Share

Showing posts with label எம்.ஜி.ஆர். Show all posts
Showing posts with label எம்.ஜி.ஆர். Show all posts

Dec 18, 2020

எடப்பாடிக்கு சிரித்த முகம்

 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிரித்த முகம். 

  சரி. 


எம்.ஜி.ஆர் மீது சரோஜாதேவிக்கு 

ஏதேனும் கோபம் இருக்குமோ? என்னவோ? 

கோபம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? 

அதை இவ்வளவு நாள் கழித்து இப்படி காட்டவேண்டுமா? 

எம்.ஜி.ஆர் மாதிரியே தான்                                                                                         எடப்பாடி கூட சிரிக்கிறாராம்.


MEMORY DISORDER?


எம்.ஜி.ஆர் சிரிப்பு பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்வி பதிலில் -  ”ஒரு குழந்தை முன் பல புகைப் படங்களைப் போட்டுப்பாருங்கள். அந்த்க் குழந்தை எம்.ஜி.ஆர் படத்தைத் தான் எடுக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”


M.G.R's Beaming Smile!


மீள் பதிவு 2018 

May 2, 2020

குட்டி தமிழ்வாணன்


ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது.
ஒரு கை கிடையாது. இப்படி.

பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.
’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.

எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.

கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?
தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

Worst Arrogance. Thinking too much of oneself.
Superiority complex.
அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.
‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.
தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.
The advise you tell others is the advice you need to follow.
இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.
’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர் ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.
தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.
அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .
அடுத்த கண்ண தாசன் இதழில்
மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை
எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

Dec 13, 2019

ஏன்டா? ஏன்?

காலை உணவு தாமதமாகிறது.
முதல்வர் கோட்டைக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருக்கிறார்.
அசெம்ப்ளி நடந்து கொண்டிருக்கிறதா?
அல்லது கவர்னரை சந்திக்க வேண்டியிருந்ததோ? மந்திரி சபை முக்கிய ஆலோசனை அன்று காலையில்?
ஒரு வேளை அன்று கோட்டையில் முக்கிய சந்திப்புக்காகவும் இருந்திருக்கும்?
உட்கட்சியிலேயே அவருக்கு எதிரான கலகங்கள் அவ்வப்போது இருக்கும்போது கட்சித்தலைவராகவும் அவருக்கு எவ்வளவு பதற்றம்?

முரசொலி அடியாராய் இருந்தவர்
இவரால் நீரோட்டம் அடியாராய் மாறியவர் கூட கட்சியை விட்டு வெளியேறி அப்போது குடும்பரீதியாக அந்தரங்கத்தை கிளறி கண்டபடி பேசிக்கொண்டிருந்த விஷயம்
”ஒரு முதலமைச்சராயிருக்கும் போது ஒரு கல்யாண வீட்டில்
’ நான் ஜானகியோடு பல வருடம் வாழ்ந்து விட்டு அப்புறம் தான் கல்யாணம் செய்து கொண்டேன்’ என்று பேசுறானேய்யா! உண்மையா இருந்தா கூட ஒரு முதலமைச்சர் பொண்ணு மாப்பிள்ளைய வாழ்த்திப்பேசும்போது இப்படியா பேசுவான்?”
அடியார் மதுரை மேல மாசி வீதியில் மேடையில் ஏகாரத்தில் சகட்டு மேனிக்கு பேசும்போது பழக்கடை பாண்டியின் ஆட்கள் கலவரம் செய்ய,
அடியார் மிரண்டு போய் பயத்துடன் குரல் நடுங்கி
“ டேய் பாண்டி, இது ஒன் வேல தான்டா. நான் பயப்பட மாட்டேன்டா “ என்று சொல்லி விட்டு மேடையில் இருந்து இறங்கி அம்பேல்.
அடியார் ஜூட்.

அன்று அரசியலிலும் ஆட்சியிலும் எம்.ஜி.ஆருக்கு தான் கருணாநிதியை சமாளிப்பது மட்டுமா பெரும் பிரச்னை?

மேக் அப் முடித்து, சின்ன விக் கூட பின் பக்க முடிக்காக வைத்துக் கொண்டு, கிளம்ப தயாராகி விட்ட அவசர நேரத்தில் காலை உணவு இன்னும் வரவில்லை. 
நல்ல பசியில் எம்.ஜி.ஆர்.
தோட்டத்தில் அன்று காலை கிளம்பு முன் யாரையும் சந்திக்க முடியாது என்று ஏற்கனவே தகவல் கண்டிப்பாக சொல்லி விட்டார்.
நேராய் கோட்டைக்குத் தான் போக இருக்கிறார்.
ரொம்ப முக்கிய காரியமாயிருக்கும்.
பசி. இண்டர்காமை தலைவர் அழுத்துகிறார்.
கிச்சனில் சமையல்காரரை உடனே ப்ரேக் பாஸ்ட் மாடிக்கு கொண்டு வரச்சொல்லுகிறார்.

சின்னவருக்கு உணவு கொடுப்பதை விட சமையல்காரருக்கு ராமாவரம் தோட்டத்தில் என்ன பெரிய வேலை இருக்க முடியும்.? 

