Share

Showing posts with label சி.மணி. Show all posts
Showing posts with label சி.மணி. Show all posts

Jul 13, 2019

இரங்கல் எப்போதும் அபத்தம்


கீட்ஸ் மறைந்த போது ஷெல்லி அதிர்ந்து போனான். அடுத்த வருடமே அவனும் மறையப்போகிறான் என்பது பெருந்துயரம். அதை அறியாமலே கீட்ஸ் பற்றி கதறி ஒரு இரங்கல் கவிதை எழுதினான்.
ஒவ்வொரு பேராவிலும் புலம்பினான்.
A lengthy elegy.

I weep for Adonais – he is dead!
Oh weep for Adonais…
Most musical of mournars, weep anew…
Thy youngest, dearest one has perished..
He will awake no more, oh, never more..
Ah, woe is me..
Grief returns with the revolving year…

கீட்ஸ் இருபத்தாறு வயதை கடக்கு முன் எலும்புருக்கி நோயால்.

ஷெல்லி முப்பது வயது நிறையுமுன் கடலில் மூழ்கி.
உடல் எரியூட்டப்பட்ட போது
பைரன் அங்கே இருந்தார்.


ஆத்மாநாமுக்கு இளைய வயதில் கிணற்றுக்குள் ஏற்பட்ட துர்மரணம் எல்லோரையும் அதிர வைத்த ஒன்று. 

Both Shelley and Athmanam were born to be drowned.


’என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்கமுடியாது’ என்பது ஆத்மாநாமின் சூளுரை. உயிரோடு இன்று இருந்திருந்தால் அந்த கவிஞனின் பேனா எத்தனையோ ஓவியங்களான கவிதைகளை எழுதியிருக்கும். முப்பத்து மூன்று வயது அற்பாயுள்.
’எதிர்த்து வரும் அலைகளுடன் நான் பேசுவதில்லை.
எனக்கு தெரியும் அதன் குணம்.
பேசாமல்
ஒதுங்கி வழி விட்டு ஒதுங்கி விடுவேன்
நமக்கு ஏன் ஆபத்து என்று
மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை
அவை மிதந்து செல்லும்
எனக்கு படகாக’
– ஆத்மாநாம் நம்பிக்கை
ந.முத்துசாமியின் நண்பர் சி.மணி எழுதிய ஆத்மாநாம் இரங்கல் கவிதை கீழே.

அடக்கம்
ஆத்மாநாம்,
நீ தான் முக்கியம் எனக்கு,
உன் கவிதைகளை விட. இவை
எப்போதும் இருக்கும்; ஆனால்
உனக்கு பதிலியாகாது. இவற்றோடு
பழகுவதும் வேறுவகை.
உன் கவிதைகளை விட
உன் வாழ்க்கைப் போராட்டங்கள்
உக்கிரமானவை.
கவிதையில் மூழ்கிய மாதிரி
கிணற்றில் குதித்து மூழ்கினாய்.
ஒரு வித்தியாசம்,
இவை இரண்டும்
வெவ்வேறு அடக்கம்.
..............

Jul 4, 2019

ந.முத்துசாமியின் ஆப்த நண்பர் சி.மணி


”முக்காலம் தொடர்பில்லா முக்கூடு” என்பவரும் 
“போனது வராது, வருவது தெரியாது,
நடப்பதைக் கவனி” என்பவரும் அறிவிலிகள்;
நினைவும் நம்பிக்கையும் உள்ள மட்டும்
போவது எதுவுமில்லை, வருவது ஒன்றுமில்லை.
எல்லாம் இருப்பதுவே, நடப்பதுவே.
முற்றிய வித்து
பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்.
மின்னும் விண்மீன்
சென்றதன் தன்னொளி; வருவதன் சின்னம்.
பிறந்த குழந்தை
முன்னோரின் வாரிசு; புதுமனிதனின் மூலம்.
முக்காலம் மூன்றல்ல
ஒன்று – ஒரே முக்கோணம்;
மனித இனத்தைச் சுற்றி வளைத்திருக்கும்
முக்கோணம்.
- சி.மணி

சி.சு செல்லப்ப்பாவின் ’எழுத்து’ சிற்றிதழில் 1959ம் ஆண்டில் வெளிவந்த கவிதை இது.
ந.முத்துசாமிக்கு ஒரு தோழமை மிகுந்த இணக்கமாக இருந்ததென்றால் கவிஞர் சி.மணியுடனானது தான்.அசோகமித்திரன், பிரமிள், வெங்கட் சாமிநாதன் ஆகியோருடனான நட்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கால தோழர் ஞானக்கூத்தனுடன் கூட அவ்வப்போது உரசல் இருந்ததுண்டு.


