Share

Oct 26, 2021

Besame mucho - அனுபவம் புதுமை

 "அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே

பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே" 


"Besame mucho" 

காது கொடுத்துக் கேளுங்கள். 

https://m.youtube.com/watch?v=kIJZSs2gxdo&feature=youtu.be


Retired Customs Joint Commissioner 

Shri. Subramaniam Sakthivel brought this Sesame Mexican song to my notice. 


Thank you Subramaniam sir. 


மெக்சிகன் கம்போஸர் 1940 ல் இயற்றி உலகமெங்கும் பலரால் பாடப்பட்டு பிரபலமான பாடல் "Besame mucho"


இந்த கம்போஸர் ஒரு பெண்.


 என்னைப் போல இந்த அம்மாள் 

ஆகஸ்ட் 21ம் தேதி பிறந்தவர். 


பெயரை எப்படி உச்சரிப்பது? Consuelo Velazquez. 

2005ல் இறக்கும் போது 88 வயது. 


"அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே

பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே"


'காதலிக்க நேரமில்லை' 1964


விஸ்வநாதன் - ராமமூர்த்தி

Oct 20, 2021

S. M.T. R. பாபு

 என்னுடைய மாமனாரின் மூத்த அண்ணன்

 எஸ். எம். டி. ராஜகோபால். 

இவருடைய மனைவி சிவகாசி அத்தை. 

சிவகாமி அத்தையின் தந்தை திண்டுக்கல்

முருகன் டிரான்ஸ்போர்ட் ஓ. சின்னச்சாமி பிள்ளை. 

காங்கிரஸ்காரர். 1967 தேர்தலில் திண்டுக்கல் 

சட்டசபை காங்கிரஸ் வேட்பாளர். 

 கம்யூனிஸ்ட் ஏ. பாலசுப்ரமண்யத்திடம் தோற்றார். 


ராஜகோபால் மாமா கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் மிக்கவர். முறைப்படி சங்கீதம் படித்தவர்.

 கச்சேரி செய்யும் ஞானம் கொண்ட ஞானி. 

சங்கீத ஈடு பாடு காரணமாக இளைஞனாக இருக்கும் போதே 'தங்க மாளிகை' நகைக்கடையில் ஏதேனும் ஒரு கீர்த்தனையை கள்ளக்குரலில் பாடிக்கொண்டு, 

தொடையில் தாளமும் போடுவார். 

தாத்தா தங்க முடியா பிள்ளை " டேய் வியாபாரக்கடையில் தொடையில் தாளம் போடாதே" என்று கண்டிப்பாராம். 


உறவில்லை என்றாலும் கர்நாடக சங்கீத மேதை மதுரை சோமு 

இவரை 'மருமகனே' என்று செல்லமாக 

அன்போடு விளிப்பார். 


எனக்கு திருமணம் முடிந்து ராஜகோபால்  மாமா, 

சிவகாமி அத்தையுடன் தான் அவர்கள் காரில் 

ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு பொண்ணு மாப்பிள்ள வந்தோம். மறு நாள் மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு எங்களை சிவகாமி அத்தை அழைத்துக் கொண்டு போனது இன்றும் ஞாபகமிருக்கிறது. 

மிக கண்ணியமான அற்புதமான சிவகாமி அத்தை. 


தாய் மாமா மகளை பாபு மணந்தார். 


 

ராஜகோபால் மாமா மகன் பாபுவும் 


எங்க பெரியப்பா மகன் ஆரோவும் (இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் தம்பி) 

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களாக சில வருடம் ஒன்றாக படித்தவர்கள். 


ஒரு நாள் பாபுவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது 

பாபுவின் தங்கை சுஜி மாப்பிள்ளை சிவகுமாரின் சொந்த அத்தை மகள் தான்

 பிரபல சினிமா நடிகை ஹீரா என்பதைப் பற்றி பேச்சு வந்தது. 

பாபு "அத்தான், அவங்க எல்லாம் பாத்தீங்கன்னா நெருங்கிய சொந்தமாய் இருந்தாலும் உறவுல ரொம்ப இடைவெளி. ரத்த சொந்தம்னாலும் பெரிசா அன்பு, பாசம், பிரியம் காட்டும் பிணைப்பு எதுவும் கிடையாது." 


