Share

Showing posts with label கோபிகிருஷ்ணன். Show all posts
Showing posts with label கோபிகிருஷ்ணன். Show all posts

Sep 15, 2012

Art is vice


Sep 4, 2009

'சாந்தி நிலையம் ' படத்தில் நாகேஷிடம் வீட்டுக்கு வந்த விருந்தாளி உற்சாகமாக " மகாலிங்கம் புல்லாங்குழல் கேட்டிங்களா '' என்பார் .
நாகேஷ் பதில் :" கேட்டுப்பார்த்தேன் . தரமாட்டேன்னுட்டார் . இப்பல்லாம் யாருக்கும் தர்றதில்லயாம்."

மாலி புல்லாங்குழல் வாசிப்பு பற்றி அந்தகால ரசிகர்கள் சிலாகித்து சொல்வது :
'மாலி 'காத்து '(காற்று ) யாருக்கும் வராது.'

மாலியின் Eccentricity பற்றி பல கதைகள் உண்டு .
மாலி புல்லாங்குழல் எப்போதும் கேட்கும்போது பிரஞ்சு ஓவியன் எட்கர் டிகா வார்த்தைகள் உடனே ஞாபகம் வரும் .
“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

மௌனி யின் வரிகள் : விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும் . சுருதி ,விலகி நின்று எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமாக வியாபகம் கொள்கிறது"

மாலியின் புல்லாங்குழலில் இப்படி பிரமை ஏற்படவே செய்யும். ஆழ்ந்து காது கொடுத்த பின் ஒருநீண்ட பெருமூச்சு வெளிப்படும் .

மைக்கேல் ஜாக்சன் பாடுவதும் , ஆடுவதும் பிரஞ்சு ஓவியனின் இந்த வார்த்தைகளுக்கு பொருந்தும் .“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

இருபது வருடங்களுக்கு முன்

'Thriller'
'Bad'
'Dangerous'

கேசட்களை கேட்காத நாளே எனக்கு கிடையாது . இன்றைக்கு டி .வி செய்தியில் மைக்கேல் ஜாக்சன் இறுதிச்சடங்கு நடந்தது பற்றி காட்டப்பட்டது .

..


லா .ச .ரா வின் கதையில் அம்மா தயார் செய்யும்
பாயசம் : சமையலறையைக் குங்குமப் பூவின் மனம் தூக்கிற்று. யாகக் குண்டம் போல தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும் ,வறுத்த திராட்சை பழங்களும் அத்தனை முழிகளாய் விழித்தன. சேமியா , ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.

..


புதுமைப்பித்தன் ஏழையின் குடிசை வீடு பற்றி :'வறுமையின் இருள் அடித்த கர்ப்பக்கிரகம். '


கோபி கிருஷ்ணனின் "இனிமையான வக்கிரம் "கதை எழுத்துக்கலையின் உக்கிரம் . இவருடைய எல்லா எழுத்தும் உக்கிரம் . அலுப்பு என்பதை பதிவு செய்தார் .
" அலுப்பு " ( Ennui )கோபி கிருஷ்ணனை கலைஞன் ஆக்கிவிட்டது .

Art is vice.

கு .ப .ரா .வின் 'சபரியின் பிரேமை ' சிறுகதை பற்றி கோபி கிருஷ்ணன் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது -"சபரியின் பிரேமை இயற்கைக்கு எதிராக இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதனால் ஏற்படும் துயரை எடுத்துச் சொல்கிறது ."
கோபி கிருஷ்ணனின் ' இனிமையான வக்கிரம் ' கதையை படித்தால் அந்த நேர் எதிர் 'Child'(!) பற்றி புரிந்து கொள்ளமுடியும் . கோபியின் Black Humour !

...................

Sep 2, 2009



மனித மண்டைஓடு

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்!"


Human skull is always smiling!


சுஜாதா இருபது வருடங்களுக்கு முன் எழுதினார் " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால்."

தொன்ம ரகசியம் ஒன்று - பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர் . அந்த மண்டை ஓடுகள் - அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.


Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool.

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி, சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி யோரிக் கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான்.
A sentimental affection for the deceased jester.
Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life

.............


Aug 22, 2009



சாமுவேல் பெக்கெட்- நகுலன் கவிதையில்


No, I regret nothing, all I regret is having been born,
dying is such a long tiresome business I always found.
-Samuel Beckett.

இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட் கவலைப்பட்டவர்.
The futility of man's aspirations!
அவருடைய நாடகம்
“Waiting for Godot” என்ற பெக்கெட்டின்
Absurd Drama காத்திருத்தல் பற்றிய துயரத்தின் உச்சம் .
We're all born mad. Some remain so.
“Waiting for Godot”
Mr. Godot told me to tell you he won't come this evening but surely tomorrow.
இங்கே குறிப்பிட வருவது நகுலனின் ஆங்கில கவிதை :

Death
Also waits
It has
infinite Patience.

இந்த கவிதைக்கு
inspiration பெக்கெட்டின் வரிகள் Dying is such a long tiresome business I always found.

பெக்கெட் பற்றி நகுலன் தன்னுடைய நாவல்களில் எப்போதும் பேசுவார்.
......

Jul 8, 2012

Carnal Thoughts - 33

I.P.C யில் RAPE என்ற வார்த்தையை எடுத்து விட்டு அதற்கு பதிலாக SEXUAL ASSAULT  ஆக மாற்ற மத்திய அரசு உத்தேசிப்பதாக ’ஹிண்டு’ பேப்பரில் இரண்டு வருடம் முன் படித்த ஞாபகம்.

