Share

Showing posts with label R.P.RAJANAYAHEM. Show all posts
Showing posts with label R.P.RAJANAYAHEM. Show all posts

Dec 4, 2021

Kathik Vee's assessment of R.P.Rajanayahem

You certainly have the
 'gift of the gab' RPR, 
when it comes to speaking. 
And, how nicely and aptly the name
 (your college friends use) #Gabie#
  sits here.🙂

And, your well-worded writings are undoubtedly a Reader's delight. 
 Your wit and humour never fail to amaze me.
Take time to live dear RPR, as you have so much to give the World .🙏🙂

https://m.facebook.com/story.php?story_fbid=2941785962701517&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3203520859861358&id=100006104256328

Nov 12, 2021

Prabhu Ram appreciates R.P.Rajanayahem

Prabhu Ram appreciates R.P.Rajanayahem

Prabhu Ram :
 Not many know how to live life
 "this moment".
You are blessed Sir!!
One can remember these things,
 only when they lived that way!!
Refreshing to read your posts!

https://m.facebook.com/story.php?story_fbid=2563810633832387&id=100006104256328

Mar 6, 2020

Mohamed Fazlulla Khan on R.P.Rajanayahem


Mohamed Fazlulla Khan(the famous linguistic scientist)  on R.P.Rajanayahem


"I started addressing you on this platform with the thought
that I was once your senior at college.
But as I browse through your writings in Tamil, that carry appropriate quotes and references from English and other literatures, I realise that I am dealing with a well read person turned into a sublime writer, a valuable critic of life, language, religion and literature.
I can only express my awe and wonder at your intellectual and linguistic calibre.
Hats off to you.
Keep up the good work."

Nov 22, 2019

ஆன்ம லாபம்




நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன். எந்த போதை பழக்கமும் இல்லாதவன்.
உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்?
மது,புகை,சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்?
என்ன லாபம் கண்டாய்?”
என் பதில் : “ஆன்ம லாபம்”

Jul 31, 2019

One man in his time plays many parts


ஒன்னுல மந்திரி, இன்னொன்னுல ஏட்டையா
And one man in his time plays many parts
- Shakespeare in 'As you like it'





A poor player struts and frets his hour upon the stage, and then is heard no more:
- Shakespeare in 'Macbeth'





May 31, 2019

சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்

லண்டனில் இருக்கும் சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்.
என்ன ஒரு அன்பு!
அந்த நாள் இளைய ராஜநாயஹம்

..........

சௌந்தர் வரைந்துள்ள இன்னொரு சித்திரம்

இன்றைய R.P. ராஜநாயஹம்

...


”R.P.ராஜநாயஹம் கலை ஈடுபாடு ,பரந்தவாசிப்பு மட்டுமல்ல அரிய தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான ,ரசனைமிகுந்த, பல்துறை அனுபவ எழுத்துக்கு சொந்தக்காரர்.
புகைநுழையாத இடத்திலெல்லாம் புகுந்து வருவது போல ஆச்சர்ய அனுபவம் மிகும் எழுத்து.
அவர் வழி தனி வழி.
சில வருடங்களாக இவரது பதிவுகளை எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். தோழர் யமுனா ராஜேந்திரன் தனது பதிவொன்றில் "ராஜநாயஹம் எழுத்தாளர்களின் எழுத்தாளர் " என்று கூறியிருப்பது மிக உண்மை.
இன்று எனது முகநூல் நண்பராக இருப்பது பெரு மகிழ்ச்சி.”

- T. சௌந்தர்

Mar 19, 2019

Jan 20, 2019

#Ten_Years_Challenge

2009 - 2019


One man in his time plays many parts. - Shakespeare
All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts.
- in 'As you like it' play.

We Know what we are,
But not we may be
- Shakespeare in 'Hamlet'


Age cannot wither me, nor custom stale my infinite variety.
- Shakespeare in 'Antony and Cleopatra'

Dec 5, 2018

The chief guest


R.P.Rajanayahem as the chief guest in 
Sri Chaitanya Techno School, Ramavaram on 1st December,2018.
 A cheerful theatre carnival.


...........



