Share

Showing posts with label ஆத்மாநாம். Show all posts
Showing posts with label ஆத்மாநாம். Show all posts

Jul 13, 2019

இரங்கல் எப்போதும் அபத்தம்


கீட்ஸ் மறைந்த போது ஷெல்லி அதிர்ந்து போனான். அடுத்த வருடமே அவனும் மறையப்போகிறான் என்பது பெருந்துயரம். அதை அறியாமலே கீட்ஸ் பற்றி கதறி ஒரு இரங்கல் கவிதை எழுதினான்.
ஒவ்வொரு பேராவிலும் புலம்பினான்.
A lengthy elegy.

I weep for Adonais – he is dead!
Oh weep for Adonais…
Most musical of mournars, weep anew…
Thy youngest, dearest one has perished..
He will awake no more, oh, never more..
Ah, woe is me..
Grief returns with the revolving year…

கீட்ஸ் இருபத்தாறு வயதை கடக்கு முன் எலும்புருக்கி நோயால்.

ஷெல்லி முப்பது வயது நிறையுமுன் கடலில் மூழ்கி.
உடல் எரியூட்டப்பட்ட போது
பைரன் அங்கே இருந்தார்.


ஆத்மாநாமுக்கு இளைய வயதில் கிணற்றுக்குள் ஏற்பட்ட துர்மரணம் எல்லோரையும் அதிர வைத்த ஒன்று. 

Both Shelley and Athmanam were born to be drowned.


’என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்கமுடியாது’ என்பது ஆத்மாநாமின் சூளுரை. உயிரோடு இன்று இருந்திருந்தால் அந்த கவிஞனின் பேனா எத்தனையோ ஓவியங்களான கவிதைகளை எழுதியிருக்கும். முப்பத்து மூன்று வயது அற்பாயுள்.
’எதிர்த்து வரும் அலைகளுடன் நான் பேசுவதில்லை.
எனக்கு தெரியும் அதன் குணம்.
பேசாமல்
ஒதுங்கி வழி விட்டு ஒதுங்கி விடுவேன்
நமக்கு ஏன் ஆபத்து என்று
மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை
அவை மிதந்து செல்லும்
எனக்கு படகாக’
– ஆத்மாநாம் நம்பிக்கை
ந.முத்துசாமியின் நண்பர் சி.மணி எழுதிய ஆத்மாநாம் இரங்கல் கவிதை கீழே.

அடக்கம்
ஆத்மாநாம்,
நீ தான் முக்கியம் எனக்கு,
உன் கவிதைகளை விட. இவை
எப்போதும் இருக்கும்; ஆனால்
உனக்கு பதிலியாகாது. இவற்றோடு
பழகுவதும் வேறுவகை.
உன் கவிதைகளை விட
உன் வாழ்க்கைப் போராட்டங்கள்
உக்கிரமானவை.
கவிதையில் மூழ்கிய மாதிரி
கிணற்றில் குதித்து மூழ்கினாய்.
ஒரு வித்தியாசம்,
இவை இரண்டும்
வெவ்வேறு அடக்கம்.
..............

Aug 22, 2012

கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்

 Aug 1,2008

   Rimbaud.PNG

ETERNITY

It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!

பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான். குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன். 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன்.
ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான். Baby of the poets!26 வயதிற்குள் இவன் வாழ்வே முடிந்துவிட்டது .
இங்கே தமிழில்" ஆடு புழுக்கை போடுவது போல அப்பப்ப மொத்தம் மொத்தமா தொடர்ந்து போடும்"கவிஞர்கள் எப்போ நிறுத்தபோறான்களோ?

பால் பருவத்தில் எழுதுவதாக பூரித்து புளகாங்கிதமடையும் மடையன் எல்லாம்
ரைம்போ,கீட்ஸ் பற்றி எப்போ தான் தெரிந்துகொள்ளபோறான்?
"நான் இருக்கேனே பல விதமான கற்பனையை அப்படியே மனசில அமுக்கி வச்சுகிட்டு
தவிக்கிறேன்யா. அதையெல்லாம் எடுத்து வெளியே விட வேண்டாம?"னு
அல்லாடுறான்களே். சான்ஸே இல்ல!

