ஈகா தியேட்டருக்கு பின்னால் இருந்த மலையாளி முஸ்லிம் ஹாஸ்டலில் சண்முகசுந்தரம் ( முன்னாள் அட்வகேட் ஜெனரல்) ஜஸ்டிஸ் அக்பர் அலி ( காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயிலில் வைத்தவர்) ஜமால் (இன்கம்டாக்ஸ் கமிஷனரானார்) வக்கீல் கலாம் ஆகியோருடன் சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த ராஜநாயஹம்.
எங்களோடு அபுபக்கர் ( மலையாளி)
அஷ்ரஃப் அலிகான் ( ஆந்திரா).
அஷ்ரஃப் அலிகான் நியூ காலேஜில் விரிவுரையாளர்.
அஷ்ரஃப் அலிகானிடம் தமிழில் " அக்பர் அலி எங்கே" என்றால்
"இப்பத்தான் வெளிய போச்சி. "
" அபுபக்கர் எங்கே "
அஷ்ரஃப் அலிகான் " ஆஃபிஸ்ல இருந்து வந்துடிச்சி. டீ சாப்ட ஹாஸ்டல் மெஸ்ஸுக்கு போயிடிச்சி"
"Shani is not in good mood. கோர்ட்லருந்து கோபமா வந்திச்சி "
ஆடு, மாடு, நாய்க்கெல்லாம் மரியாதை தரக்கூடியவர்.
" இன்னக்கி ஹாஸ்டலுக்குள்ள நாய் வந்துட்டாங்க "
" ரெண்டு கழுத உள்ள வந்து கத்துறாங்க "
" டைரக்டர் ஒன்கு தெரியுமா? Yesterday ஆடுங்க கூட்டமா கெல்லீஸ் ரோட்ல. ஸ்கூட்டர் சிரமப்படுறாங்க. கார், பஸ் நின்னுட்டாங்க."
இந்த அஷ்ரஃப் அலிகான் நியூ காலேஜில்
வேலை பார்ப்பவர்.
"டைரக்டர், டமில்ல முத்துராமன்னு ஆக்டர் இருக்கா? அதோட மகன் முரளி my student"
முத்துராமன்" பணம் பெண் பாசம் " னு சொந்தப்படத்தில அப்ப மாணவனாயிருந்த மகன் முரளி தான் தயாரிப்பாளர்.
முரளி தான் பின்னால கார்த்திக்.
"டைரக்டர், ஒன்கு நியூஸ். முரளிய
ஏதோ பெரிய டைரக்டர் நடிக்க கூப்டுதாம்."
பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தில் கதாநாயகனாக புக் செய்த விஷயத்த அஷ்ரஃப் அலிகான் தான் எங்க எல்லாருக்கும் முதல்ல "சொல்லிச்சி".
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.