Share

Showing posts with label கமல்ஹாசன். Show all posts
Showing posts with label கமல்ஹாசன். Show all posts

Jun 2, 2020

Caesium

கமலுக்கு தசாவதாரத்தில் வாயல். 

விஸ்வரூபத்தில் சீஸியம்.

'உன்னை காணாமல் நான் இங்கு நான் இல்லையே '
பாட்டு எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. 

அந்த பிரமாதமான, அட்டகாசமான 
 முதல் ஸ்டண்ட் காட்சியும்.

விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ள சேகர் கபூர்                     இந்தியில் கதாநாயகனாக நடித்தவர். 

பூலான் தேவி கதையை படமாய் எடுத்தவர்.

 எலிசபெத், கோல்டன் ஏஜ் என்று              ஆங்கிலப்படங்கள் இயக்கியவர். 

பத்மஸ்ரீ விருது வாங்கியவர். 

மறைந்த நடிகர் தேவ் ஆனந்தின் 
சொந்த தங்கை மகன். 

 இவருடைய ரோலை படத்தில் இப்படி சாதாரணமாக கமல் அமைத்திருக்கவேண்டுமா.

போஸ்டரில் சேகர் கபூருக்கு கொடுத்த முக்கியத்துவம் கதாபாத்திரத்திலும்
 தந்திருக்க வேண்டும்.

கதயில எடமில்லன்னு சுலபமா சொல்லலாம். 

ஹே ராமில் ஹேமா மாலினியை
 புலம்ப விட்டவர் தானே கமல். 

அதே படத்தில் சௌகார் ஜானகி
 ஒரு எக்ஸ்ட்ரா நடிகை போல வருவார். 
அவர் இந்த disgrace பற்றி அப்போது
 ரொம்ப பதறி விட்டாராம். 

சீஸியத்தை வைத்து ஒரு நாவல் " The Overlook."

 மைக்கல் கான்னல்லி எழுதியது.

சீஸியம் கையாளுகிற வாய்ப்புள்ள 
ஒரு சைன்டிஸ்ட். 

சீஸியம் வேண்டி இவரை தீவிரவாதிகள் 
 தேடி வரும் வாய்ப்பு பற்றி 
 FBI எச்சரிக்கை செய்ய
 இரு ஏஜன்ட்களை அனுப்புகிறது. 

அவருடைய மனைவி அவர்களில் ஆண் ஏஜன்ட் மாக்ஸ்வெல்லிடம் மனதைப் பறிகொடுக்கிறாள்.

 வேலியே பயிரை மேய முடிவு செய்தால்……

தன் கணவனை அந்த FBI கறுப்பாடு துணையுடன் மனைவியே கொலை செய்கிறாள்.

 சீஸியம் வேண்டி முஸ்லிம் தீவிரவாதிகள்                                  கொன்றது போன்று
 கொலையாளிகள் இருவராலுமே 
இந்த கொலைகேஸ் திசை திருப்பப் படுகிறது.

Framing Muslim terrorists with a crime 
they didn’t commit.
 They can never defend themselves! 
Caesium and the terrorists were 
part of the misdirection.

It’s not about caesium or terrorism. 
It’s the basic equation: 
sex plus money equals murder.

 Detective Harry Bosch in Michael Connelly’s novels.

இந்த நாவலை திரைப்படமாய் எடுத்தால் 
இங்கே யாரும் கோபப்படமாட்டார்கள்.

Jan 9, 2019

Paparazzi and Privacy


கட்சி ஆரம்பிச்சப்புறம் எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போனார்.
கட்சி ஆரம்பிச்சப்புறம் கமல் சிங்கப்பூருல பூஜா குமாரோட..
எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போன விஷயத்தில வெளிப்படைத் தன்மை இருந்தது.
முதல்வரான பின் எம்.ஜி.ஆர். ஜானகி, ஜெயலலிதாவுடன் ஏசியன் கேம்ஸ் பார்த்தார். எம்.ஜி.ஆர் கூச்சப்பட்டதேயில்லை.
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு மேல் சபை உறுப்பினர் ஆக முடியவில்லை என்றவுடன் தமிழக மேல் சபையையே கலைத்துவிட்டவர்.
அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி தி.மு.க என்ன தான் ஏகடியம் செய்தாலும் கொஞ்சம் கூட லட்சியம் செய்ததேயில்லை. ஊரும் உலகமும் என்ன சொல்லும் என்றெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.
கமல் பூஜா சிங்கப்பூர் டூர் ரகசியம் காக்க முயற்சித்திருப்பது பலிக்காமல் போயிருக்கிறது.
கௌதமியுடன் கமல் சிங்கப்பூரில் இருந்த போது தான் அப்போது Affair பற்றி தெரிய வந்தது. குமுதம் பகீரங்கப்படுத்தியது. அப்போது அவர் அரசியல் வாதி அல்ல.
கமல் சொந்த வாழ்க்கை பற்றி பி.ஜே.பி தமிழக பிரமுகர்கள், தமிழக ஆளுங்கட்சி மந்திரிகள் ஏற்கனவே குத்திக்காண்பித்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.
கமல் வலதுசாரிகளுக்கெதிரான அரசியல் செய்ய நினைப்பவர். வலது சாரிகளோ தீவிர ஆஷாட பூதிகள். ஒழுக்கம் பற்றிய பிரமைகள் நிறைய இவர்கள் மூளையில் சிலந்தி கட்டியிருக்கிறது.
பாவம் கமல். வெளிப்படையாக நடக்க முடியாமல் அரசியல் அவரை படுத்துகிறதா?
Nobody likes being spied on.
Nobody wants the paparazzi ever following them in life.
டயானா சாலை விபத்தில் இறந்த போது ஒரு பத்திரிக்கை தலைப்பு செய்தி.
”The pursuit is over. Diana has come home.”

