Share

Showing posts with label நடிகர் கே.பாலாஜி. Show all posts
Showing posts with label நடிகர் கே.பாலாஜி. Show all posts

Nov 18, 2016

ஈயடிச்சான் காப்பி - அறிவுத்திருட்டு



http://rprajanayahem.blogspot.in/2013/02/blog-post_12.html
மேற்கண்டஎன்னுடைய ஜெமினி பதிவைத் திருடி
இங்கே ஃபேஸ்புக்கில் ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் என்கிற ஆள் தன் பதிவாக நேற்று போட்டிருக்கிறார். கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்திற்கு  பாராட்டு மழை வேறு.
வேதனையாய் இருக்கிறது.
இதை கண்டிக்க வேண்டும். கீழே இருப்பது திருட்டுப்பதிவு
https://www.facebook.com/JeyaRam20…/posts/10207568474829880…

சாயம் வெளுத்த பின், காப்பியடித்த ஆளின் கிறுக்குத்தனமான பதில் :பதிவை நீக்கும் எண்னமோ, மன்னிப்பு கேட்கும் எண்னமோ எப்போதுமே கிடையாது. கூகுள் சர்ச்சில் இருந்த சில நல்ல விஷயங்களை எப்போதும் எடுத்தாள்வது, நமது சொந்த வரிகளுடன் வழக்கம். வேண்டுமென்றால்...எடிட் செய்து...உங்கள் பெயரை இணைத்து விடுகிறேன். அவ்வளவு தான் செய்ய முடியும்.

.............................................




https://www.facebook.com/rprajanayahem/posts/1557924741087653?pnref=story


மேற்கண்ட ராஜநாயஹத்தின் கே. பாலாஜி பதிவை இன்னொரு ஆள் (  ) அப்படியே தன் பதிவாக எடுத்துப்போட்டுக்கொண்டுள்ளான் பாருங்கள் கீழே.
 http://tamilindianfilmssecrets.blogspot.in/.../blog-post...

........................

எவனென்று தெரியவில்லை. "இனியவன் என்றும்" என்ற பெயரில் ஒரு ப்ளாக். என்னுடைய வெற்றிகொண்டான், .வி.கே.சம்பத், பழைய கணக்கு, கண்கள் பனித்தன நெஞ்சம் இனித்தது,கட்சி தலைமை,ஜேப்பியார், நெடுஞ்செழியன்,கண்ணதாசனின் அரசியல் வாழ்வு ஆகிய பிரபலமான பதிவுகளை திருடி அவனுடைய ப்ளாக்கில் தன்னுடையது போல எடுத்துப்போட்டுக்கொண்டிருக்கிறான். 'இடுகையிட்டது ranga rasu' என்று குறிப்பிட்டுள்ளான்.
இப்படி எவனெவனோ செய்து கொண்டிருக்கிறான்.
என் 'சாவித்திரி' பதிவை ஒருவன் இப்படி தன் பதிவாக போட்டுள்ளதை பார்க்க நேர்ந்தது. என் 'எஸ்.வி.ரங்காராவ்' பதிவை மற்றொருவன் தன் பதிவாக போட்டுள்ளதை எனக்கு கவிஞர் மகுடேசுவரன் சொன்னார்.
' ராதா இல்லாத படம் சாதா' என்ற பெயரில் என் பதிவுகளை ஒருவன் பயன் படுத்தியிருக்கிறான்.

நான் 2008ல் எழுதிய ’டவுன் பஸ் கண்ணப்பா’ பதிவை காப்பியடித்து என்ற ப்ளாக்கில் 2012ல் போட்டிருப்பதை கண்டுபிடித்தேன். திருடி போடப்பட்டுள்ள ப்ளாக் லிங்க்.

...

என்னுடைய 'எம்.ஜி.ஆர் பேச்சு' பதிவில் இருந்து ஆனந்த விகடன் (25-9-13) இதழில் திருடிப்போட்டிருக்கிறார்கள். அழகிரி பதிவில் இருந்து திருடி ஆனந்த விகடனில் திருமாவேலன் போட்டது அனைவருக்கும் தெரியும்

குமுதம் பத்திரிக்கை காக்கா ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோர் பற்றி நான் எழுதியதை திருடியதுண்டு.

குன்ஹா தீர்ப்பு பற்றி நான் எழுதியதை ஜூனியர் விகடன் கழுகார் பதிலில் எடுத்துப்போட்டார்கள்.


.................................................................


http://rprajanayahem.blogspot.in/…/10/untoward-incident.html
http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_12.html
http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html

Nov 3, 2016

கே.பாலாஜி


மோகன்லாலின் மாமனார் கே.பாலாஜி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் 'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சி
ஜெயா டி.வியில் பேசியதை மறக்க முடியாது.

பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம்.
'You should look gracefully old' என்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது.
சிவாஜி,ரஜினி,கமல் என்று நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரையங்களை, நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார்.
பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் . கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண். இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி.
இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை 'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார்.
ஜெமினி கணேசனின் உற்ற நண்பர். நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி.
இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி.
படித்தால் மட்டும் போதுமா வில் சிவாஜிக்கு அண்ணனாக,பலே பாண்டியாவில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர் தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது. அந்தப் படங்களில் சிவாஜியுடன் பிரதான பாத்திரங்களில் நடித்தார். தான் தயாரிக்காத படங்களிலும் கூட.
நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதா நாயகனாக , காமெடியனாக, வில்லனாக (Glamour Villain ! ) நடித்தவர். இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக,ஸ்பஷ்டமாக இருக்கும்.
''What?" என்ற சாதாரண வார்த்தையை என்ன அழகாக உச்சரிப்பார் தெரியுமா!

நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே 'பிரேமபாசம் ' படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர். ஜெமினி - சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி!
ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி " டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா. வந்தா உடனே சிக்னல் கொடு.. "
வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே.ஆர் விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி!
பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது !
" ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் "
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ! நெருப்பாய் எரிகிறது "
"பண்ணோடு பிறந்தது கானம். குல பெண்ணோடு பிறந்தது
நாணம் "
" நல்லவன் எனக்கு நானே நல்லவன் "
"பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை "
" ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இது தான் !"
"உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ "
" இரவு முடிந்து விடும். முடிந்தால் பொழுது புலர்ந்து விடும் "
ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும்)
பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார். அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது. அவர் சொன்னது கூட மிகை இல்லை. அவருடைய அண்ணனை இழந்து விட்டார்.
பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு.யாருக்கு தான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை ?

May 4, 2009

இங்கே

அந்த காலத்தில் 1972ல் எம்ஜியார் மதுரை தி .மு .க மாநாட்டில் பேசும்போது 'அலை ஓசை' பத்திரிக்கையை தூக்கிப்போட்டு ' ராணுவத்தையே சந்திக்க தயார் ' என ஆவேசமாக சொன்ன விஷயம் பெரிய நகைச்சுவை யாக பின்னால் அவர் கொஞ்ச காலத்திலேயே அண்ணா தி முக ஆரம்பித்து விட்ட நிலையில் , அதன் பின் அவர் சில வருடங்களில் முதல்வர் ஆன போது' தபால் கார்டு விலை குறைப்பேன்' என்று சொன்ன போது , இப்படி அவர் துக்ளக் சேட்டைகளாக பல விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டதுண்டு.
இப்போது கோவையை ஒட்டி ராணுவத்தோடு பெரியார் தி க , ம தி மு க கட்சியினர் மோதி ராணுவத்தினரை அடித்து , ராணுவ வாகனங்களை சூறையாடி பெரிய யுத்தம் நடத்தி காட்டி விட்டனர் . பதிலுக்கு ராணுவத்தினர் சிலர் அந்த இடத்திற்கு வந்து பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர் . பெ.தி .க ., ம தி முக வினர் பலர் மீதும் ,ராணுவத்தினர் சிலர் மீதும் போலீஸ வழக்கு பதிவு செய்து உள்ளனர் .
...
'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சி ஜெயா டி வி இல் கே .பாலாஜி பேசியதை மறக்க முடியாது . பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம் . You should look gracefully oldஎன்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது . நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரையங்களை , நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார் .
பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் . கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண் . இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி . இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை 'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார் .
ஜெமினி கணேசனின் உற்ற நண்பர் . நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி . இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி . படித்தால் மட்டும் போதுமா வில் சிவாஜிக்கு அண்ணனாக ,பலே பாண்டியா வில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர்தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது .
நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதா நாயகனாக , காமெடியனாக , வில்லனாக (Glamour Villain ! ) நடித்தவர் . இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக ,ஸ்பஷ்டமாக இருக்கும்.
நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே 'பிரேமபாசம் ' படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர் . ஜெமினி -சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி .
ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி " டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா . வந்தா உடனே சிக்னல் கொடு "
வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே ஆர் விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி .
பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது !
" ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் "
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ! நெருப்பாய் எரிகிறது "
"பண்ணோடு பிறந்தது கானம் . குல பெண்ணோடு பிறந்தது நாணம் "
" நல்லவன் எனக்கு நானே நல்லவன் "
"பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை "
" ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இது தான் !"
"உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ "
" இரவு முடிந்து விடும் . முடிந்தால் பொழுது புலர்ந்து விடும் "
ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும் )பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார் . அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது . அவர் சொன்னது கூட மிகை இல்லை . அவருடைய அண்ணனை இழந்து விட்டார் .
பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு .யாருக்கு தான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை ? சொல்லுங்கள் !


...
தமிழ் நாட்டில் கூட நிறைய கோடீஸ்வரர்கள். வேட்பாளர்களில்!கம்யூனிஸ்ட் தென்காசி பொ.லிங்கம் போல ஒன்றிரெண்டு ஏழைகளும் வேட்பாளர்களில் உண்டு தான்.