M. Natesh on R.P.Rajanayahem's performance in facebook on 19.09.2018

By 1990 I was 11 years old in theatre. Kind of knew all techniques to train an actor’s body-voice; but not the mind. 
I thought that a person with trained skills in all that I know can go on stage, pick up his/her life’s problems and deliver a solo show of good theatre. No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED. 
IN 2018 rajanayahem comes on stage and does exactly that 28years later!!!!!!!!!!!!!...
 I acknowledged the same day after the show in front of the audience. An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon.


http://rprajanayahem.blogspot.com/…/rajanayahem-is-transfor…




Sep 10, 2018

அமேசான் கிண்டிலில் R.P.ராஜநாயஹம் நூல் “தூறலாய் சாரல்”


அமேசான் கிண்டிலில் என் நூல் “தூறலாய் சாரல்”.
இதை சாத்தியப்படுத்திய திருஞான சம்பந்தமும், பெங்களூர் மகாலிங்கமும் என் நன்றிக்குரியவர்கள்.
அன்பு என்னை அசௌகரியப்படுத்தி உடைந்து கண் கலங்கச்செய்து விடும்.
நான் கேட்காமலே தாமாகவே முன் வந்து இதை செய்த திருஞான சம்பந்தமும், பெங்களூர் மகாலிங்கமும் என்னை கலங்கச் செய்து விட்டார்கள். எழுத்தாளர் பாவண்ணனின் அனுசரனையும்.
என்ன ஒரு வாத்சல்யம்.
அமேசான் கிண்டிலில் என் நூல் “ தூறலாய சாரல்”
லிங்க்
https://www.amazon.in/%E0%AE%A4%E0%AF%82%E0%A…/…/ref=sr_1_1…



Sep 8, 2018

வள்ளியம்மாவும் வேலம்மாவும்


செய்துங்கநல்லூர்.
ஊரில் முதல் காரை வீடு அது தான்.
மாமியார் வீட்டில் இருக்கும் வேலம்மா இளைய மகனின் மனைவி.
வாசலில் “அம்மா, தாயே, புண்ணியவதி. சோறு போடுங்கம்மா”
வேலம்மா “ இருப்பா. இந்தா வர்றேன்.”
சோறு எடுத்துக்கொண்டு போய் பிச்சைக்காரனுக்கு போடுகிறாள்.

 காதில் தங்க பாம்படம் நகை ஆட, மாமியார் வள்ளியம்மா “ ஏட்டி, உங்கப்பன் வீட்டு சோறா? என்னட்டி நெனச்சிக்கிட்டிருக்க? பெரிய தர்ம புத்திரன் மக..”
இன்னொரு நாள் பிச்சைக்காரன் வருகிறான். ”அம்மா தாயே.”
வேலம்மா வாளாவிருக்கிறாள். Once bitten, twice shy.

“ பிச்சை போடும்மா மகராசி.”
வேலம்மா “ ஒன்னும் இல்லப்பா. போ.”
மாமியார் கையில் பேரக்குழந்தை துரை. ஒரு வயது.
“ ஏல, கொஞ்சம் நில்லு.”

வாசலுக்கு குழந்தையோடு வந்த வள்ளியம்மா  தன் மருமகள் வேலம்மாவை கை காட்டி பிச்சைக்காரனிடம் “ ஏம்ல.. இவ வாழ்ந்தாளா. இல்ல வாழ்ந்து கெட்டாளா. நில்லு. அவ சொன்னான்னு போயிடாத. இவ வாழ்ந்தாளா? வாழ்ந்து கெட்டாளா? வீடான வீட்டுல ஒன்னுமே இல்லன்றாளே, பாதகத்தி..”

உள்ளே போய் சோறு, ஆட்டுக்கறியோடு குழம்பு சட்டி நிறைய எடுத்து வந்து பிச்சைக்காரனின் திருவோட்டில் வழிய, வழிய போடுகிறாள்.

வெராண்டாவில் அமர்ந்திருக்கும் மாமனார் செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை குறும்பு புன்னகை புரிகிறார்.

“ ஏல..என்னல. கோட்டிக்காரப்பயலெ. மாமியாள கோவமூட்டி வேடிக்க பாக்கத் தான் நெதம் வருவியோல்ல.” என்று பிச்சைக்காரனைப் பார்த்து பொய்க்கோபத்துடன் கண்ணடிக்கிறார்.
மாமியார் வள்ளியம்மா என் ஆச்சி – அப்பாவின் அம்மா.
மாமனார் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை என் தாத்தா. அப்பாவின் அப்பா.
மருமகள் வேலம்மா என்னை பெற்ற அம்மா.
ஆச்சி கையில் இருந்த ஒரு வயது குழந்தை துரை நான் தான்.