மீண்டும் எம்.ஜி.ஆர் இண்டர்காமில் “ டேய், பசிக்குதுடா”
சில நிமிடங்கள் பொறுத்திருக்கிறார்.
கிளம்பி விட்டார். பசியுடன் இப்போது கோபமும்.

படியில் வேகமாக இறங்குகிறார்.
எதிரே சமையல் காரர் சுடச்சுட தோசை, கருவாட்டு குழம்புடன் மேலே படியேறி வருகிறார்.
எம்.ஜி.ஆர் கையை ஓங்கி தட்டை தட்டி விடுகிறார்.
சமையல் காரருக்கு கன்னத்தில் ஒரு ’பளார்’

” ஓத்தா, ஏன்டா ராமச்சந்திரன பட்டினி போடுற?
ஏன் ராமச்சந்திரன பட்டினி போடுற?”

மின்னல் வேகத்தில் இறங்கிப் போய்
காரில் ஏறி விட்டார்.

When Caesar says " 'Do it', it is performed."
- Shakespeare

கஜலட்சுமி   கடாட்சம்  மிகுந்த தமிழக முதல்வருக்கு அன்று
அன்னலட்சுமி அருள் இல்லை.

Dec 9, 2019

எம்.ஜி.ஆர் சங்கீத கொடை


முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னை வந்து சந்திக்கும்படி பாலமுரளி கிருஷ்ணாவிற்கு தகவல் சொல்கிறார்.
தமிழக முதல்வரை பாலமுரளி கிருஷ்ணா சந்திக்கிறார்.
எம்.ஜி.ஆர் அளித்த பணி ஒன்று. ’தியாகப்ரும்மத்தின் கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்த்து இசைத்து பாடவேண்டும்.’
பாலமுரளி சிரமேற்கொள்கிறார்.
தியாகராஜ கீர்த்தனைகளை தமிழில் மொழி பெயர்த்து பாடல்களை இசைப்படுத்துகிறார்.
கீர்த்தனைகளை மொழிபெயர்த்தவர் அவருடைய துணைவி அபயம் அவர்கள் தான்.
ஆறே மாதத்தில் எள் என்றால் எண்ணையாக தயாராகி விட்டார் பாலமுரளி கிருஷ்ணா.
எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நினைத்திருக்கிறார்.
”இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே” சபாஷ் மீனா பட சிவாஜி போல.
முதல்வரை சந்திக்க இவரே முயற்சித்தும் பார்த்திருக்கிறார்.

அவ்வளவு சுலபமா அது?

எம்ஜிஆர் மறந்து விட்டார் போலிருக்கிறது.
ராஜாங்க தலைமைக்கு எத்தனையோ சுமை.

சரிதான் என்று பாலமுரளி பிரமைகளை உதிர்த்து வேறு காரியங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். வெளி நாட்டு சங்கீத கச்சேரியே போதாதா?
இரண்டு வருடம் ஓடி விட்டது.
எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு.
”நான் உங்களிடம் சொன்ன வேலையை மறந்து விட்டீர்களா? இரண்டு வருடம் ஆகி விட்டது.”
பாலமுரளிக்கு எப்படியிருந்திருக்கும்?
When Caesar says “Do it”, it is performed.
பதற்றத்துடன் “அந்த பணியை நான் ஒன்றரை வருடம் முன்னரே முடித்து விட்டேன்.”
”அப்புறம் என்ன? என்னிடம் வந்து ஏன் சொல்லவில்லை?”
“ உங்களை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவே இல்லை”
வழி மறித்து தடுக்கிற நந்திகளுக்கு எம்.ஜி.ஆர் என்ற மஹாபுருஷர் விலக்கல்லவே. அவரும் அறியாததல்ல.
மிக சிறப்பான விழாவிற்கு எம்.ஜி.ஆர் ஆணையிடுகிறார்.
தியாகப்ரும்ம கீர்த்தனைகளை தமிழில் பால முரளி பாடி அரங்கேற்றுகிறார்.
எம்.ஜி.ஆர் உதவியாளரை அழைத்து சொல்கிறார். “பாலமுரளியிடம் பிரசாதத்தை கொடுங்கள்”
பிரசாத பை பெரிதாய் பாலமுரளி கையில்.

பாலமுரளி வீட்டிற்கு வந்து பார்க்கிறார்.
கத்தை கத்தையாய் பணக்கட்டு.
கட்டிலில் தான் அதையெல்லாம் எடுத்து வைக்கிறார்.
பத்து லட்சம் என்பது அன்று மிக மிகப்பெரிய தொகை.
அதோடு பாலமுரளி கிருஷ்ணா அதுவரை பார்த்தேயிராத பெருந்தொகை.
பால முரளி விம்மி,விம்மி அழுகிறார்.
தேம்பி அழுகிறார்.
…......