(ஞானக்கூத்தன் : ’தூக்கிக்காட்டுறேன்..தெரியுதா பாரு’

ந.முத்துசாமி: ’இவருக்கென்ன தங்கத்திலா தொங்குது?’)

முத்துசாமியின் குர்ஜீஃப் மீதான ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு கூட சி.மணி தான் காரணம்.
சி.மணி மீது அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒரு பிரமிப்பு கலந்த மயக்கம் இருந்தது.
முத்துசாமி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் படிக்க சேர்ந்த போது அவருடைய நண்பர் தாமோதரன் சொல்லியிருக்கிறார். “ மூன்று பைத்தியங்கள் இங்கே வந்திருக்கின்றன.”
அந்த மூவரும் சி.மணி, வி.து.சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோர்.
இந்த மூவரிலும் சி.மணி தான் முத்துசாமியின் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரியவரானார்.
சி.மணியின் அறிவுத்திறன் கண்டு மெய் சிலிர்த்திருக்கிறார். அவருடைய ஆங்கிலப்புலமை முத்துசாமியை மிகவும் கவர்ந்திருக்கிறது.

உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதி பெயர் பெறுவார், நோபல் பரிசு பெறுவார்  என முத்துசாமி உறுதியாக நம்பியிருக்கிறார். 
இதனால் சி.மணியின் ஒரு சட்டையை கேட்டு வாங்கிப்பெற்று பத்திரப்படுத்திக்கொண்டார்.
முத்துசாமி இளைஞராக சென்னை நகரில் பவனி வந்ததெல்லாம் சி.மணி கொடுத்த சைக்கிளில் தான். அந்த சைக்கிளின் பயன்பாடு சொல்லி முடியாது என்பார்.
சி.மணியின் பணத்தில் நடத்தப்பட்ட நடை பத்திரிக்கையில் தான் முத்துசாமியின் முதல் நாடகம் “காலம் காலமாக” வெளி வந்தது.
……………..

Jun 27, 2019

Smell the Rain





‘மழையின்
பெரிய புத்தகத்தை 
யார் பிரித்துப்படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது.’
- தேவதச்சன்

பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு “Rain, rain go away, come again some other day” நர்சரி ரைம் சொல்லிக்கொடுப்பது இன்றைய சூழ்நிலையில் எத்தகைய அபத்தம். Who are we to say it shouldn’t rain?
Is there any life without rain?


நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக இருந்த போது வகுப்பில்
“Raindrops keep falling on my head” பாடுவேன். குழந்தைகள் எப்போதும் சந்தோஷமாக,உற்சாகமாக ஆடுவார்கள்.

திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி.
எட்டயபுரம் தலப்பா கட்டி கவிதை.
(“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” 
- சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின் கடைசி நாவல் ’நளபாகம்’)


சி.மணி கவிதை இது போல ஒன்று தான்.
”நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்று தான்.”

கறுத்து கூடிடும் மேகங்களை “ பின்னிய மேகச்சடை” என்பான்
’எட்டயபுரம் தலப்பா கட்டி’.
பின்னிய மேகச்சடை காணக்கிடைத்தும் மழையை காணோமே என்ற தவித்த நிலை நகரத்தில்.
’நெஞ்சில் பால் வார்ப்பது போல’ என்று சொல்வார்கள். அப்படி பெய்தது நேற்றைய சென்னை மழை.

சுகம்.






.

Dec 21, 2016

சி.மணி ஒரு மேதை


ந.முத்துசாமி மிகவும் மதித்துப்போற்றும் படைப்பாளிகள் மௌனி, சி.மணி ஆகிய இருவர் தான். ஒரு தற்செயல் ஒற்றுமை மௌனியின் இயற்பெயர் கூட மணி!

இலக்கிய உலகில் முத்துசாமியின் உற்ற நண்பர் கவிஞர் சி.மணி தான்.
இளமைக் காலத்தில் பார்த்து பழகியவுடன் சி.மணி உலக அளவில் பிரபலமாகி நிச்சயம் நோபல் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக இன்றும் கூறுவார். அவருக்கு தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவேயில்லையே. 

