Share

Showing posts with label எஸ்.எஸ்.ஆர். Show all posts
Showing posts with label எஸ்.எஸ்.ஆர். Show all posts

Aug 27, 2008

இலட்சிய நடிகர் S.S.R

பெரியகுளம் தலைமை தபால் நிலையத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நாள் இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனின் உடன் பிறந்த தம்பி பாஸ்கர் தபால் ஆபீஸ் வந்து என்னிடம் "தம்பி , இன்று மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள் . அண்ணன் மதுரையிலிருந்து கிளம்பி இங்கே வருகிறார் .போன் இப்ப வந்தது ." என்றார் . எனக்கு சந்தோசம் . சென்னை இலிருந்து மதுரைக்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவர் பெரியகுளத்தில் இருக்கும் அப்பா வையும் தம்பி யையும் பார்க்க S.S.R வருகிறார் . அவரை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு.

மதியம் 12 மணிக்கு ஆபீஸ் PERMISSIONபோட்டு விட்டு பாஸ்கர் வீட்டுக்கு போய் விட்டேன் . S.S.R தகப்பனார் சேடபட்டி சூரிய நாராயண தேவருக்கு அப்போது வயது ஒரு 75 இருக்கும் . என்னிடம் நன்றாக பேசுவார் .

ஓவியர் TROTSKY MARUDHU வின் தம்பி திலகர் மருது என் பால்ய நண்பன் . ஓவியர் மருது ஒரு முறை பெரியகுளம் வந்திருந்த போது S.S.R உடைய இன்னொரு தம்பி கதிர் வேல் மகன் பாண்டியன் உடன் என் அறைக்கு வந்து என்னிடம் பேசிகொண்டிருந்திருக்கிறார் . உண்மையில் ஓவியர் மருது வின் அப்பா மருதப்பனும் ( இவர் ஒரு ஞானி ) நானும் மதுரையில் தல்லாகுளத்தில் ரோட்டில் சந்தித்தால் கூட இரண்டு மணி நேரம் பேசி கொண்டிருப்போம் . அவர் தான் எனக்கு என் பதினெட்டு வயதில், ரஸ்ஸல் எழுதிய “WHY I AM NOT A CHRISTIAN” நூலை படிக்க கொடுத்தவர் . மருது வீட்டில் ஒரு நூலகம் உண்டு . "இயேசுவின் மரணம் காஷ்மீரதிலே " என்ற ஒரு விசித்திரமான நூல் கூட அவரிடம் இருந்து வாங்கி நான் படித்திருக்கிறேன் . S.S.R க்கு இவர் சித்தப்பா . அதனால் தான் பெரியகுளத்தில் பாஸ்கர் எனக்கு அறிமுகம் . ஓவியர் மருதுக்கு S.S.R அண்ணன் முறை .

விஷயத்திற்கு வருகிறேன் . பாஸ்கர், அண்ணன் S.S.R வரபோகிறார் என்ற பதற்றத்தில் இருந்தார். சூரிய நாராயண தேவர் குழந்தை போல . நான் பாஸ்கர் கேட்பதற்காக HITS OF S.S.RAJENDRAN ஆடியோ கேசெட் கொடுத்திருந்தேன் .கேசெட்டை போட்டு கேட்பதற்காக என் டேப் ரேகார்டரையும் கொடுத்திருந்தேன் S.S.R காக டிஎம் எஸ் பாடிய பாடல்கள் தனி சிறப்புடையவை . அந்த பாட்டு எல்லாம் கேட்கும் போதே S.S.R அதற்கு பாவத்துடன் வாயசைப்பதை உணர முடியும் . "ரொம்ப நல்லா இருந்தது.இது மாதிரி ஒரு டேப் ரேகார்டேர் ஒன்னு வேணும் " என்று சூரிய நாராயண தேவர் சொல்லிகொண்டிருந்தார் . ஒரு போன் வந்தது அப்போது . பாஸ்கர் ஏமாற்றத்தோடு என்னிடம் " அண்ணன் அவசரமாக சென்னை திரும்பி போகிறாராம் . அடுத்த முறை பெரியகுளம் வருகிறேன் என்று சொல்லிவிட்டார் தம்பி " என்றார் .

அன்று தவறிபோனவாய்ப்பு ! காலம் ஓடி விட்டது .

அதன் பிறகு இன்று வரை இலட்சிய நடிகரை நான் பார்த்ததில்லை . பார்க்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை . இப்போது S.S.R வயது 86.

இந்த விஷயங்களை ஓவியர் மருது இங்கே திருப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு வருடம் முன் வந்திருந்த போது நான் மத்திய அரிமா சங்க மேடையிலேயே பேசினேன் . எம்.எல்.ஏ . கோவிந்தசாமி அவர்கள் மருது பற்றி நான் பேசிய விஷயங்கள் பிரமிப்பாய் இருப்பதாக குறிப்பிட்டார் .