Share

Showing posts with label தி.ஜானகிராமன். Show all posts
Showing posts with label தி.ஜானகிராமன். Show all posts

Feb 5, 2021

தி. ஜானகிராமன் 'மரப்பசு' பால சந்யாசி

 

பெரியம்மா என்னை ஒரு முறை திருச்சிக்குப் பக்கத்தில் ஏதோ ஊருக்கு அழைத்துப் போயிருக்கிறாள். 

அங்கே ஒரு மடத்து சந்யாசி 

தனக்குப் பின்னால் குட்டி அதிபதியாக 

ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பட்டம் கட்டினார்.


 கிழ சந்யாசி ஒரு பத்து வயதுப்பையனை அதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தார். 

பையன் பளபளவென்றிருந்தான்.

 சிறு பிராயத்தின் பூத்தோல். 


அவனுக்கு மொட்டையடித்து,

 ஒரு குளத்தில் முழுகச் சொல்லி, 

தண்ணீர் காலில் படப் படித்துறையில் 

நிற்க வைத்து, 

காவித்துணியையும், தண்டத்தையும் 

அவனிடம் கொடுத்துத் தீட்சை கொடுத்தார் கிழத்துறவி. 


அதைப் பார்த்து விட்டு என்னமோ 

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. 


அவன் இனிமேல் வீட்டுக்குப் போகக் கூடாதாம். 

அப்பா அம்மாவைப் பார்க்கக் கூடாதாம். 

விளையாடப் போகக் கூடாது. 

சாப்பாடு கிழவர் சொன்னபடி தானாம். 

சினிமா, டிராமாவெல்லாம் 

அவன் போகக் கூடாதாம். 


தினமும் மூன்று நான்கு வேளை குளிக்க வேண்டுமாம். கடைக்குப் போக முடியாது. 

காசு கொடுத்து பெப்பர்மிட் சாக்லேட் வாங்கித் தின்ன முடியாது. 

பள்ளிக்கூடம் போக முடியாது.

 காசைத் தொட முடியாது. 


இதையெல்லாம் விட அந்தச் சின்னக் குழந்தை மயிரையும் வெள்ளை வேட்டியையும்

 நிஜாரையும் இழந்தது என்னைக் குலுக்கிற்று. பெரியம்மாவையும் குலுக்கி விட்டது.


 பெரியம்மா சுதாரித்துக் கொண்டு அவன் கரையேறி வந்ததும், வயசைப் பார்க்காமல், 

தெரு மண்ணில் விழுந்து கும்பிட்டாள். 

நானும் கும்பிட்டேன். 


" இது தான்டி அந்தப் பையனோட தாயார்! " என்று தெரு மூலையில் நின்று கொண்டிருந்த 

ஒரு அம்மாளை விழுந்து கும்பிட்டாள். கும்பிடும் போதும் கண்ணீர். நானும் விழுந்து கும்பிட்டேன். 


- தி. ஜானகிராமன் 'மரப்பசு'  அம்மணி 


இந்த மரப்பசு anecdote பல வருடங்களுக்கு முன்பு மளையாள குறும் படமாக தயாரிக்கப் பட்டு தேசத்தின் கவனம் பெற்றது. ஜானகிராமனுக்கு எந்த க்ரெடிட்டும் தரப்பட்டிருக்கவில்லை. 

அவார்ட் வாங்கிய படம். 


படத்தில் அந்த பாலகன்

 ஒரு நாள் மடத்திலிருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பான். 


தமிழின் முக்கியப் பத்திரிக்கை அந்த  படம் பற்றி விசேஷ கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. 


 பார்த்தவர்களையெல்லாம்  கலங்கி கண்ணீர் விடச்செய்தது. 


படத்தின் ஸ்பெஷல் ஷோவில் படம் முடிந்து விளக்கைப் போட்ட போது அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த எல்லோர் கண்களிலும் கண்ணீர். 


அப்போது அந்தப் பால சந்யாசியாக நடித்திருந்த சிறுவன் சூழ்நிலை இறுக்கத்தை நிராகரித்து, வெகு இயல்பான குழந்தைத் தனத்துடன் 

அங்கே கலகலப்பாக சிரித்து 

விளையாட ஆரம்பித்து விட்டான்.


..

Jan 24, 2021

புதுவையில் தி. ஜானகிராமன் கருத்தரங்கம்

 புதுவை தமிழ் துறையில் தி சானகிராமன்


1989.


அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக 

ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.


புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே 

தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.

க .ப .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.


'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.என் பெயர் ஆர்பி ராசநாயகம்! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன்.


விழாவுக்கு போனவுடன் இபா

 'என்ன ராச நாயகம், 

ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார்.

 கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன்!"

- பட்டிகாட்டானாக மாறி 

இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார்.


 தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள்.


பூனைக்கு யார் மணி கட்டுவது? 

நான் எதற்கு இருக்கிறேன்?

பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன்.


பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் வேறு அந்த சபையில்.


நான் பேசும்போது இந்த தமிழ் வெறியை குறிப்பிடாமல் விடவில்லை. I broke the ice.


" தமிழில் 'ஷ் ,ஹ ஜ'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது

 நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இருக்கிற சிறகை பிய்த்து விட்டு 

தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம்" 

- இப்படி தி ஜானகிராமன் சொல்வார். 

அவர் பெயரையே அவர் படத்திலும் 

அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக எழுதிவிட்டீர்கள் " 

 என் எதிர்ப்பை  தெரிவித்தேன்.


அவ்வளவு தான். தனி தமிழ் வெறியர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். 

உடனே க.ப .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார் ' தயவு செய்து எல்லோரும் அமருங்கள்.உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '


தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி 'தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம். உங்களை கும்பிட்டு கேட்டுகொள்கிறேன் '


விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு 

பல 'கன்னட' கடிதங்கள்.

அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள்.


"தமிழ் துறை நடத்திய விழாவில் 

ஒருவன் தமிழை பழிக்கிறான். 

எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "


டெல்லியில் இருந்து திஜாவின் மகன் 

சாகேத ராமன் எனக்கு 

ஒரு கடிதம் 

நொந்து எழுதினார்.

"சாணி உலகம். 

இந்த சாணியில் 

'சானகிராமன்'தான் நிற்க முடியும் "


..............



Dec 19, 2020

The Significant other

 The Significant Other

- R.P.ராஜநாயஹம்


திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips. 


ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.


'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன்                  ஜி.என் பாலசுப்ரமணியமும்

 இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.


எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே


ஜி என் பி : ஜீவனமுனதன்பே


எம் எஸ் : என் அன்பே


ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.


ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.


There is an optical illusion about every celebrity.


நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு 

எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். 

அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று 

மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.


அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?


மதுரை மணி ஐயர்.


தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர். 


இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார்.


 எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு 

ரொம்ப பிடிக்கும். 


அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.


மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார்.

 ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.


பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி 

ஒரு தகவலை சொன்னார்.

அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார்.

 அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.


அந்த கல்லூரி முதல்வரின் பெற்றோர் 

மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள்.

 குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு 

மதுரை வாசி அவர்.


 கல்லூரி முதல்வர்  சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு மாமி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வருக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.


ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை

 “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு 

“ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.


நான் கேட்டேன். “  ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”


காலேஜ் பிரின்சிபால்  சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other. 


அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”

இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வரின் கண்கள் குளம் கட்டி விட்டன. 


’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. 

ரொம்ப நன்னாயிருப்பா. 

எவ்வளவு பெரிய தியாகம்”


தி.ஜானகிராமன் “மணம்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது.


அந்த ’மணம்’ கதையில் வருகிற நீலா என்ற துணை நடிகை ஒரு  Sex worker.


அவள் ஒரு இரவு இருட்டறையில்  சந்தித்த மனிதர் குஷ்ட ரோகி என்பது மறு நாள் தெரிய வரும்போதே அதிர்ச்சியாகி அருவருப்பினால் தவிப்பாள்.

நீலாவுக்குநெஞ்சை அடைத்து , தொண்டை வலித்து, கண்ணீர் தளும்பி, உதட்டை கடித்து, அழுகை பீறிக்கொண்டு வரும்.

ஒரே ஒரு இரவுக்கே அப்படி.


Madurai Mani Iyer's significant other was a saint, precisely.

Nov 28, 2020

Words, words, words

 Polonius :What do you read, My Lord?


Hamlet : Words, words, words. 


'பூச்சி டயலாக் ' ஜானகிராமன் கதை. 


ஒரு கரப்பான் பூச்சி ஒரு கறுப்பு எறும்பிடம்

' என்சைக்ளோப்பிடியா பிரிட்டானிக்கா வாசிச்சதுண்டா? 

புக் ஆஃப் நாலெட்ஜ் படிச்சிருக்கியா? ' ன்னு கேட்கும். 


