Share

Showing posts with label கு.ப.ராஜகோபாலன். Show all posts
Showing posts with label கு.ப.ராஜகோபாலன். Show all posts

Nov 22, 2017

திருச்சி ஆல் இண்டியா ரேடியோ


இந்திரா பார்த்தசாரதியின் ’ராமானுஜர்’ நாடகத்திற்கு சரஸ்வதி சம்மான் விருது கொடுக்கப்பட்ட போது திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில் நான் அந்த நாடகம் பற்றி ஒரு உரை (இருபது நிமிடத்திற்கு) நிகழ்த்தினேன்.

அப்போது ரவிசுப்ரமண்யன் இ.பா பற்றி ஒரு டாகுமெண்ட்ரி மூவி செய்ய இருந்த நேரம். இந்திரா பார்த்தசாரதி அவரிடம் என்னிடம் பேசச்சொல்லி ரவி போனில் பேசினதுண்டு. நான் வாசித்த கட்டுரையை அனுப்பி வைத்தேன்.


மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா பற்றி ஒரு இலக்கிய பேருரை ( அரை மணி நேரம் ) நான் திருச்சி ரேடியோவில் செய்திருக்கிறேன். வாசித்த அந்த நீண்ட கட்டுரையை நான் அந்த ரிக்கார்டிங் ரூமிலேயே விட்டு விட்டு வந்தேன்.

இந்தி கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து வாசித்திருக்கிறேன். அந்த கவிதைகளை ஆல் இண்டியா ரேடியோவில் அவர்களே தந்து மொழிபெயர்க்க சொல்லியிருந்தார்கள்.
ஒரு கவிதையை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்பதில் சிரமம் இருந்த போது என் தகப்பனார் எனக்கு உதவியிருக்கிறார்.
மொழிபெயர்த்த கவிதைகளையும் கூட ரிக்கார்டிங் முடிந்ததும் அங்கேயே வைத்து விட்டு வந்தேன்.


நான் திருப்பூர் வந்த பிறகு கூட இவை ரேடியோவில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டதாக திருச்சி நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
………………………………………………..


Nov 24, 2009

Carnal Thoughts -26

மோகவாதையில் கண்கள்


கலவியின் உச்சம் காணும்போது கண்கள் நிலை ? சொருகி மூடிய கண்கள்!


கு.ப.ராவின் " ராஜபிக்ஷினி '' சிறுகதையில்

"சுக சிகரத்தில் ராஜ்ய ஸ்ரீ
அரசன் கிருகவர்மன் ஓர் இளம் காதலனின் நித்யவேட்கையிலேயே இருந்து கொண்டு , அவள் காதுகளில் ஈரச் சொற்களை இரகசியமாக நிரப்பி, இடைவிடாது ஏகாந்தத்தில் அவளைப் புல்லரிக்கச் செய்தான். சதா கண்மூடி மௌனமாகும் காதல் நிலையை அளித்தான்."

பாரதி தன் பங்குக்கு
அந்த மின்னற்சுவையனுபவ வினாடிகளில்,
மோகவாதையில் கண்கள் நிலை பற்றி குயில் பாட்டில் சொல்கிறார் !

"ஆவிக்கலப்பின் அமுத சுகந்தனிலே

மேவியாங்கு மூடியிருந்த விழி நான்கு "




மோகப்பெருமயக்கு நிலையில்

விழியில் மிதந்த கவிதையெல்லாம் சொல்லில் அகப்படுமா?