Share

Showing posts with label தளையசிங்கம். Show all posts
Showing posts with label தளையசிங்கம். Show all posts

Jul 19, 2012

Carnal Thoughts -34

மு.தளையசிங்கத்தின் 'தொழுகை' கதையில் எதிர் அழகியல்

தேவாரம் ஓதும் சைவப்பிள்ளையின் மனைவி செல்லம்மாள் அதிகாலையில் தன் வயதுக்குவந்த இரு பெண்பிள்ளைகள் (12, 14 வயது) தூங்கும் அறையைப் பூட்டி விட்டு கரிய சாணான் தலித் முத்துவுடன் உடலுறவு கொள்ளும்போது கோவிலில் செல்லம்மாளின் கணவர் ஆறுமுகம்பிள்ளை தேவாரம் ஓதுகிறார். செல்லம்மாளுககு முத்து 'சிவலிங்கமாக'த் தெரிகிறான். முத்துவுக்கு செல்லம்மாள் அம்மனாகத் தோன்றுகிறான். உடலுறவு கொள்வது இது முதல்முறையுமல்ல. இத்தனைக்கும் பத்துநாள் முன்னதாகத்தான் முத்துவை செல்லம்மா பார்த்து கதைத்திருக்கிறாள்.

வருடம் 2002 மே மாதம் 5 தேதி ஊட்டியில் நாராயண குருகுலத்தில்
’ தொழுகை’ கதைக்கு R.P.ராஜநாயஹம் முன் வைத்த எதிர் அழகியல்

தத்தனேரி டூரிங் தியேட்டரில் தரையில் மணலில் அமர்ந்து 'சிவகெங்கைச் சீமை' பழைய படம் பார்த்துவிட்டு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து புட்டுத் தோப்பில் கரையேறுகிறோம்.

போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன முட்டாள் தாசு ஒரு கழுதையை போகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் சர்ச், இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பள்ளிக்கூட கேட் அருகே இரண்டு பேர் கழுதையைப் பிடித்துக்கொள்ள கழுதையைப் புணரவேண்டி முட்டாள் தாசு பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறான்!

முட்டாள் தாசு 'மயக்கமா கலக்கமா' பாட்டை, அழகாக பாடுவான் 'கோமாதா எங்கள் குலமாதா' பாட்டையும் அனுபவித்துப் பாடுவான். தன் வாழ்க்கைத் தோல்வியினால் துவண்டுபோய்விடாமல் ஆப்டிமிஸ்டிக்காக 'முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல முடிவில் கொடைக்கானல்தான்' என்று கவிதை எழுதியவன்.

குருவி மண்டையன் 'என்ன தாசு . . . கழுதையைப் போய்.....' என்று கேட்கிறான்.

 தாசு 'கழுதை இல்லடா கல்யாணிடா .... கழுதைன்னு சொல்லக்கூடாது. கல்யாணி!டேய் எனக்கு பொம்பளை சீக்குடா ...... சத்தமில்லாமப் போங்கடா நீங்க'

கழுதையின் குறி ஒரு அடிக்குமேல் நீண்டிருக்கிறது.

 ' ஐயய்யோ! தாசு இது 'கல்யாணி' இல்ல தாசு . கல்யாண சுந்தரம்!' என்கிறான் குருவி மண்டையன்.

இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் பேபி கேட்டைத் திறந்து வெளியே வந்து 'ஐயய்யோ என்னடா இது அசிங்கம்' என்று கூப்பாடு போட தாசு அவனிடம் 'பேபி யோவ் எனக்கு பொம்பள சீக்குய்யா' என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் போது கழுதையை பிடித்திருந்த இருவரும் அதைவிட்டு விட்டு ஒடுகிறார்கள். கழுதையும் ஓடுகிறது.

தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு.

பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான். Voyeurism! அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று
( முட்டாள் தாசுவின் வார்த்தைகளில் 'பேபி ஏறியடிக்கும்போது ஒவ்வொரு 'குத்து'க்கும் வெரோனிகா ஓரு 'ஏசுவே ரட்சியும்') சொல்லிக்கொண்டிருந்தாளாம்.
 இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.

தொழுகை கதை பத்துநாள் சமாச்சாரம். இதுவே சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் ஊருக்கும் தெருவுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிடும் காலப்போக்கில் முத்து மேலும் முன்னேறி செல்லம்மாளின் பெண்பிள்ளைகளின் மீதுகூட கைவைக்கும்படி ஆகலாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம்? விஷயம் ஆறுமுக ஒதுவாருக்குத் தெரியவந்து அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம். ஒரு வேளை அவர் அனுசரித்துப் போகலாம். அல்லது கொலையோ தற்கொலையோ செய்யம்படி ஆகலாம்.

