Share

Oct 15, 2008

Carnal thoughts-10


உன்னை முதல் முதலாக பார்த்த போது !



நடிகைகளின் கணவர்கள் பற்றி அவ்வளவு சிலாக்கியமான அபிப்ராயம் பெரும்பாலும் கிடையாது . கூஜா , மாமாக்காரன் என்ற கொச்சையான பிம்பங்கள் தான் . மேலும் நடிகையின் பணம் , சொத்து தான் நடிகையை மணப்பவரின் இலக்கு என்பதும் உண்மை என்றே நிரூபணமாகியிருக்கிறது .
அதனை நிரூபிப்பது போன்ற நடவடிக்கைகளை நிறைய காண முடியும் .

நடிகை விவாகரத்து பெறும்போது பல திடுக்கிடும் ரகசியங்களை அவர்களின் கணவர் வெளிப்படுத்தி தன் மீதே சேறு அள்ளி வீசிகொள்வார்.

நடிகை ஸ்ரீவித்யா வின் வாழ்வு பரிதாபமானது . எம் எல் வசந்தகுமாரி யின் மகள் . வசந்தகுமாரி Gentleman GNB யின் பிரதான சிஷ்யை . ஜி என் பாலசுப்ரமணியத்தின் பெயரை காப்பாற்றிய அற்புதமான பாடகி . அவருக்கும் கணவர் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும் ஒத்து போனதே இல்லை . இவர்களுக்கு மகளாக பிறந்த ஸ்ரீவித்யாவுக்கு மாலை பொருத்தம் அமையவில்லை .
ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கும்போதே நடிக்க வந்து விட்டார் . "மூன்றெழுத்து "- (இந்த படத்திலேயே அசோகன் கோமாளியாகி விட்டார் . கொனஷ்டைகள் பார்க்க சகிக்காது .இந்த படத்தில் வில்லன் என்னத்தை கண்ணையா ! ஏதோ அசோகன் பின்னாலே கடைசி காலத்தில் தான் கோமாளியாகி விட்டதாக பலர் இப்போது நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.), "நூற்றுக்கு நூறு ", "நான்கு சுவர்கள் "என ஆரம்பித்து "சொல்லத்தான் நினைக்கிறேன் " தாண்டி "அபூர்வ ராகங்களில்" பிரபலமானார் .
தன் முதல் காதல் பற்றி அவர் தெருவில் ஒரு வீட்டில் இருந்த பையனோடு ஏற்பட்ட Infatuation அனுபவம் பற்றி துணிச்சலாக அந்த காலத்தில் பேட்டியில் சொன்னார் .
அதன் பின் கமல் ஹாசன் பிரபலமாகாத காலத்திலிருந்து ( அன்னை வேளாங்கண்ணி படத்தில் ஸ்ரீவித்யா நடிக்கும் போது கமல் உதவி இயக்குனர் ) அவரை காதலித்தார் .
கமல் ஹாசனின் Promiscuous nature என்பது உள்ளங்கை நெல்லிக்கனி . காதல் ரொம்ப நாள் நிலைக்கவில்லை .

பின்னால் ஜார்ஜ் என்ற மலையாள தயாரிப்பாளர் (!) ஒருவரை காதல் (!) திருமணம் செய்துகொண்டு விட்டார் .

இருவருக்கும் விவாகரத்து ஆனபோது சண்டை நாறிவிட்டது .
கோபமாக ஜார்ஜ் குமுதத்திற்கு ஒரு பேட்டி கொடுத்தார் . அதில் அவர் ஸ்ரீவித்யாவை பற்றி முன் வைத்த ஒரு குற்றச்சாட்டு இவர் எத்தகைய இழிய மனிதர் என்பதை மிக அழகாக வெளிப்படுத்தியது .

ஜார்ஜ் சொன்ன அந்த குற்றச்சாட்டு

"இந்த ஸ்ரீவித்யாவை முதல்முதலாக நான் பார்த்தது எங்கே எப்படி தெரியுமா ?

மலையாள நடிகர் மது வின் படுக்கை அறையில் அவருடன் முழு போதையில்!"


4 comments:

  1. //"இந்த ஸ்ரீவித்யாவை முதல்முதலாக நான் பார்த்தது எங்கே எப்படி தெரியுமா ?
    மலையாள நடிகர் மது வின் படுக்கை அறையில் அவருடன் முழு போதையில்!" //

    கல்யாணம் பண்ணும் போது அது மறந்துருசாமா

    ReplyDelete
  2. >இந்த ஸ்ரீவித்யாவை முதல்முதலாக நான் பார்த்தது எங்கே எப்படி தெரியுமா ?
    மலையாள நடிகர் மது வின் படுக்கை அறையில் அவருடன் முழு போதையில்!"> காலம் கடந்த ஞானமா? இல்லை கயமைத்தனம்
    அன்புடன்
    சூர்யா.

    ReplyDelete
  3. //வால்பையன் said...

    //"இந்த ஸ்ரீவித்யாவை முதல்முதலாக நான் பார்த்தது எங்கே எப்படி தெரியுமா ?
    மலையாள நடிகர் மது வின் படுக்கை அறையில் அவருடன் முழு போதையில்!" //

    கல்யாணம் பண்ணும் போது அது மறந்துருசாமா//

    அதானே...

    ReplyDelete
  4. என்னைமுதல் முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்?
    நான் என்னை நினைத்தேன்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.