சி.மணி ஒரு கவிதையில் அடக்கமாக எழுதினார்- ’நானொரு மினி மேதை.’
“ A great man is always willing to be little.” மணி ஒரு முழுமையான மகத்தான மேதை. 

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இண்டர் மீடியட் படிக்க சேர்ந்த போது மாணவ நண்பர் தாமோதரன் புருவத்தை உயர்த்தி சொல்லியிருக்கிறார்.”மூன்று பைத்தியங்கள் இங்கே வந்திருக்கின்றன.”
அந்த மூவர் சி.மணி, வி.து.சீனிவாசன், வெங்கடேசன்.
அன்று துவங்கிய நட்பு முத்துசாமி வாழ்நாளில் மறக்கமுடியாதபடி ஆகியிருக்கிறது.

சி.சு.செல்லப்பாவுக்கு சி.மணியின் நெடுங்கவிதைகள் பிடிக்கவேயில்லை.
க.நா.சு அப்போது சி.மணியின் கவிதைகளைப் பார்த்து உதட்டைப்பிதுக்கி விட்டார்.
உன்னத கவிஞன் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறான்.
1969ல் ”நடை” பத்திரிக்கை முதல் இதழில் சி.மணி சிறிய கவிதைகள் வே.மாலி என்ற புனைபெயரில் எழுதினார். ந.முத்துசாமியின் “காலம் காலமாக” நாடகம், ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகள் பிரசுரமாகியது.
நடை இதழ்களில் வே.மாலியாக சி.மணி கவிதை எழுதிய போது ஒரு வேடிக்கை. சி.மணியின் கவிதைகளை அலட்சியப்படுத்திய க.நா.சு வுக்கு வே.மாலியின் கவிதைகள் மிகவும் பிடித்துப்போய் விட்டது. “ யார்யா இந்த வே.மாலி. யார் இவன்? ரொம்ப நன்னா எழுதுறானே!” என்று விசாரித்திருக்கிறார்.
வெங்கட் சாமினாதன் அப்போது நண்பர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார்: ”சி.மணி தான் வே.மாலி என்கிற விஷயம் க.நா.சுவுக்குத் தெரிந்து விடக்கூடாது. தெரிந்தால் மாலியின் கவிதைகள் விஷயத்தில் பல்டி அடித்து விடுவார்!”

நான் 1983ம் ஆண்டு மார்ச் 27ந்தேதி க்ரியாவில் சி.மணியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று அங்கு அவருடன் எஸ்.வி.ராஜதுரையையும், க்ரியா ராமகிருஷ்ணனையும் சந்தித்தேன். புதையல் போல அங்கே இருந்த பழைய ’நடை’, ’கசடதபற’ ’பிரக்ஞை’ இதழ்களை வாங்கினேன். சி.மணியின் “ வரும் போகும்” கவிதைத் தொகுப்பு வாங்கிய போது சி.மணி அதில் கைழுத்திட்டு தந்தார்.
சி.மணி இன்று இல்லை. ஆனால் அவருடைய முக்கிய மொழிபெயர்ப்பு ஒன்று பற்றி சொல்ல வேண்டும்.
சுய மேம்பாடு பற்றிய தத்துவ விளக்கங்களை “ Fourth way” என விவரித்து குர்ஜீஃப்  (George Gurdjief) அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
 ”இந்த நான்காம் வழி”யை தன் பிரசங்கங்களிலும், எழுத்திலும் குர்ஜீஃப் சீடர் உஸ்பென்ஸ்கி ( P.D.Ouspensky) மேலெடுத்துச் சென்றார்

உஸ்பென்ஸ்கி மறைந்து பத்தாண்டுக்குப் பின் அவருடைய மாணவர்கள் 1957ம் ஆண்டு புத்தகமாக பிரசுரித்தார்கள்.
இந்த “Fourth Way” நூலை பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார் சி.மணி.
சேலத்தில் அவருடைய மனைவியிடம் இந்த மொழி பெயர்ப்பு இருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் ராயல்டி தொகை எதிர்பார்க்கிறார்.
இது உடனே தமிழில் புத்தகமாக வெளி வரவேண்டிய முக்கிய நூல். அந்த நூல் வெளியிடப்படுவது சி.மணிக்கு மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
சி.மணியின் உயிர்த்தெழுதலாக அந்த மொழிபெயர்ப்பு அமையும்.

.............................