Shit!புழுக்கையை போட்டுக்கங்க.என்னை எதுக்குடா  மோந்து பாக்க சொல்றீங்க?

...................

Aug 27, 2008


ரைம்போவும் ஆத்மாநாமும்



'One evening, I took “Beauty” in my arms.
I found her bitter and I insulted her'
- Arthur Rimbaud
in “ A season in Hell”


நாகார்ஜுனன் Blog ல் ஒரு சின்ன சுவாரசியமான விவாதம்

"நரகத்தில் ஒரு பருவம் - ஆர்தர் ரைம்போ - 1"
2 Comments -

ஆர். பி. ராஜநாயஹம் said...

"ஒரு மாலை "அழகு" என் கையில் அமர்ந்தாள். அவள் கசப்பாய் இருக்கக் கண்டேன். அவளை அவமானப் படுத்தினேன்" என்ற ரைம்போவின் வரிகள் ஒருவேளை ஆத்மாநாமுக்கு inspiration-ஆக இருந்திருக்கலாம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. கவனிக்க: நான் ஆத்மாநாம் காப்பியடித்ததாகச் சொல்லவில்லை. வரிகள் ஏறக்குறைய இவைதாம்: "கடவுளைப் பார்த்தேன். எதுவும் கேட்கத் தோன்றவில்லை. புன்னகைத்தார். போய்விட்டார்."
26-Aug-2008 12:59:00

நாகார்ஜுனன் said...

சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. ஆத்மாநாம் வரிகள் நான் வாசித்தவைதாம். ஆனால் ரைம்போவைத் தமிழாக்கும்போது உறைக்கவில்லை. அந்த அளவு போதலேரும் ரைம்போவும் புதுக்கவிதைக்குள் நுழைந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது...
26-Aug-2008 13:04:00
..............
Sep 28,2009

வைகறை

நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்தர் ரைம்போ கவிதைகளில் ஒன்று.
ரைம்போ வைகறையை கனவிலும் கண்டிருக்கிறான்!
'' முத்தமிட்டேன் வேனில் வைகறையை "சூரியன் உதயமாவதற்கு முன் அந்த அதிகாலை வைகறை.
"இறந்து கிடந்தது நீர் " அப்போது .
'தன் பெயரை இயம்பிய மலர்' பற்றி ரைம்போ குறிப்பிடுகிறான்.
" அவளை(வைகறையை ) சேவலிடம் காட்டிக்கொடுத்தேன் " (அப்புறம் தான் 'அடடே அப்படியா. நல்லவேளை!கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேனே' சுதாரித்து சேவல் கூவியிருக்கும்! "கொக்கரக்கோ")

குழந்தை சேக்ஸ்பியர் ரைம்போ ''கண்விழிக்க ஆனது உச்சிப் பொழுது."கனவில் வைகறை. யதார்த்தம் உச்சிப் பொழுது. அதனால் தான இருபது வயதை எட்டியவுடன் கவிதை எழுதுவதையே நிறுத்தி விட்டான் போலும்!


வைகறையில் இருட்டு பிரிந்து சூரிய உதயம் செய்யும் எழுச்சி விந்தையை பாரதி குயில் பாட்டில் விவரிக்கிறான் :
"புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி மண்ணைத்தெளிவாக்கி,நீரில் மலர்ச்சி தந்து
( இறந்து கிடந்த நீருக்கு மலர்ச்சி!)
விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் சோதி.. "

பாரதி " வைகறையின் செம்மை இனிது " என்று ரசித்து வசன கவிதையில் சொன்னவன் அல்லவா!


சூரிய வெளிச்சம் இருட்டிய பூமி மீது விழுகிற கணங்களை பிரமிள் தன் படிமங்கள் கொண்டு படம் பிடிக்கிற அழகு அபூர்வமானது.
" பூமித்தோலில் அழகுத் தேமல் "
" பரிதி புணர்ந்து படரும் விந்து "
"கதிர்கள் கமழ்ந்து விரியும் பூ "
" இருளின் சிறகைத் தின்னும் கிருமி "
"வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி "
.......................................................


http://thisrecording.com/storage/poetpc.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1260396218576




Dec 26, 2009


A life full of sweet stupidities!


