தர்மேந்திரா, ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் மூவரில் தர்மேந்திராவின் இடம் எது என்பதில் குழப்பமேயில்லை.
"மற்ற இருவரின் இடத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. அவர்களின் விஸ்வரூபத்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்பதாகத் தான் பெர்ஃபான்ஸ்.
திலீப்குமார், தேவ் ஆனந்த்,
ராஜ் கபூர், ஷம்மி, சசி,
ராஜ்கபூர் மகன்கள் ரந்திர், ரிஷி எல்லோரையும் பார்த்து விட்டு தான் யாதோன் கி பாரத், ஷோலே என்று பட்டையை கிளப்பினார்.
பியார் ஹி ப்யார், தும் ஹஸின் மெய்ன் ஜவான், சீத்தா அவுர் கீத்தா, யாதோன் கி பாராத், ஷோலே - கண்ணுக்குள் நடமாடுகின்றன.
I am romantic, witty, naughty... and I show that in my acting.
ரிஷிகேஷ் முகர்ஜியின் சத்யகாம் தர்மேந்திர அவதாரம்.
இதை ஜெமினி கணேஷ் கதாநாயகனாக பாலச்சந்தர் "புன்னகை" யாக ரீமேக் படமாக்கினார்.
"People say that artists come and go but let me tell you I am not an artist" என்பார். மனிதம் மிகுந்தவனாக கர்வம் கொண்டிருந்தவர்.
தி. ஜானகிராமன் "மலர் மஞ்சம்" பாலி போலத்தான் ஹேமா மாலினி.
இருவரை தன் மனதில் கொண்டிருந்தார்.
தர்மேந்திரா மணமானவர். ஜிதேந்திராவை திருமணம் செய்வது தான் சிலாக்கியமானது என்று கிளம்பி போய் விட்டார். தர்மேந்திரா மனம் தளராமல் (விட்டேனா பார்) ஜிதேந்திராவின் காதலி ஷோபாவை உசுப்பேத்தி " பாரும்மா, ஜிதேந்திரா உனக்கு துரோகம்" என்று ஷோபாவை கூட்டிக்கொண்டு ஸ்பாட்டுக்கே போய் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி பின் ஹேமா மாலினி கரம் பிடித்தார். ஜிதேந்திராவின் மனைவியானார் ஷோபா.
தர்மேந்திரா சிரிப்பில் ஜவஹர்லால் கொஞ்சமாக ஜவஹர்லால் நேரு சாயலை காணலாம். Beaming smile.
யாதோன் கி பாராத்தில் சீரியஸாக இருக்கும் தர்மேந்திரா கடைசியில் விரிந்த புன்னகை காட்டும் போது தியேட்டரில் அனைவர் முகங்களிலிலும் அந்த சிரிப்பு தொற்றிக்கொள்ளும்.
ஷோலேயில் அடித்த லூட்டி, அமிதாப் செத்தவுடன் "கப்பர்சிங்" என்று வெறியுடன் கிளம்புவது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.