்னை அறிமுகப்படுத்தும் நிலை வந்தது.
இந்தியாவின் முதல் நேரு மந்திரிசபையில் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பாலசரஸ்வதியின் துணைவர். லட்சுமியின் தகப்பனார். லட்சுமி சண்முகம் தான் டக்ளஸ் நைட்டின் துணைவி.
தன்னுடைய 18வது வயதில் பாலசரஸ்வதி தன் வாழ்க்கைத் துணைவராக ஆர்.கே. சண்முகம் செட்டியாரை வரித்துக்கொண்டார். 
இருவருக்கும் 26 வயது வித்தியாசம்.
பாலசரஸ்வதி அபிமான தாரம் என்றே சொல்ல வேண்டும். சண்முகம் செட்டியார் அப்போது ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு முதல் மனைவி உண்டு.

........................................





வாலிப சுதந்திர மீறல்
When it's two intelligent teen age girls, it's quirky,funny and rebellious!
Great Dancer Balaasaraswathy and Outstanding singer M.S.Subbulakshmi in their teens!

.....................................

பரதநாட்டியம் பற்றி தி.ஜாவின் 'மலர் மஞ்சம் ' நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம்,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும்...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும், இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும். நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''

..................

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_29.html