Share

Showing posts with label ந.பிச்சமூர்த்தி. Show all posts
Showing posts with label ந.பிச்சமூர்த்தி. Show all posts

Jan 26, 2021

ந. பிச்சமூர்த்தி பற்றி

 காதுகள் நாவலில் எம். வி. வெங்கட்ராம் எழுதியுள்ள விஷயம் : "பிச்சமூர்த்திக்கும், புதுமைப்பித்தனுக்கும் அடுத்த இடம் தான் 

நான் கு. ப. ரா. வுக்கு கொடுப்பேன்" 


வெங்கட்ராம் கு. ப. ரா வின் சிஷ்ய பரம்பரை. 

கு. ப. ரா எழுத்து மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவர் தான். 


என்றாலும் ந. பிச்சமூர்த்தியை தூக்கிப்பிடிக்கிறார். 

அவருடைய வரிசை 

1. ந. பிச்சமூர்த்தி 

2. புதுமைப்பித்தன் 

3. கு. ப. ராஜகோபாலன். 

கு. ப. ரா. வின் மற்றொரு சிஷ்யர் தி. ஜானகிராமன்.   குமுதத்தில் எழுத்தாளர்களுக்கு பிடித்த சிறுகதை கேட்டு வாங்கிய போது தனக்குப் பிடித்த ந.பிச்சமூர்த்தி 'அடகு' கதையைப் பிரசுரிக்கச் செய்தார். 



புதுமைப்பித்தன் பிரச்சினை பற்றி  நான் 

'மேலும்' இதழில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மையெனக் கொண்டாயோ?" கட்டுரை எழுதி 

பிரசுரமாகியிருந்தது. 


திருச்சியில் ஆல் இண்டியா ரேடியோவில் 

கு. ப. ரா பற்றி என் இலக்கியப் பேருரை  ஒலிபரப்பாகி இருக்கிறது. 


ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்ச மூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் ' நூல் பற்றி கருத்தரங்கம். 

நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய 

இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.


ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன்

' ந.பிச்சமூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர். புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர்.

ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?' 

என்று ஊளை இட்டான்.


இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது. புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம்.


 ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும்.


நான் ஆரம்பித்தேன் " வெங்கட் சாமிநாதன் சொல்வார் -' நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . '


 இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள்.


க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன்,மௌனி, கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார்.


லா. ச .ரா சுபமங்களா பேட்டியில் கேள்வி

 " உங்களை கவர்ந்த,பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?

லா.ச .ரா பதில் " அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார். ந. பிச்சமூர்த்தி. ரொம்ப விரும்பி படிச்சேன்.ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை! "


நான் சொல்கிறேன் . 'கபோதி' ,' காவல் ' 'அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை. தனிப்பட்ட முறையில் எனக்கு

 ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம்,மரியாதை உண்டு " என்றேன்.


Induvidual choice. 


இப்போது முக நூலில் சகோதரி பத்மஜா நாராயணன்  எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு 

வருகிறது. ஏனென்றால் அதில் ந. பிச்சமூர்த்தி பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். 

" வாசிக்கத் தெரிந்த அனைவரும் வாசித்தே

 ஆக வேண்டிய சிறுகதை பிச்ச மூர்த்தியின் 

' ஒரு நாள் '. 

க. நா. சு சிறந்த படைப்பாளி. 

'ஒரு நாள்' என்று விசேஷத்தரமான நாவல் எழுதியிருக்கிறார்.


மனதில் மேலெழும் இன்னொன்று.

 Associate memory. 

ந. பிச்சமூர்த்தியின் அப்பா பெயர் நடேசன். 


ந. முத்துசாமி தகப்பனார் பெயரும் நடேசன் தான். 


பிச்சமூர்த்தியும், முத்துசாமியும் தங்களின் ஏழாவது வயதில் தகப்பனை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

... 

Oct 31, 2020

பட்ட மரம்

 


"இள இளவென்று இலையும் தளிரும் மலருமாகப்                           பூத்து நின்ற மரமில்லை அது இப்போது. 

