Share

Showing posts with label பஞ்சு அருணாசலம். Show all posts
Showing posts with label பஞ்சு அருணாசலம். Show all posts

Mar 25, 2009

Carnal Thoughts-18

பெரிதினும் பெரிது கேள்.

"யானை பிழைத்த வேல் அரிது "



பெண் யானை ஒன்று எப்போதும் ஆற்றில் நீர் அருந்திய பின் ஒரு தென்னை மரத்தின் அடியில் இளைப்பாறும்.

ஒரு எலி .நல்ல நினைப்புக்கார எலி. தன் குறுகிய எலி பிரதேசம் தாண்டி பல பரந்த அனுபவம் வேண்டி அலையும் எலி. தேடல்.தவிப்பு .
இந்த எலி திருமணம் ஆனது தான். என்றாலும் இந்த பெண் யானை மீது மையல். கண்ணால் காம வலை வீசியது. கை வசம் இருந்த தேவதேவனின் கவிதையை எடுத்து வீசியது.


"விடைத்து நிற்கும் என் குறி.
உன் ரகஸ்யங்களை உற்று நோக்கும் என் புத்தி .
அடியே ! பீறிடும் எனது இந்திரியமடி இந்த கவிதை !"


தென்னை மரத்தின் அடியில் படுத்த யானைக்கு ஆச்சரியம். ஏன் இந்த எலி இப்படி தன்னை பார்த்து கண்ணடித்துக்கொண்டு இருக்கிறது. கவிதை சொல்கிறது.
'வாப்பா, எலி. ஒரு பொம்பளை தனியா இருக்கிற இடத்தில் வந்து கண் அடித்துக்கொண்டே இருக்கிறாயே. தேவதேவன் எழுதிய கவிதை சொல்கிறாய். என்ன வேண்டும் சொல்"
எலி " உன்னை ஒரே ஒரு தடவை ஜோலி பார்க்க வேண்டும் என்று என் நெடு நாள் தவம். ப்ளீஸ் ..ப்ளீஸ் .."

யானைக்கு ஒரு Curiosity. என்ன தான், எப்படி தான் தன்னோடு இந்த சின்ன எலி உடல் உறவு கொள்ள முடியும் பார்த்து விடுவோமே. " சரி,என் புருஷன் கஜக்கோல் பாண்டியன் (யானை தான்) வர்ற நேரம். அதுக்குள்ளே முடித்து விட்டு ஓடு " பெர்மிசன் கொடுத்து விட்டது.

எலி யானை மேல் ஏறி அதன் முதுகு, வால் அதன் அடிப்பகுதி குண்டி எங்கும் சுற்ற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தென்னை மரத்தில் இருந்து ஒரு இளனி யானையின் தலை மீது விழுந்து விட்டது . யானை உடனே பிளிறியது.


அதன் வால் பகுதியில், குண்டி பக்கம் இருந்த எலி கேட்டது ." என்ன நான் செய்யிறது வலிக்குதா ? சாரி நான் கொஞ்சம் முரட்டு தனமா செஞ்சிட்டேன் .மன்னிச்சிக்க .I apologize" என பவ்யமாக சொல்லி விட்டு கீழே இறங்கி
" நான் புதுமையானவன்.உலகை புரிந்துகொண்டவன்..என்னை தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா?" என உற்சாகமாக பாடிக்கொண்டே தன் எலி வலை நோக்கி ஆடிக்கொண்டே ஓடியது.

எலி வலையில் அதன் 'மனைவி எலி' கண்ணீர் விட்டபடி சரோஜா தேவி போல சோகமாக போஸ் கொடுத்து " என்னை மறந்ததேன் ? தென்றலே சென்று நீ என்னிலை சொல்லுவாய் " என பஞ்சு அருணாசலம் எழுதிய பாடலை பி.சுசிலா குரலில் ரொம்ப உருக்கமாக பாடிக்கொண்டு இருந்தது . Infidelity யை எந்த பெண்ணால் தான் தாங்கிக்கொள்ளமுடியும் சொல்லுங்கள்.

யானையுடன் சல்லாபித்து விட்டு வந்த எலிக்கு புரிந்து விட்டது.
எந்த கேனை எலியோ பார்த்து விட்டு வந்து, அதற்குள் தன் மனைவியிடம் பற்ற வைத்து விட்டது.
தன் மனைவியிடம் அந்த எலி கொஞ்சம் தோரணையுடன் சொன்னது .
" இங்கே பார். என் ரேஞ்சே வேற. யானையே இன்னைக்கு கதறி கூப்பாடு போட்டுருச்சி. கிழிஞ்சிடும். ஜாக்கிரதை "