Jan 9, 2019

Paparazzi and Privacy


கட்சி ஆரம்பிச்சப்புறம் எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போனார்.
கட்சி ஆரம்பிச்சப்புறம் கமல் சிங்கப்பூருல பூஜா குமாரோட..
எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போன விஷயத்தில வெளிப்படைத் தன்மை இருந்தது.
முதல்வரான பின் எம்.ஜி.ஆர். ஜானகி, ஜெயலலிதாவுடன் ஏசியன் கேம்ஸ் பார்த்தார். எம்.ஜி.ஆர் கூச்சப்பட்டதேயில்லை.
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு மேல் சபை உறுப்பினர் ஆக முடியவில்லை என்றவுடன் தமிழக மேல் சபையையே கலைத்துவிட்டவர்.
அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி தி.மு.க என்ன தான் ஏகடியம் செய்தாலும் கொஞ்சம் கூட லட்சியம் செய்ததேயில்லை. ஊரும் உலகமும் என்ன சொல்லும் என்றெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.
கமல் பூஜா சிங்கப்பூர் டூர் ரகசியம் காக்க முயற்சித்திருப்பது பலிக்காமல் போயிருக்கிறது.
கௌதமியுடன் கமல் சிங்கப்பூரில் இருந்த போது தான் அப்போது Affair பற்றி தெரிய வந்தது. குமுதம் பகீரங்கப்படுத்தியது. அப்போது அவர் அரசியல் வாதி அல்ல.
கமல் சொந்த வாழ்க்கை பற்றி பி.ஜே.பி தமிழக பிரமுகர்கள், தமிழக ஆளுங்கட்சி மந்திரிகள் ஏற்கனவே குத்திக்காண்பித்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.
கமல் வலதுசாரிகளுக்கெதிரான அரசியல் செய்ய நினைப்பவர். வலது சாரிகளோ தீவிர ஆஷாட பூதிகள். ஒழுக்கம் பற்றிய பிரமைகள் நிறைய இவர்கள் மூளையில் சிலந்தி கட்டியிருக்கிறது.
பாவம் கமல். வெளிப்படையாக நடக்க முடியாமல் அரசியல் அவரை படுத்துகிறதா?
Nobody likes being spied on.
Nobody wants the paparazzi ever following them in life.
டயானா சாலை விபத்தில் இறந்த போது ஒரு பத்திரிக்கை தலைப்பு செய்தி.
”The pursuit is over. Diana has come home.”

All human beings have three lives.Public, private and secret. – Gabriel Garcia Marquez.
அந்தரங்கம் புனிதமானது என்றெல்லாம் என்ன இருக்கிறது. அதுவும் அரசியலில். சாக்கடையில் கல் போடுவது தானே அங்கே பிரதான செயல்பாடு.
கமல் இடது சாரிகளுடன் நல்ல உறவில் இருப்பவர். இடது சாரிகள் தனி மனித ஒழுக்க நியதிகளை தொண்ணூறு விழுக்காடு கடைப்பிடிப்பவர்கள். W.R.வரதராஜன் இதனால் தற்கொலையே செய்ய நேர்ந்திருக்கிறது.
மனைவி, துணைவி சமாச்சாரமெல்லாம் எப்போதும் தி.மு.க., அ.தி.மு.க அரசியல்வாதிகளிடம் தான் ரொம்ப.



Oct 8, 2018

குட்டி தமிழ்வாணன்


ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.
எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.
கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.
கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’
Worst Arrogance. Thinking too much of oneself.
 Superiority complex.

அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

 கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார். ‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

Jul 28, 2018

எம்.ஜி.ஆர் காலமான தினம்



இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை.
எம்.ஜி.ஆர் காலமான தினம் வேறு யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்த வேண்டியவர்கள் திண்டாடிப்போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கிலை யாரும் முன் கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்க மாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச்சின்னங்கள். எம்.ஜி.ஆர் இறந்த தினம் இந்தத் துக்கச்சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது.
தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால், பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி, பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச்சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது. ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர்கள் உடலை மருத்துவ மனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது.
யாரிடம் எதற்கு அனுமதி?
“என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க.”
”எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது.”
”அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்.”
“எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம் தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு.”
அப்பா பிணவறையில் இருந்து எழுந்து நடந்து போனார்.

- அசோகமித்திரன் “ யுத்தங்களுக்கிடையில்..” நாவலில்



..........................

Mar 18, 2018

இது ரஜினி சமாச்சாரமில்ல


முதல் மனைவி முத்துக்கண்ணு. அப்படியிருந்தும் ஒரு strong affair. அதுவும் எம்.ஜி.ஆரின் கதாநாயகியோடு. ”ஏப்பா கேள்விப்பட்டனே.. மஞ்சுளாவோட சேர்க்கையா..உண்மையா” என கேட்ட சாண்டோ சின்னப்ப தேவரிடம் “என்னண்ணே! நீங்களுமா இதை நம்புறீங்க. அப்படியெல்லாம் நான் செய்வேனா? நம்ம ஜாதியென்ன? அப்படியெல்லாம் ஜாதிய தூக்கி போடுகிற ஆள் நான் இல்லண்ணே.” என்று சொன்ன விஜயகுமார்.
மஞ்சுளாவுக்கு எல்லா திரைப்பட நடிகைகளுக்குமுள்ள சிக்கல்கள் இருந்தது. கதாநாயகியாக நடித்த எங்கள் தங்கராஜா, உத்தமன் படங்களின் தயாரிப்பாளர் வி.பி.ராஜேந்திர பிரசாத்தை திருமணம் செய்யவிருப்பதாகக் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடன் ஊட்டியில் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த போது ரிஸப்சனிஸ்ட்டிடம் கூட அப்படி மஞ்சுளா சொல்லியிருக்கிறார்.
ஆனால் இப்படி ஸ்டேட்மெண்ட் எல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்தாக மாறும். மன்மத பாணம் மாறி மாறி வெவ்வேறு விதமாக வீசப்படும் போது எப்படியெப்படியெல்லாமோ திசை மாறி விடும் காட்சிகள்.
An ever-shifting kaleidoscope ...............all patterns alter!