இலை, தளிர், மலர் எல்லாம் மறைந்து விட்டன. 

இடி விழுந்த மரம் போல் உள்ளம் கூடோடி விட்டது. 

புறத்தையும்  துயர கறையான் சாரி வைத்துத் 

 தின்று கொண்டிருக்கிறது. 

பலமாக ஒரு காற்று வீசினால் போதும். 

மள மளவென்று மரம் சாய்ந்து விடும்."


- தி. ஜானகிராமன்  'வெயில்' சிறுகதையில் 


.......... 


"அந்த பட்ட மரம் தனிப்பட்டு, 

தலைவிரி கோலத்தில் நின்று

மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது.. 


ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்

  கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா? விரிக்கப்பட்ட சாமரம் போன்று

ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது?...

அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?"


--- மௌனி

' அழியாச்சுடர் ' கதையில்


..........


"காம்பு இற்றுப்போச்சு ...

நான் பூக்க மாட்டேன்.

காய்க்க மாட்டேன்

பழம் தர மாட்டேன்.

குயிலுக்கும் கிளிக்கும் 

என்னிடம் வேலையில்லை.

மரம் கொத்திப்பறவை வந்து

ஏணி மீது ஏறுவது போல்

 படிப்படியாக ஏறி

இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.

நான் ஓய்ந்து விட்டேன். 

ஒடுங்கி விட்டேன். 

காய்ந்து விட்டேன்."


--- ந . பிச்சமூர்த்தி

'அடுப்புக்கு எதிரில் ' கதையில்

Jun 16, 2019

அப்பப்பா


இன்னக்கி Father’s day. அப்பா பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமோ?
ந.பிச்சமூர்த்தி அப்பா பெயரும் நடேசன் தான்.
ந.முத்துசாமி அப்பா பெயரும் நடேசன் தான்.
ந. பிச்சமூர்த்திக்கு ஏழு வயது இருக்கும்போது தான் அவருடைய அப்பா செத்துப்போய் விட்டார்.
ந.முத்துசாமி தன் ஏழு வயதில் தான் தகப்பனை இழந்தார்.

”இந்த அப்பாவால வந்த வினை, இன்னக்கிச் செத்தாப்பலே இருக்கு. எனக்கு ஏழு வயசில செத்தார்.  ( ஏக்கத்துடன்) இன்னும் கொஞ்ச வயசு வந்த பின்னாலே மட்டும் செத்து இருந்தார்னா?” ந.முத்துசாமியின் ’அப்பாவும் பிள்ளையும்’
நாடக வசனம். 

…..
’வெண்ணிலா குடை பிடிக்க
வெள்ளி மீன் தலை அசைக்க
விழிவாசல் வழி வந்து இதயம் பேசுது’
கதை பேசும் தேனிசையாய் சினிமா பாடல் இணையத்தில் கேட்டு ஒரு நிமிடத்தில்
ஒரு டி.வி சேனலில் செய்தி ஒன்று கவனிக்க நேரிட்டது
‘வயிற்று வலிக்கான மாத்திரைக்குள் சேஃப்டி பின் போன்ற சின்ன கம்பி. மாத்திரையை உடைத்து பாதியாக சாப்பிட நினைத்த போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.’
When fate arrives, the patient becomes an idiot.
Pharmaceutical drug snatches away the health.
(என் அப்பா பற்றிய இரண்டு பதிவுகளின் லிங்க் கீழே)

