Share

Showing posts with label கவிஞர் சமயவேல். Show all posts
Showing posts with label கவிஞர் சமயவேல். Show all posts

Nov 20, 2012

Never Explain!


’வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமல் இருப்பதே’ என்ற இந்த ஜென் தத்துவம் என்னால் இன்று  பிரபலமாகியிருக்கிறது.
கே.பாக்யராஜ் என்னிடம் ’ஒரு கதை சொல்லுங்கள்’ என்று கேட்டபோது
நான் மறுத்து விட்டு சொன்ன பதில் : வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமல் இருப்பதே!

இந்த ஒற்றை வரி தத்துவம் Capacity,Ultimate Power,Real test,Endurance,Reticence,Humbleness,Maturity,Perfection போன்ற இன்னும் பல பரிமாணங்களை உள்ளடக்கிய விஷயம்.  அதனால் இதை மொழிபெயர்ப்பது - 'literal' translation அபத்தம் என்றால் English equivalent ஆக ஒரே ஒரு quotation அல்லது proverb தருவதும் அபத்தம்தான் அல்லவா?
Never Explain! Never miss a good chance to keep silence!  

சுந்தர ராமசாமி எழுதும்போது கவனமாக மேற்கோள்களை தவிர்த்து விலக்குபவர்.இங்கே அவருடைய ஜே.ஜே நாவலிலிருந்து மேற்கோள் காட்டலாம்.
” மௌனம் கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது.பதில் உளறல்கள் கேள்வியை துவம்சம் செய்து விடுகிறது.”
 ஆனால் INFORMATION-INTELLECT அமுதசுரபி ஆகிய நான் இதோடு நிறுத்த முடியுமா? கூலரிட்ஜ் சொன்னதையும் பதிய வேண்டித்தான் இருக்கிறது.
”Silence does not always mark wisdom.”

......

“ It is the possibility of having a dream come true that makes life interesting.Never stop dreaming.”

Alchemist நாவலை 1988ல் பவுலோ கொயலோ எழுதியிருக்கிறார்.



“ஏதேனும் ஒரு அழகிய கனவு
என்றும் என்னுடன் இருந்து வருகிறது.........
கனவுகள் உடைந்து தகர்வதைப் பற்றி
கவலைப்படக் கூட முடியாமல்
மீண்டும் மீண்டும்
புதிது புதிதாய் முளைக்கும் கனவுகள்

கனவாற்றின் கரைகளில் தானே
வாழ்க்கை கொஞ்சம் தலைசீவி அழகு கொள்கிறது

கனவுகளற்ற பாலை நாட்கள்
வரவே வேண்டாம்
ஏதேனும் ஒரு அழகிய கனவு
என்றும் என்னுடன் இருக்கட்டும்.”

சமயவேலின் மேற்கண்ட கவிதை இடம்பெற்றுள்ள
’காற்றின் பாடல்’ கவிதைத் தொகுப்பு 1987ம் ஆண்டு வெளி வந்திருக்கிறது.

,,,,,,,,,,,,,,,

விகடன் மேடை ஆனந்த விகடன் வாசகர்கள் கேள்விகள் கமல் பதில்கள்.
கமல் ஹாசன் சொல்லியிருந்தார். “சந்திக்காத நபர்களில் காந்தி,பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு எஸ்.வி.ரங்காராவும் அடக்கம்.”

ரங்காராவுக்கு எப்பேர்ப்பட்ட மகுடம்!


மூன்று மாதம் முன் ஒரு விகடனில் அசோகமித்திரன் பேட்டி.

அசோகமித்திரன் : ”நாம் ஒன்றுமே இல்லை என்பது தான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக்கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்று தான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன்.”

எமர்சன் சொன்னான் -“A great man is always willing to be little.” 

'Use a humble pen'  என்று சொல்லப்படுவதுண்டு. அசோகமித்திரன் வகை எழுத்து அத்தகையது.

.......................................