Nov 30, 2016

முதலில் ‘ நடை’ அப்புறம் ’கசடதபற’


மனுஷ்யபுத்திரன் ’விகடன் தடம்’ அக்டோபர் இதழில்  "கவிதை பற்றிய பார்வைகள்" கட்டுரையில் ‘1970களில் வெளி வந்த ‘கசடதபற’ இதழ் நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் வழியே உருவாகி வந்த கவிஞர்களில் முதன்மையானவர் ஞானக்கூத்தன்.’ என்று எழுதியிருப்பதால் ஒன்றை சுட்டிக்காட்டுகிறேன்.

எழுத்து பத்திரிக்கையில் பிரசுர வாய்ப்புக்காக ஞானக்கூத்தன் ஐந்து கவிதைகளை சி.சு.செல்லப்பாவிடம் கொடுத்திருந்தார். கவிதைகள் பிரசுரிக்கப்படவேயில்லை. கவிதைகளில் இலக்கணம் இருக்கிறதாக சி.சு.செல்லப்பாவின் அபிப்ராயம்.

சி.மணி, ந.முத்துசாமி முயற்சியில் ’நடை’ பத்திரிக்கை கோ.கிருஷ்ணசாமியை ஆசிரியராகக் கொண்டு 1968ல் துவக்கப்பட்டது.

சி.சு.செல்லப்பாவிடம் இருந்த ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகளை ந.முத்துசாமி போய் வாங்கி வந்தார். 
மீட்கப்பட்ட(!) அந்த ஐந்து கவிதைகளும் ’நடை’ முதல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் நவீன தமிழ் இலக்கிய உலகில் ஞானக்கூத்தனுக்கு பிள்ளையார் சுழி.

அதன் பிறகு தான் 1970ல் ’கசடதபற’ பத்திரிக்கையில் ஞானக்கூத்தன் கவிதைகள் பிரசுரமாயின.
’நடை’ தான் கசடதபற இதழுக்கு முன்னரே நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ’நடை’ மூலம் ஞானக்கூத்தன் உருவாகி வந்தார். கசடதபற பங்களிப்பை மறுக்கவில்லை.
..........................
ஒரு நல்ல ஜோக்

பேராசிரியர் செ. ரவீந்திரன் ஆரம்ப காலத்தில் தன் பெயரை ’இரவீந்திரன்’ என்று தான் எழுதி வந்துள்ளார்.
’இ’ரவீந்திரன்.
ஒரு அமெரிக்க பெண் தமிழ் கற்றுக்கொள்ள மதுரை யுனிவர்சிட்டிக்கு வந்தவள்
இவர் பெயரை ” இரவு இந்திரன்” என்று உச்சரித்திருக்கிறாள்! அப்புறம் தான் தன் பெயரில் உள்ள ’இ’ யை ’நீக்கல்’ செய்து விட்டார்.

Feb 21, 2016

Not every friendship is meant to last a lifetime


’வால்மீகத்தில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்வார்கள், நட்பு கொண்டாடுவது லேசு – அதைப் பரிபாலனம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை’ என்று கி.ரா எங்கோ, எப்போதோ எழுதியிருந்தார்.

”புது சினேகம் என்பது சரியாக வேகாத சோறு போல” என்பார் தி.ஜானகிராமன்.

”நாய் கிட்ட கொஞ்சம் பழக ஆரம்பிச்சா மூஞ்சிய நக்குமாம்” – இது ’என் தங்கை’ படத்தில் வேலைக்காரியாக நடிக்கும் எம்.என்.ராஜம் பேசும் டயலாக். எம்.ஜி.ஆர், ஈ.வி.சரோஜா, நரசிம்ம பாரதி நடித்த படம் ’என் தங்கை’.

கூடா நட்பு என்பது கிடக்கட்டும்.
நல்ல நட்பு எல்லாம், நல்லவர்கள் நட்பு எல்லாம் கூட எப்படி எப்படியோ சிதைந்து போய் விடுகிறது.



கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் (’கசடதபற’ பத்திரிக்கைக் காலம்) ஞானக்கூத்தன் அறையில் ந.முத்துசாமி, அசோகமித்திரன், எஸ்.வைத்தீஸ்வரன் ஆகிய ஜாம்பவான்கள், இன்னும் பலரும் கூடி பேசுவது வழக்கம்.
ஞானக்கூத்தனும் ந.முத்துசாமியும் மாயவரத்திலேயே வகுப்புத் தோழர்கள். அசோகமித்திரனின் ’தண்ணீர்’ நாவலுக்கு முத்துசாமி சார் முன்னுரை எழுதியிருக்கிறார்.

