Share

Showing posts with label ஷேக்ஸ்பியர். Show all posts
Showing posts with label ஷேக்ஸ்பியர். Show all posts

Oct 20, 2020

காலத்தின் அசுர உருவம்

 "பீக் அவர் என்ற உருவில் காலம் நாலு வண்டி ஆட்களை ஒரு வண்டியில் அடைத்து நசுக்கிப் பிழிகிறது" 


1954ல் 'சிவப்பு ரிக் ஷா' கதையில் இதை சொல்லியிருக்கிறார் தி. ஜானகிராமன். 


கரோனா கண்விரித்து பார்த்து

 இந்த நீண்ட அராஜகத்திற்கு 

ஒரு பிரேக் போட்டிருக்கிறது. 


சிட்டி பஸ் ஸ்டாண்டில், அடுத்தடுத்த பஸ் ஸ்டாப்களில் மாலை மறைகிற நேரங்களில் பஸ்சுக்கு நிற்கிற வயதானவர்கள் , நடுத்தர வயதினர், இரு பால் இளையவர்கள் முகங்கள் திகில் பூசி, எப்போதுமே இருந்ததை மறக்க முடியாது. 


தி. ஜானகிராமன் " வீட்டின் அமைதியை நோக்கிப் பறக்கும் மனித வர்க்கத்தின் முக வாட்டத்தையும் அலுப்பையும் வியர்வையையும் பார்க்கும் போது, காலத்தின் இந்த அசுர உருவந்தான் கண் முன் நிற்கிறது." 


'காலத்தின் அசுர உருவம்' - 

அறுபத்தாறு வருடங்களுக்கு முன்பு 

எழுதிய வார்த்தை. 


பீக் அவரில் டவுன் பஸ் ஏறிய பின் துன்பக்கேணியிலே இறங்கி விட்டது போன்ற நிரந்தர அதிர்ச்சி. 


மொஃபசல் பஸ், எக்ஸ்பிரஸ் பஸ் வெளியூர் பயணங்களில் இடையில் நிற்கிற ஊர்களில் இயற்கை அவஸ்தை தீர்க்க, சிறு நீர் கழிப்பிட சூழல், துர்நாற்ற அருவருப்பு.

 மலம் கண்ணில் காணாமல், 

வெளி வந்து மீண்டும் பஸ்ஸுக்குள் நுழைய முடிந்திருக்கிறதா? 


எலக்ட்ரிக் ட்ரெயின் ஏறுகிற, இறங்குகிற பதற்றத்துடன் கூட்ட நெரிசல் துக்கம். 


............. 


"Young man will do it if they come to it "


ஹேம்லெட்டில் ஒஃபீலியா சொல்கிறாள். 

உடலுறவை சொல்கிறாள். 

Young men have sex when opportunity offers. 


'மங்கள விலாசம்' என்ற வார்த்தை

 ஜானகிராமன் கதை 'அன்பு வைத்த பிள்ளை' யில் 


மங்கள விலாசம் - உடலுறவு. 


" அவனுக்கு எப்போது பார்த்தாலும் - கால தேசப் பிரக்ஞையில்லாமல் - மங்கள விலாசத்தில் இருக்க வேண்டும். "


..

Aug 14, 2020

ஷேக்ஸ்பியர்

 ஷேக்ஸ்பியர்

- RP ராஜநாயஹம்


"டெம்பஸ்ட்" நாடகத்தில் காணப்பட்ட கதை 

 தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல்,        மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.


“We are such stuff as dreams


Are made on.”


- The Tempest.


மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி.

அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.


டெம்பஸ்ட்டின் 

We are such stuff as dreams

Are made on 

என்பதையும் மௌனியின் வரிகளுக்காக கணக்கில் எடுக்கத் தான் வேண்டும். 

 


இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும்.

பல்கலைக்கழகங்களில் படித்திடாதவர்.

தன் நாடகங்களில் ஷேக்ஸ்பியர் 

தானும் நடித்திருக்கிறார்.


ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் தான் எழுதிய மகத்தான நாடகங்களை அச்சிலே பார்க்கவே இல்லை.


52 வயதில் ஷேக்ஸ்பியர் இறந்த பின் 36நாடகங்களை அச்சில் கொண்டுவந்தவர்கள் அவருடைய நாடகங்களில் நடித்த

 ஹெம்மிங்க்ஸ், காண்டல் என்ற இருவர் தான். 


ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் Cardenio அவர் காலத்தில் மேடையில் நடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நாடகம் தொலைந்து போய்விட்டது. கிடைக்கவே இல்லை. 


சமீபத்தில் "Lost Play of Shakespeare 'Cardenio'  Discovered" என்று ஒரு  பரபரப்பு செய்தி அடிபட்டது. 


Racism, Anti-Semitismஎன பல prejudice

இவரிடம் தெரியக் கிடைக்கிறது என சுலபமாக குற்றம் சாட்டி பெருமிதம் கொள்ள

 செக்குமாட்டு விமர்சகனுக்கு வாய்ப்பு

 நிறைய உண்டு.


Black is the badge of hell, the hue of dungeons and the scrowl of night.

-‘ Love’s Labour Lost’


ஒதெல்லோ ஒரு மூர் ஆப்பிரிக்கன்.

ஒதெல்லோ நாடகத்தில் அவன் மீதான வசவுகள் கூட ஷேக்ஸ்பியருக்கு எதிராக திருப்பப் படமுடியும்.


யூத வெறுப்பு தான் Merchant of Venice நாடகத்தில் ஷைலக் என்ற யூதனை

 கொடூர, இரக்கமற்ற வில்லனாக்க 

காரணம் என வாதிடலாம்.


தன் நாடகங்களில் தற்கொலை என்பதை

 13தடவை பயன்படுத்துகிறார்.


ரோமியோவும் ஜூலியட்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஜூலியஸ் சீசரில் தற்கொலை நடக்கிறது.


ப்ரூட்டஸ் மனைவி போர்ஷியாவின் தற்கொலை.


 ப்ரூட்டஸ் -கேசியஸ் Die by Consensual Stabbing. 


ஒதெல்லோ தற்கொலை செய்து கொள்கிறான். 


ஹேம்லெட்டில் ஒபீலியா நீரில் மூழ்கி தற்கொலை. 


ஆண்டனி அண்ட் கிளியோபட்ராவில் தான் 

அதிக தற்கொலைகள்.

மார்க் ஆண்டனி,  கிளியோபட்ரா,

சார்மியன், ஈரோஸ், ஐராஸ்....


முதல் நாடகம் Henry VI part one இருபத்தைந்து வயதில் எழுதினார்.

 கடைசி நாடகம் The Two Noble Kinsmen எழுதும்போது அவருக்கு 49 வயது.


அவருடைய கவிதைகள் 154 sonnets. 

நிறைய சர்ச்சை கிளப்பியவை. 


முதல் 26 கவிதைகள் ஒரு இளைஞன் பற்றியவை.

 கடைசியில் இரண்டு தவிர முந்தைய 25கவிதைகள் ஒரு கருப்பு பெண் குறித்தவை.


 126வது சானட் சொல்வது farewell to“My lovely boy

”...Shakespeare .... a BISEXUAL?


பதினெட்டு வயது ஷேக்ஸ்பியர்.

 இருபத்தாறு வயது ஆன்னி ஹேத்தவே.

தன்னைவிட எட்டு வயது மூத்த ஆன்னி ஹேத்தவே என்ற பெண்ணை மணந்து மனஸ்தாபத்தோடு எட்டு பிள்ளைகள் பெற்றார் ஷேக்ஸ்பியர். 

Anne Hathaway hath a way!


இந்த எட்டில் ஒரு ட்வின்ஸ் உண்டு. 

இந்த ட்வின்ஸ் இருவரில் ஹேம்நெட் வாழ்க்கை 11வயதில் முடிந்தது. 

இன்னொரு ஜூடித் 77வயது வரை வாழ முடிந்தது.


 ஷேக்ஸ்பியரின் சொத்துக்களை அனுபவித்த சூசன்னா 66 வயதில் மறைந்தார். 


ஷேக்ஸ்பியரின் உயில் படி மூத்த மகளுக்குத்தான் சொத்து கிடைத்தது.

மனைவி ஹேத்தவேக்கு கிடைக்கவில்லை.

ஷேக்ஸ்பியரின் Second-best bed இரண்டாவது படுக்கை ...Marriage Bed தான்

 ஹேத்தவேக்கு கிடைத்தது. 


'வறுமையும் புலமையும் ' என்று 

ஷேக்ஸ்பியர் பற்றி சொல்ல முடியாது. 


18வயதிலேயே சொத்து வாங்க ஆரம்பித்து விட்டார். மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்தவர் ஷேக்ஸ்பியர்.