All human beings have three lives.Public, private and secret. – Gabriel Garcia Marquez.
அந்தரங்கம் புனிதமானது என்றெல்லாம் என்ன இருக்கிறது. அதுவும் அரசியலில். சாக்கடையில் கல் போடுவது தானே அங்கே பிரதான செயல்பாடு.
கமல் இடது சாரிகளுடன் நல்ல உறவில் இருப்பவர். இடது சாரிகள் தனி மனித ஒழுக்க நியதிகளை தொண்ணூறு விழுக்காடு கடைப்பிடிப்பவர்கள். W.R.வரதராஜன் இதனால் தற்கொலையே செய்ய நேர்ந்திருக்கிறது.
மனைவி, துணைவி சமாச்சாரமெல்லாம் எப்போதும் தி.மு.க., அ.தி.மு.க அரசியல்வாதிகளிடம் தான் ரொம்ப.



Mar 1, 2018

நுட்ப தொடர்பு


சரோஜா தேவி பல படங்களில் ஜெமினி கணேசனுடன் ஜோடியாக நடித்தவர். கல்யாண பரிசு, வாழ வைத்த தெய்வம், ஆடிப்பெருக்கு, பனித்திரை, வாழ்க்கை வாழ்வதற்கே, பணமா பாசமா, ஐந்து லட்சம், தங்கமலர், தாமரை நெஞ்சம், குலவிளக்கு, மாலதி என எத்தனையோ படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

சரோஜா தேவி எப்போதும் ஜெமினி கணேசனை அண்ணா என்று தான் அழைத்திருந்திருக்கிறார்.
கமல்ஹாசன் முதல் முதலாக ஸ்ரீதேவியை 15, 16 வயது பெண்ணாக சந்தித்ததாக சொல்கிறார். தினத்தந்தி செய்தி. மூன்று முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஸ்ரீதேவிக்கு 15,16 வயது.

27 படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. நிச்சயம் அவரே சொல்வது போல ஆயுளில் குறிப்பிட்ட ஒரு பகுதி.
ஆனந்த விகடனில் கமல் “ஸ்ரீதேவி என் தங்கச்சி” என்று சொல்கிறார்.’ அண்ணன் தங்கை போல தான் நானும் ஸ்ரீதேவியும்.’
“உங்களை அப்படி ஜோடியா கொண்டாடிட்டிருக்கிறப்ப இதெல்லாம் வெளியில போய்ச் சொல்லாதீங்க” என்பார்களாம்.
இது உண்மையென்றால் அபூர்வமான விஷயம்.
விரித்துப் பேச வேண்டியதில்லை.
............................................

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர்
ஒரு மடாதிபதியும் இளைய மடாதிபதியும் காவிரிக்கரையை ஒட்டிய ஒரு ஊரில் எழுந்தருளியிருக்கிறார்கள்.
பூஜை, வியாக்யானம் என்று திவ்விய நிகழ்வில் உள்ளூர் ஆண்கள், பெண்கள் கலந்து பக்தியில் ஊறி கரைந்திருக்கிறார்கள்.
ஒரு பெண் இளைய மடாதிபதியிடம் வந்து “ நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறாள்.
மூத்த சுவாமி இளைய மடாதிபதியை பார்த்து 
” காவிரி நீரில் இறங்கி நில்” என்று தண்டனையாக சொன்னாராம்.
மணிக்கணக்கில் இளைய மடாதிபதி இடுப்பு நனைய நீரில் நின்றாராம்.
ஊரை விட்டு கிளம்பும் போது தான் நீரை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டார் இளைஞனாய் இருந்த அந்த இளைய மடாதிபதி.
மூத்த சுவாமிகள் சொன்னாராம் “ உன்னிடமிருந்து காதல் கசிய, விரக பார்வை, சமிக்ஞை வராமல் நிச்சயம் அந்தப் பெண் உன்னிடம் அப்படி கேட்டிருக்கவே மாட்டாள்.”
.....................................