புகைப்படத்தில் நானும் என் அப்பாவும் என் மூத்த மகனும்

Apr 11, 2017

Individual Choice


'என்னுடைய பிராமண நேசம் உறுதியானது '
ஆதவனின் ' அன்னை வடிவமடா ' சிறுகதை படித்து பாருங்கள்.
ஒரு இனமே கொடூரமானது என்று பாசிசம் பேசுகிற மனிதர்களுடன் நான் என்றும் உடன்படவே மாட்டேன்.
யூத இனத்தின் மீது ஹிட்லர் காட்டிய கொடிய வெறுப்பை தான் ' பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானை முதலில் அடி ' என்று திராவிட சித்தாந்திகள் முன் வைத்தீர்கள்.
தலித்களுக்கு அவமானம், புறக்கணிப்பு, கொடுமை எல்லாவற்றையும் கடந்த நூறு வருடங்களில் நிகழ்த்தி காட்டியது பிற்படுத்த வகுப்பை சார்ந்த ஜாதி இந்துக்கள் தான்.இந்த ஜாதி இந்துக்கள் தான் அனைத்து திராவிட கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்தார்கள்.


பாரதி துவங்கி குபரா, பிச்சமூர்த்தி, மௌனி, க நா சு, சிட்டி, சி சு செல்லப்பா,
லா ச ரா, தி .ஜானகி ராமன், கரிச்சான் குஞ்சு,சுந்தர ராமசாமி, நகுலன்,
ந.முத்துசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் போன்ற பிராமணர்கள் தான் எனக்கு புனிதர்கள் .
Great writers are the Saints for the godless!


ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் ' நூல் பற்றி கருத்தரங்கம். நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.

ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன்
' ந.பிச்சமூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர். புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர்.ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?' என்று ஊளை இட்டான்.

இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது. புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம். ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும்.


நான் ஆரம்பித்தேன் " வெங்கட் சாமிநாதன் சொல்வார் -' நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . '
இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள்.

க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன்,மௌனி, கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார்.

 சுபமங்களா பேட்டியில் கேள்வி " உங்களை கவர்ந்த, பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?”
லா.ச .ராமாமிர்தம் பதில் " அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார். ந. பிச்சமூர்த்தி. ரொம்ப விரும்பி படிச்சேன்.ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை! "

நான் சொல்கிறேன் . 'கபோதி' ,' காவல் ' 'அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை. தனிப்பட்ட முறையில் எனக்கு ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம்,மரியாதை உண்டு " என்றேன்.
சில நேரம் அசிங்கமான உளறல்களுக்கு இப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.


இப்படி நான் சொன்னவுடன் அந்த 'தமிழ் பேராசிறியவன்' கொந்தளித்து எழுந்து 'என்னை அவமானப்படுத்துவதற்காக இவர் திட்டம் போட்டு இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிறார். ' என மீண்டும் மீண்டும் சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்கு ன்னு ஆட ஆரம்பித்தான்.

நான் பேசியதில் பிச்சமூர்த்தியை தூக்கி பிடித்ததில் இவனுக்கு என்ன அவமானம். அது தான் பண்டித திமிர். முறையாக தரவுகளை வைக்க போகிறேன் என்பதை புரிந்து கொண்டவுடன் அவனுடைய பாண்டித்யத்துக்கு அவமானம்!

Individual Choice என்று ஒன்று எனக்கு இருக்கிறதல்லவா? அவன் நிர்த்தாட்சண்யமாக சுந்தர ராமசாமியை அவமானப்படுத்தி ந.பிச்சமூர்த்தியை தூக்கி ஒட்டு மொத்தமாக கடாசும்போது ஒரு கலைஞனை நான் தூக்கி பிடிக்க எனக்கு உரிமை இல்லையா? அதுவும் நான் வசமாக வெங்கட் சாமிநாதனை,
க நா சு , லாசரா ஆகியோரை துணைக்கு கூப்பிடவும் அவன் திகைத்து போய் அசிங்கமாக ஆட ஆரம்பித்தான்.

இவனுக்கு கரண்ட் ஷாக் கொடுக்க வேண்டாமா?அதனால்
"உட்கார்ரா சும்பக்கூதி .. " என்று நாலாந்தரமாக நான் இறங்கி ஒரு சத்தம் பலமாக கொடுத்தேன்.