கறுப்பு எறும்பு பீற்றலாக "எங்களை என்ன வேலை மெனக்கெட்ட ஜாதின்னு நெனச்சியா, இப்படிப் புஸ்தகம் புஸ்தகம்னு அலையறதுக்கு? 

நாங்க என்ன கரையானா, ஒன்ன மாதிரி கரப்பானா? இல்ல மனுஷனா?" 


கரப்பு பதிலடி " ஞானசூன்யத்தைக் கௌரவமாச் சொல்லிக்கிற"


.. 


1972ல் டெல்லியில் 

தி. ஜானகிராமனை சந்திக்க வேண்டி செ.ரவீந்திரனை அழைத்துக்கொண்டு போனவர் பொன் ராஜாராம். 


தி. ஜானகிராமன் அப்போது 

ரவீந்திரனை

 கூர்ந்து பார்த்து கேட்டிருக்கிறார்.

 "உங்கள் வயதென்ன?" 


ரவி : "இருபத்தெட்டு" 


தி. ஜா : "முப்பத்தைந்து வயதிற்குள்ள நீங்க

 உலக இலக்கியம் படிச்சி முடிங்க."


..


இந்த புகைப்படம் இந்த 2020 ஜனவரியில். 

என்னுடைய நூல் 'சினிமா எனும் பூதம்' 


2019 புக்ஃபேர்ல சாரு நிவேதிதாவை 

ஏதோ ஒரு சேனலுக்காக காயத்ரி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். 


சாரு : பெண்கள் இருந்தாலும் 

உளவியல் நெருக்கடி. 

இல்லாவிட்டாலும் உளவியல் நெருக்கடி. 


காயத்ரி : அது Likewise. 

ஆண்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. 

Likewise.



Oct 27, 2020

அந்திம காலம்



எழுத்தாளர் சுஜாதா தான் மறைவதற்கு சில வருடங்களுக்கு முன் தன் அந்திம காலம் பற்றிய துக்கத்தை வெளிப்படுத்தினார் :

" நீண்ட வாழ்வின் இறுதியில் உள்ள சோகங்கள் சற்றே துருத்தி நிற்கின்றன.

வானவில் கனவுகள் 

நிறமிழந்து விட்டது தெரிகிறது."


'To view with hollow eye and wrinkled brow

An age of poverty.'

- Shakespeare - The Merchant of Venice 


" மீனோட்டம் " சிறுகதை தொகுப்பு முன்னுரையில் லா.ச.ரா வாழ்க்கையின் மாலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டு விட்டு ' மாலை என்ன ..அந்தியே வந்தாச்சு " என்பார். 

இப்படி சொன்னது 

லா.ச.ரா இறப்பதற்கு

 கால் நூற்றாண்டுக்கு முன்னரே. 


"Age, with his stealing steps,

Hath clawed me in his clutch." 

- Hamlet


இளமையில் உலகின்பக்கேணியில் மூழ்கி முக்களித்த பின் அந்திம காலம் தரும் துயரம். 

' அந்தி ' என்ற தலைப்பில் ஆதவன்

 ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார். 


முதுமை மரணம் பற்றி ' கழுகு ' என்ற கதை தி .ஜானகிராமன் எழுதியிருக்கிறார். 


முதுமையின் வக்கிரம் பற்றி 'பாயசம் ' என்ற கதை, 'அவலும் உமியும்' குறுநாவல் எழுதியிருக்கிறார்.


"And as with age his body uglier grows,

So his mind cankers."

- The Tempest


 முதுமையின் அவலம் " விளையாட்டு பொம்மை '' என்ற திஜாவின் அபூர்வமான சிறுகதை.

பிராயமான காலத்தில் பிரகாசிக்கும் கூர்ந்த ஊடுருவும் புத்தி சக்தி 

கடைசியில் எப்படியெல்லாம் மழுங்கி விடுகிறது. 


" Sir, I am too old to learn."

- King Lear 


இந்திரா பார்த்தசாரதியின் 'வெய்யில் 'மறுபக்கம் ' என்று திரைப்படமானது .


பல எழுத்தாளர்கள் கடைசியில் வயதான காலத்தில் குருவிமுட்டைகளை போடடுத்தளளுவார்கள். மழுங்கிய எழுத்து.

"When the age is in, the wit is out"

- The Merchant of Venice 


கடைசி காலம் தன் தோல்விகள் பற்றி 

அசை போடும்போது தான் காணாத

 வெற்றிகளை தன் புத்திரன் காணவேண்டும்

 என மனித மனம் ஏங்கும். 

ஒருவர் தன்னை மற்றவர் ஜெயிக்கவேண்டும் என்று விரும்புவது தன் மகன் விஷயத்தில் தான். 

 " புத்ராத் இச்சேத் பராஜயம் "


ஆர்தர் ரைம்போ நல்ல இளமையில் இருக்கும்போதே முதுமை பற்றி கவிதை எழுதிவிட்டான் - நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பு :

புறப்பாடு

"போதும்

பார்த்தாகி விட்டது. 

எல்லாவிதமும்

சந்தித்தாகி விட்டது

பார்வையதை. 

போதும். 

நகரங்களின்

மாலையின்

கதிரவனின்

சந்தடி போதும் எப்போதுமாக. 

போதும்

அறிந்தாகிவிட்டது

வாழ்க்கையின் நிறுத்தம் பல

ஓசை பல

பார்வையும்


இனி புறப்பாடு."


இக்கட்டான சோகமான நிலையை,

பரிதவிப்பான நிலையை

Moment of Calvary என சொல்வார்கள்.                    முதுமைக்கால மன நிலையே,

மரணத்தை மட்டுமே எதிர்கொள்ளும் நிலையே Moment of Calvary தானே.

.. 

Oct 20, 2020

காலத்தின் அசுர உருவம்

 "பீக் அவர் என்ற உருவில் காலம் நாலு வண்டி ஆட்களை ஒரு வண்டியில் அடைத்து நசுக்கிப் பிழிகிறது" 


1954ல் 'சிவப்பு ரிக் ஷா' கதையில் இதை சொல்லியிருக்கிறார் தி. ஜானகிராமன். 


கரோனா கண்விரித்து பார்த்து

 இந்த நீண்ட அராஜகத்திற்கு 

ஒரு பிரேக் போட்டிருக்கிறது. 


சிட்டி பஸ் ஸ்டாண்டில், அடுத்தடுத்த பஸ் ஸ்டாப்களில் மாலை மறைகிற நேரங்களில் பஸ்சுக்கு நிற்கிற வயதானவர்கள் , நடுத்தர வயதினர், இரு பால் இளையவர்கள் முகங்கள் திகில் பூசி, எப்போதுமே இருந்ததை மறக்க முடியாது. 


தி. ஜானகிராமன் " வீட்டின் அமைதியை நோக்கிப் பறக்கும் மனித வர்க்கத்தின் முக வாட்டத்தையும் அலுப்பையும் வியர்வையையும் பார்க்கும் போது, காலத்தின் இந்த அசுர உருவந்தான் கண் முன் நிற்கிறது." 


'காலத்தின் அசுர உருவம்' - 

அறுபத்தாறு வருடங்களுக்கு முன்பு 

எழுதிய வார்த்தை. 


பீக் அவரில் டவுன் பஸ் ஏறிய பின் துன்பக்கேணியிலே இறங்கி விட்டது போன்ற நிரந்தர அதிர்ச்சி. 


மொஃபசல் பஸ், எக்ஸ்பிரஸ் பஸ் வெளியூர் பயணங்களில் இடையில் நிற்கிற ஊர்களில் இயற்கை அவஸ்தை தீர்க்க, சிறு நீர் கழிப்பிட சூழல், துர்நாற்ற அருவருப்பு.

 மலம் கண்ணில் காணாமல், 

வெளி வந்து மீண்டும் பஸ்ஸுக்குள் நுழைய முடிந்திருக்கிறதா? 


எலக்ட்ரிக் ட்ரெயின் ஏறுகிற, இறங்குகிற பதற்றத்துடன் கூட்ட நெரிசல் துக்கம். 


............. 


"Young man will do it if they come to it "


ஹேம்லெட்டில் ஒஃபீலியா சொல்கிறாள். 

உடலுறவை சொல்கிறாள். 

Young men have sex when opportunity offers. 


'மங்கள விலாசம்' என்ற வார்த்தை

 ஜானகிராமன் கதை 'அன்பு வைத்த பிள்ளை' யில் 


மங்கள விலாசம் - உடலுறவு. 


" அவனுக்கு எப்போது பார்த்தாலும் - கால தேசப் பிரக்ஞையில்லாமல் - மங்கள விலாசத்தில் இருக்க வேண்டும். "


..

Oct 19, 2020

ந. முத்துசாமியும் தி. ஜா. மரப்பசுவும்

 தி. ஜா மரப்பசு நாவலுக்கு 

சினிமாவுக்காக 

ந. முத்துசாமி முழுமையாக ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். 