Jun 4, 2016

கமலின் நகைச்சுவைத்திறன்


என்னுடைய மாப்பிள்ளை ஒருவர் ரஜினியின் தீவிர ரசிகர். கல்வியறிவு குறைவு.
அவரிடம் கிண்டல் செய்ய வசதியாக நான் கமலின் தீவிர ரசிகர் என்கிற மாதிரி ஒரு முரட்டு முகமூடியை அணிந்து கொண்டு தான் சற்று மிகையான பாவனைகளுடன் பேசுவது வழக்கம்.
’மைக்கல் மதன காமராஜன்’ படம் வெளியாகியிருந்தது.
கடை வீதியில் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருந்த அவருடைய கடையில் அவரை சந்தித்த போது “ அத்தான், வாங்க, உள்ள வாங்க!”
“ மாப்பிள்ள! எங்காளு ( கமல்) படம் ரிசல்ட் பத்தி ஏதாவது கேள்விப்பட்டீங்களா? யாராவது படம் பாத்திருப்பாங்களே!” பரிட்சை  ரிசல்ட் கேட்க தவிக்கும் மாணவ சிறுவன் போல நான் கேட்டேன்.
உடனே அவர் முகம் சற்று சோகமாக மாறியது. நான் எதிர் பார்க்கிற நல்ல ரிசல்ட் கிடையாது என்று அர்த்தம்.
ஒரு பெரு மூச்சு விட்டு “ உள்ள வாங்களேன். சொல்றேன்”
நான் சற்று அவசரமாக பதற்றத்துடன் “ என்ன மாப்பிள்ள?” என்றேன்.
”சிவகாசி,ராஜபாளையம் இரண்டு ஊர்களிலும் போய் படம் பார்த்துட்டு வந்துட்டாங்கே…. உங்க ஆளு ஒர்த்தன் (ஒரு கமல் ரசிகன் என்று அர்த்தம்) இப்பத்தான் வந்து அழுதுட்டு போறான்.” சற்று நிறுத்தி விட்டு கடைக்கு வந்திருந்த கஸ்டமர்களை கவனிக்க ஆரம்பித்து விட்டு காசு வாங்கிப்போட ஆரம்பித்து விட்டார்.
என்னை அவர் இடையிடையே பார்க்கும்போதெல்லாம் நான் முகத்தில் -----’சீக்கிரம் சொல்லுங்க மாப்பிள்ள’ ------- பாவனையில் தவிக்க ஆரம்பித்தேன்.
கஸ்டமர்களை அனுப்பி விட்டு திரும்பி “ எத்தான்! நீங்களே சொல்லுங்க… ஒர்த்தன் பேரு மைக்கலாம். இன்னொருத்தன் பேரு மதனாம்.. இன்னொருத்தன் காமன்.. நாலாவது ஆளு ராஜனாம்… இதெல்லாம் என்ன நல்லாவா இருக்கு? சொல்லுங்க நீங்களே சொல்லுங்க?”
பதில் இப்படி வரவேண்டும் என்பது இந்தக்கேள்வியில் உள்ள கொக்கி - “ ஆமா நல்லாவே இல்லையே ”
நான் பதிலே சொல்லாமல் நகத்தை கடித்தேன்.
அவர் எனக்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் பெருந்தன்மையுடன் “ எத்தான்! ராமராஜன் படம், விஜயகாந்து படம் எல்லாம் ஓடும்போது உங்காளு படம் ஓடுனா எங்களுக்கு ( ரஜினி ரசிகர்களுக்கு) என்ன வேண்டாம்னா இருக்கு!”
என் கவலையான முகத்தை அவரும் வரவழைத்துக்கொண்ட இறுக்கமான முகத்துடன் பார்த்து சொன்னார் “ உங்காளு சரியில்லை அத்தான்! நான் நடு நிலையா சொல்றேன் பாத்துக்கங்க!”
அவர் எதிர் பார்த்த படி நான் முகத்தை ரொம்பத்தொங்க போட்டுக்கொண்டு “ எனக்கு என்னன்னோ வருது மாப்பிள்ள “
ரஜினி ரசிகரான மாப்பிள்ள “ நீங்க ரஜினி ரசிகரா மாறுங்க அத்தான். என் ஃப்ரெண்ட்ஸ் எத்தன கமல் ரசிகங்க நான் சொல்லி ரஜினி ரசிகரா மாறிட்டாங்கெ தெரியுமா!”
“ மாப்பிள்ள! நான் அனுமார் மாதிரி மாப்பிள்ள! மறந்தும் புறம் தொழ மாட்டேன். மாட்டவே மாட்டேன்.”
”புரியலத்தான்…”
”நான் எப்பவும் கமல் ரசிகன் தான்! மாறவே மாட்டேன்.”
“ ச்சே! உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுத்தான்..”
ரஜினி ரசிகர் என்ற முகமூடியை வாங்கி நான் அணிந்து கொண்டால் அவருடனான உரையாடலில் சுவாரசியம் சுத்தமாக காணாமல் போய் விடுமே!
..................