One of the first truly dissent voices to emerge in French poetry.

The poet who stopped writing poetry!

ரைம்போ - A White nigger.

"My life was nothing but sweet stupidities! "

"Ah! To return to life! To stare at our deformities. "ஆர்தர் ரைம்போ முழங்காலில் புற்று நோயால் 37வயதில் இறந்த பின் தான் அவன் சகோதரி இசபெல் ஒரு உண்மையை அறிய நேர்ந்தது. தன் சகோதரன் ஒரு கவிஞன் என்பதை அவள் ரைம்போவின் மரணத்தில் தான் தெரிந்து கொண்டாள். 
 

ரைம்போ சிறுவனாக இருக்கும்போதே ஊர் சுற்றக்கிளம்பிய Boy genius! An infant Shakespeare! Baby of the French poets!உடல் இச்சையை மறுத்த கிறிஸ்துவத்தை வெறுத்தவன். தன் பெற்றோரை வெறுத்தவன்.
“You,my parents, have ruined my life, and your own.”

   


பிரஞ்சு கவிஞன் வெர்லைன் தன் கருவுற்ற மனைவி பாரிசில் தன் தகப்பன் வீட்டுக்கு சென்ற போது ரைம்போ வை தன்னுடன் வாழ அழைத்தான். அப்போது ரைம்போவுக்கு 17வயது .வெர்லைன் 27 வயது இளைஞன். அதன் பின் இருவரும் காதலர்கள் ஆகி விட்டார்கள். வெர்லைன் தன் மனைவியை திட்ட ஆரம்பித்தான்.
The devastating love affair of Verlaine and Rimbaud...
there were reestablishing of cordial relations and partings with wife Mathilde and Partings and reconciliations with Rimbaud.
சுருக்கமாக சொன்னால் வெர்லைன் தாம்பத்தியம் ஒரு சர்க்கஸ் போல ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் வெர்லைன் துப்பாக்கியால் ரைம்போவை சுட்டு விட்டு ஜெயிலுக்கு போனான்.




ரைம்போவின் Bad Blood


“Does this farce has no end?
My innocence is enough to make me cry. Life is the farce we all must play.”

"Where we are going? To battle? I am weak!
The others go on ahead..tools...weapons..
give me time."
"Fire! Fire at me! Here! Or I 'll give myself up!
..Cowards! I will kill myself. I'll throw myself beneath the horses hooves! Ah!
I ll get used to it.
That would be the French way, the path of honor! "




Night in Hell
I will tear the veils from every mystery...
mysteries of religion or of nature, death, birth,the future,the past,
cosmogony and nothingness,
I am a master of Phantasmagoria.


இறந்து கிட்டத்தட்ட 80வருடங்களுக்குப் பின் ஆர்தர் ரைம்போ 1968ல் பிரஞ்சு கலகக்கார மாணவர்களால் வழி பாட்டுக்குரிய புரட்சிக்காரனாக ஏற்றி உயர்த்தப் பட்டான்.

ஆர்தர் ரைம்போவாக லியோனார்டோ டி கேப்ரியோ நடித்து
Total Eclipse என்ற படம் 1995 ல் வெளிவந்திருக்கிறது. ரைம்போ-வெர்லைன் இருவருக்கிடையேயான வன்மையான உணர்வுப்பூர்வமான ஓரின உறவைப் பற்றிய படம்.




 http://images5.fanpop.com/image/photos/26000000/Leo-as-Arthur-Rimbaud-in-Total-Eclipse-leonardo-dicaprio-26095950-1066-580.jpg