சிலை மாதிரி அசையாமல் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான்.இது தான் அவனுக்கு உண்மையான அவமானம் என உணர்ந்து அழாத குறையாக உறைந்து போய் உட்கார்ந்து விட்டான்.பூர்ண பௌர்ணமி திடீரென்று அமாவசையானது போல!

இலக்கிய கூட்டம் உடனே ..அந்த நிமிடத்தில் இனிது நிறைவடைந்தது!

................................

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/…/sasthi-brata-my-god-died…

http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_2432.html



 

Aug 29, 2012

ந.பிச்சமூர்த்தி


Oct 9, 2009



மகமாயி - வேஷ்டி

சாதாரணமா இந்த நவீன யுகத்தில் ஏழ்மையில் உள்ள ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால் "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது.

முகத்தில் அம்மைத்தழும்பு. ஒரு ஏழைப்பெண். இவள் பெயர் பார்வதி . இவளைப்பற்றி ந .சிதம்பர சுப்பிரமணியம் " என்று வருவானோ " என்ற சிறுகதையில் விவரிக்கும் அழகு : " லக்ஷ்மியின் அருள் அவளிடம் விழவில்லையானாலும் மகமாயி யின் கருணை அவள் மேல் விழுந்து முகத்தில் அநேக இடங்களில் பதிந்திருந்தது ."


வீட்டில் அறைக்குள் சூரிய வெளிச்சம் விழுவதும் பின் மறைவதும் சாதாரணம் தான். இதை ந.பிச்ச மூர்த்தி ' வலி ' சிறுகதையில் எப்படி விவரிக்கிறார் :

கண்ணுக்கு எதிரே வெள்ளைத்துணி பறந்தது .... ஒன்றுமில்லை . எதிர்ப்புரத்து சன்னல் வழியாக சூரியன் நுழைந்து சுவரில் வெள்ளைத்துணியைக் கட்டிக்கொண்டிருந்தான் ...

( கொஞ்ச நேரங்கழித்து )

சூரியன் கட்டிய வெள்ளை வேஷ்டி சுவரில் பாதியும் தரையில் பாதியுமாகக் கிடந்தது .

(இன்னும் நேரங்கழித்து )

கீழே புரண்ட துணியை சூரியன் எடுத்துக் கொண்டு போய் விட்டான் .

........

Dec 24, 2009


மாய யதார்த்தம்
A realistic setting is invaded by something too strange to believe.
"காட்டில் திரியும் வேங்கை நிலவில் மரத்தில் நகத்தை ஆழப் பதித்து விட்டுப் போய் விடுகிறது . அதைப் பின்னரோ மறுநாளோ பார்த்த பிராணி கிலி பிடித்து உயிரை விட்டு விடுகிறது!வேட்டையாட வேண்டிய கஷ்டமில்லாமல் உணவு "

-ந. பிச்சமூர்த்தி ' பஞ்சகல்யாணி ' கதையில் புலியின் புத்திசாலித்தனமான உணவுத் தேடல் பற்றி. The peculiar attitude on the part of tiger towards it's prey!
இங்கே புலி மரத்தில் வரைகிறது .


கோவையிலுள்ள தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். கவிஞன் வரையும் மரம். வரைந்த பின் பறந்து விட்ட பறவைகள் மீண்டு வந்து அமர்ந்த மரம். Illogical Scenerio!

COLERIDGE FORMULA வுக்கு உதாரணம்.

Willing Suspension of Disbelief in constituting the poetic faith.

Justification of the use of fantacy and non-realistic elements in creative writing.

பறவைகளை வழி நடத்து

பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும்
அது பறந்து விட்டது
மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன்
அதுவும் பறந்து விட்டது
நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள் பறந்து கொண்டே இருந்தன
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.

.........


Nov 26, 2008


பட்ட மரம்

அந்த பட்ட மரம் தனிப்பட்டு ,தலைவிரி கோலத்தில் நின்று
மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது
.....................
" ஆமாம் மரம் தான் . ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்
கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா ? விரிக்கப்பட்ட சாமரம் போன்று
ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது ?...
அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது ? எதற்காக ?