கமல் ஹாசன் நகைச்சுவை நடிப்பில் மிக நேர்த்தியான பரிமாணங்களை காட்டியவர்.
அவள் ஒரு தொடர்கதையிலேயே அவர் விகடகவி. பாலசந்தர் சில வருடங்களுக்கு முன்னால் அந்த படத்தை எடுக்க நேரிட்டிருந்தால் கமல் செய்த பாத்திரத்தை நாகேஷ் தான் செய்திருப்பார்.
அதாவது நாகேஷ் பாணி ரோலை கமல் பிரமாதமாக செய்து விட்டார்.
பிறகு மன்மதலீலையில் கமல் செய்த அமர்க்களம் வார்த்தையில் விவரிக்க முடியாதது.
அதன் பின் நகைச்சுவை என்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல.
எந்த நகைச்சுவை நடிகரும் தொட்டிராத உச்சத்தை கமல் ஹாசன் தன் நகைச்சுவை நடிப்பில் தொட்டிருக்கிறார். அதே போல எந்த கதா நாயக நடிகரும் நகைச்சுவையில் எட்ட முடியாத தூரத்தை அனாயசமாக சாதித்தவர் கமல் ஹாசன்.
இங்கே அந்த படங்களின் பட்டியல் தேவையேயில்லை.
கமல் நகைச்சுவை, ஜோக் எல்லாமே ரொம்ப பாலீஷ்ட் வகையை சேர்ந்தவை என்பதால் நுட்பம் அதிகம். சாதாரணமான சராசரி மனிதர்களுக்கு புரிதல் என்பது ரொம்ப சிரமமாயிருக்கும்.
குறிப்பாக ரஜினி காமெடியெல்லாம் அவருடைய ரசிகர்களின் அதீத ஆராதனை காரணமாக பிரபலமானவை. ஒரு தேர்ந்த புத்திசாலிக்கு அதில் ரசித்து சிரிக்க எதுவுமேயில்லை. ரொம்ப ஜனரஞ்சகமான மேலோட்டமான நகைச்சுவை காட்சிகள் அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் மட்டும் வெற்றி பெற்றவை.
இதை விளக்குவது என்றால் ஒரு கட்சி எம்.எல்.ஏ கொஞ்சம் கடி ஜோக் டைப்பில் ஏதாவது சொன்னால் அவரை சுற்றியுள்ள தொண்டர்கள் ரொம்ப அலட்டி சிரிப்பார்களே, அந்த ரகம்.
கட்சித்தலைவர் ஒரு சின்ன பொறியாக வாய் பேசும்போது சுற்றி நிற்கிற மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களெல்லாம் ரசித்து சிரிப்பார்களே அது போன்றது! அவர் பஞ்ச் டயலாக் எப்படி ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் உவப்பான விஷயமோ அப்படியே தான் ரஜினி ஜோக்கெல்லாம் பரவலாக எதிர்கொள்ளப்பட்டு ஹாஹாஹா என சிரிக்க காரணமாகிறது.
கமலின் நகைச்சுவை பட்டுப்புடவை நெய்யும் நேர்த்தியுடன், நிறைய கவனத்துடன் பின்னப்படுபவை.
அவரை ஆள்வார் பேட்டை ஆண்டவர் என்று கொண்டாடுபவர்களுக்கானது அல்ல. அதையும் தாண்டி, விரிந்து ‘Your delight and happiness is my sole concern’ என சென்று சேரக்கூடிய தகுதி அந்த நகைச்சுவை நடிப்பிற்கு உண்டு.
1960களில் அபரிமிதமான சாதனை செய்த நாகேஷ் நீர்த்துப்போன பின் கமலின் பிற்கால படங்கள் அனைத்திலும் மிக நன்றாக வெளிப்பட்டதில் ஹாசனின் பங்கு தான் முழுமையானது. ஏனென்றால் கமல் ஹாசனிடன் ஒரு inbuilt humor உண்டு. அது அணையாத நெருப்பின் உக்கிரம் கொண்டது.
கொஞ்சம் சீரியஸாக கமல் காமெடி பற்றி எல்லோரும் திரும்பிப்பார்த்து ஒத்துக்கொள்ள வேண்டும்.
……………………………………………………………………