நான் சொன்னேன் "இங்க மட்டும் என்ன மாப்ள, 

நாமளும் அப்படித்தான இருக்கோம்" 


ராஜகோபால் மாமா மறைவுக்குப் பின்னர் 


திருப்பூரில் இருக்கும் போது 

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் 

மாப்ள பாபு 

போனில் என்னிடம் 

" அத்தான், ஒங்க பெரியப்பா மகன் பாலு கிட்ட ( ஆஸ்திரேலியா ஆரோவின் அண்ணன்

 கிரிமினல் லாயர் பால்ராஜ்)  இங்கருந்து மூனு பேர திருச்சிக்கு ஒரு கேஸ் விஷயமா அனுப்பியிருந்தேன். பாபுன்னு எம்பேர அவங்க சொன்னவுடனே அவங்களுக்கு தேவையான சட்ட உதவியெல்லாம் ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு பாலு அத்தான். என் பேர சொன்னதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் பாத்துக்குங்க. இங்க அவங்க வந்து ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க. "


ஏனோ அன்று வழக்கத்தை விட மிக நீண்ட நேரம் பாபு என்னிடம் போனில் அன்போடு பேசியதை மறக்க முடியவில்லை. பாபுவின் இயல்புக்கு இது வித்தியாசமாயிருந்தது. 


அடுத்த வாரம் எனக்கு ஒரு போன். 

எஸ். எம். டி. ஆர். பாபு கார் விபத்தில் மரணம்.


..... 


முதல் புகைப்படத்தில் 

S. M. T. R. பாபுவின் திருமணத்தில் நாங்கள்

இரண்டாவது புகைப்படம் ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் என்னுடன் பாபு

மூன்றாம் புகைப்படம் 

ஜெமினியுடன் என் அப்பா பேசும்போது முன்னால் உட்கார்ந்திருக்கும் பாபு.

நான்காவது புகைப்படம் திருச்சி பிரபல வழக்கறிஞர் ஜேசு பால்ராஜ்.











..... 


https://m.facebook.com/story.php?story_fbid=3170718109808300&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3172367679643343&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3164234097123368&id=100006104256328

Oct 19, 2021

 


என் மாமனாரின் அண்ணன் 

எஸ். எம். டி. அங்கு ராஜ் அவர்களின் 

மூன்றாவது மகள் Viji Lakshmi விஜி. 

நாக்பூரில் கணவர் பிரபல டாக்டர் முரளி. 

They have two hospitals in Nagpur. 


என் மனைவியின் ஒன்று விட்ட சகோதரி. 


ரோஜா, ரஜ்ஜி, விஜி மூன்று சகோதரிகள். 

Raji Haresh 


முதல் புகைப்படம் 1990  ம் ஆண்டு 

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜியின் பிறந்த நாளின் 

போது 

விஜி, என் குழந்தை கீர்த்தி, மற்றும் நான். 


இரண்டாவது புகைப்படம் இப்போது நாக்பூர் விஜி.




http://rprajanayahem.blogspot.com/2018/03/golden-chance.html?m=1

Oct 18, 2021

R. P. ராஜநாயஹம் பற்றி பதிவுகள். காம் வ. ந. கிரிதரன்



 "R.P.ராஜநாயஹத்தின் எழுத்தை ஒருமுறை வாசித்தாலும் , வாசித்தவர் அதற்கு அடிமையாகிவிடுவார். இவர் புகழ் பெற்ற தமிழ் வலைப்பதிவர்களில் முக்கியமானவர்களிலொருவர். சிற்றிதழ், என்று தொடங்கி தமிழ் / உலகக் கலை, இலக்கிய உலகு பற்றி, இலக்கிய ஆளுமைகள் பற்றி, அவர்கள்தம் வாழ்வில் நடைபெற்ற பலருக்குத் தெரியாத சம்பவங்கள் பற்றியெல்லாம் , சுவையாக, நெஞ்சைக்கவரும் வகையில் கூறுவதில் வல்லவர் R.P.ராஜநாயஹம். தன் பெயரை R.P.ராஜநாயஹம் என்றுதான் எழுதுவார். ராஜநாயகம் என்று எழுதுவதில்லை. ஒருமுறை இவரது கட்டுரையைப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியிட்டபோது ராஜநாயகம் என்று எழுதியபோது அதனைத்திருத்தி ராஜநாயஹம் என்று போடுமாறு  தவறினைத்திருத்தினார்.


