Share

Oct 20, 2008

A joke is a very serious thing!

அவ்வப்போது ஜோக்ஸ் படிக்கிறோம் அதில் மனதில் நிற்பது எத்தனை . குமுதம் ஆனந்த விகடன் அங்கே இங்கே கிடைத்த ஜோக்ஸ் தான் .யார் எப்போ எழுதினது .தெரியாது .

1 . என்னம்மா சமையல் இது . சாம்பார் லே உப்பே இல்லை . ரசத்துலே புளி இல்லே .

போதும் நிறுத்துங்கப்பா . இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும் .

2 . என் மாமியார் தங்கமானவங்க

இப்போ அவங்க எங்கே

என் புருஷன் குழந்தையா இருக்கறப்பவே இறந்துட்டாங்க

3.தலைவர் எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்ததா சொல்றாரு .. நம்ப முடியல

சாராயம் வித்ததா சொல்றதையா

இல்ல . எட்டாவது படிச்சதா சொல்றதை !

4 .இது வரை ஒரு புறம்போக்கு நிலத்தை கூட தலைவர் தனக்குன்னு வச்சுகிட்டதில்லை

அப்படியா

ஆமாம் . எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாரு !

5. பேரிச்சம்பழ வியாபாரியோட நெருங்கிபழகினது தப்பா போச்சுடி

ஏன் ?

டேட்ஸ் தள்ளி போயிடுச்சிடி .

6. தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே .

எப்படி

காவிரி பிரச்சனையிகன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !

7.ஐயோ மன்னா தப்பா புரிஞ்சிகிட்டீங்க . முற்றிலும் பாதுகாப்பானது என்பதற்காக யுத்தத்தில் condom எல்லாம் பயன் படுத்த முடியாது .

8.மின்னலை பார்த்தா கண்ணு போய்டும் .பார்க்கலைன்னா மின்னல் போய்டும் .

4 comments:

  1. அருமையான தொகுப்பு

    ReplyDelete
  2. ஆனந்த விகடனின் இந்த ஜோக்கும் மறக்க முடியாதது...

    பாருங்க .. உங்க அம்மா என்னை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க..

    சரி சரி விடு.. ஆமா..நீ ஏன் இஞ்சிய திங்கற??

    நல்ல பதிவு..

    நர்சிம்

    ReplyDelete
  3. நம்பர் 8: ஜோக்கல்ல. கவிதை !

    விஜய்

    ReplyDelete
  4. சாதாரணது... உங்கள் பதிவுகளிலேயே.. வேறு ஏதாவது Blogil நுழைந்துவிட்டோமா?
    அட இது நம்ப Jaali நாயகர்(கற்பக விநாயகர் சும்மா மோனைக்கு) உங்களுக்கு அசாதாரணம் மட்டுமே சாத்தியம் என்று எண்ணினேன். ('saadharanam' 2 suzhi Naa va illa 3 suzhi naa va?)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.