Aug 17, 2012

சந்திரஹாசன்

மீள் பதிவு   05- 09 - 2008

திருச்சியில் நான் குடியிருந்த வயலூர் ரோடு பகுதியில் குமரன் நகரில் சந்திர ஹாசனின் வீடு. சந்திரஹாசன் எப்போதும் நடந்து போவதை அங்குள்ள எல்லோரும் பார்க்க முடியும். கமல் ஹாசனின் இரண்டாவது அண்ணன்.சின்ன அண்ணா.எப்போதும் இவர் நடந்து போவதை தான் பார்த்திருக்கிறேன்.காரில் போகும்போது பார்த்ததே இல்லை.நடை ..நடை ...நடை ....
Angels whisper to a man when he goes for a walk.!

நான் அவருக்கு ஒரு நமஸ்காரம் சொல்லி எப்போதுமே ஒரு நான்கு வார்த்தை பேசுவேன்.சிரித்த முகமாக என் பேச்சை கேட்கும் போது கொஞ்சம் சீரியஸாக அவ்வப்போது மாறும். பின் புன்னகைத்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பிப்பார்.

முதல் முறை நான் நமஸ்காரம் சொல்லிவிட்டு அவர் அந்த காலத்தில் நடித்த "கிராமத்து அத்தியாயம் "படம் பற்றி தொட்டு விட்டு பின் அவர் கதா நாயகனாக சுமலதாவுடன் நடிக்க ஆரம்பித்து நின்று போன "ராஜா என்னை மன்னித்து விடு " படத்தை குறிப்பிட்டேன். அவருக்கு ரொம்ப ஆச்சரியம் .நின்று போன படத்தை பற்றி கூட குறிப்பிட்டேன் என்பது .
" ராஜபார்வை "யில் கூட கமலுக்கு அப்பா ரோலில் தலையை காட்டியிருக்கிறார்.
அடுத்த முறை அவர் நடந்து வரும்போது அவரிடம் பேசிய விஷயம் என்னிடம் ஜெமினி கணேசன் சொன்னது .
 "கண்களின் வார்த்தைகள் புரியாதோ ." பாடல் சூட்டிங்கில் தான் கமலை தூக்கிண்டு அவனோட அண்ணா சந்திர ஹாசன் வந்தான். நான் தூக்கி கொஞ்சினேன் .சாவித்திரி தூக்கி கொஞ்சினா. ஏவிஎம் செட்டியார் பார்த்தார். ஹீரோ,ஹீரோயின் ரெண்டு பேருக்குமே பிடித்து விட்டது.இந்த பையனையே பிள்ளையா நடிக்க போட்டுடலாம்னுட்டார்! "

"ஹே ராம் " ரிலீசின் போது அந்த படம் எடுத்ததற்காக அவருக்கு என் பாராட்டை தெரிவித்தேன்.அவரும் அந்த படத்தின் தயாரிப்பாளர் . படத்திலும் கமலுக்கு மகனாக நடித்திருப்பார்.

ஸ்ருதியின் அம்மா சரிகா மாடியில் அனுஹாசனுடன் பேசிகொண்டிருக்கும் போது தான் கை நழுவிய செல்போனை பிடிக்க குனிந்து நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்து விட்டார். அது பற்றி அப்போது அவரிடம் கேட்டேன்.
'பிழைத்தது தெய்வாதீனம் '- என்றார் சந்திரஹாசன்.

கொஞ்ச நாள் கழித்து
சரிகா -கமல் பிரிவு விஷயம் அல்லோலகல்லோலபட்டபோது அது பற்றி அவரிடம் கேட்டதே இல்லை

"எப்போதும் நடந்தே போகிறீர்களே ?"-ஒரு நாள் கேட்டு விட்டேன்.முகம் சீரியசாகி பின் " நான் சாமானியன் தான் "-இது அவர் பதில்.
நான் சொன்னேன் " அப்படி சொன்னால் நான் நம்ப மாட்டேன் .' எனக்கு சந்திர ஹாசன் அண்ணா தான் ஆதர்சம் ' என்று கமலே ரொம்ப வருஷம் முன்னாலே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். '
மீண்டும் அவர் சீரியஸாக 'நான் சாமானியன் தான்' என்றா. இதற்கு நான் சொன்ன பதில் அவர் முகத்தை பிரகாசமாக்கியது.
" ஹாசன் குடும்பம் கபூர் குடும்பம் மாதிரி . இந்த குடும்பத்தில் யாருமே சாமானியர்கள் கிடையாது . எல்லோரும் தனித்துவம் உள்ளவர்கள் தான் ."