அவருடைய சொந்த ஊர் ஸ்ட்ராட்போர்டில் உள்ளூர்க்காரர்கள் ஷேக்ஸ்பியரை 

ஒரு பக்கா பிசினெஸ் மேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்களாம்.


ஷேக்ஸ்பியரின் அம்மா கூட செல்வசீமாட்டி எனும்படியானவரே. செல்வந்தரின் மகள். 


ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்,கிங் லியர், மேக்பெத் போன்ற ஏழு நாடகங்கள்

 பால் இல்லிட்ஜ் என்பவரால்

 நாவல்களாக எழுதிப் பார்க்கப்பட்டிருக்கிறது.


..........


Portraits

1. William Shakespeare 

2. Shakespeare's wife Anne hathaway


..................

Apr 30, 2015

Cock a snook at Mother




 அல்டாப்பு வலம்புரி ஜான் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருந்தார். பத்திரிக்கையின் பெயர் "தாய்"!  எம்.ஜி.ஆர் – ஜானகியின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந்திரன் தான் பத்திரிக்கை அதிபர்.
 ஜெயகாந்தன் மடத்திற்கு போயிருந்த வக்கீல் ஹபீப் ராஜா (’ஏழாவது மனிதன்’ படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர்) ஜெயகாந்தனின் அடைமழை பிரசங்கத்தின் இடையில் கொஞ்சம்  கேப் கிடைத்த போது “இந்த ‘தாய்’ பத்திரிக்கையில ஒங்களைப் பத்தி..” 

ஜெயகாந்தனோ வாக்கியம் முடியுமுன்னே மின்னலாக சீறினார் “அந்த  ‘த்தாயோளி’ பத்திரிக்கையெல்லாம் நீங்க ஏன் படிக்கிறீங்க?”
.............................

‘அம்மா வந்தாள்’ நாவல் தி.ஜானகிராமனின் மிகப்பிரபலமான நாவல்.
‘மோகமுள்’ நாவலை பிரமாதமாக புகழ்ந்த க.நா.சுவுக்கு ‘அம்மா வந்தாள்’ பிடிக்கவில்லை. 

டெல்லியில் ‘THOUGHT’ ஆங்கிலப்பத்திரிக்கையில் அம்மா வந்தாளுக்கு எழுதிய விமரிசனத்திற்கு க.நா.சு கொடுத்த தலைப்பு ‘Janakiraman’s Mother’. அம்மா வந்தாள் படித்திருந்தால் தான் இந்த தலைப்பின் வக்கிரம் புரியும்.
.....................

ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை - "Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions. 

..............................................


த்ரூஃபோ ( Francois Truffaut ) எடுத்த படம் Bed and Board.  படம் பார்க்கும்போது அதில் ஒரு சுவாரசியமான தகவல். “Mother’s day” was invented by the German Nazis, During  the second world war!

Sep 15, 2012

Art is vice


Sep 4, 2009

'சாந்தி நிலையம் ' படத்தில் நாகேஷிடம் வீட்டுக்கு வந்த விருந்தாளி உற்சாகமாக " மகாலிங்கம் புல்லாங்குழல் கேட்டிங்களா '' என்பார் .
நாகேஷ் பதில் :" கேட்டுப்பார்த்தேன் . தரமாட்டேன்னுட்டார் . இப்பல்லாம் யாருக்கும் தர்றதில்லயாம்."

மாலி புல்லாங்குழல் வாசிப்பு பற்றி அந்தகால ரசிகர்கள் சிலாகித்து சொல்வது :
'மாலி 'காத்து '(காற்று ) யாருக்கும் வராது.'

மாலியின் Eccentricity பற்றி பல கதைகள் உண்டு .
மாலி புல்லாங்குழல் எப்போதும் கேட்கும்போது பிரஞ்சு ஓவியன் எட்கர் டிகா வார்த்தைகள் உடனே ஞாபகம் வரும் .
“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

மௌனி யின் வரிகள் : விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும் . சுருதி ,விலகி நின்று எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமாக வியாபகம் கொள்கிறது"

மாலியின் புல்லாங்குழலில் இப்படி பிரமை ஏற்படவே செய்யும். ஆழ்ந்து காது கொடுத்த பின் ஒருநீண்ட பெருமூச்சு வெளிப்படும் .

