Share

Showing posts with label ராஜன் குறை. Show all posts
Showing posts with label ராஜன் குறை. Show all posts

Oct 13, 2012

Some Moments to Cherish


லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரன் இரண்டுமுறை ’செல்’ பேசினார்.

முதல் தடவை பேசியபோது’நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன்’ பதிவைப் படித்து விட்டு அதை அங்கே WorldTamilNews.net ல் பிரசுரிக்க விருப்பம் தெரிவித்தார். சந்தோஷமாய் சம்மதித்தேன்.

 ’ராஜநாயஹம் எழுத்தாளரின் எழுத்தாளர்’ என்றார்.

இரண்டாம் முறையாக பேசியபோது யமுனா ராஜேந்திரன்
‘இரண்டு தமிழ் ப்ளாக் மட்டுமே நான் சப்ஸ்க்ரைப் செய்து உள்ளேன்.அதிலொன்று ராஜநாயஹம் ப்ளாக்!’


பிரம்மரிஷி பட்டம்.

யமுனாராஜேந்திரன் பேசுகையில் ராஜநாயஹம் எழுதி இன்னும் ஒரு புத்தகம் கூட வெளி வரவில்லையே என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

புத்தகம் வெர்சட்டைல் பதிவுகளை உள்ளடக்கியதாக ராஜநாயஹத்தின் பன்முகத்தன்மையை வாசகர்கள் அறியும்படியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுபகுணராஜன் இரண்டு முறை ’செல்’பேசினார்.

’என்னத்தை கன்னையா’ பதிவை செப்டம்பர் ’காட்சிப்பிழை’யில் வெளியிட்டார்.

 நண்பர் ராஜன் குறை அவரிடம் ஆச்சரியமாக”ராஜநாயஹத்தை எப்படிப் பிடித்தீர்கள்?!” என்றாராம்.

சுபகுணராஜன் என்னைப்பற்றி “உங்களுக்கெல்லாம் தெரிந்த மனிதர் ராஜநாயஹம். எனக்கு ஒரு முரடன்’ கேபியை த்தான் தெரியும்”

காலம் எவ்வளவு விந்தை,விசித்திரங்களை நடத்திக்காட்டி விடுகிறது!

என் கல்லூரி கால நண்பர்களுக்கு நான் இன்றும் கேபி தான்!

அக்டோபர் ’காட்சிப்பிழை’இதழில் என்னுடைய பதிவுகள் P.D.சம்பந்தம், A.கருணாநிதி, அழகிய மிதிலை நகரினிலே ஆகிய பதிவுகள் இப்போது சுபகுணராஜன் பிரசுரம் செய்திருக்கிறார்.

அன்று ஒரிஸ்ஸாவிலிருந்த பரிசல்காரனிடம் பேசினேன்.உடனே லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அமெரிக்காவிலிருந்து பேசினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் உடனே ட்விட்டரில் - கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொன்னா ஒத்துப்பாய்ங்களா அடிக்க வருவாய்ங்களா?!

நான் திருப்பூரில் சந்திக்க விரும்பிய பரிசல்காரன் என்ற கிருஷ்ணகுமார் என்னைப்பார்க்க என் வீட்டுக்கே வந்தார். என்னைப் பற்றி ராஜநாயகன் என்று  பதிவு எழுதியுள்ளார்.
http://www.parisalkaaran.com/2012/09/2005.html

டெல்லியிலிருந்து  சந்தனார்  என்ற வெ.சந்திரமோகன் பேசினார். நான் அறிந்த R.P.ராஜநாயஹம் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
http://chandanaar.blogspot.in/2012/09/blog-post_4.html


சமீபத்தில் பேசிய இன்னொரு வலைப்பிரமுகர் உண்மைத்தமிழன்!

கிருஷ்ணமூர்த்தி எஸ் : ஒரு வலைப்பூ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமானால்,தமிழில் ஒரு பத்து வலைப்பூ தேறுமா?சுருங்கச்சொல்லி,நெத்தியடியாக எழுத்து என்றால் அது இப்படித்தான் என்று ஒரு உதாரணம் காட்டவேண்டுமா?இலக்கியம்,கவிதை,சினிமா என்று பலதளங்களிலும் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிற ஒரு பதிவரைக் காட்ட வேண்டுமென்றால் அது R.P.ராஜநாயஹம் ஒருவர் தான்.


ட்விட்டர் உலகில்  சாரல்:

 லக்கி கிருஷ்ணா: ‘இந்த எழுத்து வடிவம் ராஜநாயஹத்துக்கு எப்படி சாத்தியமாகிறது என்று தெரியவில்லை. எழுதுவதற்கு கடினமான வடிவம் இது.சுகமான சுவாரசியம் ராஜநாயஹம் எழுத்துக்களில் கிடைக்கிறது. இவருக்கு ஒரு தனித்துவம் வாய்த்திருக்கிறது.மேலும் தோழர் ராஜநாயஹத்தின் வெற்றியே அவர் தேர்ந்தெடுக்கும் எளிமையான மொழியில் இருக்கிறது.

கானா பிரபா: என்ன எழுத்துய்யா…. அசுரன் ஐயா நீங்கள்.இன்றைய காலையை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது மதுரை முத்து பதிவு.

பிரபல ரவுடி: உங்க ப்ளாக்கை 2008ல் இருந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.எழுத்து ராட்சசன்ங்க நீங்க!

............

நான் கேட்காமலே தானாக முன்வந்து என்னுடைய ப்ளாக்கை வடிவமைத்துக்கொடுத்தவர் Chilled Beers.