Share

May 12, 2026

சட்டமன்ற சபாநாயகர்


இன்றைய சட்டமன்ற சபாநாயகர் 
ஜே.சி.டி. பிரபாகரன் பற்றி முதன் முதலில் கேள்விப்பட்ட நிகழ்வை காலக்கண்ணாடி காட்டுகிறது.

அப்போதெல்லாம் வில்லிவாக்கம் பிரபாகரன்.
தமிழகத்தில் அன்றைய பெரிய தொகுதியான வில்லிவாக்கம் எம்.எல்.ஏ.

ஈகா தியேட்டருக்கு பின்புறம் இருந்த ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்பிடலில் அப்போது தங்கியிருந்த போது 
வக்கீல் அக்பர் அலி இந்த பிரபாகரன் பற்றி சொன்னார். 
கல்லூரியில் எப்போதும் எம்ஜிஆர் பற்றியே தான் உரையாடும்போதெல்லாம் பேசுவாராம்.
எம்ஜிஆரின் அத்தியந்த பக்தன் பிரபாகரன். கல்லூரி திமுக மாணவர்கள் இவரை அடையாளமிட சொல்வது 
' எம்ஜிஆர் வெறியன்' .



எம்ஜிஆர் சிவாஜி இருவருக்கும் மூர்க்கமான ரசிகர்கள்.

வக்கீல் ஜாஃபர் அலி ராஜநாயஹத்தை 'டைரக்டர்' என்றே சொல்வார். 
சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டர் எம்.இ.எஸ் ஹாஸ்டலுக்கு டைரக்டர் தான்.

பின்னாளில் செங்கல்பட்டு ஜட்ஜாக அக்பர் அலி இருந்த போது சங்கராச்சாரியாரை சிறை வைத்தவர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி 
அக்பர் அலி. 

ஜஸ்டிஸ் அக்பர் அலி பற்றி எழுதியதுண்டு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.