--- மௌனி
' அழியாச்சுடர் ' கதையில்
........................................




காம்பு இற்றுப்போச்சு ...
நான் பூக்க மாட்டேன் .
காய்க்க மாட்டேன்
பழம் தர மாட்டேன் .
குயிலுக்கும் கிளிக்கும் என்னிடம் வேலையில்லை .
மரம் கொத்திப்பறவை வந்து
ஏணி மீது ஏறுவது போல் படிப்படியாக ஏறி
இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.
நான் ஓய்ந்து விட்டேன் . ஒடுங்கி விட்டேன் . காய்ந்து விட்டேன் .

--- ந . பிச்சமூர்த்தி
'அடுப்புக்கு எதிரில் ' கதையில்

.........

http://rprajanayahem.blogspot.in/2012/07/individual-choice.html


 

Jul 20, 2012

Individual Choice


மீள் பதிவு -    16-11-2008ல் எழுதப்பட்டது.

'என்னுடைய பிராமண நேசம் உறுதியானது ' என்ற என் வார்த்தைகள் மீண்டும் பல கோபமான கமன்ட்களுக்கு வழிவகுத்து அரசியலுக்குள் என்னை இழுத்து புரட்டிபார்க்கிறது.

ஆதவனின் ' அன்னை வடிவமடா ' சிறுகதை படித்து பாருங்கள்.

அதோடு ஒரு இனமே கொடூரமானது என்று பாசிசம் பேசுகிற மனிதர்களுடன் நான் என்றும் உடன்படவே மாட்டேன் என்பதைத்தான் என் பிராமண நேசம் மூலம் நான் பகீரங்கமாக பிரகடனப்படுத்துகிறேன். யூத இனத்தின் மீது ஹிட்லர் காட்டிய கொடிய வெறுப்பை தான் ' பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானை முதலில் அடி ' என்று திராவிட சித்தாந்திகள் முன் வைத்தீர்கள்.

தலித்களுக்கு அவமானம், புறக்கணிப்பு, கொடுமை எல்லாவற்றையும் கடந்த நூறு வருடங்களில் நிகழ்த்தி காட்டியது பிற்படுத்த வகுப்பை சார்ந்த ஜாதி இந்துக்கள் தான் என்பதை அனைவரும் அறிவோம். இந்த ஜாதி இந்துக்கள் தான் அனைத்து திராவிட கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்தார்கள்.

தோழர் ஜீவா சொன்னார்
" பாரதி அமுத இலக்கியம்! பாரதி தாசன் நச்சு இலக்கியம்!! "
ஐம்பது வருடம் முன் அமெரிக்கன் கல்லூரி இலக்கிய கூட்டம் ஒன்றில்!

பாரதி துவங்கி குபரா, பிச்சமூர்த்தி, மௌனி, க நா சு, சிட்டி, சி சு செல்லப்பா,
 லா ச ரா, தி .ஜானகி ராமன், கரிச்சான் குஞ்சு,சுந்தர ராமசாமி, நகுலன், 
ந.முத்துசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் போன்ற பிராமணர்கள் தான் எனக்கு புனிதர்கள் .
Great writers are the Saints for the godless!

ஒரு வேதனை பாருங்கள். ராஜாஜி பற்றிய ஒரு Folkloreபதிவு ஜாதி பிரச்சனை யாகி விட்டது. இன துவேச பாசிச ஓநாய்கள் ஊளை தான் இதற்கு காரணம். ஒற்றை பரிமாணத்தில் பார்க்கும் கொக்குகள்! கொக்குக்கு ஒரு புத்தி!!

ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்ச மூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் ' நூல் பற்றி கருத்தரங்கம். நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.

ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன்
' ந.பிச்சமூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர். புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர்.ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?' என்று ஊளை இட்டான்.

இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது. புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம். ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும்.

நான் ஆரம்பித்தேன் " வெங்கட் சாமிநாதன் சொல்வார் -' நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . '



 இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள்.