சினிமாவில் உதவி இயக்குநராக, நிதி நிறுவனம் நடத்தியவராக, நடிகராக.. என இவர் செய்த பல்வேறு வேலைகள் காரணமாக இவரது தமிழகக் கலை, இலக்கிய அனுபவ அறிவு பரந்தபட்டது. ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த புலமை மிக்கவர். 


இவரது மாமனார் எம்ஜிஆர் காலத்தில் முக்கிய பிரமுகர்களிலொருவராக விளங்கியவர். அதனால் தமிழக அரசியல் பற்றிய பலருக்குத் தெரியாத தகவல்களெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கின்றது.


எழுத்தாளர் அமரர்அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்.


'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் இவரது கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.


இவரது எழுத்துகள் இலக்கியச் சிறப்பு மிக்கவை அவை எழுதப்படும் எழுத்து நடையால், வெளிப்படுத்தும் இலக்கிய அறிவினால். இவரது கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய அனுபவப்பதிவுகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்கும் அதே சமயம், கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்கு, கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக விளங்கும் ஆவணப்பதிவுகளும் கூட.


இவரது எழுத்துக்கள் எல்லாம் நூலுருப்பெற வேண்டியதவசியம். ஒரு காரணம்: கலை, இலக்கிய மற்றும் ஆவணச்சிறப்பு மிக்க அவை ஆவணப்படுத்தப்பட வேண்டும். "



Oct 17, 2021

யார் தான் குழந்தை?



ஜெயகாந்தனும் கண்ணதாசனும் இணைந்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட துண்டு. ஆட்சி கட்டிலில் ஏறியிருந்த தி. மு. க வை இருவரும் காரசாரமாக எதிர்த்தனர். அப்போதெல்லாம் தி. மு. க தொண்டர்களுக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயரைச் சொன்னாலே முகம் சுளித்து, எரிச்சல் படுவார்கள். 'குடிகாரப்பயலுக காந்தி கட்சில' என ஏளனம் பேசுவார்கள். இருவரின் வெளிப்படைத் தன்மை தான் இப்படி கிண்டல் செய்ய வழி வகுத்தது. 


ஜெயகாந்தன் நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போதெல்லாம் கண்ணதாசனுடன் அவருடைய பிள்ளைகளும் வருவார்களாம். 

அந்த பிள்ளைகள் ஜெயகாந்தனுக்கு மிகவும் உவப்பானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 


கண்ணதாசன் பேசி உரையாடும் போது 'ஜெயா' என்று ஜெயகாந்தனை அழைப்பாராம். 


காமராஜரின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள். 


காங்கிரஸ் கட்சி 1969ல் உடைந்தது. அப்போது கண்ணதாசன் அடிக்கடி மாறிய விஷயம் காமராஜருக்கு  செய்த துரோகம் தான். காலா காந்தி புண் பட்டுப் போயிருப்பார். 


ஜெயகாந்தன் இந்த துரோகத்தை வெறுத்தார்.


இந்த அரசியல் நிகழ்வு பற்றி ஜெயகாந்தன் 'இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' தொகுப்பிலேயே வேதனையுடன் குறிப்பிட்டார். 


" கண்ணதாசனை நான் ஒரு குழந்தை என்று நினைத்தேன். ஆனால் அவரோ என்னைத் தன்னை விடவும் ஒரு குழந்தை என்று கருதினார். எனவே, அவர் குழந்தை அல்ல என்று நான் கண்டு கொண்டேன். 


கார்ல் மார்க்ஸ், சே குவேரா வரை கவியுள்ளமும் கவிதை சஞ்சாரமும் கொண்டு மொழிக்காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

ஆனால் கண்ணதாசன்? 

போக ப்ரியர், நிலையான புத்தியில்லாதவர்"


‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று காமராஜரிடம் சரணாகதி அடைந்தவர் இரண்டு வருடங்களுக்குப் பின், காமராஜருக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவாக நில்லாமல் கண்ணதாசன் இந்திரா காங்கிரஸில் இணைந்ததெல்லாம் 

ஜெயகாந்தனை எப்படி வருத்தப்படாமல் இருக்கச் செய்யும்? 