Sep 11, 2009

ஹைக்கு

ஹைக்கு கவிதைகளை அந்த காலத்தில் ஆடு புழுக்கை மொத்தமாக போடுவது போல நிறைய பேர் மொத்த மொத்தமாக போட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.
பொதுவாகவே கவிதை என்று எப்போதும் ஆடு புழுக்கை போடுவது போல தான் இப்போது கூட மொத்த மொத்தமாக பலரும் போடுகிறார்கள் என்பது வாஸ்தவம் தான். பல கவிதை தொகுப்புகளை பார்க்க நிர்பந்தம் ஏற்படும்போதெல்லாம் 'ஆட்டுபுழுக்கைகள்' ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் ஏனோ சுய தரிசனமாக, சுய விமரிசனமாக 'ஆட்டு புழுக்கைகள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு கூட இன்று வரை வெளியானதில்லை.
ஹைக்கு சில பல நல்ல படி தேறியிருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன் கணையாழியில்( ஆகஸ்ட் 1969) சந்திரலேகாவின் ஹைக்கு கவிதைகள் இரண்டு :
1. தென்னை ஆடுகையில்
தேங்காய்க்குள்ளே
சிற்றலை நெளியுமோ ?
2 . செங்கிரீடம், ராஜ கம்பீரம்
சேவல் ஏறுது குப்பை மேட்டில் .
......
ஆத்மாநாமின் இந்த கவிதை ஹைக்கு தானா ? அல்லது ஹைக்கு நான்கு வரியில் வரக்கூடாதோ?
எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின் பற்றாது
வண்ணத்துப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன
..
ராஜ சுந்தரராஜன் ஹைக்கு கவிதை . தலைப்பு 'விட்ட குறை '.
மண் மீது ஒரு பறவைப் பிணம்
மல்லாந்து நோக்குது
வானை .
இவருடைய ' பரஸ்பர ஆதாயம் ' கவிதை
காக்கைகள் கொத்த
எருமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்

Mar 26, 2009

குழந்தை ஒன்று , நிலா ஒன்று


யாராவது உங்களிடம் 'குழந்தை' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் . 'நிலா ' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

'அட போய்யா ? ஏதாவது புதுமையா சொல்லுயா ..' என்று கொட்டாவி விடுவீர்கள் .
ஆனால்
கீழே இரண்டு கவிதைகள் . குழந்தை பற்றி , நிலா பற்றி ஜோரா அசத்தலா எழுதப்பட்டுள்ளவை .

..

புத்தம் புதிய
என் பேனாவை
ஒரு குழந்தையிடம் கொடுத்தேன் .
ஒரு கோட்டோவியம்
ஒரு கவிதை
ஒரு காவியம் எழுதி
என்னைப்பார்த்து சிரித்தது .
அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட படைப்பு
என்னை அழைத்தது

- ஆத்மாநாம்


..

அபூர்வ கனி
நீர்க்கரை மரக்கிளையில் முழு நிலா
அபூர்வமான கனி
நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன் .
உனக்கென நான் அதை
அள்ளி வரத்தான் முடியவில்லை .

-தேவதேவன்


Sep 19, 2008

காலமும் நேரமும் மரணமும்

சில்வியா பிளாத் எழுதிய அற்புத நாவல் The Bell Jar. இந்த நாவலை அவள் பெயரை தன் புனை பெயராக்கி சில்வியா வாக அறியப்பட்ட எம். டி . முத்து குமார சுவாமி இந்த நாவலை தமிழ் படுத்தினால் பலரும் படிக்கலாமே . சில்வியா பிளாத் பற்றி விரிவாக அவர் ஏதேனும் எழுதியிருக்கிறாரா தெரிய வில்லை .
'பிறந்த நாள் பரிசு ' கவிதையில் அவள் ' இந்த வருடம் என் பிறந்த நாளுக்கு பெரிதாய் பரிசு எதுவும் வேண்டாம் . ஏன்னா , நான் உயிரோடு இருப்பதே விபத்து மாதிரி தற்செயல் தான் ' என்று சலித்து போய் சொல்கிறாள் .
தாய்மை உணர்வை மரணத்தின் போதும் காட்டியவள் . தூங்கும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உறுதி செய்து விட்டு , குழந்தைகளை நனைந்த துணிகளாலும் , ஈரமான துண்டுகளாலும் நன்கு மூடி விட்டு அடுத்த அறையில் எரிவாயு திறந்து விட்டு அதன் பின்னரே அடுப்பில் தலை யை விட்டாள் சில்வியா பிளாத்.
அவள் நாவல் நாயகி எஸ்தர் கூட தற்கொலைக்கு முயல்பவள் தான் . அவள் தன்னிடம் திட்டங்கள் எதுவும் இல்லை . தனக்கு எதுவும் தெரியாது என உணர்கிறாள் . அமேசான் ஓட்டல் கூரையில் ஏறி தன் ஆடை யை துண்டு துண்டாக கிழித்து வீசுகிறாள் .
தற்கொலை செய்து கொள்ளும் மன நிலை !
ஏன் ?
ஆத்மாநாம் !