முட்டாள் தாசுவின் மிருகப் புணர்ச்சியில் அவனது நோக்கம் காமமல்ல. மெடிக்கல் க்யூர்! கழுதையைப் புணர்ந்தால் பொம்பளை சீக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதுகூட தொழுகைதான்.
 பேபியின் மனைவி வெரோனிக்கா செய்வது செல்லம்மாள் செய்வதுபோல அடல்ட்ரி கூட இல்லை. கலவியைத் தொழுகையாக்கியிருக்கிறாள்.


முட்டாள்தாசுக்கு Sexually Transmitted Disease என்ற வார்த்தையே தெரியாது. அதனால் மதுரை வட்டார வழக்கில் 'பொம்பளைசீக்கு' என்கிறான்.

Jun 5, 2012

Carnal Thoughts - 31

http://fc08.deviantart.net/fs43/f/2009/098/c/6/Voyeurism_by_SamuraiSunshine.jpg   

Voyeurism

அறுபது வயது தாண்டிய பெண்கள் நான்கைந்து பேர்  ஓய்வாக பேசிக்கொண்டிருந்த போது சுப்பாத்தாக்கிழவி செய்த லூஸ் டாக்.

”என் மாமியா பேச்சிக் கிழவி ஈன சிறுக்கி.நான் கொஞ்ச பாடா பட்டேன்.விவஸ்தை கெட்ட முண்ட.  எனக்கு கல்யாணம் ஆனப்ப ராவுல என் புருஷன் கூட இருக்கும்போது சாவி ஓட்டயுல கண்ண  வச்சி பாத்துக்கிட்டே இருப்பா. பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன். ஒரு நா அம்புட்டையும் அவுத்துப் போட்டு முண்டக்கட்டயா நின்னேன். நல்லா பாத்துக்கடின்னு”


..............................

”ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை”யில்
 R.P. ராஜநாயஹம்

தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான்.
 
Voyeurism! அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று
( முட்டாள் தாசுவின் வார்த்தைகளில் 'பேபி ஏறியடிக்கும்போது ஒவ்வொரு 'குத்து'க்கும் வெரோனிகா ஓரு 'ஏசுவே ரட்சியும்') சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.


.....................................................................

மனுஷ்ய புத்திரன் கவிதை கீழே

அந்தரங்கம்

எனக்குத் தெரியும்

ஓசைப்படாமல்
கதவு திறந்து வந்து

சுற்று முற்றும்
கவனித்துவிட்டு

பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை

........................................

கலாப்ரியாவின் ’விகார புஷ்பங்கள்’ கவிதையிலிருந்து

பொலி காளைகளைச்
செக்கு மாடாக்கு
இனி பசுக்களின்
வீதியோரக் கருவுறுதல்;
நான்கு பிள்ளைகள்
வேடிக்கைப் பார்க்க
இல்லையெனக் கவிதை எழுது.
( பாரதியிடம் தொனியைக்
கடன் வாங்கி )

.....................
இடாலோ கால்வினோ வின் "If on a winter's night a Traveller " நாவலில் ஒரு காட்சி

மியாகி சீமாட்டி என்னைப் பின்புறமாக பற்றி, என்னை பாயில் படுக்க வைத்தாள். அவள் மகள் மகிகோவை புணர்வதாக நினைத்துக்கொண்டு நான் மோகப் பெருக்கில். “மகிகோ“ என்று கத்தினேன். பாதி திறந்திருக்கும் கதவின் பின் முழந்தாளிட்டு மியாகியின் மகள் தலையை சாய்த்து பார்த்துக் கொண்டு இருந்தாள். தன் அம்மாவையும் என்னையும் கண் விரித்துப் பார்க்கிறாள் மகிகோ. நான் கத்தியதால் தான் ஓடிவந்திருக்கிறாள். தாழ்வாரம் தாண்டி
இன்னொரு உருவம். மியாகியின் கணவன் - மகிகோவின் அப்பா -  மிஸ்டர் ஒகேடா பார்த்துக்கொண்டிருந்தார்.நான் அவரை கவனித்த போது பின்னிப் படர்ந்திருக்கும் என்னையும் தன் மனைவியையும் பாராது , எங்களை ஓளிந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகளை வெறித்து நோக்கினார். அவரது சில்லிட்ட கண்ணி்லும்,சுளித்த உதட்டிலும், மகிகோவின் பார்வையிலும்கூட பளிச்சென்று தெரிந்தது என்னவென்றால்,மியாகி சீமாட்டியின் orgasm தான்!

-