பாலச்சந்தரின் மன்மத லீலை 1976ம் ஆண்டு பிப்ரவரியில்
வெளி வந்திருந்தது.
கலைஞரிடம் கேட்கப்பட்ட கேள்வி:
'மன்மத லீலை படத்தில் உங்களுக்குப்
பிடித்த காட்சி எது?'
கலைஞர் தன் பாணியில் சொன்ன சாதுர்யமிக்க ரசமான பதில் :
" பெட்டிசன் மாமா சட்டையைக் கிழித்துக்கொள்கிற காட்சி."
அன்று இந்த பதில் அரசியல் பார்வையாளர்களாலும், தி.மு.க.வினராலும் மிகவும்
ரசிக்கப் பட்டது.
அந்த நேர அரசியல் சூழல் அறிந்தவர்களால் தான்
கலைஞரின் பொடி வைத்த
இந்த பதிலை
ரசிக்க முடியும்.
மன்மத லீலை படத்தில்
பெட்டிசன் மாமா ஒய்.ஜி.மகேந்திரன் தலையில் வைத்திருப்பது
எம்.ஜி.ஆர் தொப்பி தான்.