எம்.ஜி.ஆர் காதிற்கு விஜயகுமார் மஞ்சுளா காதல் விஷயம் தெரிய வந்த போது எது அவரை கோபப்படுத்தியதோ?
வாஹினி ஸ்டுடியோவில் மேக் அப் ரூமில் இருந்த எம்.ஜி.ஆர் உத்தரவுப்படி அந்த ஸ்டுடியோவில் நடித்துக்கொண்டிருந்த விஜயகுமார் அவரை பார்க்க பதட்டத்துடன் வருகிறார்.
மேக் அப் ரூமில் விஜயகுமார் நுழையு முன் அவருடைய தலைமுடியை பிடித்து உள்ளே எம்.ஜி.ஆரின் கை அவரை உள்ளே இழுப்பதை ஸ்டுடியோவில் இருந்த பலரும் பார்க்கிறார்கள்.
கவனிப்பு உள்ளே எப்படியிருந்திருக்கும் என்பதைப்பற்றி யூகிக்க அதிக சிரமமில்லை.
மண்டகப்படி முடிந்த பின் விஜயகுமாரிடம் சீப்பை கொடுத்து “தலை சீவிக்கொண்டு வெளியே போ” என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். விஜயகுமார் ரோஷத்துடன் சீப்பை அலட்சியப்படுத்தி விட்டு கலைந்த தலையுடனே மேக் அப் அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
There is no wound that time cannot heal!
”அண்ணா நீங்க நினைச்சபடி நடந்துருக்கு
புரட்சி தலைவர் கையில் நாடிருக்கு” என்ற பாடலுக்கு பின்னால் ஒரு படத்தில் அதிமுக கொடி பிடித்து விஜயகுமார் நடித்தார்.
உற்சாகமாக “கொடுக்கின்ற கை, துன்பம் துடைக்கின்ற கை, மக்கள் நம்பிக்கை கொண்டிங்கு இப்போ அரசாளுது” என்று அடித்த கையை புகழ்ந்து லாலி பாடினார்.
எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியவர்களெல்லாம் அவரை தூக்கி பிடிப்பது புதிதல்ல. அதிசயமுமல்ல.

Jan 2, 2018

அரசியல் சினிமா கதைப்பு


ரஜினியெல்லாம் எம்.ஜி.ஆர் ஆக முடியுமா?
- கேட்பவர்கள் கேட்கிறார்கள்.

ரஜினியின் ’ஆன்மீக அரசியல்’ டயலாக் நினைவு படுத்துகிற ஒரு எம்.ஜி.ஆர் சமாச்சாரம் உண்டும். உண்டும். உண்டும்.

எம்.ஜி.ஆர் செய்த கோமாளி அரசியலில் மறக்கவே முடியாதது.
கொள்கை பற்றிய நச்சரிப்பு தாங்காமல் “அண்ணாயிசம்” என்று சொன்ன விஷயம்.

........................


You must remember this.
A kiss is just a kiss, a sigh is just a sigh.
The fundamental things apply
As time goes by.
Moon light and love songs are never out of date.
( "As time goes by" song in Casablanca -1942 movie)

தற்காலத்தின் கொந்தளிப்பு மிக்க நிகழ்ச்சிகளோ, துரித தொழில் நுட்ப முன்னேற்றமோ,சுருங்கக்கூறினால் ,எதுவுமே “ நான் உன்னை காதலிக்கிறேன்” என்ற வார்த்தையின் இனிமையைக் குறைத்து விடமுடியாது.

”அர்ஜுன் ரெட்டி” தெலுங்கு படம் பார்க்காமல் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது. ஒரு வழியாக போன வாரம் பார்த்தேன். இப்படி ஒரு திருப்தி தரும் படம் பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் போது
’வேலைக்காரன்’ பார்க்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானேன். விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?
தெலுங்கு படங்கள் கிண்டல் செய்யும்படியாக இருந்ததுண்டு. இப்ப கொல்ட்டிங்க ரொம்ப மெச்சூர்டா ’அர்ஜுன் ரெட்டி’ எடுக்கறாங்க.

ஆனா தமிழ் ’வேலைக்காரன்’....

காலம் மாறிடுச்சின்னு யார் சொன்னது?
தமிழ் சினிமா ட்ரெண்டு மாறிடுச்சுன்னு பொய் சொல்லக்கூடாது.

ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு முகம், மூக்கு பழைய ஜெய்சங்கர் சாயல்.