ஜெயகாந்தன் காங்கிரஸ் உடைந்த போது கண்ணதாசனின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் சொன்ன வார்த்தைகள்  சரியானவை தான்.  காமராஜருக்கு துரோகம் செய்த கண்ண தாசன் முன்னதாக 1967ல் ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி , என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி “ என்று பாட்டெழுதி விட்டு , காமராஜருக்கு கை கொடுக்க வேண்டிய தருணத்தில் அபத்தமாக இந்திரா காங்கிரஸிற்கு  

 போனதெல்லாம் அவருடைய நிலையில்லாத குணத்தையே காட்டிய விஷயம்.  அந்த சமயத்தில் ஜெயகாந்தனின் தார்மீக கோபம் சரியானது தான்.


உடன்பாட்டு பதில்களும் எதிர் மறை கருத்துக்களும் எல்லா நிலைப்பாடுகளுக்கும் எப்போதுமே உண்டு. 

ஒரே சீரான தன்மை என்பது மட்டரகமானது 

Consistency is the hall mark of mediocrity.

எதையுமே, யாரையுமே generalize செய்வதும் சரியாகாது தான்.

...... 


http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_12.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2012/04/blog-post.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post_14.html?m=1


http://rprajanayahem.blogspot.com/2008/09/bell-jar.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2009/01/blog-post_26.html


http://rprajanayahem.blogspot.com/2014/12/blog-post_29.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2015/04/cock-snook-at-mother.html?m=0


புகைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ,  இயக்குனர் சி. வி. ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம். எஸ். வி

(நன்றி : The Hindu)

Customs raid

 1987

திருச்சி மெயின் கார்ட் கேட். 

கேட் உள்ளே நுழைந்து அந்த பர்மா பஜார் பக்கம் இடது பக்கம் திரும்புகிறேன். தெப்பக்குளத்தை ஒட்டி  அப்படியே நடந்து                               வடக்கு ஆண்டார் தெரு போக திட்டம். 


வெளிநாட்டு பொருள்கள் விற்கும் சின்ன சின்ன கடைகள். பரபரப்பான விற்பனையின் மாலை நேரம் ஐந்து மணி. 

திடீரென அந்த புறாக்கூடுகள் போன்ற அத்தனை கடைகளையும் அவசரமாக அடைத்தார்கள். அடைத்து முடித்து ஓட்டம். 

ஒரே பதட்டமான சூழல். 

நடந்து கொண்டிருந்த பாதசாரிகளையும் 

பதற்றம் தொற்றிக் கொண்டது. 

கடைகளை அடைப்பது, ஓடுவது தொடர்ந்த நிலையில் 

நான் நின்று திரும்பி என்ன என்று பார்க்கிறேன். 


அப்பா சிரித்த முகத்துடன் கஸ்டம்ஸ் ஜீப்பில் முன்பகுதியில் இருந்து இயல்பாகவே இறங்குகிறார். 


He was a preventive customs superintendent then.

..... 

Oct 16, 2021

My cousin Aro in Australia Melbourne


 My cousin 'Aro' in Australia Melbourne 


பெரியப்பா மகன். 

35 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில். 

அவருடைய மனைவி ஆஸ்திரேலிய 

வெள்ளைப் பெண்மணி. 

ஆரோவின் ஒரு அருமையான மகன். 


ஆரோ என் ஒன்று விட்ட சகோதரன் என்பதை விட  சிறந்த நண்பன். 

எங்கள் இளமைக்கால நினைவுகள் 

மிக அழகானவை. 

திருச்சி பிரபல கிரிமினல் லாயர் பால்ராஜ் அவர்களின் உடன் பிறந்த சகோதரன் தான் ஆரோ.                    எங்கள் அண்ணா பாலு 

என் முதல் ரசிகன் ஆரோ தான். 

ரசித்து ரசித்து, 

இன்றும் பழைய ராஜநாயஹம் கதைகளை 

ஆரோ செல் பேசும் நேர்த்தி பற்றி 

சொல்லில் அடக்க முடியாது. 


கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரே முறை தான் பார்க்க எனக்கு வாய்த்தது. 

பெரியப்பா இறந்த போது 

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஆரோவை 

2014ல் தான் ஒரு முறை பார்த்தேன். 


"கண்ணின் மணி போல

மணியின் நிழல் போல 

கலந்து பிறந்தோமடா 

இந்த மண்ணும் கடல் வானும்

 மறைந்து முடிந்தாலும் 

மறக்க முடியாதடா, 

உறவைப் பிரிக்க முடியாதடா."


இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம்,

நான் வாய் விட்டுப் பாடும் போதெல்லாம் 

எனக்கு ஆரோ நினைவெல்லாம் கூட வரும்.


https://www.facebook.com/100006104256328/posts/3088026201410825/


https://m.facebook.com/story.php?story_fbid=2494032960810155&id=100006104256328


https://www.facebook.com/100006104256328/posts/2775854145961367/


https://www.facebook.com/100006104256328/posts/2783468831866565/


https://rprajanayahem.blogspot.com/2017/04/blog-post_27.html?fbclid=IwAR015HQV0Bhm5zr5hjOEqj9WvMkzWVehLo3wseTfZeH302br6YmATeSO5jU&m=1

Oct 15, 2021

1992 ல் ஒரு ஷூட்டிங் போது

 1992ல் ஒரு பட ஷூட்டிங் போது. 


கையை கட்டியவாறு நான். 

 ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டெண்ட் டைரக்டர். 



புகைப்படத்தில் என்னை அடையாளம் தெரிகிறதா? 


கையில் வாட்ச் கட்டிய, 

திரும்பி அந்த பக்கம் பார்க்கும்

 கேமராமேன் எம். சி. சேகர். 


கேமராவுக்கு முன் கதாநாயகன், கதாநாயகி,               அம்மா நடிகை மூவரும் ஷாட்டுக்காக 

நின்று கொண்டு இருக்கிறார்கள். 


புகைப்படம் என்னை கவர் செய்து, எனக்காகவே                        ஸ்டில் போட்டோ கிராபரால் எடுக்கப்பட்டுள்ளது. 


பின்னால் சில வருடங்களுக்குப் பின்னர் 

2000, நவம்பரில் 

வீரப்பன் பிடியில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தி பழ. நெடுமாறனால்

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்டு வரப்பட்டவுடன்

இந்த பண்ணையில் தான் 

உடனே, உடனே தங்க வைக்கப்பட்டார். 


 அன்று மேட்டூரில் இருந்து இங்கே ஷூட்டிங்குக்காக காரில் கிளம்பி 

காலை ஆறரை மணிக்கு வரும் போது 

நடந்த சம்பவம். 


முந்தைய நாள் நெரிஞ்சிப்பேட்டையில் 

இரவு பன்னிரெண்டு மணி வரை 

ஷூட்டிங். எனக்கு செம அலுப்பு. 


டாக்ஸிகளை லோக்கலில் தான் படக்கம்பெனி

 புக் செய்வார்கள். 


காலையில் டாக்ஸி ஓட்டிய டிரைவர் 

நல்ல களைப்பு. 


காரில் முன்னால் டிரைவரருகே உட்கார்ந்திருந்த என்னிடம் 

'ராத்திரி பூரா தூங்கல சார்' என்றார். 


"ஏங்க? "


" சந்தன வீரப்பன் சட்டென்று வந்து, என் அருகில் உட்கார்ந்து 'வண்டிய எடு' ன்னு சொல்லிட்டார். 

அவரு சொன்ன எடங்களுக்கெல்லாம் டிரைவரா இந்த வண்டில நான் போனேன். இப்ப நீங்க ஒக்காந்திருக்கிற எடத்துல தான் 

அவர் உட்கார்ந்து இருந்தாரு ராவெல்லாம். "


" நல்லா பெரிய தொக வாடகையா 

கொடுத்தாரு சார். எப்பவும் எந்த கார்ல எறுனாலும் காசு பெருசா தான் குடுப்பாரு. "


கார்ல டேப் ரிக்கார்டர்ல செம்பருத்தி பட பாடல்

 " பட்டுப்பூவே மெட்டுப் பாடு, "


பின் சீட்டில் மூன்று பேர், நடிகையிருவர், 

ஒரு ஹேர் டிரெஸ்ஸர், 

நடிகைகள் உற்சாகமாக 'பட்டுப்பூவே மெட்டுப்பாடு' உற்சாகமாக லயித்து கூடவே கத்தி பாடிக்கொண்டு இருந்தார்கள்.

பட்ட மரம்

 பட்ட மரம்


"இள இளவென்று இலையும் தளிரும் மலருமாகப்                           பூத்து நின்ற மரமில்லை அது இப்போது. 

இலை, தளிர், மலர் எல்லாம் மறைந்து விட்டன. 

இடி விழுந்த மரம் போல் உள்ளம் கூடோடி விட்டது. 

புறத்தையும்  துயர கறையான் 

சாரி வைத்துத் தின்று கொண்டிருக்கிறது. 

பலமாக ஒரு காற்று வீசினால் போதும். 

