"ஒரு நடிகன் அவனோட கேரியரில் அஞ்சு படமாவது பெயர் சொல்லும்படியா பண்ணனும்டா " ன்னு அப்பா சொல்வார் ! இப்படி மே மாத ஆனந்த விகடனொன்றில் சிவகுமாரின் சின்ன மகன் பருத்தி வீரன் கார்த்தி சொல்லியிருந்தார் .
" நீங்க ஏம்ப்பா அப்படி ஒரு அஞ்சு படம் பண்ணவே இல்லை பெயர் சொல்லும்படியா " ன்னு சூரியாவும் கார்த்தியும் கேக்கலையா ?
'சொல்லத்தான் நினைக்கிறேன் 'படத்தில் இவர் கதாபாத்திரம் இன்றும் நினைத்து பார்க்கும்படியா இருக்கு . ஆனா வேறு சொல்லும்படியா சிந்து பைரவி யை கூட சேர்க்க முடியுமா ? சும்மா நல்லா நடிச்சிருந்தாரு ன்னு சொல்ல நிறைய பேர் வரலாம் . வண்டிச்சக்கரம் குண்டிச்சக்கரம்னு ஆரம்பிச்சி பட்டியல் தயவு செய்து போடாதிங்க .
பிள்ளைகள் சூரியா , கார்த்தி இருவரும் நல்ல நடிகர்கள் என்பதை அருமையாக நிரூபித்து விட்டார்கள் . கார்த்திக்கு ஒரு படம் தான் வந்திருக்கு என்றாலும் கூட பிரமாதமான ஆரம்பம் . சூரியா முதலில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பின்னர் செமையா பிதாமகன் , கஜினி இரண்டிலும் தூள் பண்ணி விட்டார் .
பாவம் அந்த காலத்தில் ஜெய்சங்கர் வத வதன்னு நடிச்சி ஒன்னும் பண்ணலை . சினிமா படம் போர் அடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படம் பார்த்தப்ப தான் தெரிய வந்தது . அது மாதிரி தான் சிவகுமாரும் ஒரே குப்பை படங்கள் தான் . தாமதமாக ரொம்ப தாமதமாக கதாநாயகன் ஆனவர் . ஆனபின்பு சுதாரிக்கவே இல்லை .Monotonous acting! படங்களும் தரமில்லாதவை .ஒரு இருநூறு படம் நடித்திருப்பார் . டான்ஸ் செயற்கையாக ஆடுவார் . நடிப்பு நாடக பாணி .ஆனால் ஒரு ஐந்து நல்ல படம் .... சான்சே இல்லை !
அவர் ராகம் போட்டு இழுத்து உருக்கமாக பேசுவதை இப்போது பலரும் மிமிக்ரி செய்து காட்டுகிறார்கள் . ஸ்டீரியோ டைப் . கமல் ,ரஜினி எழுபதுகளில் சிவகுமாரை ரொம்ப சுலபமாக ஓவர் டேக் செய்து விட்டார்கள் .
புவனா ஒரு கேள்விகுறி படத்தில் நல்லவனாக நடிக்காமல் வில்லன் ரோல் செய்தார் . ரஜனிக்கு அந்த படத்தில் நல்ல க்ளாப்ஸ் !உடனே இவர் வருத்தப்பட்டு 'வில்லன் ரோல் செய்தது தப்பு . இனிமேல் கவனமாய் இருப்பேன் ' என பேட்டி கொடுத்தது நல்ல ஜோக். ரஜனி எந்த ரோல் செய்தாலும் சிவகுமார் அவர் பக்கத்தில்நிற்கவே முடியாது என்பதை அடுத்த சில வருடங்களில் புரிந்து கொண்டிருப்பார் .
சிவகுமார் மீது ஒரு விசயத்தில் எனக்கு மரியாதை. வாசிப்பவர். நல்ல வாசகர். தி .ஜானகிராமன் , கிரா என்று துவங்கி இன்றைய சாரு நிவேதிதா எழுத்து வரை வாசிக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.
” இது ராஜபாட்டை அல்ல” என்ற அவருடைய நூலுக்காகவும் ரொம்ப பாராட்டலாம். நடிப்புக்காக ...சான்சே இல்லை!
ஒரு Irony! சிவாஜி கணேசன் மகன் பிரபு பெரிய சாதனை செய்ய முடியவில்லை .
முத்து ராமன் மகன் கார்த்திக் மிக சிறந்த நடிகர் . ஆனால் தன் பழக்கவழக்கங்களால் வீணாக கெடுத்து கொண்டார் .
ஆனால் சாதாரண நடிகர் சிவகுமார் மகன்கள் சூரியா , கார்த்தி நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்டார்கள் .
ஹிந்தி யில் ராகேஷ் ரோஷன் சாதாரண நடிகர் . அவர் மகன் ஹ்ரித்திக் ரோஷன் நட்சத்திர அந்தஸ்து பெற முடிந்தது . ஷாருக் கான் இருக்கும் வரை அமிதாப் பச்சன் மகன் நல்ல அருமையான நடிகர் என்றாலும் அபிஷேக் முதலிடத்திற்கு வியாபார ரீதியில் வரவே முடியாது.