அம்மா சொன்னத கேட்டு புல்லரிக்கற, கதாநாயகிய டம்மியாக்கற,
ஊரையே திருத்தற Utopian கதாநாயகன் இன்னமும் இருக்கானே!
கவனமா எம்.ஜி.ஆர் படத்த உல்டா பண்ணுறாங்கெ..
............................................

https://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_23.html

Dec 15, 2016

பொய்த்திரள்


குருவி மண்டையன் தீவிர திமுக தொண்டன்.கருணாநிதியின் அத்யந்த பக்தன். புதிதாய் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர் திருப்பரங்குன்றத்திற்கு முதல் முறையாக வந்தபோது ”நெருக்கியடித்துக்கொண்டு ’பொன்மனச்செம்மல் வாழ்க!மக்கள் திலகம் வாழ்க’ என்று கூப்பாடுபோட்டுக்கொண்டே எம்.ஜி.ஆரை நெருங்கி தொப்பியை தட்டி விடப்பார்த்தேன்.முடியவில்லை.குனிந்து அவர் குண்டியில் நல்லா நறுக்குன்னு கிள்ளி விட்டேன்..” என்று பெருமையாக சொல்பவன். 

மேடைகளில் எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும்போது ம.கோ.ரா என்றுபெயரை மொழிபெயர்த்து –மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் -“ம.கோ.ரா பாமர மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்?’” என்று சவால் விடுபவன்.

பிராமண துவேசம் குருவி மண்டையனுக்கு அதிகம். எதிரே யாராவது பிராமணரைப் பார்த்தால் சைக்கிளை மேலே ஏற்றி விட்டு ’ப்ரேக் பிடிக்கல சாமி’ என்று சொல்வான்.
தேம்பாவணி ஒட்டிய 3வது தெருவிலிருந்து நான் வெளியே வருகிறேன்.ஒரு பிராமண வாலிபன் குடுமி வைத்துக்கொண்டு என்னிடம் ’கோச்சடைக்கு பஸ் இப்ப இருக்றதா?’ என்றான். எனக்கு அவனைப் பார்க்க அம்மாவந்தாள் அப்பு ஞாபகம் வந்தது.அதே நேரம்”வீ..வீ..” என்று குருவிமண்டையனின் விசில் சத்தம். திரும்பிப்பார்க்கிறேன்.ஐந்தாவது தெருவிலிருந்து சைக்கிளில் வெளி வந்த குருவிமண்டையன் “துரை!அவனை நிறுத்தி வை.விட்டுடாத..” என்று சைகை செய்கிறான்.
அதே நேரம் அந்த ஸ்டாப்பில் ஒரு பஸ் வந்து நின்றது. நான் பதற்றத்துடன் அந்த பிராமண இளைஞனை “ இதில உடனே ஏறு” என்றேன். அவன் “இல்லை…இது கோச்சடை போகுமா” என்று இழுக்கும்போதே “முதல்ல ஏறு சாமி.அரசரடி போய் கோச்சடை மாறிக்க..சீக்கிரம் ஏறு” என்று வலுக்கட்டாயமாக நகர ஆரம்பித்த பஸ்சில் ஏற்றி விட்டேன்.
வேகமாக சைக்கிளில் வந்த குருவி மண்டையன் என்னை வெறுப்புடன் பார்த்து “ ச்சீ தமிழ் இன துரோகி..ஆரிய அடிவருடி.. ஒரு ரம்மியமான மாலைப்பொழுதை கெடுத்து விட்டாயே..” என்று பொருமினான்.”பாப்பானையும் பாம்பையும் கண்டா உடனே அடிக்கனும்ப்பா” என்றான் அந்த கறுப்புச்சட்டைக்காரன்.

1977 தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு கேட்க புது நுட்பமான யுக்தி கையாண்டான்.
ஹார்வி நகர்,சோமசுந்தரம் காலனி போன்ற இடங்களில் இரவு நேரம் கொலாப்புட்டன்,ஆட்டுமூக்கன்,ஒத்தகாதன்,தொல்லை ஆகியோருடன் சைக்கிளில் நுழைந்து “ டேய் ஆரியப்புண்ட மகன்களா.” என்று ஒரு சவுண்டு. உடனே வீட்டு விளக்குகள் அணைக்கப்படும்.கதவுகள் சாத்தப்படும்.அந்த வீடுகளில் உள்ள அத்தனை காதுகள் மட்டும் தீட்டப்படும்.
”ஒழுங்கா எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டுடங்கடா. தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்டீங்கன்னா ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்கடா. டே ஆரிய நாய்களா.. ஒழுங்குமயிரா அண்ணாதிமுகவுக்கு ஓட்டுப்போடலீன்னா அழிஞ்சே போவீங்கடா.ங்கொம்மால ஓக்க.. எம்.ஜி.ஆர் வாழ்க! கோத்தா புண்டையில ஓக்க..அண்ணாதிமுக வாழ்க!”

