Share

Showing posts with label எஸ்.பி.பாலசுப்ரமண்யம். Show all posts
Showing posts with label எஸ்.பி.பாலசுப்ரமண்யம். Show all posts

Jun 17, 2018

பாட்டுல டயலாக்


நல்ல போதையில் ஒருவர். பொது இடம். ஒரு பாடல் கேட்கும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
’ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
ஆடிப்பாடுங்கள் இன்றாவது’
பாடலை போதைக்காரர் காது கொடுத்து நன்கு கவனித்து கேட்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
இந்த மாதிரி ஆட்கள் எப்படியும் எப்போதும் ஏதேனும் ஒரு வகையில் react செய்வார்கள். நான் நின்று அவர் கவனிக்காத வகையில் அவரை கவனிக்க ஆரம்பித்தேன்.
பாடலின் ஒவ்வொரு சரண முடிவில் எஸ்.பி.பி தத்துவமாக டயலாக் சொல்கிறார். ரொம்ப நெனப்போடு அந்த டயலாக்குகள்.
’நாம் பிறந்த மண்’ படத்தில் கமல் கூட ரொம்ப ஓவர் நெனப்போடு தான் பாடலின் டயலாக்குகளுக்கு நடித்திருப்பார் என்பது நினைவுக்கு வந்தது.
’கட்டிடம் ஜொலிக்கிறது..அஸ்திவாரம் அழுகிறது.’
’இன்பங்கள் தூங்குவதில்லை.. துன்பங்களும் அப்படித்தான்’
அப்படி இரு சரண முடிவில் டயலாக் வரும்போதும் குடிகாரர் முகம் சுளித்து ‘ச்சே’ என்பதாக தலையை உதறினார்.
மூன்றாவது சரணம் முடியும் போது டயலாக்
’உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்’
உடனே போதைக்காரர் ஒரு கூப்பாடு போட்டார்
“உழுதவர்கள் ஒழ்க்கிறார்கள். ஒங்கள குனிய வச்சு தள்ளுவார்கள்.
அறுத்தவர்கள் புழுத்துவார்கள். பாடச்சொன்னா ஒழுங்கா பாட்ட பாடுங்கடா.. ஏண்டா தேவையில்லாம பேசிறீங்க. பெரிய தத்துவப்புழுத்திங்க..”
Children, fools and drunkards have a beautiful vision.
………………….
மதுரையில் ஒரு சினிமா பாடல் கச்சேரி. பாடகர் ”தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று பாட ஆரம்பித்தார்.
தோரணையெல்லாம் சிவாஜி பாணியில். ஏதோ அந்தப்பாடலை அந்த மேடைப்பாடகரே எழுதி இசையமைத்து பாடுவதாக ஒரு பெருமிதமான அங்க சேஷ்டைகள்.
“உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன” என்று இரண்டு விரல் நீட்டி கையை ஆட்டிக்காட்டி டயலாக் சொன்னார்.
ஏற்கனவே ஏதாவது உடைசல் கொடுக்கும் முடிவில் முன்னால் நின்று கொண்டிருந்த குருவி மண்டையன் உடனே ஒரு கூப்பாடு போட்டான் “ அவை இரண்டும் கருத்தக்கண்ணு கசாப்புக்கடையில் அறுக்கப்பட்டு விட்டன”
.................................

கஜல், சூஃபி பாடல்களில் இடையிடையே பேசுவதை கேட்பதற்கு எவ்வளவு இதமாக, பாந்தமாக இருக்கிறது. பாடல்களுக்கு இடையே பேசுவதற்கு ஒரு நேர்த்தியான இயல்பு தன்மை இருக்கிறது.
............

Nov 16, 2015

வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா?



ஆறாது ஆறாது அழுதாலும் தீராது என்று பெருந்துயரங்களால் அலைக்கழிக்கப்படும்போதும் ஏதோசில விஷயங்கள் கவனம்பெற்று விடுகின்றன. நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்.