நான் சொன்னதில் மிகை கிடையாது . அனுஹாசனும் கூட இப்போது தனி பாணியில் பிரபலம் தானே! இந்த சுஹாசினி மகன் நந்தா! இப்ப கோவையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலக்கியிருக்கிறான். இந்த வயசில தனக்குன்னு தனிப்பாதை வகுத்துகிட்டான். அந்த முத்திரையை குத்துறான்!
சாருஹாசன்,சுஹாசினி இருவரும் கமல் போல தேசிய விருது வாங்கிவிட்டார்கள.

திருச்சியை விட்டு திருப்பூர் கிளம்பியதற்கு முதல் நாள் மாலை பிஷப் ஹீபர் கல்லூரி வாயிலருகில் நடந்து வந்துகொண்டிருந்த சந்திர ஹாசனை எதிர்கொண்டேன். நமஸ்காரம் சொன்னேன் .புன்னகையுடன் நமஸ்காரம் என்றார். ஊரை விட்டே கிளம்புகிறேன் என்பதை ஏனோ சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. மனசு லேசாக கனத்தது.இனி இவரை எங்கே பார்க்க போகிறேன் .திருப்பூரில் செக்கு மாடாக போகிறேன். தொடர்ந்து நான் மேலே நடந்தேன்.அவரும் எதிர் திசையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.
Walking!
Walk!!

Angels whisper to a man when he goes for a walk.!


http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_12.html


http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_25.html





Feb 9, 2009

Over Action

ஜெமினி கணேஷ் இறந்தபோது காலச்சுவடில் நான் எழுதிய இரங்கலில் குறிப்பிட்டேன் : " தமிழ் திரையின் உக்கிரமான ஆகிருதிகள் எம் ஆர் ராதா , சிவாஜி கணேசன் , நாகேஷ் ஆகியோர் . நேர் எதிர் திசையில் மென்மையாக சாதித்தவர்கள் : ஜெமினி கணேஷ் , எஸ் வி ரங்காராவ் , டி .எஸ் . பாலையா மூவரும் "

( நாகேஷ் இறப்பதற்கு ஐந்து தினம் முன் 'மத்திய அரசின் பத்ம விருதுகள்' என்ற பதிவில்
"தமிழ் திரை கண்ட நகைச்சுவை நடிகர்களில் சத்தியமாக முதன்மையானவர் நாகேஷ் தான் . " என நான் குறிப்பிட்டிருந்தேன் .)
உக்கிரமான ஆகிருதிகள் மூவரிடமும் ஓவர் ஆக்சன் இருந்தது .
இவர்களில் சிவாஜியின் ஓவர் ஆக்சன் மக்களால் ரசிக்கப்படவில்லை . சிவாஜியின் நடிப்பில் மிகை யை ஒரு குறையாக த்தான் திரை ரசிகர்கள் எழுபதுகளில் அதிகம் கண்டு எரிச்சலுற்றார்கள் என்பது தான் உண்மை .
நாகேஷும் அப்படித்தான் . ஓவர் ஆக்சன் அவர் தத்துவவாதியாக மாறி ' தத்துவத்துக்கு அம்மா 'கற்பனை 'அப்பா கவலை ' என்று சாதாரணமாக சினிமாவுக்கு வெளியே கூட தத்துவம் பேச ஆரம்பித்தவர் நாகேஷ் . திரையில் நாகேஷ் ஓவர் ஆக்சன் சொல்லி முடியாது .
'கடல் மீன்கள் ' படத்தின் எடிட்டிங் போது கமல் ஹாசன் வந்திருந்து அவருடன் நாகேஷ் கடல் போட் சீனில் செய்திருந்த சகிக்க முடியாத ஓவர் ஆக்சன் பகுதிகளை எடுத்து விட சொன்ன போது நான் அங்கிருந்தேன் . கமல் ஜி என் ரங்கராஜனிடம் சொன்னார் : நாகேஷ் ஷாட்ஸ் நிறைய நீக்கிடனும் . ஓவர் ஆக்சன் ரொம்ப . நாகேஷை எல்லாம் எங்க வாத்தியார் ( பாலச்சந்தர் ) தான் சரியா வேலை வாங்க முடியும் . மத்தவங்க அவர லூசா விட்டா ரொம்ப சொதப்பிடுவார் .மத்தவங்களுக்கு நாகேஷை வேலை வாங்கறது சிரமம் "
அன்று கடல் மீன்கள் படத்தில் தங்கவேலு நடிப்பை பிரமாதமா கமல் புகழ்ந்தார் .

பின்னால் கமல் படங்களில் நாகேஷ் நடிப்பை நன்கு கவனமாக பதிந்ததில் கமலின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் காரணம் .