Dec 2, 2016

தங்க கட்டுப்பாடு


தங்க கட்டுப்பாடு வந்து விட்டதா? என்று ஒரு வரி
கவிஞர் கலாப்ரியா ஃபேஸ்புக்கில் பார்த்தேன்.
எனக்கு பழைய ஞாபகம். என் தகப்பனார் மத்திய சுங்க இலாகா அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் அவரை ஒவ்வொரு விதமாக குறிப்பிடுவார்கள். பழனியில போயில இன்ஸ்பெக்டர்.
போயில = புகையிலை! புகையிலைக்கு வரி.

திருச்சியில தங்கக் கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர். நாகையில கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர்.
மதுரையில் சென்ட்ரல் எக்ஸைஸ்.
பின்னால் இந்த ஊர்களிலெல்லாமே ப்ரமோஷனில் சூப்ரண்ட் ஆகவும் இருந்தார்.


 தங்கக்கட்டுப்பாடு அதிகாரியாக இருந்த போது
 1967ல் ’எம்.ஜி.ஆர் சுடப்பட்டார்- எம்.ஆர் ராதா சுட்டார்.’ தினத்தந்தி தலைப்பு செய்தி. அடுத்ததாக அதே முதல் பக்கத்தில் பெரிய அளவில் தங்கம் பிடிபட்ட செய்தி.
என் தகப்பனாரின் தங்க வேட்டை பற்றிய பரபரப்பான செய்தி. ”தங்கம் பிடிபட்டது. சுங்க இலாகா அதிகாரி கைப்பற்றினார்”. 

 Morarjibhai Desai's Gold control!
அன்று ஒரு வேளை எம்.ஜி.ஆர் சுடப்பட்டிருக்காவிட்டால் இந்த தங்கம் பிடிபட்ட செய்தி தான் திருச்சி தினத்தந்தியில் தலைப்பு செய்தியாயிருந்திருக்கும் என்று பேச்சு!

நாங்கள் 1966ல் திருச்சியில் குடியிருந்த தெருவிற்குள் ஒரு நாள் அப்போது நிறைய தங்கத் தொழில் செய்யும் வியாபாரிகள் நுழைந்தார்கள். என் அப்பா வீட்டிற்கு வெளியே ஈசி சேரில் உட்கார்ந்திருந்தார். அப்பா அந்த கூட்டத்தைப் பார்த்து சத்தமாக
 ‘ யாரும் தெருவிற்குள் நுழைய வேண்டாம். திரும்பிப் போய் விடுங்கள். நாளை ஆஃபீஸ் வாருங்கள்” என்று சொன்னார். ஆனால் அவர்கள் “சார்! சார்!” என்று இறைஞ்சிக்கொண்டே முன்னேறினார்கள். அப்பா “ திரும்பிப்போயிடுங்க” என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொன்னவுடன் தயங்கியவாறு வெளியேறிப்போனார்கள். 

 என் பெற்றோர் திருமணத்திற்கு தாலி செய்த ஆசாரியையே திருச்சியில் கைது செய்ய நேர்ந்த போது  அப்பா தேம்பி அழுதார்.

Aug 30, 2016

எம்.ஜி.ஆர் கட்சியில் அந்தக்கால சில நடிகர்கள்


அகில உலகிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இல்லையென்பது உண்மை தான்.ஆனாலும் திருச்சி சௌந்தர் ராஜன் அந்தக்காலத்தில் அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களின் தலைவராகத்தான் இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் நடத்தும் கட்சிக்கூட்டங்களில் சிறப்புப்பேச்சாளராக பேசிக்கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கான மன்றங்களைப்பற்றி எண்ணும் போது சிலர் நினைவுக்கு வருவர். ஒருவர் திருச்சி சௌந்தர்ராஜன். இன்னொருவர் முசிறி புத்தன். அப்புறம் கவர்ச்சி வில்லன் கே.கண்ணன்.
அதே போல சிவாஜி ரசிகர் மன்றங்களுக்குத் தலைமை என்றால் சின்ன அண்ணாமலையும் தளபதி சண்முகம் என்பவரும் தான்.
ம.பொ.சியின் தமிழரசு கழகம் கட்சியில் இருந்தவர் சின்ன அண்ணாமலை. பண்ணைப் புத்தகாலயம் அதிபர். இவர் எழுதிய “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” படிக்க சுவாரசியமாயிருக்கும்.