மள மளவென்று மரம் சாய்ந்து விடும்."


- தி. ஜானகிராமன்  'வெயில்' சிறுகதையில் 


.......... 


"அந்த பட்ட மரம் தனிப்பட்டு, 

தலைவிரி கோலத்தில் நின்று

மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது.. 


ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்

  கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா? விரிக்கப்பட்ட சாமரம் போன்று

ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது?...

அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?"


--- மௌனி

' அழியாச்சுடர் ' கதையில்


..........


"காம்பு இற்றுப்போச்சு ...

நான் பூக்க மாட்டேன்.

காய்க்க மாட்டேன்

பழம் தர மாட்டேன்.

குயிலுக்கும் கிளிக்கும் 

என்னிடம் வேலையில்லை.

மரம் கொத்திப்பறவை வந்து

ஏணி மீது ஏறுவது போல்

 படிப்படியாக ஏறி

இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.

நான் ஓய்ந்து விட்டேன். 

ஒடுங்கி விட்டேன். 

காய்ந்து விட்டேன்."


--- ந . பிச்சமூர்த்தி

'அடுப்புக்கு எதிரில் ' கதையில்


... 


https://m.facebook.com/story.php?story_fbid=2909001515979962&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2912726525607461&id=100006104256328

Oct 14, 2021

ஹரநாத் ராஜா

 ஹரநாத் ராஜா

- R.P.ராஜநாயஹம்


ஹரநாத் ராஜா. 

பானுமதி நடித்த 'அன்னை' படத்தில்

 அவருக்கு வளர்ப்பு மகன். 

தங்கை மகனை தத்து எடுத்து வளர்ப்பார்.

தங்க தட்டில் தான் சோறூட்டி 

பொத்தி பொத்தி வளர்ப்பார் படத்தில்.


சச்சு உடன் ஹர நாத் ராஜா வுக்கு ஒரு நல்ல பாடல். அழகான காரில் .


’அழகிய மிதிலை நகரினிலே


யாருக்கு ஜானகி காத்திருந்தாள்


பழகிய ராமன் வரவை எண்ணி

 பாதையை அவள் பார்த்திருந்தாள்’


சுமை தாங்கியில்

எல். விஜயலக்ஷ்மியுடன்

'ஓ மாம்பழத்து வண்டு, வாசமலர் செண்டு '


சரஸ்வதி சபதம் படத்தில் ' நாட்டிய பேரொளி 'பத்மினிக்கு ஜோடி . பரமசிவனாக.


இவர் ஓவர்நைட்டில் ஹீரோ ஆனவர்.

பாண்டி பஜாரில் ஷு வாங்கும்போது  

ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் பார்த்து 

இவரை தெலுங்கில் கதாநாயகனாக்கினார் 

என்று ஒரு வெர்ஷன்.


பைலட் ஆக ஆசைப்பட்டவர். 

சினிமா திசை மாற்றியிருக்கிறது.


கோணசீமா ஜமிந்தார் குடும்பத்தில் இருந்து இவருக்கு மனைவி வாய்த்தார்.


கோட்டையிலே பிறந்தாலும் 

விதி போட்ட புள்ளி மாறுமா?


’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் வில்லன். சிவாஜியை குடித்து விட்டு ஹர நாத் ராஜா நிஜமாகவே நடிக்கும் போது 

கன்னத்தில் அறைந்து விட்டார். .

பாலாஜி இவரை பெண்டு கழட்டி விட்டார்.


பாண்டி பஜார் ரோகினி இண்டெர்நேஷனல் லாட்ஜில் வைத்து ஒரு நாள் 

சுப்ரமணிய அய்யர் என்பவர் இவர் நடந்து போகும்போது காட்டி 

' இவர் யார் தெரியறதோ? ஹர நாத் ராஜா . ' 

என சுட்டினார். 

ஆர்வமாக பார்த்தேன்.  வசதி இல்லை இப்போது, அசதியில் இருப்பது பார்த்தவுடன் தெரிந்தது. குடித்தே வீணாக போய் விட்டார்.


ஹர நாத் ராஜா போன சிறிது நேரத்தில் 

நான் கிளம்பினேன். பாண்டி பஜார் பஸ் ஸ்டாப். 


ராஜா அங்கே 

பஸ்ஸு க்காக நின்று கொண்டிருந்தார். 

நான் அவரை மீண்டும் பார்த்தேன். 