மரப்பசு நாவலை படமாக்க ஸ்ரீதர் ராஜன் 

செய்த முயற்சிக்காக 

முத்துசாமி இதை செய்திருக்கிறார். 

எண்ணம் ஈடேறவில்லை. 


"மரப்பசு ஸ்கிரிப்ட் எங்கே சார்? "


முத்துசாமிக்கு சொல்ல முடியவில்லை. 

" இங்கே தான் வீட்டில எங்கேயோ இருக்கணும். "


அவருடைய பிறந்த ஊர் புஞ்சைக்கு 

மனம் தாவி விடும். 

" புஞ்சயில தீட்டான பெண்கள் அதிகாலை                                   குளத்துக்குப் போய் குளிச்சிட்டு வந்து 

கொஞ்சம் பச்சரிசியுடன்

 ரெண்டு உப்பு சேத்து சாப்பிடுவாங்க"


" நேட்டால் ஆர். கே நாயுடு தென்னாப்பிரிக்காவில் இருந்தார். புஞ்சக்காரர். அங்க இருக்கும் போது இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை                  கிண்டல் செய்திருக்கிறார். பிரச்சினையாகிடுச்சு. அதனால தென்னாப்பிரிக்காவில் இருந்து கிளம்பி இங்க புஞ்சைக்கு வந்துட்டார். நேட்டால் நாயுடு எங்கப்பாவோட நல்ல சிநேகிதர். நான் சின்னப்பையனா இருக்கச்ச 

அந்த நேட்டால் நாயுடு வீட்ல சாப்பிட்டிருக்கேன். 

எனக்கு ஏழு வயசு இருக்கச்ச 

எங்கப்பா செத்துப்போயிட்டார் "


முத்துசாமி மனம் புண்படும்படி

 பிறர் நடந்து கொள்ளும் போது 

வேதனையோடு சொல்வார்

 " அற்ப சுபாவங்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை "


" விழாக்கள், அதி்ல் நடக்கும் சடங்குகள் மரபு சார்ந்த விஷயங்கள். சடங்குகள் அவசியம். ஒருவருடைய இழப்புக்கு சடங்குகள் தான் முற்றுப்புள்ளி வைக்கின்றன" என்பார்.


... 

Oct 1, 2020

தான் தோன்றி சரித்திரம்

 1989ல புதுவை பல்கலைக் கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் சொன்னேன் 

" இந்த கிருஷ்ண பரமாத்மா எத்தனையோ சிசுபாலர்களால் அவமானப் படுத்தப்பட்டவர். 

ஏகலைவர்களாலே கூட 

உதாசீனப் படுத்தப்பட்ட துரோணர். 

சிகண்டிகளால் அம்புத்துளை பட்ட பீஷ்மர். "


இன்னமும் தி. ஜானகிராமனுக்கு இழிவு, சிறுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 


'ஜனங்கள் நாலு, எட்டு, பதினாறு

 என்று பெருகினால், 

உணவுப் பொருள் நாலு, ஆறு, எட்டு

 என்று தான் பெருகுமாம்' 

தி. ஜானகிராமன் இப்படி 'அடுத்த'  சிறுகதையில் சொல்கிறார். 


Means are limited. Wants are unlimited. 


மத்திய அரசு விவசாய மசோதா

 கடும் சர்ச்சைக்குரிய விஷயம். 


'விவசாயியும் கார்ப்பரேட்களும்'என்று  

கலாப்ரியா கவிதை ஒன்றுக்கு தலைப்பு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. 

ஒத்துக்குவாரோ, மாட்டாரோ? 

அந்த கவிதை 

'கற்கள் பொறுக்கிப்

போட்டது 

காகம் 

கழுகு வந்து 

நீரருந்திப் போயிற்று'


பிரமிள் கவிதை - 'தன் போக்கில் போகிறது 

தான் தோன்றி சரித்திரம்' 


'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை ' 


இந்த பாடல் வரிகளை மேற்கோள் காட்டும் போதே 

' அவள் அப்படித்தான் ' படத்தில் காட்சிப் படுத்திய விதம் பற்றி -  ஆற்றைக் காட்டாமல் 

கடல் காட்சியாக வரும். Visual error. 


நாடகத்தில தெருவுக்கு நடுவே சாக்கடைய 

எப்படி காட்சிப் படுத்த முடியும்? 

சினிமால அப்படியில்லையே. 

ஆற்றில் நீரோட்டம் இல்லையென்றால்

 தண்ணீர் இல்லாத, வற்றிப் போன 

   மணல் மிஞ்சிய ஆற்றை காட்ட வேண்டும். 


அஸ்வ மேத யாகம் தெரிந்தது தான். 

' புருஷ மேத யாகம்' விபரம் என்னவென்றால் 

நரபலியாமே?


டி. வி. முன்னால் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது ஓடிக்கொண்டிருக்கிற ஒரு சேனலில் 

எம். ஜி.ஆர் உருக்கமாக பேசும் வசனம் 

" அடுத்தவங்களுக்கு நிழல் கொடுக்கணும்னா 

மரம் வெய்யில்ல காஞ்சி தான் ஆகணும் "

வாத்யார். எவ்வளவு எளிமையா ரசிகனுக்கு போதிக்கிறார். வசனம்லாம் டயலாக்கா பேசுறார். 


இன்னொரு சேனலில் 


வெண்ணிற ஆடை மூர்த்தி 

" என்னடா உத்துப்பாக்கற"

" இந்த எலும்புக் கூடு ஆம்பளயா பொம்பளயான்னு பாக்குறேன் "

வெண்ணிற ஆடை மூர்த்தி எலும்புக்கூடை 

பார்த்த பின்

" கண் கூடா எதுவுமே தெரியலயேடா "


அடுத்த சேனலில் சந்தானம் அட்வைஸ் 

" லூஸ் மோஷன் மாதிரி பின்னால போக ஆசைப்படாதடா, யூரின் மாதிரி முன்னால போக ஆசைப்படு "

Sep 14, 2020

அன்ன விசாரம்

 ரயில் பிரயாணம் வருகிற 

தி. ஜானகிராமன் கதைகள் என்றால் 

'சிலிர்ப்பு',

 'மனதிற்கு... '

' அக்பர் சாஸ்திரி' எல்லாம் 

கண் முன் வந்து நிற்கிறது. 


ரயில் பிரயாணத்தில் நடக்கிற மற்றொரு 

தி. ஜா. கதை 

'அன்ன விசாரம் அட்டகாசம். 


'கச்சேரி'தொகுப்பில் உள்ள கதை. 


அறுபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார். 


எழுபத்து நான்கு வயது கிழவர் சரியான glutton. 


மனிதன் தூங்குகிறதும், சாப்பிடுகிறதும் கோரமான காட்சிகள். சாப்பிடுகிற போது மன்மதனை, ரதியை கூட பார்க்க விரும்ப முடியாது. 


ஆனால் கிழவரின் தோரணை, அடுக்கடுக்காக பிரமிக்க அடித்த சம்பிரமம். 


' கறந்த படிக்கே காய்ச்சின பாலு. தண்ணி உடாம காச்சினா, மாட்டுக் காம்பு வெடிச்சிப் பூடும்னு பால்ல ஒரு பொட்டு தண்ணீரைத் தெளிச்சு இருப்பாங்க. '


' தயிருன்னா கத்தி போட்டு அறுக்கணும், தெரிஞ்சதுங்களா?'


'உப்புமா, தோசை, பொங்கல், வடை 

எண்ணெய் வாடையே வீசப்படாது. எல்லாம் நெய். 

கத்திரிக்காயும், வாழைக்காயும் சேர்த்து கொத்ஸு பண்ணுவாங்களே, அதுக்கு ஈடாச் சாப்பிட்டதே கிடையாது 

ராத்திரி சாப்பாடு ஒரு சாம்பார், கறி, கூட்டு, ரசம், பப்படம், வறுவல். படுக்கறப்ப பசும்பால் சுண்டச் சுண்டக் காய்ச்சி, ஜாதிக்காயும், குங்குமப்பூவுமா மணத்துக்கிட்டு மஞ்ச மஞ்சேருன்னிட்டு, அமிர்தமாப் பொங்கும். '


' மைசூர் பாகு, ஜிலேபி, கோதுமை அல்வா, தக்காளிப் பழ பஜ்ஜி, காபி எல்லாம் முரட்டுத்தனமாத்தான் இருக்கும். 

நெய்யைக் கக்கும் '


வெங்கடபதி வீட்டில் தான் சாப்பிட்ட கதையை விலாவாரியாக பேசும் அந்த கிழப் பயணி. 


ரயில் பயணத்திலும் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டு வெளுத்து விரியக்கட்டி விட்டு

 அந்தப் பெரியவர் சொல்கிறார் :

"ஒரு அஞ்சாறு மாசமா வயிறு மந்தமா இருந்து வருது. ருசிக்க எதையும் சாப்பிட முடியல. அன்னத் திரேஷம் மாதிரியா இருக்கு "


.. 


DINNER! MUSIC!