Jun 27, 2018

ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சர்


என் அப்பா மறைவுக்கு பின் இரண்டு மாதத்தில் எனக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. ஒரு காண்ட்ராக்ட் மூலமாக. ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக. ஆறு மாதமாக அப்போது வேலை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நிலையில் இந்த வேலை.
குழந்தைகள் என் துயரங்களின் நிழலை விரட்டியடித்தார்கள்.
மன நிம்மதி என்பதை நம்புபவன் அல்ல. ஆனால் ஒரு ஆன்மீக அனுபவமாக பள்ளியில் என் அனுபவம்.
என் மீது இத்தனை அன்பை யாரும் வாழ்நாளில் காட்டியதில்லை.
2013 -2014 எனக்கு விசேஷமான கால கட்டம்.
குழந்தைகளின் பெற்றோர் என்னை தேடி வந்து பிரமிப்போடு பேசினார்கள்.
மிக சுருக்கமாக இதை எழுத வேண்டியிருக்கிறது.
என்னேரமும் ’ஸ்போக்கன் சார்’ பற்றி தான் வீட்டில் பேச்சாம். சொல்லி வைத்த மாதிரி நூறு பெற்றோர் இப்படி சொன்னார்கள்.
நான் பாடமெடுக்காத வகுப்புக்குழந்தைகள் கூட என்னை நேசித்தார்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் பாடல்கள் பாடினேன்.