" நீங்க ஏம்ப்பா அப்படி ஒரு அஞ்சு படம் பண்ணவே இல்லை பெயர் சொல்லும்படியா " ன்னு சூரியாவும் கார்த்தியும் கேக்கலையா ?
'சொல்லத்தான் நினைக்கிறேன் 'படத்தில் இவர் கதாபாத்திரம் இன்றும் நினைத்து பார்க்கும்படியா இருக்கு . ஆனா வேறு சொல்லும்படியா சிந்து பைரவி யை கூட சேர்க்க முடியுமா ? சும்மா நல்லா நடிச்சிருந்தாரு ன்னு சொல்ல நிறைய பேர் வரலாம் . வண்டிச்சக்கரம் குண்டிச்சக்கரம்னு ஆரம்பிச்சி பட்டியல் தயவு செய்து போடாதிங்க .
பிள்ளைகள் சூரியா , கார்த்தி இருவரும் நல்ல நடிகர்கள் என்பதை அருமையாக நிரூபித்து விட்டார்கள் . கார்த்திக்கு ஒரு படம் தான் வந்திருக்கு என்றாலும் கூட பிரமாதமான ஆரம்பம் . சூரியா முதலில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பின்னர் செமையா பிதாமகன் , கஜினி இரண்டிலும் தூள் பண்ணி விட்டார் .
பாவம் அந்த காலத்தில் ஜெய்சங்கர் வத வதன்னு நடிச்சி ஒன்னும் பண்ணலை . சினிமா படம் போர் அடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படம் பார்த்தப்ப தான் தெரிய வந்தது . அது மாதிரி தான் சிவகுமாரும் ஒரே குப்பை படங்கள் தான் . தாமதமாக ரொம்ப தாமதமாக கதாநாயகன் ஆனவர் . ஆனபின்பு சுதாரிக்கவே இல்லை .Monotonous acting! படங்களும் தரமில்லாதவை .ஒரு இருநூறு படம் நடித்திருப்பார் . டான்ஸ் செயற்கையாக ஆடுவார் . நடிப்பு நாடக பாணி .ஆனால் ஒரு ஐந்து நல்ல படம் .... சான்சே இல்லை !
அவர் ராகம் போட்டு இழுத்து உருக்கமாக பேசுவதை இப்போது பலரும் மிமிக்ரி செய்து காட்டுகிறார்கள் . ஸ்டீரியோ டைப் . கமல் ,ரஜினி எழுபதுகளில் சிவகுமாரை ரொம்ப சுலபமாக ஓவர் டேக் செய்து விட்டார்கள் .
புவனா ஒரு கேள்விகுறி படத்தில் நல்லவனாக நடிக்காமல் வில்லன் ரோல் செய்தார் . ரஜனிக்கு அந்த படத்தில் நல்ல க்ளாப்ஸ் !உடனே இவர் வருத்தப்பட்டு 'வில்லன் ரோல் செய்தது தப்பு . இனிமேல் கவனமாய் இருப்பேன் ' என பேட்டி கொடுத்தது நல்ல ஜோக். ரஜனி எந்த ரோல் செய்தாலும் சிவகுமார் அவர் பக்கத்தில்நிற்கவே முடியாது என்பதை அடுத்த சில வருடங்களில் புரிந்து கொண்டிருப்பார் .
சிவகுமார் மீது ஒரு விசயத்தில் எனக்கு மரியாதை. வாசிப்பவர். நல்ல வாசகர். தி .ஜானகிராமன் , கிரா என்று துவங்கி இன்றைய சாரு நிவேதிதா எழுத்து வரை வாசிக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.
” இது ராஜபாட்டை அல்ல” என்ற அவருடைய நூலுக்காகவும் ரொம்ப பாராட்டலாம். நடிப்புக்காக ...சான்சே இல்லை!
ஒரு Irony! சிவாஜி கணேசன் மகன் பிரபு பெரிய சாதனை செய்ய முடியவில்லை .
முத்து ராமன் மகன் கார்த்திக் மிக சிறந்த நடிகர் . ஆனால் தன் பழக்கவழக்கங்களால் வீணாக கெடுத்து கொண்டார் .
ஆனால் சாதாரண நடிகர் சிவகுமார் மகன்கள் சூரியா , கார்த்தி நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்டார்கள் .
ஹிந்தி யில் ராகேஷ் ரோஷன் சாதாரண நடிகர் . அவர் மகன் ஹ்ரித்திக் ரோஷன் நட்சத்திர அந்தஸ்து பெற முடிந்தது . ஷாருக் கான் இருக்கும் வரை அமிதாப் பச்சன் மகன் நல்ல அருமையான நடிகர் என்றாலும் அபிஷேக் முதலிடத்திற்கு வியாபார ரீதியில் வரவே முடியாது.