Share

Showing posts with label எம். வி. வெங்கட்ராம். Show all posts
Showing posts with label எம். வி. வெங்கட்ராம். Show all posts

May 17, 2021

எம். வி. வெங்கட்ராம்

 எம்.வி. வெங்கட்ராம்

- R. P. ராஜநாயஹம் 


"ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன்; பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது "

- 'என் இலக்கிய நண்பர்கள்' நூலில் எம்.வி.வெங்கட்ராம்


" மோகமுள் " நாவலில் எம்.வி.வெங்கட்ராம் ஒரு கதாபாத்திரமாகவே வருவார். 

பாபுவின் கல்லூரித்தோழனாக. 


திஜா மோகமுள்ளில் எம்விவி பற்றி : "பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் இப்படித்தான்.எந்த மனிதனிடமும் வெறுப்போ, கசப்போ தோன்றாத,தோன்ற முடியாத மனது இவனுக்கு. வியாபாரத்தில் எப்படி இவன் முன்னுக்கு வரப் போகிறானோ?

 யோகியின் உள்ளம் இவனுக்கு. அதை மறைப்பதற்காகக் கடை வைத்திருக்கிறானோ? இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, எல்லாவற்றையும் ஒரேயடியாக ஒரு நாள் உதறி எறிந்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறானா, புரியவில்லை."


அசோகமித்திரன் " மானசரோவர் " நாவலில் மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனை

 " கோபால் " என்ற அற்புதமான கதாப்பாத்திரமாக உருவாக்கியிருந்தார். 

( மானசரோவர் 'சத்யன்குமார்' பாத்திரம்

 இந்தி நடிகர் திலீப்குமார்)


ஒரு பிரபல எழுத்தாளரை இன்னொரு பிரபல எழுத்தாளர் தன் நாவலில் கதா பாத்திரமாக்கியது - அமெரிக்க பெண் எழுத்தாளர் கேத்தி ஆக்கர் எழுதிய

“Blood and Guts in High school” நாவலில் பிரஞ்சு எழுத்தாளன் ழான் ஜெனே ஒரு முக்கிய பாத்திரம். 


மௌனியின் கதைகள் பலவற்றை எம்.வி .வி திருத்தி செப்பனிட்டிருக்கிறார்.


இவருக்கும் மௌனிக்குமான இலக்கிய சர்ச்சை ஒன்று அந்த காலத்தில் ரொம்ப பிரபலம்.


எம்.வி வெங்கட்ராம் தான் எழுத்தாளனாக இல்லாமலிருந்தால் பெரிய கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும் என்று சொல்வார்.

சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர். 


அவருடைய "வேள்வித்தீ " " நித்தியகன்னி"

நாவல்கள் அவருக்கு இலக்கிய அந்தஸ்தை கொடுத்தன. 

ஆனால் அவர் கடைசி காலத்தில் எழுதிய

 " காதுகள் " நாவல் அவருடைய அமர சாதனை 

என சொல்லப்பட வேண்டும். 


எம்.வி.வி அவருடைய மத்திய வயதில் வினோத வியாதி ஒன்றிற்கு ஆளாக நேர்ந்தது. 

அவர் காதுகளில் படு ஆபாசமான வார்த்தைகள் ஒலிக்க ஆரம்பித்தன. இந்த ஹிம்சையிலிருந்து அவர் மீள முடியவே இல்லை. 

அதை " காதுகள் '' நாவலாக்கினார். 


அந்திம காலத்தில் அவர் காதுகள் டமார செவுடு ஆகி, பிறர் பேசுவதை கேட்க மிகவும் சிரமப்பட்டார்                  என்பது Irony. 


வாழ்வில் பெருந்துயர் சூழ்ந்து எதிரிகளால் புதையுண்டு மீண்டும், மீண்டும் தான் உயிர்த்தெழுந்தவன் என்றும் வெங்கட்ராம் எழுதியுள்ளார். 


கு.ப.ரா வின் சிஷ்ய பரம்பரையில்

 முதல் எழுத்தாளர் எம். வி. வெங்கட்ராம். 

தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன், கவிஞர் கம்பதாசன், அ.கி. ஜெயராமன் 

என்று நீளும் கு. ப. ரா சிஷ்யர்கள் வரிசை. 


... 


மீள் பதிவு 2009

Sep 28, 2020

அச்சத்தின் மச்சங்கள்

 'ஷோர்' ரொம்ப பழைய இந்தி படம். 

இரைச்சலால் துன்புறுவது. 

கதாநாயகனாக மனோஜ் குமார். 