விருந்து என்றால் இதற்கு மேல் கிடையாது. Dinner. 

இதற்கு மேல் வித விதமாக பரிமாற முடியாது.                        Dinner Items. 


இதற்கு மேல் எப்படி சாப்பிட முடியும். 

அப்படி ஒரு விருந்து. 


பர் லாகர் க்விஸ்ட் எழுதிய

"THE DWARF" நாவலில். 


இந்த ஸ்வீடிஷ் நாவலை 

தி.ஜானகிராமன் ஆங்கிலம் வழி தமிழில்

' குள்ளன் ' என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார்.


.. 


Music with dinner is an insult

 both to the cook and the violinist.

- G. K. Chesterton 


Dinner. Dinner Items. 

Music. 

விருந்து, இசை இரண்டையும் 

ஜேம்ஸ் ஜாய்ஸ் 

மிக அழகாக தன்னுடைய' The Dead' கதையில் நேர்த்தியாக ஓவியம் போல வரைந்திருப்பார்.

உணவு, இசை இரண்டும் சுவையில் தோய்ந்தது. 


தி.ஜானகிராமன்

 இசைக்காக "மோகமுள்" மட்டுமல்ல 

சமையலை கௌரவித்து "நளபாகம்" நாவலும் எழுதினார். 


....................

Aug 22, 2020

தி. ஜா. புஷ்கரணி சிறுகதையில்

 இனி எங்கே தி. ஜானகிராமன் எழுதிய, 

ஆனால் நாம் படிக்காத கதைகள் படிக்க கிடைக்கப்போகிறது என்ற வருத்தம் 

சரவணன் மாணிக்க வாசகத்திற்கும்

 எனக்கும் இருந்ததுண்டு. 


 காலச்சுவடு கொண்டு வந்துள்ள 'கச்சேரி' அப்படிப்பட்ட தொகுக்கப்படாத தி. ஜானகிராமன் கதைகள். 


'புஷ்கரணி ' கதையில் தி. ஜானகிராமன் 


1. காசிவாசிக்கும் கங்கைக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லை என்று சொல்லலாம். 

காச்மீரியும் கன்னிமுனையானும் கங்கையில் 

ஒரு முழுக்குப் போட்டு 

கோடி கல்பங்களில் கட்டிய பாப மூட்டைகளை எல்லாம் அவிழ்த்து உதிர்க்கும்போது, 

 காசி வாசி மட்டும் ஸ்னானத்திற்கு வெந்நீர்        அடுப்பைக் கண் கலங்க ஊதிக்கொண்டிருக்கிறான். 


2. பார்வதியும், பரமேச்வரனும் வானத்தில் செல்லுகையில் ஒரு நாள் கங்கை வழியாகப் போனார்கள். பார்வதி கோடிக்கணக்கான மக்கள் நீராடுவதைப் பார்த்து, தன் வழக்கம் போலக் கேட்டாள். "நாதா, இவ்வளவு ஜனங்கள் ஸ்னானம் செய்கிறார்களே, இவ்வளவு பேருக்கும் கங்கா நதியின் பாவத்தன்மையில் பூரண நம்பிக்கையுண்டா?" என்று. 

"இரு சொல்லுகிறேன் "என்றார் பரம சிவன். 


உடனே கங்கைப் படித்துறையில் இரண்டு தொண்டு கிழங்கள் - புருஷனும் மனைவியும் - இறங்கினர். இறங்கின சுவடோடு ஆண் கிழம் கால் வழுக்கி ஆற்றோடு கலந்து இரண்டு வாய் தண்ணீரும் குடித்து விட்டது.


" ஐயோ, ஐயோ " என்று கிழவி அலறினாள். 


பாதி முழுகுகிறவர்கள், தலையைப் பாதித் துவட்டிக்கொண்டிருந்தவர்கள் - இப்படியாக பலர், போகும் கிழவரை மீட்கப் போனார்கள். 


உடனே " ஐயோ, ஜன்மாவில் ஒரு பாபம் கூடச் செய்யாதவர்கள் தான் அவரைத் தொடலாம் "

என்று அலறினாள்.


 அவ்வளவு பேரும் திடீரென்று நின்று விட்டார்கள். பாபமே இல்லாதவர்கள் என்று எப்படி மனதறிந்து                 பொய் சொல்வது என்று 

நினைத்தான் ஒவ்வொருவனும். 


கிழவன் போய்க்கொண்டேயிருந்தான். 


கிழவி இன்னும் பரிதாபமாகப் புலம்பினாள். 


யாரோ தெருவில் போய்க்கொண்டிருந்தவன், புலம்பலைக் கேட்டு அங்கு வந்தான். 

சூரியோதயம் ஆகி நாலைந்து நாழியாகியும்

 பல் கூட தேய்க்கவில்லை. வாய் நிறையப் புகையிலை. எங்கேயோ தாசி வீட்டில் இரவைக் கழித்து விட்டு வருகிறான். கண் கூச்சம் கூடத் தெளியவில்லை. 


"இந்தக் கூட்டத்தில் ஒரு பாபம் செய்யாதவன் கூட இல்லையா இந்த கிழவரைக் காப்பாற்ற" என்று கிழவி அலறினாள்.


விட புருஷன் திடீரென்று ஒரு முழுக்கு போட்டான். 


  வேகமாக நீந்திப் போய்க் கிழவரை கர கரவென்று கரையில் இழுத்துப் போட்டு விட்டான். 


முழுக்கில் பாபம் தொலைந்தது. கிழவரும் பிழைத்து விட்டார் என்று

 அந்த விடனின் நம்பிக்கை. 


நாள் தவறாமல் கங்கையைக் கலக்கி நீராடும் கர்மிஷ்டர்களின் முகத்தில் ஈயாடவில்லை. 

.. 

May 30, 2020

தி. ஜா. கருத்தரங்கமும் திருப்பூர் கிருஷ்ணனும்

1989 
புதுவை பல்கலைக்கழகத்தில் 
தி. ஜா. கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர். 
அவர் புரவலர். அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம். விழா மலரை இந்திரா பார்த்தசாரதியிடம் இருந்து நான் பெற்ற போது பார்த்தார். ராஜநாயஹம் ஒரு இளைஞன் என்று கண்டு கொண்டார். 

விழா ஆரம்பித்த பிறகு அதன் பின்னர் வந்த திருப்பூர் கிருஷ்ணன் அந்த புரவலர் தான் ராஜநாயஹம் என்று நினைத்திருக்கிறார். 

அப்புறம் புரவலர் பேச எழுந்த போது தான் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டாராம். 

ராஜநாயஹம் என்ற பெயர் பெரியவர் என்பதாக தன்னை கருத வைத்து விட்டதாக விழா முடிந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார். 

நான் தான் முதல் கட்டுரை வாசித்தேன். திருப்பூர் கிருஷ்ணனும் வாசித்தார். 

முன்னதாக புரவலர் பேசும் போது 'ராஜநாயஹம் போன்ற இளம் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜானகிராமன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பது புரிகிறது' என்றார். 

உடனே எழுதப்பட்ட ஒரு காகிதத்தில் இருந்து சிரத்தையாக வாசித்தார். 'ஜானகிராமன் பெரிய எழுத்தாளர். அவருக்கு மனைவி இரண்டு.' - pause.. 
இந்திரா பார்த்தசாரதி உடனே என்னைப் பார்த்து அதிர்ச்சியை தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி வெளிப்படுத்திய காட்சி இப்போதும் மறக்க முடியாதது. 

புரவலர் தொடர்ந்தார் '.. மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' 

'அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' என்று எழுதிக்கொடுத்ததை அப்படி விபரீதமாக வாசித்திருக்கிறார். 

என்னிடம் ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ' நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் புதுமைப்பித்தன்,
 கு. ப. ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, க. நா. சு துவங்கி அழகிரி சாமி, லாசரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்ராம், 
கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று கோணங்கி வரை  படித்தவன் நான். யாரை படித்தாலும் தி. ஜானகிராமன் தான் விசுவரூபம் எடுத்து தெரிகிறார் 'என்று பயமறியா இளங்கன்றாக சொன்னேன். 
கிராவும், இ. பாவும் விழாவில் இருந்தார்கள். 

திருப்பூர் கிருஷ்ணன் கேட்ட கேள்வி கூட நினைவிருக்கிறது.' அன்பே ஆரமுதே குறைப்பட்டுப் போன நாவல் என்று எப்படி சொல்கிறீர்கள் ' என்றார். அவருக்கு பிடித்த பெண் பாத்திரம் அன்பே ஆரமுதே ருக்மணி. 
தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல்களில் அன்பே ஆரமுதே மட்டும் பாதிக்கப்பட்டது என்பது 
என் துணிபு. 

விழா முடிந்ததும் இந்திரா பார்த்தசாரதியுடன் திருப்பூர் கிருஷ்ணனும், நானும் அவர் வீட்டுக்கு சென்றோம். இந்திரா மாமியின் அன்பான உபசரனை. 

வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திருப்பூர் கிருஷ்ணன் என்னிடம் சொன்னார் :
" நீங்கள் கருத்தரங்கில் ஜானகிராமன் தான் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார் என்று சொன்ன விஷயம் கி. ரா வையும் இ. பா. வையும் புண்படுத்தியிருக்கும் "

திருப்பூர் கிருஷ்ணன் 'தமிழின் தரமான எழுத்தாளர்களை விரல் மடக்கி எண்ண ஆரம்பித்தால் முதல் விரலையே ஜானகிராமனுக்காக தான் மடக்க வேண்டியிருக்கும்" என்று கணையாழியில் எழுதியிருந்ததையும் கூட முன்னதாக நான் வெளியிட்டிருந்த தி. ஜா. நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

நான் வெளியிட்டிருந்த அந்த நினைவு மதிப்பீட்டு மடல் பார்த்து விட்டுத் தான் துணை வேந்தர்
 இந்த கருத்தரங்கம் நடத்த ஆணையிட்டார். 

திருப்பூர் கிருஷ்ணன் சென்னை சென்ற பிறகு இந்த புகைப்படம் அனுப்பி வைத்தேன். 

அன்போடு பதில் கடிதம் எழுதினார் 
'என் மனைவி ஜானகியிடமும், குழந்தை அரவிந்தனிடமும் புகைப்படத்தில் உங்களை காட்டி 
"இவர் தான் ராஜநாயஹம் "என்று சொன்னேன்"

.... 

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3967.html?m=0

Feb 23, 2020

தி. ஜானகிராமன் எழுதிய கடிதம்

எப்போதோ கல்கியில், முப்பது வருஷம் முந்தையதாய் இருக்கும்.
அதில் படித்த விஷயம்.

தி. ஜானகிராமனை சந்தித்த அனுபவம் பற்றி பாலகுமாரன் எழுதியிருந்தார்.


பாலகுமாரன் : "இன்றைக்கும் அந்த சந்திப்பு பசுமையாக இருக்கிறது. மிக அரிதாகத் தான் இம்மாதிரியான சந்திப்புகள் நிகழ்கின்றன.

தில்லியிலிருந்து திருவான்மியூருக்கு ஜானகிராமன் குடிபெயர்ந்த நேரம். அவரைப் பார்க்க நானும்
என் மனைவி சாந்தாவும் போனோம்.

மடியில் வைத்து எழுதுகின்ற மரப்பலகை, பேனா, குறிப்பு நோட்டு, ஹார்லிக்ஸ் பாட்டில், அன்று அரைத்த காப்பிப்பொடி, கும்பகோணம் வெற்றிலை,  வறுத்த சீவல், பழங்கள் என்று வாங்கிப் போனோம். நமஸ்கரித்தோம்.

ரொம்ப மேலோட்டமான விசாரிப்புகள், மிகச் சுருக்கமாய், அவர் எழுத்து என்னை எப்படி பாதித்தது என்று சொன்னேன். சாந்தாவும் சொன்னாள்.

நான் சினிமாவில் ஆர்வம் காட்டுவது பற்றி எதிர்ப்பாக சொல்லாது, லேசாக கவலைப்பட்டார். அவ்வளவு தான் பேச்சு.

பிறகு வெறுமே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எதுவும் பேசாமல் வெறுமே அருகிருக்கும் நட்பு எல்லாரிடமும் ஏற்படுவதில்லை.
அவர் பேசாதது எனக்கோ சாந்தாவுக்கோ புதிதாயில்லை.

தி. ஜானகிராமன் கண்களால் ஊடுருவார். ஆழ்ந்து மனிதர்களைப் பார்ப்பார். ஓரக்கண் பார்வையோ, பார்த்துப் பார்த்து கண்களை விலக்குவதோயில்லை.

பிறிகொரு சமயம் இப்படி ஆழ்ந்து பார்க்கின்ற பழக்கம் எனக்கு வந்தபோது,  கண்களின் வழியே மனதைப் படிக்கிற இயல்பு ஏற்பட்ட போது, தி. ஜானகிராமன் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. "

....

தி. ஜானகிராமன் எழுதிய ஒரு கடிதம்


அன்புள்ள பாலகுமாரன்,

நேற்று நீங்கள் அவ்வளவு அந்தரங்க அன்புடன் விசாரித்து, பலவித (எனக்குப் பிடித்த) பொருள்களை வாங்கி வந்தபோது, எனக்கு
பி. எஸ். ராமையா, இன்னும் மூன்று நாலு பேர் ஞாபகம் வந்தது.
அவர்கள் மிக்க உற்சாகத்துடனும் திறந்த மகிழ்ச்சியோடும் உங்களைத் தழுவி, நன்றி தெரிவிப்பார்கள்.
எனக்கு இந்த மாதிரி செய்ய தைரியம் வருவதில்லை. காரணம் - வெளியே காட்ட பயந்து.
பல பேருக்கு " ஒரு வார்த்தை சொல்லணுமே. இதெல்லாம் இவனுக்கு Due என்று எண்ணம் போலிருக்கிறது" என்று தோன்றும்.  தோன்றியிருக்கிறது, சிலருக்கு.

ஒரு சினிமா டைரக்டர் இருபது வருஷம் முன் என் கதை ஒன்றைப் படம் எடுக்கிறேன் என்று வந்தவர்,
தாம் படமாக்கப் போகிற, ஆக்கிய இரண்டு கதைகளை - அந்தந்த பாவத்திற்கேற்ப, முக பாவ, அங்க அசைவுகளுடனும், அபிநயங்களுடனும்
சொல்லிக்கொண்டு வந்தார்.
நான் வழக்கம் போல இடித்த புளி போல கேட்டுக் கொண்டிருந்தேன்.
" என்ன இவ்வளவு சொல்றேன். ரீயாக்டே பண்ண  மாட்டேங்கறேளே? " என்று despair உடன் சொன்னார்.

எனக்கு வருத்தமாயிருந்தது.
நான் இப்படி placid ஆகவும் prosaic ஆகவும் இருக்கிறேனே என்று.
ஆனால் குருடன் எப்படி ராஜ முழி முழிப்பான்?
நான் அவரிடம் எப்படி என் இயலாமையை விளக்குவது?

அவர் அப்புறம் என் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டார். ஓரளவுக்கு நீங்களும் என் மாதிரி சங்கோசியாக இருப்பதால், என் placidity யைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எனக்கு ஒரு ஆச்வாசம். இது சரியான ஊகம் என்று நினைக்கிறேன்.

தேடி வந்தவர்களுக்குத் திருப்தியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கம்.

நாம் நிறையப் பேசவும் இல்லை. புரிந்து கொள்கிறவர்கள் இப்படித் தான் அதிகமாகப் பேசாமல் திளைப்பார்கள் என்று தோன்றுகிறது.

சாந்தாவுக்கு சென்னை பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டில் எல்லோருக்கும்
என் அன்பு.

நமஸ்காரம்.

தி. ஜா

........

பாலகுமாரன் : " இந்தக் கடிதம் பற்றி எதுவும் சொல்லி அபிப்ராயம் உருவாக்க விரும்பவில்லை.
இது மிகவும் ஆழ்ந்த ஸ்நேகமான கடிதம். மேலோட்டமாய் இதில் ஒன்றும் தெரியாது.
உள்ளே நிறைய பொதிந்திருக்கும், கொழுக்கட்டைப் பூரணமாய்.

மனசும் எழுத்தும் ஒன்றாக இருக்கும் நிலை எல்லோருக்கும் ஏற்படாது. "

https://m.facebook.com/story.php?story_fbid=2661128320767284&id=100006104256328

..........

சாரு நிவேதிதா இந்த கடிதம் குறித்து விசாரித்தார்.

" இந்தக் கடிதம் எப்படிக் கிடைத்தது ராஜநாயஹம்?"

அதற்கு என் பதில் :

முப்பது வருஷம் முந்தி கல்கியில் 'வி. ஐ. பிக்கு வந்த கடிதங்கள்' என்று தொடர்ந்து வாராவாரம் வெளியிட்டு வந்தார்கள்.
அப்பொழுதுதான் இந்த கடிதம் பால குமாரன் குறிப்புடன் வெளியிட்டார்கள். அதை கத்தரித்து நான்
தி. ஜானகிராமன் நள பாகம் நாவலில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

இன்று புத்தகங்களை ஒழுங்கு செய்யும் போது கண்டு பிடித்தேன்.

கடிதத்தில் 21.12.1983. தவறாக அச்சுப்பிழையுடன் வருடம்  1983 என்று பிரசுரமாகியிருந்தது. வருடம் 1981 ஆக இருக்கும். ஏனென்றால் தி. ஜானகிராமன் 1982 நவம்பர் 18ம் தேதி இறந்து விட்டார். இதை அப்போதே நான் அதில் மார்க் செய்து வைத்திருந்தேன்.

.....




...