போன நவம்பரில் இண்டியன் எக்ஸ்பிரஸில் க்ரிமினாலஜி புரொபசர் திலகராஜ் எழுதிய கட்டுரை படித்தேன்.'' Love and Lust Murders are classified as ' Partner Violence'.''

சேக்ஸ்பியரின் ஒதல்லோ தன் கதாநாயகியிடம் செய்வது Partner Violence.மாசற்ற டெஸ்டமோனா.


இங்க்மார் பெர்க்மன் இயக்கிய The Virgin Spring(1960) படத்தில் வரும் கற்பழிப்பும் கொலையும் வேறு வகை. கற்பழித்துக் கொலை செய்யப்படும் இங்கெரி என்னும் மாசில்லாத சிறுமி.



Eroticism பற்றி Love பற்றி  Breathless (1960) பிரஞ்சு படத்தில் கோடார்ட் சொல்கிறார்:

"Eroticism is a form of Love and Love a form of Erotism."

Decameron (1971) இத்தாலி இயக்குனர் பஸோலினியின் படங்களில் முக்கியமானது. இந்தப் படத்தில் பத்து கதைகள். ஒரு கதையில் பசோலினி ஒரு ஓவியராக நடித்திருக்கிறார்.
 

டெக்கமரான் படத்தில் இன்னொரு கதையில் ஒரு கன்னிகாஸ்திரி மடம். ஒன்பது கன்னிகாஸ்திரிகள். இந்த ஒன்பது பேரும் புருஷலோலிகள்.

(ஸ்திரிலோலனுக்கு எதிர்ப்பதம் புருஷலோலி.பெண் பித்து பிடித்த ஆண் ஸ்த்ரிலோலன். ஆண்பித்து பிடித்த பெண் புருஷலோலி.புருஷ லோலி என்ற vocabulary’பரஸ்பரம்’ சிறுகதையில் கோபிகிருஷ்ணன் புழக்கத்தில் கொண்டுவந்தார்.)
அந்த Nunnery யில் ஒரு கட்டுமஸ்தான வாலிபன் labour வேலைக்கு சேர்ந்துவிடுகிறான். ஒவ்வொரு சிஸ்டராக ஒன்பது பேருமே அந்த இளைஞனை சோலி பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வாலிபன் உற்சாகமாக முதலில் இயங்கியவன் ரொம்ப களைத்துப்போய், போதும் போதும் ஓத்த ஓலுன்னு எந்திரிச்சி சாமான சொறிஞ்சி விட்டு சொல்வான்: ஒரு சேவல் பத்து பெட்டைக்கோழியை சோலி பார்க்க முடியும். பெட்டைக்கோழிகளும் திருப்தியா சிறகை உதறிக்கொள்ள முடியும்.ஆனால் பத்து ஆம்பிளைகளாலும் இந்த சோலியில் ஒரு பொம்பளையை திருப்தி படுத்தவே முடியாது. நான் ஒரு ஆம்பிளை ஒன்பது சிஸ்டர்களை இடைவிடாம... இதெல்லாம் எப்படிம்மா..  ஏதேனும் ஒரு சிஸ்டம் வேண்டாமா? ஒரு நாளைக்கு ஒரு பொம்பளைன்னு
time table போடுங்க. இல்லைன்னா ஆளை விடுங்க. நான் கிளம்புறேன். நான் sex வேணும்னு தான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன்.ஒத்துக்கிறேன்.அதுக்குன்னு இப்படியா”


Nunnery எனும்போது அல்மொடோவர் இயக்கிய ஸ்பானிஷ் படம் Dark Habits (1983) பற்றி குறிப்பிட வேண்டும்.
 
 யோலன்டா எனும் காபரே பாடகி  ஒரு கான்வெண்ட் டுக்கு வருகிறாள். மதர் சுபீரியர் போதை மருந்துக்கு அடிமையானவள்.அதோடு கூட ஒரு லெஸ்பியன். யோலன்டாவை அவள் காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள். இரண்டு பேரும் ஹெராய்ன் போதையை அனுபவிக்கிறார்கள்.
Are'nt you a nun? என்ற கேள்விக்கு  No, I'm a whore என்கிறாள் யோலன்டா.
சிஸ்டர் ஸ்நேக் - பாதிரியார் இருவரும் லவ் பண்ணுகிறார்கள்.
 Sister Snake, Sister Damned, Sister Rat இப்படி படம் பெரும்பகுதி பெண் கதாபாத்திரங்கள். ஒரு சிஸ்டர் நம்ம இருகோடுகள் ஜெயந்தி சாயலில்!


நிறுவனமாக்கப் பட்ட மதத்தின் இழிந்த நிலை பற்றிய படம். Spiritual Desolation and Moral Bankruptcy!  மதர் ஜெனரல் கான்வெண்டையே கலைத்து விடுகிறாள்.

 Dark habits படத்தில் ஒரு வசனம்:
There are as many kinds of kisses as kinds of love; the paternal kiss on the forehead, the kiss on the eyes full of peace, the amusing kiss on the nose, the friendly kiss on the cheek. All of these are somewhat anodyne, but they could be taken as tempting invitations to more perfidious ones, such as the indiscreet kiss on the throat, or the coaxing kiss in the ear which is like being told a secret. And finally there is the kiss on the lips. "A kiss means nothing," say the thoughtless.