மைக்கேல் ஜாக்சன் பாடுவதும் , ஆடுவதும் பிரஞ்சு ஓவியனின் இந்த வார்த்தைகளுக்கு பொருந்தும் .“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

இருபது வருடங்களுக்கு முன்

'Thriller'
'Bad'
'Dangerous'

கேசட்களை கேட்காத நாளே எனக்கு கிடையாது . இன்றைக்கு டி .வி செய்தியில் மைக்கேல் ஜாக்சன் இறுதிச்சடங்கு நடந்தது பற்றி காட்டப்பட்டது .

..


லா .ச .ரா வின் கதையில் அம்மா தயார் செய்யும்
பாயசம் : சமையலறையைக் குங்குமப் பூவின் மனம் தூக்கிற்று. யாகக் குண்டம் போல தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும் ,வறுத்த திராட்சை பழங்களும் அத்தனை முழிகளாய் விழித்தன. சேமியா , ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.

..


புதுமைப்பித்தன் ஏழையின் குடிசை வீடு பற்றி :'வறுமையின் இருள் அடித்த கர்ப்பக்கிரகம். '


கோபி கிருஷ்ணனின் "இனிமையான வக்கிரம் "கதை எழுத்துக்கலையின் உக்கிரம் . இவருடைய எல்லா எழுத்தும் உக்கிரம் . அலுப்பு என்பதை பதிவு செய்தார் .
" அலுப்பு " ( Ennui )கோபி கிருஷ்ணனை கலைஞன் ஆக்கிவிட்டது .

Art is vice.

கு .ப .ரா .வின் 'சபரியின் பிரேமை ' சிறுகதை பற்றி கோபி கிருஷ்ணன் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது -"சபரியின் பிரேமை இயற்கைக்கு எதிராக இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதனால் ஏற்படும் துயரை எடுத்துச் சொல்கிறது ."
கோபி கிருஷ்ணனின் ' இனிமையான வக்கிரம் ' கதையை படித்தால் அந்த நேர் எதிர் 'Child'(!) பற்றி புரிந்து கொள்ளமுடியும் . கோபியின் Black Humour !

...................

Sep 2, 2009



மனித மண்டைஓடு

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்!"


Human skull is always smiling!


சுஜாதா இருபது வருடங்களுக்கு முன் எழுதினார் " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால்."

தொன்ம ரகசியம் ஒன்று - பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர் . அந்த மண்டை ஓடுகள் - அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.


Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool.

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி, சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி யோரிக் கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான்.
A sentimental affection for the deceased jester.
Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life

.............


Aug 22, 2009



சாமுவேல் பெக்கெட்- நகுலன் கவிதையில்


No, I regret nothing, all I regret is having been born,
dying is such a long tiresome business I always found.
-Samuel Beckett.

இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட் கவலைப்பட்டவர்.
The futility of man's aspirations!
அவருடைய நாடகம்
“Waiting for Godot” என்ற பெக்கெட்டின்
Absurd Drama காத்திருத்தல் பற்றிய துயரத்தின் உச்சம் .
We're all born mad. Some remain so.
“Waiting for Godot”
Mr. Godot told me to tell you he won't come this evening but surely tomorrow.
இங்கே குறிப்பிட வருவது நகுலனின் ஆங்கில கவிதை :

Death
Also waits
It has
infinite Patience.

இந்த கவிதைக்கு
inspiration பெக்கெட்டின் வரிகள் Dying is such a long tiresome business I always found.

பெக்கெட் பற்றி நகுலன் தன்னுடைய நாவல்களில் எப்போதும் பேசுவார்.
......

Jan 11, 2010

ஷேக்ஸ்பியர்



பல்கலைக்கழகங்களில் படித்திடாதவர்.தன் நாடகங்களில் ஷேக்ஸ்பியர் தானும் நடித்திருக்கிறார்.

ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் தான் எழுதிய மகத்தான நாடகங்களை அச்சிலே பார்க்கவே இல்லை.
52 வயதில் ஷேக்ஸ்பியர் இறந்த பின் 36நாடகங்களை அச்சில் கொண்டுவந்தவர்கள் அவருடைய நாடகங்களில் நடித்த ஹெம்மிங்க்ஸ், காண்டல் என்ற இருவர் தான்.
 ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் Cardenio அவர் காலத்தில் மேடையில் நடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நாடகம் தொலைந்து போய்விட்டது.கிடைக்கவே இல்லை.