Feb 18, 2020

1982ம் வருஷத்தில் வாங்கிய புத்தகத்தின் பில்

புத்தகங்களை அடுக்கி ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது தி. ஜானகிராமன்
 குறு நாவல் தொகுப்பில் இருந்து இந்த பில் விழுந்தது.

சிவஞானம், நாலாவது சார்
 என இரு குறுநாவல்கள் இந்த நூலில்.


  1982ல ஆகஸ்ட் 3ம் தேதி இந்த நூலை வாங்கியிருந்திருக்கிறேன்.

விலை நான்கு ரூபாய் இருபத்தைந்து காசு.

நான் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்திற்கு ரெகுலர் கஸ்டமர் என்பதால் டிஸ்கவுண்ட் இருபத்தைந்து காசு.
நான்கு ரூபாய்க்கு இதை வாங்கியிருக்கிறேன்.

எவ்வளவு பொருள், சொத்து, நகையெல்லாம் தொலைந்து போய் விட்டது.
இந்த பில் பிடிவாதமாக என்னுடன் இருக்கிறது.

புத்தகம் தொலைவதை விட புத்தகம் வாங்கிய பில் தொலைவதற்கு வாய்ப்பு அதிகம்.

அப்போது 1982ல் நான் படித்தவுடன் என்னிடம் இருந்து இதை பெற்று
சரவணன் மாணிக்கவாசகம் படித்த பின் அவருடைய தாயாரும் இதை படித்திருக்கிறார்.
சரவணனுடைய அம்மா தலை சிறந்த வாசகி.

 ஒரு நூலை வாங்கினால் நான் படிப்பதோடு அன்று சரவணனும், சரவணன் அம்மாவும் படித்து விடுவார்கள்.

அதன் பின் வெவ்வேறு காலங்களில் மீண்டும், மீண்டும் நான் மறு வாசிப்பு செய்து கொண்டே இருந்திருக்கிறேன்.

அவ்வளவிற்கும் சிரத்தையோடு இந்த பில் புத்தகத்தில் இருந்து கீழே விழுந்து காணாமல் போகாமல்..


Oct 6, 2019

சம்பத்தின் ”இடைவெளி” சிறுகதை


சம்பத் ‘இடைவெளி’ சிறுகதையில் தி.ஜானகிராமனின் மூத்த மகன் சாகேதராமன் ஒரு கதாபாத்திரம். சம்பத் நாராயணனே ஒரு பாத்திரம். அப்புறம் கங்காதரன். 
மூவரும் டெல்லியில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். கங்காதரன் அலுவல் விஷயமாக ஜப்பான் போயிருந்த போது அங்கு பயணத்தில் இருந்த ஜானகிராமனை சந்தித்திக்க வாய்த்திருக்கிறது. அதனால் கங்காதரனின் அப்பா கூட இவருக்கு அறிமுகம். ’அம்மா வந்தா’ பற்றி கூட கங்காதரனின் தந்தை ஜானகிராமனுக்கு கடிதமொன்றில் குறிப்பிட்டு எழுதியிருந்திருக்கிறார்.

கதை ஆரம்பிக்கும் போது கங்காதரனின் அப்பாவின் மரணம்.
அந்த பெரியவர் ரிஷி மாதிரி.
An Evolved soul. தாஸ்தயேவ்ஸ்கியின் கரமஸோவ் ப்ரதர்ஸ் நாவல் படித்தவர். இலக்கியம், ரிலிஜன் பற்றி பேசக்கூடியவர். “பிரபஞ்சம் என்ற களேபரத்தில் நாம் அவ்வளவு முக்கியமில்லை”
வார்த்தைகளுக்கு ஒரு அசாத்திய மதிப்பு முந்தைய தலைமுறையான இவர்களால் கொடுக்க முடிந்திருக்கிறது.
சாகேதராமனிடம் ’அப்பா வருகிறாரோன்னா’ ஆனால் தி.ஜா செக்கோஸ்லேவாகியா போயிருக்கிறார்.
இவர்களுடன் வேலை பார்ப்பவர்கள் கூட வரவில்லை.
கங்காதரன் வீட்டுக்கு சாகேதராமனுடன் நாராயணனும் கிளம்புகிறார்.
சாகேத ராமனிடம் டெல்லிக்குளிருக்கான நல்ல ஸ்வெட்டர் இல்லை. நாராயணன் அடுத்த சம்பளத்தில் ஒரு ஸூட் தைத்துக்கொள்ள சொல்கிறார். சாகேதராமன் ஸூட் விலை குறித்து மதராஸில் பட்டுப்புடவைக்கு தான் இப்படி செலவழிப்பார்கள் என சொல்கிறார்.
முதலில் கொஞ்சம் நடந்து
பின்
‘பட்படி’ டெல்லி வாகனத்தில். கரோல் பாக்கில் இறங்கி இழவு வீட்டுக்கு போகிறார்கள். கங்காதரனுடைய மூத்த தமையன் வர வேண்டும். அதன்பின் காரியம் ஆக வேண்டும்.
சாவில் சில சமயங்களில் நாராயணன் காணும் அருவருப்பு, குரூரமான வீர்யம். அகோர வீர்யம்.
கிளம்புகிறார்கள்.
சாகேத்
“Don’t leave me. I feel alone.”
ஒரு ரெஸ்ட்ரண்ட் போகிறார்கள். டான்ஸ் பார்க்கிறார்கள். டான்ஸும் அந்த பெரும் மார்பும்.
சம்பத்திடம் சாகேத்
“You have read lot of books. What they have got to say about death?”
ஹெமிங்க்வே “ Death is a whore”
டால்ஸ்டாய் death process பற்றி நன்றாக விவரிக்கிறார்.
சாகேத் “What about my father?” தி.ஜாவுக்கு மரணம் பற்றி?

“ மோகமுள்ளில் ஒரு பெண் செத்துப் போயிடறா… தற்கொலை. பாபுவுக்கு உடம்பெல்லாம் மணல் பட்டது போன்ற அரிப்பு ஏற்படுகிறது.. ’மலர்மஞ்சம்’ பெண்கள் சாவுப்பட்டியலுடன் துவங்குகிறது. Anyway death was not an obsession with your father. You can speculate it.
நாராயணன் தனக்கு பள்ளியில் ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் பற்றி சொல்கிறார்.
அந்த இரண்டுக்குமே சாரம் “ சாவு ஒரு இடைவெளி”
மயிரிழையில் இரண்டு விபத்தில் இருந்து தப்பிக்கும் சிறுவன்.
இப்போது ரெஸ்ட்ரண்ட்டில் டான்ஸ், கஜல் பாட்டு என்ற நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருக்கும் நாராயாணன் மனதிற்குள் “சாவு ஒரு இடைவெளி” என்று சொல்லிக்கொள்கிறான்.
’அன்றிலிருந்து சொல்ல முடியாத அளவுக்கு உடல் சுகத்தில் அவனுக்கு நாட்டம் விழுந்தது’
– சம்பத்தின் ’இடைவெளி’ சிறுகதையின் கடைசி வரி.

......
சம்பத் ஆயிரம் பக்கத்திற்கு ஒரு நாவல் எழுதிக் கொண்டு வந்து இந்திரா பார்த்தசாரதியிடம் கொடுத்திருக்கிறார்.
அதை படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதி அபிப்ராயமாக '
RAMBLING ஆக இருக்குடா. நாவலை இன்னும் Crisp ஆக edit செய்தால் நன்றாக வரும்' என்று சொல்லிவிட்டு எதற்கோ வீட்டின் உள் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது
சம்பத் வெராண்டாவில் அந்த முழு நாவலையும் கொளுத்திவிட்டு ’குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனிமேல் எதற்கு?’ என்று இந்திரா பார்த்தசாரதியிடம் கூறியிருக்கிறார்.
இ.பா.வே என்னிடம் சொன்ன விஷயம் இது.

இன்று எல்லோர்க்கும் பார்க்க கிடைக்கும் குட்டி நாவல் ”இடைவெளி”.
’ப்ரக்ஞை’ சிறு பத்திரிக்கையில் எழுதிய சிறுகதையின் தலைப்பையே நாவலுக்கும் வைத்திருந்திருக்கிறார்.
..
30 வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு கடிதம்.டெல்லியிலிருந்து சாகேத ராமன் எழுதியிருந்தார் .தி. ஜானகி ராமனின் மூத்த மகன்.
" அப்பா இறந்து ஏழு வருடமாகி விட்டது. ஆனால் இன்னும் க .நா .சு வும் இந்திரா பார்த்தசாரதியும் எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவே இல்லை '' என்று ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.
Irony என்னவென்றால் க.நா.சு. இறந்து (டெல்லியிலே தான் ) அப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது என்பது தான்.
நான் உடனே "சான்சேஇல்லை. க.நா.சு .இறந்துவிட்டார்''என்று சாகேத ராமனுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினேன்.
சாகேத ராமனின் வருத்தம் பற்றி அப்போது புதுவையிலிருந்த இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டேன் ." எனக்கு இந்த சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது"என்று சொல்லிவிட்டார்.