இண்டெர்னெட்டில் என் புகைப்படத்தை எடுத்து ஒரு ஒன்பதாம் வகுப்பு சிறுமி என்னைப்பற்றி எழுதி லேமினேட் செய்து நோட்டிஸ் போர்டில் போட்டதை ஆசிரியர்கள் என்னிடம் சொன்னார்கள்.
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அபூர்வமாக ஆசிரியர் வராத போது நான் வகுப்பெடுத்திருக்கிறேன்.
பள்ளியில் கூட்டிப்பெருக்கும் பெண்மணியொருவர் “குழந்தைகள் உங்களைப் பார்த்தவுடன் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள். இப்படி நான் பார்த்ததேயில்லை சார். நீங்கள் வெள்ளிக்கிழமை பாடும்போது எனக்கு அழுகையாக வருகிறது சார்.”
மார்ச் ஒன்றாம் தேதி பள்ளிக்கு போயிருந்த போது காண்ட்ராக்ட் ஃப்ராடுகள் எனக்கு இனி அங்கு வேலையில்லை என்ற தகவலை தந்த போது கண்ணில் பட்ட பள்ளி மாணவ மாணவியரிடம் பூடகமாக இனி நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லி விட்டு, உடைந்து நான் கலங்கி விடுவதை தவிர்த்து அவசரமாக பள்ளியை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது குழந்தைகள் கண் கலங்கி என் காலில் விழுகிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவிகள். ஒன்பதாம் வகுப்பு குழந்தைகள் சிலர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் – இது தான் பள்ளியில் என்னுடைய கடைசி நாள் என்று அறிந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தவன் இரண்டு மணி நேரமாக அழுது கொண்டே தான் இருந்திருக்கிறான்.
ஜூன் மாதம் ஆரம்பித்த வேலை பிப்ரவரியோடு முடிவுக்கு வந்து விட்டதை மார்ச் ஒன்றாம் தேதி தான் நானே அறிய வந்தேன்.
எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் ஜனவரி, பிப்ரவரி மாத சம்பளத்தை காண்ட்ராக்ட் ஃப்ராடுகளிடமிருந்து என்னால் வாங்கவே முடியாமல் போய் விட்டது.
மீண்டும் ஜூன் மாதம் மற்றொரு தனியார் பள்ளியில் நேரடியாக வேலைக்கு சேர்ந்தேன். ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சராக. மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. இரண்டு பள்ளிகளுக்கும் எல்லா வகுப்பிற்கும் கம்யூனிகேட்டிவ் இங்க்ளிஷ் ட்ரைனர்.
ஜூன் 12ம் தேதி முதல் நாளே என் தலையில் இடியாக ஒரு செய்தி மொபைலில் வருகிறது. அந்த துயரத்தை தாங்கிக்கொண்டே தான் அன்றும் மறு நாள் மெட்ரிகுலேஷன் ஸ்கூலிலும் வகுப்பறைகளில் “ When I was just a child, I asked my mama what will I be?”  பாடினேன்.
ஆசிரியர்கள் சொல்கிறார்கள் ‘ அது எப்படி சார்? உங்களுக்கு மட்டும் பள்ளிக்கூடத்தில் இவ்வளவு Fans.’
பிசிக்ஸ் மேடம் வகுப்பில் “ அடுத்த பீரியட் நான் வர மாட்டேன். ராஜநாயஹம் சார் தான் வருவார்” என்று ப்ளஸ் ஒன் வகுப்பில் சொன்னவுடன் மாணவர்கள் மாணவிகள் பரவசமாகி எழுந்து ஆடினார்களாம். பிஸிக்ஸ் மேடம் “ என்ன மாயம் சார் இது?” என்று என்னிடமே வந்து சொல்கிறார்.
மாலை பள்ளி விட்டு செல்லும்போது “good-bye" சொல்லிக்கொண்டிருந்த பிள்ளைகள் என்னால் எல்லோரிடமும் “Adieu" சொல்ல ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் “Adieu" சொல்ல போட்டி போடும் செல்லங்கள்.
இந்த பள்ளியின் கூட்டிப்பெருக்கும் ஆயாவும் “ ஏன் சார்? இது புதுசா நான் பாக்கறேன். பதினஞ்சு வருசமா இங்கே கூட்டி பெருக்கிறேன். இப்ப தான் அதிசயமாருக்கு..  குழந்தைகள் எல்லோருமே உங்கள பாத்தவுடனே இப்படி சந்தோசப்படுறாங்களே”
குழந்தைகளோடு இருப்பது எவ்வளவு சுகமோ, அந்த அளவுக்கு நிர்வாக கடுமை கசப்பானது.
இங்கேயும் நிர்வாகம் திடீரென்று பிப்ரவரியுடன் எனக்கு வேலை முடிகிறது என்கிறார்கள்.
அந்த 2015ம் வருடம் நான் முன்னர் வேலை பார்த்த பள்ளியின் மாணவி ப்ளஸ் டூவில் மாநிலத்தில் முதல் ரேங்க்.
அவளுடைய வீட்டில் பெற்றோர் சொல்கிறார்கள்
“ இவ ப்ளஸ் ஒன் படிக்கும்போது தான் இங்க்ளீஷில கூச்சமில்லாம பேச ஆரம்பிச்சா சார். ஒங்களால தான்.”
அவளுமே ‘நாங்க தான் உங்க கிட்ட படிச்சதுக்கு பெருமைப்படணும். ப்ளஸ் டூவில நாங்க எல்லோருமே உங்கள எப்பவும் நெனச்சிக்கிட்டே இருப்போம் சார்”
மனைவிக்கு ஆபரேசன், எனக்கு கண் ஆபரேசன் எல்லாம் முடிந்து ஆகஸ்டில் வேலைக்கு சேர்கிறேன்.
ஆகஸ்ட் கடைசி நாள் மாலை. ஒரு ஏழாவது வகுப்பு மாணவனின் தாய் என்னிடம் அந்த பையனை அழைத்து வந்து பேச ஆரம்பிக்கிறார்.
“என்னேரமும் வீட்டில் உங்களைப்பற்றியே தான் பேசிக்கொண்டிருக்கிறான். எல்.கே.ஜியில் இருந்து இப்படி இவனை நான் பார்த்ததேயில்லை. இவனோட அப்பாவும் ஆச்சரியப்படுறாரு. உங்கள மாதிரி ஒரு வாத்தியார் கிடைக்கிறது அபூர்வம் சார். உங்களோட ஆசி இவனுக்கு எப்பவும் வேணும் சார்.”
அப்போது உதவி பிரின்ஸிபால் என்னை கூப்பிட்டு “ சார், நிர்வாகத்தில ஸ்போக்கன் இங்க்ளிஷிற்கு இந்த வருடம் பட்ஜெட் இல்லன்னு சொல்லிட்டாங்க சார். நாளையில் இருந்து உங்களுக்கு பள்ளியில் வேல இல்லன்னு மேடம் சொல்லச் சொல்லிருக்காங்க சார்.”
நிர்வாகியோ, பிரின்ஸிபாலோ என்னை சந்திக்கும் தர்ம சங்கடத்தை தவிர்த்தார்கள்.
செப்டம்பர் 13ந்தேதி குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்தேன்.
இப்போதும் பள்ளிக்குழந்தைகள் பலரும் “ We miss you a lot sir, please come back” என்று அடிக்கடி ஃபேஸ்புக்கில் மெஸ்ஸேஜ் போடுகிறார்கள். போனில் கூட என்னிடம் அன்பை பொழிகிறார்கள்.