மிஸ்டர் பாரத். 

தேச பக்திக்கு இங்கே அர்ஜுன் படங்கள் போலே                   அந்தக் காலத்தில் இவருடைய படங்கள் 

அங்கே இந்தியில். 


ஷோர் படத்தில் வேலை பார்க்கிற ஃபேக்டரி யந்திரங்களின் தாளாத இரைச்சல்.

 ட்ராஃபிக் வாகனங்களின் இரைச்சல், 

வானத்தில் விமான சத்தம்,

 ஜனங்களின் கூப்பாடு. 

கடைசியில் கதாநாயகனின் காதுகள்

 செவிடாகிப் போய் விடும். 

சப்தமில்லாத மௌன உலகை 

விந்தையுடன் கவனிப்பதாக படம் முடியும். 


எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' 

 'வெளிச்சந்தடி எனில் காதுகளைப் பொத்திக்கொள்ளலாம். 

காதுகளே கூச்சலிட்டால் என்ன செய்ய முடியும்? '


இன்று விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேக்கு இங்கிலாந்து சிறையில் 

இந்த பிரச்சினை. 


வெங்கட்ராம்  அந்திம காலத்தில் செவிடர் தான். 


கு. ப. ரா வின் சிஷ்ய பரம்பரையில் 

வந்தவர் தான் எம். வி. வி. 


பொதுவாக  அபிப்ராயத்தில் குருவை 

யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 


காதுகள் நாவலில் 

" பிச்சமூர்த்தி, கு. ப. ரா இருவரையும் இரட்டையர்கள் என்கிறார்கள். அண்டை வீட்டுக்காரர்கள், ஏக காலத்தில் ஒரே பத்திரிக்கையில் எழுதிய நண்பர்கள் என்கிற அளவில் அது சரியாக இருக்கலாம். 

ஆனால், 

பிச்சமூர்த்திக்கும், புதுமைப்பித்தனுக்கும்

 அடுத்த இடம் தான் 

நான் கு. ப. ரா வுக்குத் தருவேன் "

என்கிறார். 


(ஒரு விஷயம். ந. பிச்சமூர்த்தி, 

கு. ப. ராஜ கோபாலன் இருவரின் 

குடும்பமும் ஒரே வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள்.) 


தமிழ் தாத்தா சாமிநாதய்யருக்கு 

 தன் குரு பற்றி 

உள்ள மரியாதையும், பக்தியும் 

எல்லோருக்கும் தெரிந்ததே. 


அவர் ராமசாமி முதலியார் என்பவருடன் 

பழக வாய்த்தது.


ராமசாமி முதலியாரை சந்தித்த உ.வே.சாமிநாதய்யர்

’எங்க வாத்யாருக்கே ( மீனாட்சி சுந்தரம் பிள்ளை) இவ்வளவு விஷயம் தெரியாது’ என்றாராம். 


..... 


கோவிட் 19 காட்டும் திகில். 


வீட்டை விட்டு வெளியே வந்தால்

சகல மனிதர்களின், கடைகளின் 

சோகம், தவிப்பு, தத்தளிப்பு காணக்கிடைக்கிறது. 


ஃப்ரான்சிஸ் கிருபாவின் 

'நகரில் சிக்கியவன்' கவிதையின் கடைசி வரிகள் 


"வளையிலிருந்து வெளியே வந்து, 

பகலில் நகரச்சாலையோரம் 

திடுக்கிட்டுத் திடுக்கிட்டு 

இரை தேடும் எலியின் கண்கள் 

அச்சத்தின் மச்சங்கள் "

Sep 23, 2020

ஜூலியன் அசாஞ்சே

 ஜூலியன் அசாஞ்சே 

விரக்தி நிலை 


Auditory hallucination பாதிப்புக்குள்ளாகி 

தன்னையே கொல்கிற மனநிலையில். 


நூறு முறைக்கு மேல் தற்கொலை முயற்சியில். 


ராணுவ ரகசியங்களை கசிய விட்டதற்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் சூழலில் 

முற்றிலும் மனமுடைந்திருக்கும் அசாஞ்சே. 


இரண்டு மாதங்களுக்கு முன்பு Single Cell ல போடப்பட்ட பின் மனச்சிதைவு 


காதுகளுக்குள் ' நீ குப்பைடா, நீ செத்த, 

இந்தா வர்ரோம்டா' 


எம். வி. வெங்கட்ராம் இதனால் 

கொஞ்சம் பாடா பட்டார். 

அருமையான 'காதுகள்' நாவலாக

 அவருடைய துயரம் பரிமளித்தது. 