சாகேதராமனும் மறைந்து விட்டார்.

சம்பத்தும் இல்லை.
……




Jul 30, 2019

மணிக்கொடியில் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் ‘ம ஆலி சாஹிப்’


வரப்பு குறும்பூ பற்றி தி.ஜா அடிக்கடி கவனப்படுத்துவார்.

சிறுத்து,மலர்ந்து கிடக்கிற நீல, வெள்ளை மற்றும் மஞ்சள் என்று விதவிதமான பூக்கள். அவை என்ன நேர்த்தியாக, ஒரு ஒழுங்குடன் அமைந்திருக்கின்றன. அவற்றை யாரும் கவனிப்பதில்லை. பெண்கள் தலைக்கு வைத்துக்கொள்வதில்லை. பூஜையிலும் அவை இடம் பெறுவதில்லை. யாரையும் நின்று பார்க்க வைக்காத, யார் கண்ணையுமே உறுத்தாத இந்த குறும்பூக்களின் சௌந்தர்யம்.
ம ஆலி சாஹிப் என்ற எழுத்தாளர் பற்றி கேள்விப்பட்டிருக்க முடியுமா? ஒரு முஸ்லிம். புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி, சி.சு.செல்லப்பா, ந,சிதம்பர சுப்ரமண்யம், கி.ராமச்சந்திரன், சிட்டியெல்லாம் எழுதிய மணிக்கொடியில் கூட ம ஆலி சாஹிப் ஒரு கதை எழுதியுள்ளாராம். அசோகமித்திரன் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அசோகமித்திரன் தன் எட்டு, ஒன்பது வயதில் ஆனந்த விகடனில் இவர் கதையொன்றை படித்திருக்கிறார். அவரை மிகவும் சங்கடப்படுத்திய கதை.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நோயாளியாக படுக்கையில் இருக்கும் தன் தகப்பனை ஒரு சிறுமி பொறுப்பாக கவனித்துக்கொள்கிறாள். வேளாவேளைக்கு உணவு கொடுத்து அன்போடு பாதுகாக்கிறாள். அந்த வீட்டில் அந்த குடிகார நோயாளி தகப்பனும் அந்த மகளும் தான் இருக்கிறார்கள். அவன் முற்றிய வியாதியால் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். பாவம் பிணம் எனத் தெரியாமல் அந்த குழந்தை அதற்கு உணவளிக்க முயற்சி செய்கிறாள். தகப்பனும் சிறுமியும் முஸ்லிம். கதையை எழுதியவர் கூட முஸ்லிம். ம ஆலி சாஹிப் தான் அவர்.
ஜெமினி ஸ்டுடியோவில் பின்னால் இவர் கதை இலாகாவில் வேலை பார்த்திருக்கிறார். அங்கே, வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அசோகமித்திரன் இந்த ம ஆலி சாஹிப்பை சந்திக்க வாய்த்திருக்கிறது.
மணிக்கொடி கி.ராமச்சந்திரனும் கூட ஜெமினி கதை இலாகாவில் வேலை பார்த்தவர் தானே.

அசோகமித்திரன் கதைகளில் வருகிற கோஹினூர் கட்டடம் மறக்கவே முடியாதது. இவருடைய மேஜையிருந்த அதே கட்டடத்தில் தான் அந்த முஸ்லிம் எழுத்தாளருக்கும் மேஜை ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் நான்கைந்து நாட்கள் ஜெமினி வாசன் தன் கதை இலாகாவினருடன் கலந்து உரையாடுவார்.ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட ஒரு அறை அது. கதை இலாகாவில் இருந்த ம ஆலி சாஹிப் உட்பட எல்லோரும் உரத்து பேசுவார்கள். வெற்றிலை பாக்கு, புகையிலை போடுவார்கள். டிபன் சாப்பிடுவார்கள். நண்பர்கள் விவாதம் நடத்துவது போல தோற்றம் தர இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோ சிக்கன நடவடிக்கையின் போது கதை இலாகா கலைந்து போகும்படியாயிருந்திருக்கிறது.
மாதச்சம்பளம் இனி இல்லாமல்  என்ன செய்ய முடியும், எங்க போவேன், என்ன செய்வேன் என்ற கவலையோடு     ம ஆலி சாஹிப் தன் மேஜையை காலி செய்யும்போது அசோகமித்திரன் அங்கே இருந்திருக்கிறார்.
வெளியே போன பின்னாலும் அந்த மணிக்கொடி எழுத்தாளர் எந்த வேலையிலும் பொருந்தக்கூடியவராய் இல்லையே என்ற துயரம் அசோகமித்திரனை ஆக்கிரமித்திருக்கிறது.
பொதுவாகவே ஜெமினி ஸ்டுடியோவில் சில வருடங்கள் யார் வேலை பார்த்தாலும் வெளி இடங்களில் வேலை பார்க்க தகுதியில்லாத அளவுக்கு அந்த நிறுவனம் அவர்களை மாற்றி விடும் என்று ஒரு சூழல் இருந்திருக்கிறது.

Jun 27, 2019

Smell the Rain





‘மழையின்
பெரிய புத்தகத்தை 
யார் பிரித்துப்படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது.’
- தேவதச்சன்

பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு “Rain, rain go away, come again some other day” நர்சரி ரைம் சொல்லிக்கொடுப்பது இன்றைய சூழ்நிலையில் எத்தகைய அபத்தம். Who are we to say it shouldn’t rain?
Is there any life without rain?


நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக இருந்த போது வகுப்பில்
“Raindrops keep falling on my head” பாடுவேன். குழந்தைகள் எப்போதும் சந்தோஷமாக,உற்சாகமாக ஆடுவார்கள்.

திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி.
எட்டயபுரம் தலப்பா கட்டி கவிதை.
(“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” 
- சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின் கடைசி நாவல் ’நளபாகம்’)


சி.மணி கவிதை இது போல ஒன்று தான்.
”நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்று தான்.”

கறுத்து கூடிடும் மேகங்களை “ பின்னிய மேகச்சடை” என்பான்
’எட்டயபுரம் தலப்பா கட்டி’.
பின்னிய மேகச்சடை காணக்கிடைத்தும் மழையை காணோமே என்ற தவித்த நிலை நகரத்தில்.
’நெஞ்சில் பால் வார்ப்பது போல’ என்று சொல்வார்கள். அப்படி பெய்தது நேற்றைய சென்னை மழை.

சுகம்.






.

Jun 26, 2019

ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை “ மனஸுலோனி”


தி.ஜானகிராமனுடைய நாவல்கள் அனைத்துமே பிரமாதமானவை. முதல் நாவல் அமிர்தம் மட்டுமே தோல்வியடைந்ததென்று சொல்வேன். தொடராக எழுதப்பட்டதில் சற்றே, மிக சற்றே குறைப்பட்டதென்றால் ‘அன்பே ஆரமுதே’ நாவல்.
மோகமுள், மலர்மஞ்சம், செம்பருத்தி, உயிர்த்தேன், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம் ஆகியவை எல்லாமே மாஸ்டர் பீஸ். தி.ஜானகிராமன் எழுத்தின் விஷேசத்துவத்தை மிஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வரவேண்டும். அவர் எழுத்தின் உன்னத தரம் தனித்துவமானது.

என்னிடம் உள்ள அன்பே ஆரமுதே பிரதி 1965ல் மீனாக்ஷி புத்தக நிலையத்தால் பிரசுரிக்கப்பட்டது. அதை நான் மதுரையில் 1980ல் வாங்கினேன். எத்தனை பிரதிகள் அச்சிட்டார்களோ? கவனியுங்கள். பதினைந்து வருடங்கள் கழித்து நான் வாங்கியிருக்கிறேன்.
ரொம்ப வருடங்கள் கழித்து “அன்பே ஆரமுதே” நாவலை எடுத்தேன்.
இன்று அதை எடுத்தவுடன் அதன் உள்ளே 1994ல் வெளிவந்த தினமலர் கதை மலரில் இருந்து நான் கத்தரித்து எடுத்து பத்திரப்படுத்தியிருந்த ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை கண்ணில் பட்டது. சிலிர்ப்பு ஏற்பட்டது. 