Jan 31, 2018

ஜோதிடம்


இலக்கிய வாசிப்பு மட்டும் என்றில்லை.
எண்பது ஜோதிட நூல்கள் படித்திருந்தேன். நியூமராலஜி பற்றியும் சீரோ, பண்டிட் சேதுராமன் துவங்கி நிறைய புத்தகங்கள் படித்திருந்தேன்.
ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதனால் மிகுந்த சிரமங்கள் எனக்கு ஏற்பட்டது.
பலருக்கும் நான் ஜோதிடம் பார்க்க வேண்டியிருந்தது.
வசதியான ஒரு உறவினர் தன் மகளுக்கு வந்த வரன் ஜாதகங்கள் என் கவனத்திற்கு வாராவாரம் கொண்டு வருவார். நான் பொருத்தம் பார்த்து எழுதி தருவேன். இலவசமாக. நான் பார்த்த ஜாதகங்களில் இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜாதகமும் ஒன்று.
“ இவன் ஐ.ஏ.எஸ். சரி தான். ஆனா வயசு ரொம்ப அதிகமாயிருக்கு” என்பார்.
ஐ.பி.எஸ்., டாக்டர் ஜாதகங்கள் நிறைய தருவார்.
பொருத்தங்கள் முழுமையாக இருந்தாலும் ஜாதகங்களை கழிக்க பல காரணங்கள் சொல்வார்.
” இவன் ஐ.பி.எஸ்.. சரி.. ஆனா இவன் அப்பன் சாதாரண ஆளாயிருக்கான். என் சம்பந்தின்னா எனக்கு சமமா அந்தஸ்து, செல்வாக்குள்ளவனா இருக்க வேண்டாமா? தொர.. என்ன நான் சொல்றது?”
வாரத்திற்கு பத்து ஜாதகத்திற்கு குறையாது.
அவருடைய ஜபர்தஸ்து பிரகாசமானது. Subtext கீழ்கண்டவாறு இப்படித்தான் இருக்கும்.
“இவன் கலெக்டர்.. சரி… சரி தான். ஆனா இவன் அப்பன்..? இந்தியாவில இருபத்தேழு ஸ்டேட் இருக்காது? ஒரு ஸ்டேட்டுக்கு கூட இவன் அப்பன் கவர்னரா இல்லயே? அட ஒரு முன்னாள் கவர்னரா இருந்தா கூட சரி தான்.”
ஜாதகம், நியூமராலஜி தொரக்கி தெரியும் என்ற செய்தி ரொம்ப வேகமாக உற்றார், சுற்றம், அறிந்தார் அனைவருக்கும் பரவியதால் நான் பெருந்தொல்லை சந்திக்க நேர்ந்தது.
ஒரு கல்யாண வீட்டிற்கு போனால் அங்கே சிலர் என்னிடம் ஜோதிடம் கேட்க ஆரம்பித்தார்கள். எழவு வீட்டுக்கு போனால் என்னை சுற்றி எதிர்காலம் பற்றி விசாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஓசி என்பதால் எனக்கு ஒன்னு, எங்கப்பனுக்கு ரெண்டு.