விபத்துக்கள் ஏன் ?

ஆதவன் அப்படி நிஜமாகவே கால வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது ஏன் ?
ஆதவன் நீரில் மூழ்கி விபத்தில் மறையாமல் உயிரோடு இப்போது இருந்தால் .. அந்த காகித மலர்கள் , என் பெயர் ராம சேஷன் , அந்த அற்புதமான சிறுகதைகள் . ..
இன்னும் என்னவெல்லாம் சாதித்திருப்பார் . என்னை அதிகம் பாதித்த விஷயங்களில் ஆதவன் மரணமும் ஒன்று . இருபத்தொரு வருஷமாகி விட்டது இன்று .
ஆதவனே போய்விட்டார் .
ஜெய காந்தன் இப்படி இவர் மாதிரி நாற்பதுகளில் போயிருந்தால் அவருக்கு எவ்வளவோ நல்ல பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கும் .பாரதிக்கு கிடைத்த மரியாதை .
A useless life is an early death -கதே சொன்னான்.
46 வயதுக்கு மேல் சாதிக்க நிறைய ஆதவனுக்கு இருந்தது. ஆனால் அப்படி ஜெயகாந்தனுக்கு என்ன இருந்தது?எதுவுமே இல்லை என்பதை காலம் காட்டிவிட்டது .எழுத்தை பொறுத்த வரை இலக்கிய உலகின் அசுர குழந்தைக்கு பால்ய யோகம் தான் . ஜெயகாந்தனுடைய வாழ்வின் விருத்தாப்பியம் ,பின்பகுதி நிறமிழந்த ஒன்று . அபத்தமானதும் கூட .அந்திம காலம் அசிங்கமாவது பெரிய சோகம் .

பலர் தாமதமாகவும் சிலர் வெகு சீக்கிரமாகவும் மரணமடைகிறார்கள். சித்தாத்தங்கள்வித்தியாசமாகஒலிக்கின்றன.’சரியான சமயத்தில் செத்துப் போ!’
One should die proudly when it is no longer possible to live proudly.
- Nietzsche


ஆனால் ஒன்று நிச்சயம்.ஜெயகாந்தன் கொடியவர் அல்ல, அயோக்கியன்,பித்தலாட்டகாரன் அல்ல ஜெயமோகன் போல. அவருடைய நேர்மைக்கு,உண்மைக்கு, அந்தக்கால பராக்கிரமத்துக்கு, வீரத்துக்கு ஜெயமோகன் கால் தூசு பெறக்கூடிய ஆள் அல்ல. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் . Hyperion To A Satyr!

 ஸ்தாபன காங்கிரஸ் கூட்டத்தில் பேச ஜெயகாந்தன் வருகிறார்.
கூட்டத்தில் ஜெயகாந்தனின் பேச்சு பிரமிக்க அடிக்கிறது. ‘ஏண்டா நீங்க திறந்து விட்டா நாங்க குடிக்கனும். நீங்க திடீர்னு மூடிட்டா உடனே நாங்க காந்தியாயிடனுமா?’ என்று கருணாநிதி அரசை எதிர்த்து முழங்கினார். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் அது. மேடையில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு நடுவே சிவாஜி கணேசனின் படத்தை வைத்திருந்தார்கள்.

‘இது யாரு? தேசப் பிதா. அது யாரு ? கர்ம வீரர் காலா காந்தி நடுவிலே யாருடா இது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சைத்தானை வளர்த்தார்கள். அது சில குட்டிச் சாத்தான்களை சேர்த்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது. ஸ்தாபன காங்கிரஸிலும் நீங்கள் ஒரு சைத்தானை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று துணிச்சலுடன் பகிரஙகமாக ஜெயகாந்தன் சிங்கம்போல கர்ஜித்தார்.