க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன்,மௌனி, கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார்.

லா. ச .ரா சுபமங்களா பேட்டியில் கேள்வி " உங்களை கவர்ந்த,பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?
லா.ச .ரா பதில் " அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார். ந. பிச்சமூர்த்தி. ரொம்ப விரும்பி படிச்சேன்.ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை! "

நான் சொல்கிறேன் . 'கபோதி' ,' காவல் ' 'அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை. தனிப்பட்ட முறையில் எனக்கு ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம்,மரியாதை உண்டு " என்றேன் .
சில நேரம் அசிங்கமான உளறல்களுக்கு இப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்படி நான் சொன்னவுடன் அந்த 'தமிழ் பேராசிறியவன்' கொந்தளித்து எழுந்து 'என்னை அவமானப்படுத்துவதற்காக இவர் திட்டம் போட்டு இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிறார். ' என மீண்டும் மீண்டும் சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்கு ன்னு ஆட ஆரம்பித்தான்.
நான் பேசியதில் பிச்சமூர்த்தியை தூக்கி பிடித்ததில் இவனுக்கு என்ன அவமானம். அது தான் பண்டித திமிர். முறையாக தரவுகளை வைக்க போகிறேன் என்பதை புரிந்து கொண்டவுடன் அவனுடைய பாண்டித்யத்துக்கு அவமானம் !

Individual Choice என்று ஒன்று எனக்கு இருக்கிறதல்லவா? அவன் நிர்த்தாட்சண்யமாக சுந்தர ராமசாமியை அவமானப்படுத்தி ந.பிச்சமூர்த்தியை தூக்கி ஒட்டு மொத்தமாக கடாசும்போது ஒரு கலைஞனை நான் தூக்கி பிடிக்க எனக்கு உரிமை இல்லையா? அதுவும் நான் வசமாக வெங்கட் சாமிநாதனை,
க நா சு , லாசரா ஆகியோரை துணைக்கு கூப்பிடவும் அவன் திகைத்து போய் அசிங்கமாக ஆட ஆரம்பித்தான்.

இவனுக்கு கரண்ட் ஷாக் கொடுக்க வேண்டாமா?அதனால் ..

"உட்கார்ரா சும்பக்கூதி .. " என்று நாலாந்தரமாக நான் இறங்கி ஒரு சத்தம் பலமாக கொடுத்தேன்.

சிலை மாதிரி அசையாமல் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான்.இது தான் அவனுக்கு உண்மையான அவமானம் என உணர்ந்து அழாத குறையாக உறைந்து போய் உட்கார்ந்து விட்டான்.பூர்ண பௌர்ணமி திடீரென்று அமாவசையானது போல!

இலக்கிய கூட்டம் உடனே ..அந்த நிமிடத்தில் இனிது நிறைவடைந்தது!

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_3740.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_15.html

Nov 26, 2008

பட்ட மரம்


அந்த பட்ட மரம் தனிப்பட்டு ,தலைவிரி கோலத்தில் நின்று
மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது
.....................
" ஆமாம் மரம் தான் . ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்
கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா ? விரிக்கப்பட்ட சாமரம் போன்று
ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது ?...
அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது ? எதற்காக ?

--- மௌனி
' அழியாச்சுடர் ' கதையில்
........................................




காம்பு இற்றுப்போச்சு ...
நான் பூக்க மாட்டேன் .
காய்க்க மாட்டேன்
பழம் தர மாட்டேன் .
குயிலுக்கும் கிளிக்கும் என்னிடம் வேலையில்லை .
மரம் கொத்திப்பறவை வந்து
ஏணி மீது ஏறுவது போல் படிப்படியாக ஏறி
இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.
நான் ஓய்ந்து விட்டேன் . ஒடுங்கி விட்டேன் . காய்ந்து விட்டேன் .

--- ந . பிச்சமூர்த்தி
'அடுப்புக்கு எதிரில் ' கதையில்