எம் ஆர் ராதாவின் நடிப்பில் அவர் எவ்வளவு தான் ஓவர் ஆக்சன் செய்தாலும் தமிழ் மக்கள் அதை முழுமையாக அங்கீகரித்தார்கள் . அவருடைய நடிப்பில் 'மிகை' என்பது கூடுதல் அணிகலனாக மாறி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது .
ஐம்பது ,அறுபதுகளில் மிகை நடிப்பில் கொடிகட்டியவர் ராதா ! எவ்வளவு பெரிய ஆள் அவர் பக்கத்தில் நின்றாலும் அமுங்கி போய் தான் தெரிவார் . ஓவர் ஆக்சன் செய்து சிவாஜியும் நாகேஷும் எழுபதுகளில் எரிச்சலுக்கு தான் ஆளானார்கள் .

...
இன்னொரு விஷயம் இதை இங்கு குறிப்பிட்டேஆகவேண்டும் .
இன்றைய நடிகர்களில் கமல் ஹாசன் நடிப்பு பற்றி ஒரு விஷயம் . அவர் நடிக்கும் போது ஒரு "கர்வம் " தெரிவதை கவனித்திருக்கிறீர்களா ? அவர் நடிக்கிற தோரணை " ஆமா , இந்த படத்தில் எனக்கு நிறைய வேலை !" என்று கேமரா முன் கர்வத்துடன் நிற்பார் கமல் .
இன்றைக்கு அகில இந்தியாவிலும் கதாநாயகர்களில் கேமரா முன் நடிக்கும்போது கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் படு ஸ்மார்ட் ஆ நடிப்பவர் மோகன் லால் மட்டுமே !

Oct 21, 2008

சிவகுமாரும் குமாரர்களும்

"ஒரு நடிகன் அவனோட கேரியரில் அஞ்சு படமாவது பெயர் சொல்லும்படியா பண்ணனும்டா " ன்னு அப்பா சொல்வார் ! இப்படி மே மாத ஆனந்த விகடனொன்றில் சிவகுமாரின் சின்ன மகன் பருத்தி வீரன் கார்த்தி சொல்லியிருந்தார் .
" நீங்க ஏம்ப்பா அப்படி ஒரு அஞ்சு படம் பண்ணவே இல்லை பெயர் சொல்லும்படியா " ன்னு சூரியாவும் கார்த்தியும் கேக்கலையா ?

'சொல்லத்தான் நினைக்கிறேன் 'படத்தில் இவர் கதாபாத்திரம் இன்றும் நினைத்து பார்க்கும்படியா இருக்கு . ஆனா வேறு சொல்லும்படியா சிந்து பைரவி யை கூட சேர்க்க முடியுமா ? சும்மா நல்லா நடிச்சிருந்தாரு ன்னு சொல்ல நிறைய பேர் வரலாம் . வண்டிச்சக்கரம் குண்டிச்சக்கரம்னு ஆரம்பிச்சி பட்டியல் தயவு செய்து போடாதிங்க .
பிள்ளைகள் சூரியா , கார்த்தி இருவரும் நல்ல நடிகர்கள் என்பதை அருமையாக நிரூபித்து விட்டார்கள் . கார்த்திக்கு ஒரு படம் தான் வந்திருக்கு என்றாலும் கூட பிரமாதமான ஆரம்பம் . சூரியா முதலில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பின்னர் செமையா பிதாமகன் , கஜினி இரண்டிலும் தூள் பண்ணி விட்டார் .

பாவம் அந்த காலத்தில் ஜெய்சங்கர் வத வதன்னு நடிச்சி ஒன்னும் பண்ணலை . சினிமா படம் போர் அடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படம் பார்த்தப்ப தான் தெரிய வந்தது . அது மாதிரி தான் சிவகுமாரும் ஒரே குப்பை படங்கள் தான் . தாமதமாக ரொம்ப தாமதமாக கதாநாயகன் ஆனவர் . ஆனபின்பு சுதாரிக்கவே இல்லை .Monotonous acting! படங்களும் தரமில்லாதவை .ஒரு இருநூறு படம் நடித்திருப்பார் . டான்ஸ் செயற்கையாக ஆடுவார் . நடிப்பு நாடக பாணி .ஆனால் ஒரு ஐந்து நல்ல படம் .... சான்சே இல்லை !
அவர் ராகம் போட்டு இழுத்து உருக்கமாக பேசுவதை இப்போது பலரும் மிமிக்ரி செய்து காட்டுகிறார்கள் . ஸ்டீரியோ டைப் . கமல் ,ரஜினி எழுபதுகளில் சிவகுமாரை ரொம்ப சுலபமாக ஓவர் டேக் செய்து விட்டார்கள் .
புவனா ஒரு கேள்விகுறி படத்தில் நல்லவனாக நடிக்காமல் வில்லன் ரோல் செய்தார் . ரஜனிக்கு அந்த படத்தில் நல்ல க்ளாப்ஸ் !உடனே இவர் வருத்தப்பட்டு 'வில்லன் ரோல் செய்தது தப்பு . இனிமேல் கவனமாய் இருப்பேன் ' என பேட்டி கொடுத்தது நல்ல ஜோக். ரஜனி எந்த ரோல் செய்தாலும் சிவகுமார் அவர் பக்கத்தில்நிற்கவே முடியாது என்பதை அடுத்த சில வருடங்களில் புரிந்து கொண்டிருப்பார் .