பஜாருக்கு போனால் நகைக்கடை முதலாளி ஜோசியம் கேட்பார்.
“மைனர்! இவரு ஒங்க கிட்ட ஜாதகம் பாக்கனும்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காரு. கொஞ்சம் இங்கயே பாத்து சொல்லுங்க.” என்று கடையில் அமர்ந்திருக்கும் தன் நண்பருக்கு சிபாரிசு செய்வார்.
முகமறியா அந்த நபர் ஜாதகத்தை கொடுப்பார். விபரம் கேட்டுக்கொள்வார்.
மறு நாள் அவர் மீண்டும் என்னைப் பார்த்து தலையை சொறிவார்.
” என்னுடைய அம்மாவும் மனைவியும் உங்கள வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னார்கள். இன்னும் சில விபரங்கள் கேட்க வேண்டியிருக்கு. சிரமம்னு நினைக்காம வாங்க சார்..”
வீட்டுக்கு என்னை வற்புறுத்தி அழைத்துச் செல்வார். நாலு ஜாதகம் பார்ப்பதென்றால் ரெண்டு மணி நேரமாவது ஆகும்.
அதே நபர் ஒரு ரெண்டு மாதத்தில் மீண்டும் என்னிடம் பவ்யமாக கெஞ்சுவார். ”கோயம்புத்தூருல இருந்து என்னோட அக்காவும் அக்கா மாப்பிள்ளையும் வந்திருக்காங்க. மச்சானுக்கு கொஞ்சம் சிக்கல். ஒங்க கிட்ட ஜாதகத்த காண்பிக்கணும்னு சொல்றார்.”
பேரு மாத்தணும்.. நியூமராலஜி பாக்கணும்… நான் கார் வாங்கணும்..எஸ்டேட் வாங்கணும்னு என் உயிர எடுத்திட்டானுங்க.

ஓசின்னா தான தொந்தரவுன்னு ‘துரை சஹா ஜோதிட சாஸ்த்ரம்’னு சின்னக்கடை வீதியில போர்டு போட்டு ஒக்காந்தேன். ஃபைனான்ஸ் தொழில் செய்து கொண்டிருந்த எனக்கு ஒரு ஆஃபிஸ்.
அப்பவும் கூட பெருங்கோடிஸ்வரன் எல்லாம் என் கிட்ட ஓசியில தான் ஜோசியம் கேட்டானுங்க.
பரிகாரம் சொன்னா தான் ஜோசியருக்கு மரியாதை. பரிகாரம் சொல்லலேன்னா வர்ற ஆளுக்கு சலிப்பு. நான் பரிகாரமெல்லாம் சொல்லவே மாட்டேன்.
ஒருவர் தன் ஒரே மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார்.
என் ’ட்ரஸ் சென்ஸ்’ பற்றி இவருக்கு ரொம்ப அபிப்ராயம். “ தம்பி மாதிரி ட்ரஸ் பண்ண ஊர்ல ஆளே கிடையாது. ” என்பார்.
(அப்போதெல்லாம் மும்பை கொலாபாவிலிருந்து சராக்தின் ரெடி மேட் ட்ரெஸ் தான் எனக்கு.)