Racism, Anti-Semitismஎன பல prejudice இவரிடம் தெரியக் கிடைக்கிறது என சுலபமாக குற்றம் சாட்டி பெருமிதம் கொள்ள செக்குமாட்டு விமர்சகனுக்கு வாய்ப்பு நிறைய உண்டு.
Black is the badge of hell, the hue of dungeons and the scrowl of night.
-‘ Love’s Labour Lost’




ஒதெல்லோ ஒரு மூர் ஆப்பிரிக்கன்.ஒதெல்லோ நாடகத்தில் அவன் மீதான வசவுகள் கூட ஷேக்ஸ்பியருக்கு எதிராக திருப்பப் படமுடியும்.
யூத வெறுப்பு தான் Merchant of Venice நாடகத்தில் ஷைலக் என்ற யூதனை கொடூர, இரக்கமற்ற வில்லனாக்க காரணம் என வாதிடலாம்.
தன் நாடகங்களில் தற்கொலை என்பதை 13தடவை பயன்படுத்துகிறார்.ரோமியோவும் ஜூலியட்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.ஜூலியஸ் சீசரில் தற்கொலை நடக்கிறது.ப்ரூட்டஸ் மனைவி போர்ஷியாவின் தற்கொலை. ப்ரூட்டஸ் -கேசியஸ் Die by Consensual Stabbing!ஒதெல்லோ தற்கொலை செய்து கொள்கிறான். ஹேம்லெட் ட்டில் ஒபீலியா நீரில் மூழ்கி தற்கொலை. ஆண்டனி அண்ட் கிளியோபட்ராவில் தான் அதிக தற்கொலைகள்.மார்க் ஆண்டனி, கிளியோபட்ரா,சார்மியன்,ஈரோஸ், ஐராஸ்....

"டெம்பஸ்ட்" நாடகத்தில் காணப்பட்ட கதை தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல், மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.

“We are such stuff as dreams

Are made on.”

- The Tempest.



முதல் நாடகம் Henry VI part one இருபத்தைந்து வயதில் எழுதினார். கடைசி நாடகம் The Two Noble Kinsmen எழுதும்போது அவருக்கு 49 வயது.
கிட்டத்தட்ட 1600ம் ஆண்டு 36 வயதில் அவருடைய மிகச்சிறந்த சோக நாடகங்கள் ஹாம்லெட்,ஒதெல்லோ, கிங்லியர், மாக்பெத் ஆகியவற்றை எழுதியிருக்கிறார்!  1616ல் இறந்து விட்டார்.

அவருடைய கவிதைகள் 154 sonnets. நிறைய சர்ச்சை கிளப்பியவை. முதல் 26 கவிதைகள் ஒரு இளைஞன் பற்றியவை. கடைசியில் இரண்டு தவிர முந்தைய 25கவிதைகள் ஒரு கருப்பு பெண் குறித்தவை. 126வது சானட் சொல்வது farewell to“My lovely boy”...Shakespeare .... a BISEXUAL?என ஆராயலாம்!



பதினெட்டு வயது ஷேக்ஸ்பியர். இருபத்தாறு வயது ஆன்னி ஹேத்தவே.தன்னைவிட எட்டு வயது மூத்த ஆன்னி ஹேத்தவே என்ற பெண்ணை மணந்து மனஸ்தாபத்தோடு எட்டு பிள்ளைகள் பெற்றார் ஷேக்ஸ்பியர்.Anne Hathaway hath a way!
இந்த எட்டில் ஒரு ட்வின்ஸ் உண்டு. இந்த ட்வின்ஸ் இருவரில் ஹேம்நெட் வாழ்க்கை 11வயதில் முடிந்தது. இன்னொரு ஜூடித் 77வயது வரை வாழ முடிந்தது. ஷேக்ஸ்பியரின் சொத்துக்களை அனுபவித்த சூசன்னா 66 வயதில் மறைந்தார். ஷேக்ஸ்பியரின் உயில் படி மூத்த மகளுக்குத்தான் சொத்து கிடைத்தது.மனைவி ஹேத்தவேக்குகிடைக்கவில்லை.ஷேக்ஸ்பியரின்Second-best bed இரண்டாவது படுக்கை ...Marriage Bed தான் ஹேத்தவேக்கு கிடைத்தது!