"பணம் இருந்த போது ஒரு வகைத் துன்பம். 

பணம் இல்லாத போது வேறு வகைத் துன்பம்.                


வருகிற துன்பம் சந்தடி செய்யாமல் வருவதில்லை. பெரிய கோஷத்துடன் பிரமாதமாய் 

 விளம்பரம்  செய்து கொண்டு வரும்.

 ஊரில் நிமிர முடியாத படி 

தலையில் ஓங்கிக் குட்டும்.


 சேர்ந்தாற் போல் சில ஆண்டுகள் 

நான் நிம்மதியாக இருந்ததாய்க் கூற முடியுமா? 


மனிதனைப் புழுவாய் நெளியவும் துடிக்கவும் வைக்க வறுமை ஒன்று போதாதா? 


அது போதாது என்று

 புலன்களையும் மனத்தையும் குழப்பும் 

இந்த மர்மமான தாக்குதல்."


- எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்'  நாவலில்.


https://m.facebook.com/story.php?story_fbid=2729770660569716&id=100006104256328

May 24, 2020

எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' நாவலில்

பணம் இருந்த போது ஒரு வகைத் துன்பம்.
பணம் இல்லாத போது வேறு வகைத் துன்பம்.               

வருகிற துன்பம் சந்தடி செய்யாமல் வருவதில்லை. பெரிய கோஷத்துடன் பிரமாதமாய்
 விளம்பரம்  செய்து கொண்டு வரும்.
 ஊரில் நிமிர முடியாத படி
தலையில் ஓங்கிக் குட்டும்.

 சேர்ந்தாற் போல் சில ஆண்டுகள்
நான் நிம்மதியாக இருந்ததாய்க் கூற முடியுமா?

மனிதனைப் புழுவாய் நெளியவும் துடிக்கவும் வைக்க வறுமை ஒன்று போதாதா?

அது போதாது என்று
 புலன்களையும் மனத்தையும் குழப்பும்
இந்த மர்மமான தாக்குதல்.

- எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்'  நாவலில்.

May 17, 2020

எம். வி. வியும் லா. ச. ராமாமிருதமும்



தி. ஜானகிராமனை விட
தான் மூன்று வயது மூத்தவர் என்று
எம். வி. வெங்கட்ராம் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ஜானகிராமனிடம் காணப்படும் சொற்சிக்கனம்    எழுத்தில் இவரிடம் கிடையாது. நிறைய வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுவார்.

தேனீ என்ற பத்திரிகை நடத்துவதில் முழுக்கவனம் செலுத்தியதில் ஒரு வருடத்தில் எம். வி. வியின் பட்டு நூல் தொழில் பெரும் சரிவை காணும் படியானது.

அவருக்கு நேர்ந்த Hearing hallucination காரணமாக அவர் பட்ட பாடு 'காதுகள்' நாவலுக்கு உந்து சக்தி.

.....

காதுகள் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த போது லா. ச. ரா உற்சாகமாக அவரைப் பற்றி இந்தியா டுடேயில் எழுதியிருந்தார்.
 எழுதியவர் மகா புருஷர் என்றால் எழுதப்பட்டவர் மகத்தானவர். இருவரையும் கௌரவப்படுத்திய எழுத்து. அதன் ஒவ்வொரு வரியும்
 எனக்கு மனப்பாடம்.

வெங்கட்ராம் கும்பகோணம் வீட்டில் சில தினங்கள் லா.ச.ரா தங்கியிருந்திருக்கிறார்.

எம். வி. வெங்கட்ராம் பற்றி லா. ச. ரா வின் வர்ணனை. பட்டுத்துணி போட்டு வாசித்தாற் போல, அப்படியா குரல் ம்ருது என்பார்.

எம். வி. வியுடன் கும்பகோணத்தின் ஐக்கிய பாவம். அதற்காகவே வாழலாம் என்று ஏங்கி எழுதியுள்ளார்.

முந்தைய வருடம் எம். வி. வியை கோவையில் சந்தித்த நிகழ்வை குறிப்பிடும் போது லா. ச. ரா
'தளர்ந்திருக்கிறார் ' (நாங்கள் வேறு எப்படி இருக்க முடியும்) என்று ப்ராக்கெட் போட்டதை 26 வருடங்களுக்கு முன் நல்ல இளமையில் நான் படித்த போதே, முதுமையின் சோகம் பற்றிய கனம் காரணமாக கண் கலங்கியது.