வெங்கட் சாமிநாதன் “ ஜெயகாந்தன், கே.பாலசந்தர் இருவருமே பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சு” என்று எழுதியிருந்தார்.

ஒரே ஒரு முறை ஞானக்கூத்தன் அறைக்கு வந்த ஜெயகாந்தன் சீற்றத்துடன்
 “ வெங்கட் சாமிநாதன் என்ன பெரிய சுன்னியா?” என்று கொந்தளித்து விட்டுப் போய் விட்டார். அப்போது ந.முத்துசாமி அங்கு இல்லை. மறு நாள் அங்கு வந்த முத்துசாமி “என்னய்யா? அந்தாளு இப்படி இங்க வந்து பேசிட்டுப்போயிருக்காரு. இத தட்டிக்கேக்காம விட்டிட்டீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
 முத்துசாமி சாரின் ஆதங்கம் - ‘ஒரு ஸ்டார் வந்தவுன்ன எல்லாரும் விழுந்துட்டாங்க.. சாஸ்டாங்க நமஸ்காரமே பண்ணிட்டாங்க!’

இதில் ஆரம்பித்த Polimics! சங்கிலியாய் தொடர்ந்த கடும் சர்ச்சையில் வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், ந.முத்துசாமிக்கு இடையிலான நல்ல நட்பு முற்றிலுமாக அன்று முறிந்து போய் விட்டது.

என்ன? ஏது என்பதெல்லாம் முத்துசாமி சாருக்கு இன்று ஞாபகம் இல்லை.



சில வருடங்களுக்கு முன் வெ.சா.வின் மனைவி இறந்த விஷயத்தைக்கூட தனக்குச் சொல்லவில்லை என்று முத்துசாமி வருத்தப்பட்டார்.
செல்லப்பாவின் ’எழுத்து’பத்திரிக்கையில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகள் மூலம் தான் ’நாடகம்’ பற்றிய தெளிவு தனக்கு ஏற்பட்டதாக  இப்போதும் சொல்பவர் முத்துசாமி.

 இப்போது சமீபத்தில் சென்ற நவம்பரில் வெங்கட் சாமிநாதன் மறைந்த போது கூத்துப்பட்டறையில் டிசம்பர் மாதம் ஒரு இரங்கல் கூட்டத்திற்கு முத்துசாமி சார் ஏற்பாடு செய்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணன் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால் சென்னை வெள்ளத்தில் இந்த இரங்கல் கூட்டமும் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. கூட்டம் நடத்தமுடியாமல் போனதில் முத்துசாமி சாருக்கு மிகவும் வருத்தம்.
Not every friendship is meant to last a lifetime. What does 
last forever is the pain when that person is gone.

’அசோகமித்திரனுடன் சமாதானமாகப்போக வழியில்லையா?’ என்று ஏக்கத்துடன் முத்துசாமி சாரிடம் கேட்டேன்.
முத்துசாமி சார் பதில் ’நாங்க இப்ப என்ன சண்டையா போட்டுகிட்டிருக்கோம்? நட்பு கெட்டுப்போச்சி… பேச்சு வார்த்தை கிடையாது.. அவ்வளவு தான்.’
………………………….



’நடை’ பத்திரிக்கை 1960களின் கடைசியில் சி.மணி செலவு செய்து நடத்தினார். மிக பிரமாதமான வடிவில் வெளி வந்தது. முத்துசாமி சாரின் ‘காலம் காலமாக’ நாடகம் 1969ல் நடையில் தான் பிரசுரமானது.
 எட்டு இதழ்கள் தான் வந்தது.
 நடை எட்டாவது இதழில் இதழின் வெற்றுத்தாள்களை நிரப்ப அந்த நேரத்தில் ஏதோ ஒரு content ஐ போட்டார் முத்துசாமி. வி.து.சீனிவாசன் எப்படி இந்த மாதிரி செய்யலாம் என்று பிரச்னையை கிளப்பி விட்டார்.
சி. மணி நடை பத்திரிக்கையையே நிறுத்தி விட்டார்.
சி.மணி இறக்கும் வரை முத்துசாமியுடன் நட்பு நீடித்திருக்கிறது.
.......................