'வறுமையும் புலமையும் ' என்று ஷேக்ஸ்பியர் பற்றி சொல்ல முடியாது . 18வயதிலேயே சொத்து வாங்க ஆரம்பித்து விட்டார். மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்தவர் ஷேக்ஸ்பியர்.அவருடைய சொந்த ஊர் ஸ்ட்ராட்போர்டில் உள்ளூர்க்காரர்கள் ஷேக்ஸ்பியரை ஒரு பக்கா பிசினெஸ் மேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்களாம்.
ஷேக்ஸ்பியரின் அம்மா கூட செல்வசீமாட்டி எனும்படியானவரே. செல்வந்தரின் மகள்!
ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்,கிங் லியர், மேக்பெத் போன்ற ஏழு நாடகங்கள் பால் இல்லிட்ஜ் என்பவரால் நாவல்களாக எழுதிப் பார்க்கப்பட்டிருக்கிறது.

SIR FRANCIS BACON தனக்கு SHAKESPEARE என்ற புனைபெயரை வைத்துக் கொண்டு நாடகங்கள் எழுதினார் என்று ஒரு தியரி உண்டு.
SIR FRANCIS BACON WROTE SHAKESPEARE PLAYS !
டோனலி, பிரான்சிஸ்கேர், மார்க் ட்வைன் ஏன் நீட்ஷே கூட SHAKESPEARE AUTHORSHIP பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ஒரு வேடிக்கையான ஓவியம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. 'ஒரு அறை. சுவரில் ஷேக்ஸ்பியரின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. மேஜையில் SIR.F.BACON என்ற பெயர்ப்பலகை. நாற்காலியில் ஒரு பன்றி அமர்ந்து மேஜையில் உள்ள ஒரு தாளில் எழுதுகோலால் HAMLET என்று சீரியஸாக சிந்தித்து எழுதிக் கொண்டிருக்கிறது.
( BACON என்றால் பன்றி இறைச்சி)
 ஓவியத்தின் கீழே எழுதப்பட்டுள்ளது. 'ஷேக்ஸ்பியரை நம்பாத புலவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்தப் படம் சிறந்த பரிசு. அந்தப் பன்றி 'ஹேம்லட்' என்று தான் எழுதிக் கொண்டிருக்கிறது'.


Aug 12, 2008

அபினவ் பிந்த்ரா சாதனையும் கருணாநிதியின் சோதனையும்

ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா( இலுப்பம்பூ சக்கரை! )இந்தியா வுக்கு தங்கம் வாங்கித்தந்த சந்தோசத்தை அனுபவித்த அதே நேரத்தில் ஒரு சோக செய்தியையும் கேட்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பழைய பல்லவி தான்.ஆனால் பாவம் இந்த முறை இவர்களிடம் ஷேக்ஸ்பியர் சிக்கி விட்டார். 
தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா  'திரு. கருணாநிதி அவர்கள் ஷேக்ஸ்பியரை தாண்டிபோய்விட்டார். அதனால் அவருக்கு உடனே நோபெல் பரிசு உடனே உடனே தந்தேயாக வேண்டும்' என்று பிரகடனபடுத்தியுள்ளார். கிட்டத்தட்ட நோபல் கமிட்டிக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்!

The possession of power , unavoidably spoils the free use of reason
-Immanuel Kant


எதிர்காலத்தில் எப்படியெல்லாம்கருணாநிதி மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அதற்கு சில டிப்ஸ் தர விரும்புகிறேன் .
நோபல் கமிட்டீ பரிசு கொடுக்க தவறிய எழுத்தாளர்கள் வரிசையில் கருணாநிதியையும் சேர்த்து நோபல் கமிட்டீ யின் திறமையின்மையை, மெத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவரது மகத்துவத்தை வெளிப்படுத்தும்.
லியோ டால்ஸ்டாய், ஜாய்ஸ், போர்ஹே ஆகிய மகத்தானவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்காததை சுட்டிக்காட்டி கருணாநிதியை அவர்கள் தோளோடு நிறுத்தி கழக கண்மணிகளுக்கு ஆறுதல் சொல்லலாம்.

இவ்வளவு ஏன் ? மஹாத்மா காந்தியின் பெயர் அவர் உயிரோடு இருந்த காலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில், நாற்பதுகளில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை சிபாரிசு செய்யப்பட்டும் நோபல் கமிட்டீ காந்தியாருக்கு பரிசு தர மறுத்த அவலத்தை சுட்டிக்காட்டி கழகத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களும், மூன்றாம் மட்டமான தலைவர்களும் தங்களை தேற்றிகொள்ளலாம்.