Share

Oct 14, 2008

Carnal thoughts-9

நடிகை ஜெயந்தி பெக்கட்டி சிவராமின் இரண்டாவது மனைவி . இவர் கன்னட டைரெக்டர் . பெக்கட்டி சிவராம் முதல் மனைவியின் மகள் இப்போதைய நடிகர் பிரசாந்தின் தாயார் .நடிகர் திர்யாகரஜனின் மனைவி .
நடிகை ஜெயந்தி இருவர் உள்ளம் ' பறவைகள் பலவிதம் ' பாடல் காட்சியிலேயே வருவார் . பின்னர் தமிழில் நீர்க்குமிழி ,பாமா விஜயம் , எதிர் நீச்சல் போன்ற படங்களில் நாகேஷின் ஜோடி . இருகோடுகள் , கண்ணா நலமா ,புன்னகை போன்ற படங்களில் ஜெமினி யின் ஜோடி . இந்த படங்கள் கே பாலச்சந்தர் இயக்கியவை என்பதை சொல்ல தேவையில்லை .
அந்த ஸ்டூடியோ வில்
மேக்கப் அறையில் தனியே இருக்கும் ஜெயந்தியிடம் டி .எஸ் . பாலையா வருகிறார் .
"உன் மீது எனக்கு வெறியாய் இருக்கிறது . உடனே என் கூட வா ."
ஜெயந்தி மிரண்டு போய் அந்த இடத்தை விட்டு தப்பியோடி போய் அதே ஸ்டூடியோ வில் வேறு தளத்தில் இருக்கும் பெக்கட்டி சிவராமிடம் ஓடிபோய் சொல்கிறார் .
டி எஸ் பாலையாவை இவரால் என்ன கேட்க முடியும் . ஜெயந்தியை சமாதான படுத்துகிறார்!
....
ஜெயந்திக்கும் பெக்கட்டி சிவராமுக்கும் மணமுறிவு பின்னால் ஏற்பட்ட போது
ஜெயந்தி தன் வயதில் பாதி வயதேயான இருபத்திநாலு வயது இளைஞருடன் உறவு கொண்டிருந்தார் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.