திருச்சி சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் படங்களிலெல்லாம் நடிப்பார். பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக, அப்பாவாக, கொள்ளைக்கூட்டத்தில் ஒருவனாக.
ரகசிய போலீஸ் 115ல் உயர் போலீஸ் அதிகாரியாக, கண்ணன் என் காதலனில் ஜெயலலிதாவுக்கு அப்பாவாக …இப்படி..இப்படி..
டி.ஆர் ராமண்ணாவின் ”நான்” படத்தில் கதாநாயகனின் தந்தை பெரிய ஜமின்தாராக வந்து ஆரம்பத்தில் செத்துப் போவார்.
திருச்சி சௌந்தர்ராஜன் முன்னதாக கதாநாயகனாக சொந்தப் படம் எடுத்து நடித்திருக்கிறார். டப்பாவிற்குள் போனது என்று சொல்லவும் வேண்டுமோ?
1965ல் வெளி வந்த “பணம் தரும் பரிசு”.
 பணம் தரும் பரிசு படத்தில் கதாநாயகி வி.ஆர் திலகம். ரமண திலகம் இரண்டாவது நாயகி. இந்த ரமண திலகம் திரையுலகு கண்ட பெரிய கவிஞரான வாலிக்கு மனைவியானார்!
திருச்சி சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் மந்திரியாக ஆனவர். என் மாமனாரின் நண்பர் இவர்.
எம்.ஜி.ஆர் படங்களில் சின்ன ரோல் செய்தவர் மந்திரியானார்.
இவர் மற்ற மந்திரிகள் போல சம்பாத்திய புத்திசாலியாக இருக்கவில்லை என்று ஒரு செய்தி. உண்மையோ என்னவோ?
வேலன் நாடகமொன்றில் நடிக்கும்போது மற்ற கதாபாத்திரங்கள் பேசும்போது அவர்களை மாற்றி,மாற்றிப் பார்த்து ’அது சரி’ என்ற வார்த்தையை தலையை ஆட்டி ஆட்டி ‘ஐசரி!’ ‘ஐசரி!’ என்று உச்சரித்ததால் ஐசரிவேலன் ஆனவர்.
சாதாரண சிரிப்பு நடிகர் ஐசரி வேலனும் கூட ராதாகிருஷ்ண நகர் எம்.எல்.ஏ வாக மந்திரி செயலர் என்பதாக ஒரு விசித்திர பதவியில் இருந்தார்.
இந்த ஐசரி வேலன் மகன் ஐசரி கணேஷ் இன்று பல்கலைக்கழகமொன்றின் வேந்தரா?


இவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் கட்சியில் பதவி பெற்றவர்கள் எனும்போது ஏன் நட்சத்திர வில்லன் நடிகர் நம்பியார் அதிமுகவில் சேர்ந்து ஜொலிக்கவில்லை?

 இதற்கு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலங்களில் புன்னகையையே பதிலாகச் சொன்ன நம்பியார் சில வருடங்களுக்கு முன் சொன்னார்: ”எம்.ஜி.ஆருக்கு சந்தேகக் குணம் அதிகம். கட்சியில் யாராவது நம்பியார் பற்றி பொல்லாங்காக சொன்னால் அதை உடனே நம்பி விடுவார். அவருடைய சந்தேகக்குணம் தாங்கவே முடியாதது. படாத பாடு படுத்தி விடுவார். நட்பு கெட்டுப்போகும். அதனால் தான் நான் எம்.ஜி.ஆர் கட்சியில் சேரவேயில்லை.”
திருச்சி சௌந்தர்ராஜன், கே.கண்ணன், ஐசரிவேலன், எஸ்.எஸ்.சிவசூரியன் போன்ற நடிகர்களால் மட்டும் ஆரம்ப கால அதிமுக அலங்கரிக்கப்பட்டது.


Aug 25, 2016

அசந்தர்ப்ப நிர்ப்பந்தம்


அப்போது தி.மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர் ’நீரும் நெருப்பும்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயம். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஷூட்டிங்.
யூனிட்டில் ஒரு டெக்னீஷியன் வேலை விஷயமாக எதற்கோ கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு…
அந்த ஆள் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து எழுந்து, மீண்டும் விழுந்து அழுது தன் நிலை மிகவும் சிக்கலாகியிருப்பதாக சொல்லி அழுதிருக்கிறார்.

சிலர் அழும்போது பார்த்தால் சற்று விசித்திர நடவடிக்கைகளுடன் இருப்பார்கள். இயல்பாக சில கெட்ட வார்த்தைகள் கூட வாயிலிருந்து விழும். அழுகை, கோபம் கலந்து சற்று சத்தமாக உரக்க பேசுவார்கள்.
அப்படித்தான் அந்த ஆள் புலம்பியிருக்கிறார்.
ஆனால் வதந்தி ஒன்று எப்படியோ எம்.ஜி.ஆரை அடித்து விட்டான் என்பதாக பரவி விட்டது. 

ஸ்டுடியோ காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து ரசிகப் பட்டாளம் உள்ளே நுழைந்து….. ஒரு ஆயிரம் பேர் என்ற அளவில்… எழவு வீடு போல எல்லோரும் அழுது பதறிக்கொண்டு…
”அண்ணே! அண்ணே!”
”யார் அவன்? அவனக்கொல்லாமல் விட மாட்டோம்…”


ஷூட்டிங்கிலிருந்த எம்.ஜி.ஆருக்கு கோபம். செட்டை விட்டு வெளியே வந்து “….ங்கோத்தா, யார்ரா சொன்னா? என்னை எவன்டா அடிக்க முடியும்… ஏன்டா இப்படி ஸ்டுடியோவுக்குள்ள ஏறிக்குதிச்சி கலாட்டா பண்றீங்க? ….ங்கோத்தா…அஞ்சி நிமிஷம் உங்களுக்கு டைம்.. மரியாதயா எல்லாரும் ஓடிடுங்க.. எவனும் இங்க இருக்கக்கூடாது…ஒருத்தன் கூட இங்க இருக்கக்கூடாது.”
When Caesar says ‘Do it’, it is performed!