சிவகுமார் மீது ஒரு விசயத்தில் எனக்கு மரியாதை. வாசிப்பவர். நல்ல வாசகர். தி .ஜானகிராமன் , கிரா என்று துவங்கி இன்றைய சாரு நிவேதிதா எழுத்து வரை வாசிக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.
” இது ராஜபாட்டை  அல்ல” என்ற அவருடைய நூலுக்காகவும் ரொம்ப பாராட்டலாம். நடிப்புக்காக ...சான்சே இல்லை!

ஒரு Irony! சிவாஜி கணேசன் மகன் பிரபு பெரிய சாதனை செய்ய முடியவில்லை .
முத்து ராமன் மகன் கார்த்திக் மிக சிறந்த நடிகர் . ஆனால் தன் பழக்கவழக்கங்களால் வீணாக கெடுத்து கொண்டார் .
ஆனால் சாதாரண நடிகர் சிவகுமார் மகன்கள் சூரியா , கார்த்தி நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்டார்கள் .
ஹிந்தி யில் ராகேஷ் ரோஷன் சாதாரண நடிகர் . அவர் மகன் ஹ்ரித்திக் ரோஷன் நட்சத்திர அந்தஸ்து பெற முடிந்தது . ஷாருக் கான் இருக்கும் வரை அமிதாப் பச்சன் மகன் நல்ல அருமையான நடிகர் என்றாலும் அபிஷேக் முதலிடத்திற்கு வியாபார ரீதியில் வரவே முடியாது.

Jul 29, 2008

கமல் நகல் --- நகல் கமல்

The Godfather part one வெளி வந்த வருடம் 1972. மார்லன் பிராண்டோ வும் அல் பாசினோ வும் நடித்த படம். இந்த படத்தை பார்க்காதவர்கள் ஒரு முறை பார்த்துவிட்டால் , கமல்ஹாசன் நடித்து 1987 ம் வருடம் வந்த "நாயகன்" ' படத்தின் மீது உள்ள பிரமிப்பும் , 1992 ம் ஆண்டு இவரே நடித்து வெளிவந்த " தேவர்மகன் " படம் பற்றிய பெருமையும் உடைபடுவதை உணர்வார்கள். ஆங்கில படங்கள் நம் மக்கள் பார்ப்பதே இல்லை என்பதால் இங்கே பல விக்ரகங்கள் உடைபடாமல் தப்பித்துகொண்டிருக்கின்றன என்பதே உண்மை. நாயகன் படத்தில் கமல் தலையை கோதுவது கூட மார்லன் பிராண்டோ விடமிருந்து அப்பட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்ட mannerism தான். விரிவாக பேசபுகுந்தால் இந்த
write-up பெரிய புராணமாகிவிடும் . தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் தன் பேத்தி யுடன் விளையாடும்போது இறந்து போகிற காட்சி the Godfather படத்தில் இருந்து சுடப்பட்டது தான். மார்லன் பிராண்டோ தன் பேரனோடு விளையாடும் போது அல்லவா இறக்கிறார் என்று கமல் ரசிகர் யாராவது கோபப்பட்டால் தலையில் அடித்துகொள்வதை தவிர வேறு வழியில்லை. தேவர் மகன் கமல் "என்னை விட்டுடுங்கையா " என அப்பாவிடம் கெஞ்சுபவர் ,அப்பா இறந்த பிறகு தன் அண்ணன் சரியில்லாததால் வேறு வழியில்லாமல் தலைமை பதவிக்கு வரும் விஷயம் உள்பட அந்த ஹாலிவுட் பட உபயம் தான் .
சரி அது அந்த காலம் இப்போ எப்படி
'the silence of the lambs ' படம் 1991ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் . இதை பார்த்தவர்கள் 'வேட்டையாடு விளையாடு ' திகில் படத்தை பார்க்கும் போது எந்த அதிர்ச்சியும் அடைய மாட்டார்கள் .
35 வருடத்திற்கு முன் எம்ஜியார் நடித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் keynote "அணுகுண்டு "தான் இன்றைக்கு தசாவதாரத்தின் "வாயல்".

எம்ஜியார் ஒரு முறை கமலிடம் சொன்னாராம் ." நான் நூறு படி ஏறி வந்திருக்கிறேன். நீ நூற்றி ஒன்றாவது படியிலிருந்து மேலே போகவேண்டும் . அது தான் உன் சாதனையாக இருக்க வேண்டும் ."