கண்ணம்மா கனவில்லையா?
கண்களில் சுகமில்லையா?
என்னம்மா பொழுதில்லையா?
மனம் தன்னில் எந்தன் தொல்லையா?
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா?
வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா?



இப்படி ஒரு பாடல் எஸ்.பி.பி பாடியிருக்கிறார் என்பதே ஆனந்த் அரவிந்தக்‌ஷ்ன் Airtel Supersinger நிகழ்ச்சியில் பாடிய போது தான் தெரியவந்தது. விஷ்வதுளசி என்று ஒரு படம் 2004ம் ஆண்டு வந்தது என்பது கூட அப்போது தான் தெரிந்தது.இந்தப் படத்தில் மம்முட்டி, நந்தித்தா தாஸ் நடித்திருப்பது, எம்.எஸ்.வி இந்தப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதும் இந்தப்படத்தில் இளையராஜாவும் இசையமைத்திருப்பதையும் கூட பின்னர் அறிய நேர்ந்தது. இந்தப்படத்தை சுமதி ராம் என்ற பெண்மணி இயக்கியிருக்கிறார்.

விஷ்வதுளசி ’இந்து’ ஆங்கிலப்பத்திரிக்கை விமரிசனம். படத்தின் மற்ற பாடல்கள் பற்றி சிலாகித்து விட்டு, இந்தப்பாடலைப்பற்றி ஒரு வரி கூட அதில் அன்று (Oct 29, 2004) குறிப்பிடப்படவில்லை!

எஸ்.பி.பி இந்தப்பாடலை எழுதியவர் காமகோடியன் என்று நினைவுப்பிசகாக சொல்லியிருப்பார் போல. விஷ்வதுளசியை இயக்கிய சுமதியே தான் இந்தப்பாடலை எழுதியவர் என்றும் சொல்லப்படுகிறது.


அரவிந்தக்‌ஷன் “ நிலவே என்னிடம் நெருங்காதே! நீ நெருங்கும் நிலையில் நான் இல்லை” பாடலை பாடியபோது கவனத்துக்கு வந்தார். இப்போது இந்தப்பாடல் மூலம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டார்.



கண்ணம்மா கனவில்லையா?


எஸ்.பி.பி வார்த்தைகள் : You brought back a music to me. நீங்க பாடுன மாதிரி நான் கூட பாடல தம்பி!
பாலு கண் கலங்கி கண்ணீர் விட்ட போது எவ்வளவு பேர் விம்மியிருப்பார்கள்.
எப்பேர்ப்பட்ட பரந்த மனசு! A great man is always willing to be little.
இதில் நிச்சயம் ட்ராமா இல்லை..

”நான் இந்தப்பாட்ட  ஸ்டேஜ்ல பாடுனதேயில்ல.. பயம்!” என்று ஒரு குழந்தை போல பாலு சொன்னார்.

அரவிந்தக்‌ஷனிடம் “ You have such a romantic voice, you bloody fellow!"

இசையமைத்த எம்.எஸ்.வி பற்றி “ அந்த பெரிய ஆத்மாவோட நான் வேலை செய்ய என்ன புண்ணியம் செய்திருக்கனும். அவரு ’தம்பி..இந்தப்பாட்டு நல்லா Depth குடுத்து நீ அனுபவிச்சி பாடனும்.. ’ன்னு சொன்னார்.”
சத் குரு!

அன்று ‘ வான் நிலா, நிலா அல்ல, உன் வாலிபம் நிலா’ எஸ்.பி.பி பாடிக்கேட்க வாய்த்தது. அவரை இனி பாராட்ட என்ன இருக்கிறது?
.... ஸ்வர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்!


எம்.எஸ்.வி .. அவர் வாய் விட்டு சிரிப்பது.. குழந்தை போல அழுவது... முகம் சுண்டி கோபப்படுவது, சிடு சிடு என்று பேசுவது... எல்லாம் என் நினைவில் நிழலாடுகிறது.


எம்.எஸ்.வி.. எஸ்.பி.பி...
எந்தரோ மஹானுபாவலு
அந்தரிக்கி வந்தனமு

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_291.html

................................