மிரண்டு, பணிந்து, பம்மி மூன்று நிமிடங்களுக்குள் ரசிகப்பட்டாளம் சிட்டாகப் பறந்து அங்கிருந்து மறைந்து விட்டார்கள். ஒரு ஈ, காக்கா இல்லை…ஸ்டுடியோ அமைதியாகி விட்டது.
……………………………………………

எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதலமைச்சர் ஆகியிருந்த நேரம். சென்னையில் ராதாகிருஷ்ண நகர் நீங்கலாக மீதி பதின்மூன்று தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றிருந்தது. சென்னை தி.மு.க கோட்டையாக கருதப்பட்ட சமயம்.
வெற்றிகொண்டானும், தீப்பொறி ஆறுமுகமும் கட்சித்தலைமையின் ஆசியுடன் தி.மு.க மேடைகளில் தமிழகமெங்கும் மிக,மிக கடுமையாக எம்.ஜி.ஆரை வறுத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.
சென்னை மவுண்ட் ரோட்டில் ஏதோ ஒரு கட்டிடத்திற்கு எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். மாடியில் ஒரு அறையில் அமர்ந்திருக்கிறார். கீழே எதிர்க்கட்சி தி.மு.க காரர்கள் ஒரு கும்பலாகக் கூடி விட்டார்கள். அந்த நேர தி.மு.க காரனின் வழக்கமான அர்ச்சனை. ஒரே கூப்பாடு. “டேய் குல்லாக்காரப்பயலே..மலையாளத்தான்..கிழட்டுப்பயலே… மலட்டுப்பயலே..”
மாடியில் இருக்கும் எம்.ஜி.ஆருக்கு தெளிவாக இந்த வசவுகள் கேட்கின்றன.
கூட இருந்தவர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடம்.
எம்.ஜி.ஆர் கோபத்தின் உச்சத்திற்குப் போக அதிக நேரமாகவில்லை.
ஆவேசமாகி ‘ங்கோத்தா, என்ன நினைச்சிக்கிட்டுருக்கானுங்க..ங்கோத்தா..’ என்று எழுந்து விட்டார்.
சுற்றியிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்த சிரமப்பட வேண்டியிருந்தது. “உட்காருங்க….சூரியனப் பாத்து நாய்ங்க கொரைக்கிதுக….”

Jul 28, 2016

எம்.கே.ராதா


எம்.கே.ராதா ’சதி லீலாவதி’யில் கதாநாயகன். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகம். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். 1936ல் ரொம்ப சின்ன கதாபாத்திரம்.
சதி லீலாவதி கதாநாயகியையே தான் எம்.கே.ராதா திருமணம் செய்து கொண்டார். எம்.கே.ராதாவின் அப்பா கந்தசாமி முதலியார் தான் சதி லீலாவதி தயாரிப்பாளர், இயக்குனர்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, தங்கவேலு ஆகியோரும் இந்தப்படத்தில் தான் அறிமுகமானார்கள்.

எம்.கே.ராதா கதாநாயகனாய் நடித்த ’சந்திரலேகா’(1948) மிகுந்த பொருட்செலவில் ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ரஞ்சன் வில்லன்.
அபூர்வ சகோதரர்கள் 1949ல் வந்தது. எம்.கே.ராதாவுக்கு இரட்டை வேடம்.
1956ம் ஆண்டு பாசவலையில் எம்.கே.ராதா.

சாத்வீகமான நடிகர். கோபத்தைக் கூட அடக்கமாக வெளிப்படுத்திய நடிகர்.
பின்னால் சில படங்களில் கதாநாயகர்களுக்கு அப்பா ரோல் செய்தார்.
இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த எம்.கே. ராதாவை பார்க்கப் போயிருந்த எம்.ஆர்.ராதா சொன்னார்: ”அடப் பாவி! எல்லா கெட்ட பழக்கமும் இருக்கிற நான் நல்லா இருக்கேன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நீ நோயாளியாகி விட்டாயே!”
எம்.ஜி.ஆருக்கு எம்.கே.ராதாவின் மீது மிகுந்த மரியாதை. அபூர்வசகோதரர்கள் படத்தை 1971ல் “ நீரும் நெருப்பும்” என்ற பெயரில் எடுத்து எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டார்.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது ஒரு நாள் கோட்டைக்கு போகும் போது திடீரென்று எம்.கே.ராதா வீட்டிற்கு காரை செலுத்தச் சொல்கிறார்.
”அண்ணே! எப்படி இருக்கீங்க” எம்.ஜி.ஆர் ஆரத்தழுவிக்கொள்கிறார்.
முதியவர் ராதா மிகவும் நெகிழ்ந்து போகிறார்.

கிளம்பத் தயாராகும் எம்.ஜி.ஆரைப் பார்த்து “ தம்பி! ராமு! எங்க வீட்டுல சாப்பிட்டு விட்டுப் போகலாமே!”
எம்.ஜி.ஆர் தழுதழுத்த குரலில் பதில் சொல்கிறார்:
“ உங்க வீட்டு சாப்பாடு இன்னும் என் வயித்துல இருக்குண்ணே!”
”ராமு..”எம்.கே.ராதா உடைந்து போய் விம்முகிறார்.
………………………………………………………..