Share

Showing posts with label Wordsworth. Show all posts
Showing posts with label Wordsworth. Show all posts

Jan 28, 2021

A melancholic strain



"முடிவற்று 

நீளும் பாதையில் 

சிறு நத்தையென நகர்கிறதென் 

தனிமை.. "

- பரமேசுவரி 


பரமேசுவரியின் கவிதையைத் தொடர்ந்த 

எண்ண ஓட்டத்தில்... 


சிறுவனாக இருக்கும்போது

 ஏழாம் வகுப்பில் படித்த 

William Wordsworth 's The Solitary Reaper. 


Behold her, single in the field,

Yon solitary Highland Lass!

Reaping and singing by herself;


Alone she cuts and binds the grain,

And sings a melancholy strain.. 


O listen! 


No Nightingale did ever chaunt

More welcome notes... 

 

A voice so thrilling ne'er was heard

In spring-time from the Cuckoo bird.. 


Will no one tell me what she sings?


Some natural sorrow, loss, or pain,

That has been, and may be again?


Whate'er the theme, the Maiden sang

As if her song could have no ending... 


எந்த பெரிய அனுபவமுமில்லாத 

பன்னிரெண்டு வயதில், 

நெஞ்சில் நிறைந்த துக்கத்தை 

இந்த கவிதை ஏன் ஏற்படுத்தியது?


இன்று இப்போது

 ஒன்றுமில்லாமல் புத்தி வறண்டிருப்பது

 தி. ஜானகிராமன் வார்த்தைகளில் 

இதமாகத் தான் இருக்கிறது. 

The bliss of solitude. 


உறைந்து போன நிலை. 


எட்டயபுரம் தலப்பா கட்டி தந்த சிட்சை - 

'நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்'


Man is left alone in this world 

ஜோஷ் வண்டேலு 'அபாயம்' நாவலில் வருகிறது. 


ஜோஷ் சொன்னதையும் தாண்டி, 

நகுலன் 

" எனக்கு யாருமே இல்லை. 

நான் கூட " என வேதனைப்பட்டவர்.


இன்னொரு associate memory.. ஒரு சிறுகதை. வண்ணநிலவன் சிறுகதை.' மிருகம் '. பன்முக விவரணை. சிவனு நாடார் நாயை எதிர் கொள்ளும் மிருக இயல்பு. வறுமை. தனிமை.         

 பயங்கர தனிமையை சித்திரமாக்கிய கலைஞன் வண்ணநிலவன்.


..