அவர் கொடுத்த ஒரு ஜாதகம் நல்ல இடமாம். ஒரே பெண். பத்துக்கு ஒன்பது பொருத்தங்கள் இருப்பதாக எழுதிக்கொடுத்தேன்.
குடும்பத்தோடு அந்த பெண்ணின் ஊருக்கு போயிருக்கிறார்.
பெண்ணின் அப்பா அந்த நகரத்தில் பிரபல ஜோதிடர். வீடே ஒரு கோவில் போல இருந்திருக்கிறது. சாம்பிராணி, சூடம், புஷ்பங்கள்…
வாழப்பாடி ராமமூர்த்தி, சரத்குமார் போன்ற பிரபலங்கள் ஜோதிடரை பார்க்க வந்திருக்கிறார்கள்.
என்னுடைய பொருத்த விபரங்களை பார்த்து விட்டு ஜோதிடர் மாப்பிள்ளையின் தகப்பனாரிடம் சொன்னாராம்:”இவர் எழுதியிருப்பது சரி தான். ஆனால் என் பெண் நட்சத்திரத்திற்கும் உங்கள் பையன் நட்சத்திரத்திற்கும் விவாகம் நடத்தக்கூடாது என்று ஒரு விசேஷ ஜோதிடக் குறிப்பு இருக்கிறது”
மிகப்பெரிய ஜோதிடர் அவர். இவர்கள் கிளம்பி வந்து என்னைப் பார்த்தார்கள்.
என் பாட்டில் குற்றம் கண்ட புலவன் எவன்? என்ற கோபமெல்லாம் எனக்கு கிடையாது. நான் இரண்டு பக்கத்திற்கு சில விஷயங்கள் கேட்டு எழுதினேன்.
”புலிப்பாணியில் இவ்வாறு இன்னின்ன நட்சத்திரங்களுக்கு இப்படி இப்படி….. வராஹமிகிரர் பிருஹத் விவாகபடலம் இவ்வாறு சொல்கிறது… ஹோரா ரத்னா நட்சத்திரங்கள் பற்றி குறிப்பது… சாரதீபா கிரந்தங்கள்…ஜாதகாபரண விவாக பலன்… சாராவளி என்று….
இவை எதிலும் உங்கள் பெண் நட்சத்திரத்திற்கும் இந்த பையன் நட்சத்திரத்திற்கும் விக்னங்கள் ஏதுமில்லையே. நீங்கள் எந்த கணிப்பின் படி பொருந்தவில்லை என்று சொல்கிறீர்கள்?”
இதை அவருக்கு தபாலில் அனுப்பி வைக்க சொல்லி பையனின் தகப்பனாரிடம் தந்தேன்.
பிரபல ஜோதிடரிடமிருந்து உடனே, உடனே கிளம்பி வரும்படி மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் வந்து விட்டது.
இவர்கள் போனவுடன் முகம் மலர அமர வைத்து சொன்னாராம்
“ இந்த குறிப்பை எழுதிய ராஜநாயஹம் யார்?”
மாப்பிள்ளையின் அப்பா தயக்கத்துடன் : ”இவர் தொழில் முறை அனுபவ ஜோதிடர் அல்ல. என் நண்பரின் மருமகன்…”
பிரபல ஜோதிடர் “ இதை எழுதியவர் குடத்திலிட்ட விளக்கு. மிக அற்புதமான ஜோதிஷ அறிவு மிக்கவர். இவர் எழுதியதை எல்லாம் இரவு ஏழு மணி துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை செக் செய்தேன். இவர் சொல்வது மிகச்சரி. உங்கள் பையனுக்கு என் பெண்ணை தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம். எந்த விக்கினமும் நான் சொல்லப்போவதில்லை.”
இதை ஊருக்கு வந்தவுடன் என்னிடம் வந்து மலைத்து நின்றார்கள். பிரமிப்பாக சொன்னார்கள். ”உங்களைப் பற்றி அவருக்கு ரொம்ப மதிப்பும் மரியாதையும்”
எனக்கு அப்போதிருந்து ஜோதிடத்தின் மீதிருந்த மதிப்பு மரியாதை போய்விட்டது. இவ்வளவு தானா? என்று ஆகிவிட்டது.
இன்று பதினைந்து ஆண்டுகளாகி விட்டன. என்னிடம் இருந்த அத்தனை நூல்களையும் தூக்கியெறிந்து விட்டேன். ஜோதிடம் என்று எவனும் என்னிடம் எதுவும் கேட்டு வரக்கூடாது என்பதை உறுதியாக சொல்லி விட்டேன்.
ஊர்ப்பய கஷ்டத்த கேட்டு கேட்டு, ஜாதகத்த பாத்து பாத்து எனக்கே ‘போதும்,போதும்’னு சொரிஞ்சி விட்டு எந்திரிக்க வேண்டியதாயிடுச்சி.

பெரும் சிறை, புதைகுழியில் இருந்து மீண்ட திருப்தி.
For this relief,much thanks.
ஒரு விஷயம். அந்த பிரபல ஜோதிடரின் மகளுக்கும், என் மாமனாரின் நண்பர் மகனுக்கும் திருமணம் நடக்கவில்லை.
ஜோதிடர் பச்சை விளக்கு காட்டிய பின் பெண்ணை பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்கவில்லை. பெண் அழகாயில்லையாம்.

Jan 19, 2018

What a piece of work is a Man!


R.P.ராஜநாயஹம் யார்?
இலக்கிய உலகில் திணிக்கப்பட்ட அடையாளங்கள்
தி.ஜானகிராமனின் பரம ரசிகன்.
அசோகமித்திரனின் சீடன்.
ந.முத்துசாமியின் மாணாக்கன்.