பரிசு பெற்ற எம். வி. வி ' காதுகள் ' நாவல் பற்றியும் அதே இந்தியா டுடே இதழில் அமர்க்களமான ஒரு விமர்சனம் எழுதியிருந்தார் லா. ச. ரா.

'எம். வி. வெங்கட்ராம் நடை பதட்டமற்றது.
ஆனால் அழுத்தம் கொண்டது. '
- லா. ச. ரா

காதுகள் நாவலில் முன்னுரை தஞ்சை ப்ரகாஷ்.

..

1. எப்போதோ குமுதத்தில் வந்த படம்.
எம். வி. வியுடன் தஞ்சை ப்ரகாஷ், தேனுகா.
தேனுகாவை பார்க்க க்ளிக் செய்ய வேண்டும். வலது ஓரத்தில் சிரிக்கிறார்.

2. இந்தியா டுடேயில் எம். வி. வி, காதுகள் நாவல் பற்றியெல்லாம் லா. ச. ராமாமிர்தம் எழுதிய பக்கங்கள்

Oct 8, 2009

எம்.வி.வெங்கட்ராம்

"ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன்; பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது "
- 'என் இலக்கிய நண்பர்கள்' நூலில் எம்.வி.வெங்கட்ராம்

" மோகமுள் " நாவலில் எம்.வி.வெங்கட்ராம் ஒரு கதாபாத்திரமாகவே வருவார் .பாபுவின் கல்லூரித்தோழனாக!
திஜா மோகமுள்ளில் எம்விவி பற்றி : "பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் இப்படித்தான்.எந்த மனிதனிடமும் வெறுப்போ ,கசப்போ தோன்றாத,தோன்ற முடியாத மனது இவனுக்கு. வியாபாரத்தில் எப்படி இவன் முன்னுக்கு வரப் போகிறானோ? யோகியின் உள்ளம் இவனுக்கு. அதை மறைப்பதற்காகக் கடை வைத்திருக்கிறானோ? இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக,எல்லாவற்றையும் ஒரேயடியாக ஒரு நாள் உதறி எறிந்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறானா, புரியவில்லை."

அசோகமித்திரன் " மானசரோவர் " நாவலில் மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனை " கோபால் " என்ற அற்புதமான கதாப்பாத்திரமாக உருவாக்கியிருந்தார் . ( மானசரோவர் 'சத்யன்குமார்' பாத்திரம் இந்தி நடிகர் திலீப்குமார்!)

ஒரு பிரபல எழுத்தாளரை இன்னொரு பிரபல எழுத்தாளர் தன் நாவலில் கதா பாத்திரமாக்கியது - அமெரிக்க பெண் எழுத்தாளர் கேத்தி ஆக்கர் எழுதிய
“Blood and Guts in High school” நாவலில் பிரஞ்சு எழுத்தாளன் ழான் ஜெனே ஒரு முக்கிய பாத்திரம் !


மௌனியின் கதைகள் பலவற்றை எம்.வி .வி திருத்தி செப்பனிட்டிருக்கிறார்.
இவருக்கும் மௌனி க்குமான இலக்கிய சர்ச்சை ஒன்று அந்த காலத்தில் ரொம்ப பிரபலம்.
எம்.வி வெங்கட்ராம் தான் எழுத்தாளனாக இல்லாமலிருந்தால் பெரிய கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும் என்று சொல்வார் .
அவருடைய "வேள்வித்தீ " " நித்தியகன்னி"
நாவல்கள் அவருக்கு இலக்கிய அந்தஸ்தை கொடுத்தன . ஆனால் அவர் கடைசி காலத்தில் எழுதிய " காதுகள் " நாவல் அவருடைய அமர சாதனை என சொல்லப்பட வேண்டும் .
எம்.வி.வி அவருடைய மத்திய வயதில் வினோத வியாதி ஒன்றிற்கு ஆளாக நேர்ந்தது . அவர் காதுகளில் படு ஆபாசமான வார்த்தைகள் ஒலிக்க ஆரம்பித்தன. இந்த ஹிம்சையிலிருந்து அவர் மீள முடியவே இல்லை . அதை " காதுகள் '' நாவலாக்கினார் . அந்திம காலத்தில் அவர் காதுகள் டமார செவுடு ஆகி , பிறர் பேசுவதை கேட்க மிகவும் சிரமப்பட்டார் என்பது Irony .


வாழ்வில் பெருந்துயர் சூழ்ந்து எதிரிகளால் புதையுண்டு மீண்டும் , மீண்டும் தான் உயிர்த்தெழுந்தவன் என்றும் வெங்கட்ராம் எழுதியுள்ளார் .