அந்த கதை ’மனஸுலோனி’ தியாகப்ரும்மத்தையே கதாபாத்திரமாக கொண்ட திருவையாற்று உற்சவத்தை பின்புலமாக கொண்ட கதை. இந்த கதையை ஸ்வாமிநாத ஆத்ரேயன் 1944ல் எழுதியிருந்திருக்கிறார். தி.ஜா, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போலவே ஸ்வாமிநாத ஆத்ரேயனும் கூட கு.ப.ராஜகோபாலனின் சிஷ்ய பரம்பரை தான். தி.ஜாவின் நண்பர் ஆத்ரேயன்.
திருவையாறு ஐந்தாம் நாள் உற்சவம். ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் தியாகப்ரும்மத்தின் நவரச கானடா ராக கீர்த்தனையை பாடும் பெண்மணிகள் பாட பரதநாட்டியம் தொடர்கிறது. அந்த சின்னராகம் என்ன ரசமாக பிழியப்படுகிறது. பிழியப்பிழிய இனிப்பு அதிகமாகிறது. 
‘பலுகு கண்ட சக்கரனு நேருரே’
The sweetness of words spoken by Lord Rama would deride the sweetness of sugar candy. 
ஆடும் கணிகையானவள், கல்கண்டை ருசி பார்க்கும் சொகுசை முப்பது விதமாக அபிநயிக்கிறாள்! முப்பது விதமான அபிநயம்.
தியாகராஜஸ்வாமிகள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அனுபல்லவி தாண்டி சரணம் ’சுருல காமினி வருல கானமா?’
மங்கை வார்த்தெடுத்த விக்கிரகம் போல நின்றாள்.
அடுத்த அடி “ச்ருங்கார ரஸ புக்த வார வனிதுலார” மேலும் கீழும் விசிறி பாடப்படுகிறது.
’சுவர்க்கத்திலிருந்து குதித்த தேவ மாது மின்னலைப் போல மறைந்து மறைந்து தோன்றுவது போல ஒரு பிரமையை உண்டாக்கினாள். நடனத்தில் அவ்வளவு வேகம். ச்ருங்கார ரஸ என்ற சொல்லுக்கு அபிநயம். என்ன குலுக்கல்? என்ன மினுக்கல்? என்ன கண் வெட்டு? என்ன கழுத்து நெளிவு? உடல் வளைவு? நிமிர்வு?”
கண்டு கொண்டிருந்த மக்கள் அனைவரும் வெறி பிடித்தவர்கள் போல் ஆகி.. இளைஞர்கள் முகங்களெல்லாம் ரத்தம் பொங்கியது. மாதர்கள் முகமெல்லாம் வெளிரி தலை குனிந்து விட்டனர். திரும்ப திரும்ப பாடப்பட்டு, இப்படியெல்லாம் அபிநயம் வேணுமா?
தியாகப்ரும்மம் வீடு திரும்பிய பின் கனபாடிகளிடம்” ‘ச்ருங்கார ரஸயுக்த வார வனிதுவார’ என்று தானே பாவி பாடினேன். அதற்கு சரியாகத்தானே அவள் அபிநயம் பிடித்தாள். ராமன் தர்பாரில் கேவலச்ருங்கார ரஸமிகுந்த நாட்டியம் நடந்தது என்று சொல்ல நான் துணிந்தேனே. அப்படி ஒரு நாட்டியத்தை என் ராமன் ஆமோதித்து கல்கண்டு போல இனிக்கப் பேசினான் என்று சொல்ல என் நாக்கு கூசவில்லையே! என்ன அபசாரம்?”
தியாகராஜ சுவாமிகள் தன் ஹிந்தோளம் கீர்த்தனை பல்லவியை இயற்றுகிறார்.
”மனசுலோனி மர்முல தெலுசுகோ
மான ரக்ஷகா மரகதாங்க – நா
மனஸுலோனி”
"என் மனதிலுள்ள மர்மத்தை ராகவன் தான் அறிய வேண்டும். இப்படி ஒரு அபசாரத்தை நான் நினைக்கவில்லை. என் மானத்தை அவன் தான் காக்க வேணும்."

இந்த மனஸுலோனி ஹிந்தோள கீர்த்தனையை சுதாரகுநாதன் இப்போது பாடும் நேர்த்தி. பாடலின் புதிர்ப்பாதைகளில் சுதாவின் சஞ்சார அழகு. ( சுதாரகுநாதனின் மகள் மாளவிகாவுக்கும், மகளின் காதல் கணவர் மைக்கல் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். திருமண வரவேற்பில் சுதாவின் கணவர் ரகுநாதனுக்கு பிடித்த நாட்டக்குறிஞ்சியும் இடம் பெறட்டும்.)
தியாகப்ரும்மத்தின் நவரஸ கானடா ‘பலுகு கண்ட சக்கரனு நேருரே’ நெடுனேரி கிருஷ்ணமூர்த்தி பாடியது இன்று யூட்யூபில் கேட்க கிடைக்கிறது.







May 27, 2019

தி.ஜாவின் ”தீர்மானம்”


சென்ற வாரம் கூத்துப்பட்டறையில் தினமும் ஒரு சிறுகதை தேர்ந்தெடுத்து உரக்க வாசித்து விரிவாக பேசினேன்.
தி.ஜானகிராமனின் ’தவம்’, ’பரதேசி வந்தான்’, ’தீர்மானம்’ அசோகமித்திரனின் ‘காந்தி’, ’கடன்’.
அடர்த்தியான கதைகள்.

தி.ஜானகிராமனைப்பற்றி, 

அசோகமித்திரனைப்பற்றி

நிறைய சொன்னேன்.

தி.ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் தான் எத்தனை முறை மறு வாசிப்பு செய்திருக்கிறேன். பிரமிப்பு விலகாத விசேஷமான அனுபவமாகவே ஒவ்வொரு முறையும்.
தி.ஜா ’தீர்மானம்’ கதையை வெள்ளிக்கிழமை வாசித்தேன்.
நான் கண் கலங்குவது, அழுவது எல்லாம் தனிமையில் தான்.
Sorrows find relaxation in solitude. Every man has his secret sorrows.
மற்றவர்கள் முன் இளகி கலங்குவதில்லை.
தீர்மானம் கதையை வாசிக்கும் போது அடக்க முடியாமல் விம்மினேன். கண்ணில் இருந்து நீர் வடிந்து விடாமல் இருக்க கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன். தொண்டை தழதழக்க மேலே வாசிக்க முடியாமல் நிறுத்தினேன்.

Charles Dickens, in his novel Great Expectation says
“We need never be ashamed of our tears.”

Shakespeare in Julius Ceasar “If you have tears, prepare to shed them now.
பத்து வயது விசாலம் எனும் சிறுமி தான் எப்பேர்ப்பட்டவள். தாயில்லா பிள்ளை. தந்தையுடன், அவருடைய சகோதரியின் பராமரிப்பில் இருப்பவள். அந்த அத்தை வாழாவெட்டியா, விதவையா?
ஆறு வயதில் விசாலிக்கு பால்ய விவாகம். அப்போது கணவனுக்கு இருபத்திரெண்டு வயது என்பது அவன் இப்போது அவளை அழைத்து வரச்சொல்லி இவள் வீட்டுக்கு வந்துள்ள கணவனின் உறவினர்கள் அவன் வயது இருபத்தாறு என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.
வந்திருப்பவர்கள் கணவனின் அண்ணா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர். கணவனுக்கு அம்மா, அப்பா கிடையாது.
பத்து வயது குழந்தையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்கள்.
குழந்தை தன் தோழி ராதையுடன் சோலி விளையாடக் காத்திருந்தவள்.
அப்பா வீட்டில் இல்லை. நான்கு வருடங்களுக்கு விசாலியின் திருமணத்தின் போதே அப்பாவுக்கும் கணவன் வீட்டார்க்கும் மனஸ்தாபம். உறவு கெட்டுப் போய் விட்டது.
அத்தை தன் சகோதரன் வரட்டுமே என்று தவித்து அங்கலாய்க்கிறாள் இப்போது.
கணவன் வீட்டாரோ பச்சை தண்ணீர் கூட இந்த வீட்டில் குடிக்கத் தயாராயில்லை. சாப்பிட வேண்டிய குழந்தை விசாலியை அழைத்துக்கொண்டு வண்டியில் கிளம்ப தயாராகிறார்கள்.
விசாலி உடனே தீர்மானிக்கிறாள். ’அத்தை, அப்பா கிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு.’
கணவன் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமாகிறாள். என்ன ஒரு தீர்மானம்.
என்னால் மேலே உரக்க வாசிக்கவே முடியவில்லை. கண்ணை நீர் மறைக்கிறது. தொண்டையில் இருந்து குரல் வரவில்லை.
ஒரு வழியாக சில நிமிடங்கள் உறைந்து விட்டு நிலை கொண்டு மீண்டும் கவனமாக வாசித்து முடிக்க முயன்றும் சிரமமாகவே இருந்தது.
என்ன ஒரு கதை. எத்தனை முறை வாசித்த கதை.
எத்தனை வருடங்கள் கழித்து வாசித்தாலும் நெஞ்சை அடைக்கும் கதை.
இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் கதை. இது இப்ப தேவையா? என்றெல்லாம் விகார மூளைகள் விவாதம் செய்யட்டும்.
தி.ஜாவின் கதைகள் அந்த கால கட்டங்களின் வரலாற்று ஆவணங்கள். உன்னத மனத்தால் மட்டுமே இப்படி காட்சிப்படுத்த முடியும்.
………………………