Share

Nov 11, 2025

கலைஞானம்

கலைஞானம் "இது நம்ம ஆளு"
கிருஷ்ணையராக நடிக்கும் போது பக்கத்தில் காட்சிகளில் துணை நடிகர்கள் நிற்கும் போது சங்கடப்பட்டிருக்கிறார். 
"என்னடா, நான் திரைக்கதை ஆசிரியர், படத்தயாரிப்பாளர். ரஜினி, சிவாஜி படமெல்லாம் எடுத்தவன். இவனுங்க ஷாட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னால, ப்ரேக்ல அண்ணேங்கறானுங்க" ன்னு அய்யரவாயிருந்ததாக 'ராசுக்குட்டி' காலத்தில் பாக்யா ஆஃபிஸில் சொன்னதுண்டு.
சுவாரசியமான typical சினிமாக்காரர். 
சினிமா சம்பந்தப்பட்ட taboos and inhibitions.

பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கதை சொல்லும் போதே மதுரை profanity கலந்தே வரும். வட்டார கெட்ட வார்த்தைகளோடு தான் 
கதா பாத்திர உரையாடல்.

இதை கூத்துப்பட்டறை ஆசிரியராக நடித்து காட்டியதுண்டு.

"தேனிசை மழை" கதை பாரதிராஜாவிடம் கலைஞானம் சொல்லி இவர் உற்சாகமாக பல மாதிரி உழைத்த பிறகு 
பாரதி ராஜா படம் எடுப்பதாயில்லை என்று சொன்ன போது இழப்பின் வேதனையோடு பின்னாளில் கோபத்தோடு கலைஞானம் சொன்ன வார்த்தைகள் காதிலே இன்னும் ஒலிக்கிறது.

 சென்ற பாக்யராஜ் சாருடன் ப்ரசாத் ஸ்டுடியோ போயிருந்த போது மீண்டும் கலைஞானத்தை சந்திக்க வாய்ப்பு.
ராஜநாயஹம் பெயரை சொன்னவுடன் பக்கத்து சீட்டில் உட்கார சொன்னார்.
சிவகுமார் அப்போது ஹாலில் நுழைந்தவர் கலைஞானத்தை செல்லமாக  " சின்னப்பையன்" என்று விஷ் பண்ணார்.  "அடுத்த சீட்ல உக்காருங்க" என்று அவர் அமர்ந்து கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.