27.03.1983ல் க்ரியாவில் ’நடை’ இதழ்களின் பழைய நான்கு பிரதி, ’கசடதபற’ ஒரு ஐந்து பிரதிகள் விலைக்கு கிடைத்தது. அன்று அங்கு எஸ்.வி.ராஜதுரை, சி.மணி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தேன். சி.மணி தன்னுடைய ‘வரும் போகும்’ கவிதைத்தொகுப்பில் கையெழுத்திட்டு தந்தார்.

2003ல்திருச்சியில் இருந்து திருப்பூருக்கு போக நேர்ந்த போது ‘ பார்த்துப் பார்த்து சேர்த்திருந்ததெல்லாம் கழுதைப்பொதியாக சேர்ந்திருக்க, லக்கேஜை குறைக்க வீட்டின் கொல்லையில் பழைய கணையாழி, நடை, கசடதபற, ஞானரதம், ’மேலும்’ இதழ்களையெல்லாம் கொல்லைப்புறத்தில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் ஜாமான்கள் ஏற்றிய வேனில் குடும்பத்துடன் கிளம்பினேன். திரும்பிப்பார்த்தால் இலக்கிய இதழ்கள் எல்லாம் குழந்தைகள் போல ”எங்களை விட்டு விட்டுப்போகிறாயே” என்று கதறுவது போல காதில் கேட்குமே.
Sometimes you have to let go of what you can't live without.

சென்னைக்கு சென்ற செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் வர நேர்ந்த போது ஒரு ஆயிரம் புத்தகங்கள்,
காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த இரண்டு சூட்கேஸில் இருந்த நூற்றுக்கணக்கான கர்னாடக சங்கீத, இந்துஸ்தானி சங்கீத இசை கேசட்கள் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு கிளம்ப நேர்ந்து விட்டது.( " தேர்ந்த இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர் ராஜநாயஹம்” என்று கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி’பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்.)

You never really know a man until you stand in his shoes and walks around in them
- a popular quote of Atticus in " To kill a mocking Bird "
( 1962 movie)


க. நா.சு சொல்வது போல “எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.”

……………………………………………………………………

 http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_13.html

Feb 14, 2016

தோள்முனைத் தொங்கல்

சீமந்த புத்ரம் என்றால் என்ன? வளைகாப்பு சீமந்தம் பெறும் குழந்தை தான் சீமந்த புத்ரன். வளைகாப்பு என்பது தலைச்சன் குழந்தைக்குத் தான் நடக்கும். அதனால் பெற்றவர்க்கு முதல் குழந்தை சீமந்த புத்ரன் அல்லது சீமந்த புத்ரி!


 நான் ஒரு சீமந்த புத்ரன்!

......................................



”மனிதன் இழுக்கும் மாமிச வண்டியில் குதிரை கிடந்து ஹை .. ஹை என்றது” - இந்த கவிதை எஸ்.வைத்தீஸ்வரன் எழுதியது. வைத்தீஸ்வரனின் தாயார் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தங்கை.

...........................................


”வரும் போகும்” என்று நெடுங்கவிதை எழுதிய மேதை சி.மணி ஒரு தடவை ’லிக்கர்’ என்று நினைத்து டெட்டாலை எடுத்து குடித்து விட்டார்.


”பண்டிதன் எழுதுவதுதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;அ
பண்டிதன் எழுதுவதுதமிழ் இல்லை;இ
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எழுத.” -சி.மணி கவிதை.
”என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன் என்ன செய்வதென்றால்
என்றான் பெரியசாமி.கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னையில்லை;
மற்ற நேரம் நடக்கும்போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தாங்காத
உறுத்தல் வடிவம் தொல்லை என்றேன்.
கையக் காலாக்கென்றான்.” இதுவும் சி.மணியின் கவிதையே தான். தலைப்பு “ தீர்வு”

.......................................

டாக்டர் ராஜா எம்.பி.பி.எஸ் எழுதிய கீழ்கண்ட கவிதையின் ஆன்ம விடுதலை, நிறைந்த அன்பு, முழுமையான வேதனைத்துயர்.


“ எண்ணெய் ப் பற்றி எரியும் தீயால்
பிடித்தவர்களையும் பிடித்தவற்றையும்
பற்றிக்கொண்டிருக்கிறேன்
தீவிரமாய்.
விடுபடும் வேட்கையில்
நெளிகிறது ஒரு நெருப்புச்சுடர்”