ஓவியம் : மு. நடேஷ்




Aug 31, 2012

டீ காஃபி


ஏதோ ஒரு ஊரில் ரயில் பின்னிரவில் நிற்கும் போது  ‘டீ , காஃபி’ , ‘ டீ காஃபி’ என்ற கூவல் ரயிலில் அரைத் தூக்கத்தில்  காதில் விழுகிறது.அந்த நேரத்திலும் டீ,காஃபி சாப்பிடும் பயணிகள்.

சென்னையிலிருந்து திருச்சி திரும்பிக்கொண்டிருந்த போது அதிகாலை மூன்று மணி ‘டீ, காஃபி டீகாஃபி என்ற கூப்பாடு.விழித்தபோது தொழுதூர் மோட்டலில் பாட்டு”சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்,கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாள்”
அந்த அதிகாலையில் அந்தப் பாடல் -எவ்வளவோ தடவை கேட்ட பாடல்-
ஆஹா இன்றும் நினைவில்.


ஊர்,ஊரா எத்தனை டீகடை, காபி கிளப். எப்ப பாத்தாலும் ஏராளமா டீ, காபி சாப்பிட்டுக்கொண்டு  இருக்கிறார்கள்

மதுரை ஏ.ஏ ரோட்டில் டீகடை  வைத்திருந்த குருட்டுபிராசம்-ஷார்ட் சைட், ஆனால் கண்ணை டாக்டரிடம் காட்டமாட்டார். செக் செய்து கண்ணாடி போடவும் மாட்டார். கண்ணை அடிக்கடி இடுக்கி உற்றுப் பார்த்து தான் ஆளை அடையாளம் தெரிந்து கொள்வார்.  பெயர் பிரகாசம். மதுரை சல்லிகளுக்கு குருட்டு பிராசம் போடுவது டீதானா என்ற சந்தேகம்.
காலை எட்டுமணி. பிராசத்தின் கூரைக்கடையில் ஏற்கனவே ஆட்டுமூக்கன்,ஒத்தக்காதன்,மண்டைமூக்கன்,கொலாப்புட்டன் உட்கார்ந்து ரெண்டு வட்டை டீயை பகிர்ந்து குடித்துக்கொண்டு தினமலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

’’யோவ் எம்.ஆர்.ஆர் வாசு செத்துட்டானாம்யா’’
”’ஓவர் குடி! தேங்கா சீனிவாசனும் வாசுவும் சந்திச்சி பேசிக்கிறதை   குமுதத்தில படிச்சேன்.தேங்காக்கிட்ட சொன்னான்.’எனக்கு நாலு பொண்டாட்டி இப்ப. ’ ’மூணு தானே மாப்பிளே’னு தேங்கா சீனிவாசன் கேக்கறான். வாசு’ இப்ப ஒண்ணு ஆசைப்பட்டுச்சி அதையும் முடிச்சிக்கிட்டேன்’னான்.

தொல்லை உள்ளே நுழைந்தான். டீக்கடையில் ஒரு பத்துபேர்.
நல்லா சவுண்டா தொல்லை சொன்னான்”யோவ் ப்ராசம்! குடிக்கிற மாதிரி ஒரு டீ போடுயா”
”இங்க குண்டி கழுவத்தான் டீ போடுறோம்”spontaneous ஆக குருட்டுப்பிராசம் பதில்.


சமயவேல் கவிதை-

வாருங்கள்

உனக்கும் எனக்கும்
எனக்கும் அவனுக்கும்
இவனுக்கும் உனக்கும்
கடைசியில் ஒன்றுமில்லை
என ஆனது

அதனாலென்ன வாருங்கள்
டீ குடிக்கப் போகலாம்
என்றேன் நான்.


தேவதேவன் கவிதை -

ஒரு காதல் கவிதை

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;
ஒரு காபி சாப்பிடலாம், வா.



.“If this is coffee, please bring me some tea; but if this is tea, please bring me some coffee.”
-Abraham Lincoln



http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_07.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_17.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-34.html