Shakespearean scholar!
.....................
மணிக்கொடி சிட்டி ராஜநாயஹத்திற்கு கொடுத்த பட்டம் - கலியுக கர்ணன்
கோணங்கி கொடுத்த பட்டம் - வசீகர கோமாளி
கல்லூரி கால நண்பர்களுக்கு - GABIE. இன்றைக்கும் பால்ய நண்பர்கள் எல்லோரும் 'கேபி ' என்றே அழைக்கிறார்கள்.
உறவினர்கள் அனைவருக்கும் -துரை
( R.P.ராஜநாயஹம் என்ற என் பெயர் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் மிகவும் அந்நியமானது . எங்கள் குடும்பங்களில் பலருடைய பெயரில் ராஜநாயஹம் உண்டு . தாத்தா பெயர் என்பதால் பல ராஜநாயஹம்! அதனால் துரை என்றால் மட்டும் தான் நான் என்பது அவர்களுக்கு புரியும். )
ஜெயமோகன் எனக்கு கொடுத்த பட்டம் - காலச்சுவடின் ஒற்றன்
காலச்சுவடு கொடுத்த விருது - ஊட்டி வரை உறவு !
சாரு நிவேதிதா கொடுத்த பட்டம் -
லியர் மன்னன் ராஜநாயஹம்!
பாரதி மணி கொடுத்த பட்டம் -
'அண்டி உறைப்பு 'ராஜநாயஹம்!
சில உண்மைகளையும், தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், ஒரு தைரியம் வேண்டும்.அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறைப்பு'
எஸ்.ராமகிருஷ்ணன் என்னைப் பற்றி - ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்!
யமுனா ராஜேந்திரன் அவர்கள் ராஜநாயஹத்துக்கு சூட்டிய பட்டம்
- ‘எழுத்தாளரின் எழுத்தாளர்’
.................................


ராஜநாயஹம் பற்றி
மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்
கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.
அசோகமித்திரன் : நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.
டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு ! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?
சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம்.
ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம்.
அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.
................................................

ராஜநாயஹம் எழுத்து

எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.
- எஸ்.ராமகிருஷ்ணன்
www.sramakrishnan.com
..........................................................
எனக்குத் தெரிந்து R.P.ராஜநாயஹம் அவர்கள் தமிழ் படங்கள் பற்றியும், உலகப் படங்கள் பற்றியும் தெளிவான அறிவு உடையவர். அவர் பாலைய்யா, சுப்பைய்யா பற்றியும் பேசுவார், பெட்ரிக்கோ பெல்லினி பற்றியும் பேசுவார். ரோமன் பொலன்ஸ்கி படத்தையோ,பெட்ரொ அல்மொடொவர் படத்தையோ முன்வைத்து நம்ம ஊர் படத்தை விமர்சனம் செய்யமாட்டார்.
-குட்டிபிசாசு
............................................................................
பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு;
அண்மைக்காலம்வரை ஜெயமோகனை அடிக்க காலச்சுவடு உசுப்பேத்திவிடும் அடியாள் என்ற அபிப்பிராய அறியாமை மட்டுமே R.P.ராஜநாயஹம் பற்றி எனக்கு இருந்ததென்பதற்கு, இவரை முதலிலே அறிய நேர்ந்த இவரது இலக்கியபத்தி+பக்தி எழுத்துகளும் காரணம். அப்படியான தப்பபிப்பிராயம்மட்டும் இப்போது மாறவில்லை; இவரை எதிர்_ஜெயமோகன் கருத்துப்பிம்பவடையாளமாக வைத்திருந்தது(ம்) மாறி, மாற்று_ஜெயமோகன்(_would be) கருத்துப்பிம்பவடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்டேன்; இலக்கியமென்பது உருகிப்பருகி ஆனந்திக்கமட்டுமே என்ற அமுதகலசமதுவந்திகளாக இரண்டுபேரும் தோன்றுகின்றார்கள்.
.......................................................................
என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.
- பஞ்சரு பலராமன்
Velichathil.wordpresscom
........................................................................
NARAIN frind feed :சுவாரஸ்யம் என்னைக்கும் நிஜமாகாது. இது வெறும் சுவாரஸ்யம் மட்டும் கிடையாது, அதுக்கு மேல!
ராஜநாயஹம் மாதிரி ஒரு ஆளை நாம இன்னமும் சரியான இடத்துல வைக்கலன்னு தோணுது
...............................................................................