தான் இன்னார் என்று

 எனக்கு தெரிந்து புரிந்து தான் 

அவரை கவனிக்கிறேன் என்பதை 

உணர்ந்து என்னை பார்த்தார். 

அதற்குள் பஸ் வந்து விட்டது. 

சரியான கூட்டம் பஸ் நிறைய.

 ஏறவும் பலரும் பெரும் முயற்சி 

எடுக்க ஆரம்பித்தனர்.


இவர் பின்புற வாசல் கம்பியை பிடித்து ஏற பகீரத பிரயத்தனம் செய்கிறார். நழுவி மீண்டும் முயல்கிறார். கம்பியை பிடித்த பிடியை விடவில்லை.


 கண்டக்டர் ' இடமில்லைப்பா. அடுத்த வண்டியில் வாப்பா ' என்று கூப்பாடு போடுகிறார். 

கூட்டம் முண்டிக்கொண்டு இருக்கிறது. 


பஸ் கிளம்ப விசில் கொடுத்த கண்டக்டர் 

கம்பியை பிடித்திருக்கிற ராஜாவின் கையில் அடித்து ' கைய எடுப்பா. கைய எடுக்க மாட்டே ' சத்தம் போடுகிறார். 

ஹரநாத் ராஜாவின் பிடி தளர்ந்து தடுமாறி 

கடைசி படியிலிருந்த ஒற்றை காலை கீழிறக்கி தள்ளாடி தவித்து நிற்கமுடியாமல் 

இறங்கி நிற்கிறார். நிலைப்பட சற்று நேரமாகிறது.


'அழகிய மிதிலை நகரினிலே


யாருக்கு ஜானகி காத்திருந்தாள்


பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் .'


அந்த பாடல் அந்த கணத்தில் அங்கிருந்த கடையொன்றில் நிஜமாக ஒலித்தது.


அவர் அவமானத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தார். உறுத்தும் உண்மையை காண சகியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன்.


அவர் அடுத்த பஸ்ஸுக்காக காத்துகொண்டிருந்தார்.


ரேடியோ பாடல் சரணம் பாடிகொண்டிருந்தது


"காவிய கண்ணகி இதயத்திலே


கனிந்தவர் யார் இளம் பருவத்திலே "


அவர் அந்த பாடலை கேட்டுகொண்டே தான் அடுத்த டவுன் பஸ்ஸை எதிர்நோக்கிகொண்டிருந்தார்.


(2008ல் ’அழகிய மிதிலை நகரினிலே’ என்ற தலைப்பில்

நான் எழுதிய பிரபலமான பதிவு)


https://www.facebook.com/rprajanayahem/posts/2537679046445546


http://rprajanayahem.blogspot.com/2019/10/blog-post_12.html


...

Oct 13, 2021

நமது அரசு நமது நாடு

 'காதலிக்க நேரமில்லை' 

ரவிச்சந்திரன் 

'பணக்காரப் பிள்ளை'

படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 

1968 ம் வருடம். 


தி. மு.க ஆட்சிக்கு வந்த மறு வருடம். 

முதல்வர் அறிஞர் அண்ணாவையும்

 தி. மு. க. ஆட்சியையும் புகழ்ந்து 

'நமது அரசு, நமது நாடு, நமது வாழ்வு என்பதெது, 

நமது தலைவன், நல்ல அறிஞன், 

ஏற்றுக் கொண்ட பதவி அது, '


' அன்னை தமிழின் அருந்தவப் பிள்ளை, 

அண்ணன் போல பிறந்தவர் இல்லை' 

டி. எம். எஸ் பாடலுக்கு பாடி 

ரவிச்சந்திரன் நடித்தவர்.


1971 பொதுத்தேர்தலில் தி. மு.க வெற்றிக்காக வெளிப்படையாக ரவிச்சந்திரன் பிரச்சாரம் செய்தார். 


'எரியீட்டி' என்ற ஒரு வித்தியாசமான

 தி. மு.க ஆதரவு பத்திரிகை

 அந்த தேர்தல் நேரத்தில் பிரபலம். 


1987ல எம். ஜி.ஆர் மறைந்த போது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அஞ்சலி செலுத்த ரவிச்சந்திரன் போயிருந்த போது ஏதோ

 சின்ன சல சலப்பு ஏற்பட்டதாக சொல்வார்கள். 


மறைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 

ஜெயா டிவியில் ரவிச்சந்திரன் தொடர் பேட்டி ஒன்று சில வாரங்களுக்கு ஒளிபரப்பாகியது. 


'மோட்டார் சுந்தரம் பிள்ளை ' துவங்கி குமரிப்பெண், நான், பணக்காரப் பிள்ளை, அன்று கண்ட முகம், மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி போல எத்தனையோ படங்களில் ஜெயலலிதா இவருடன் ஜோடியாக நடித்தார்.


' அன்று கண்ட முகம்' பாட்டு ஒன்று. 

''வாடா மச்சான் வாடா,  பயப்படாம வாடா, 

உந்தன் ஜம்பம் என்னுடம் பலிக்குமாடா?

உங்கம்மா இருந்தா அவள கேளு பாசம் என்னான்னு "

எம். ஜி. ஆரின் மெய்க்காப்பாளராயிருந்த 

மீசை கே.பி.ராமகிருஷ்ணனை கிண்டல் செய்து பாடி ரவிச்சந்திரன் நடித்திருந்தார்.

டைப்பிஸ்ட் கோபு

 டைப்பிஸ்ட் கோபு

- R.P. ராஜநாயஹம்


'நெஞ்சே நீ வாழ்க'

ஒரு நாடகம்.

பிலஹரி எழுதியது.

டி.எஸ்.சேஷாத்ரி நாடகமாக நடித்தார்.

அதில் ஒரு டைப்பிஸ்ட் பாத்திரம் கோபுவிற்கு.

நாடகம் முழுதும் ஒரு வசனமும் கிடையாது.

 முகபாவத்தில் பாராட்டை பெற்றார்.

அதனால் டைப்பிஸ்ட் என்பது 

அவர் பெயருடன் இணைத்து சொல்லப்பட்டது.


பின் இக்கதையே 'ஆலயம்' என்ற பெயரில் திரைப்படம் ஆனது.கோபுவும் அதே பாத்திரத்தில் நடித்தார்.


நாகேஷின் முக்கிய நண்பர். 

கிறிஸ்தவ பெண் ரெஜினாவை அவர்

 திருமணம் செய்து கொண்ட விஷயம்

 கோபுவிற்கு பிடிக்கவில்லை. 

நட்பு கெட்டுப் போய் விட்டது. 


இவருடைய நகைச்சுவை நாடகங்கள்

 அந்த காலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன் பாப்புலர். 


சாது மிரண்டால், அதே கண்கள், எங்க மாமா போன்ற பல படங்களில் அந்த காலத்தில் வருவார். 


இவருடைய கண்கள், அகன்ற முகம் சிரிப்பு நடிகருக்கேற்ற அமைப்பு கொண்டது.


 சோவின் நண்பர் நடிகர் நீலுவும் 

டைப்பிஸ்ட் கோபுவும் ஒரே சாயல் என்பதால் ரசிகர்கள் படத்தில் நீலுவை பார்த்தால்

 டைப்பிஸ்ட் கோபு என்று நினைப்பார்கள். டைப்பிஸ்ட் கோபுவை திரைப்படங்களில் பார்க்கும்போது நீலு என நினைத்து குழம்புவார்கள்.


'ராசுக்குட்டி ' பட டிஸ்கசன் போது இவருடைய பெயரை ஒரு ரோல் செய்ய கதை இலாக்காவில் இருந்த ஒருவர் சிபாரிசு செய்த போது பாக்யராஜ்

 " டைப்பிஸ்ட் கோபு வேண்டாம். மறு நாளே கஷ்டத்தை சொல்லி 

ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும்

 என்று ஆபிஸ் வந்து நிற்பார்.  தொந்தரவு." 

என சலித்து உடனே நிராகரித்து விட்டார்.


ருத்ரா படத்தில் டைபிஸ்ட் கோபு BANK MANAGER ரோல் செய்யும் போது என்ன கஷ்டமோ.. பாவம்... இப்படி பணம் கேட்டு பாக்யராஜை 

தொந்தரவு செய்திருக்கிறார். 

இந்த மாதிரி நடிகர்கள் தொந்தரவானவர்கள் என கெட்ட பேராகி எல்லா படக் கம்பெனிகளும்

 ஒதுக்கி விடுவார்கள் .


டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா, இருநூறு பவுன் தங்க நகை, நிறைய வெள்ளி பாத்திரங்கள்,வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தவர். 

இதை விகடனில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தார். 


என்ன நடந்தது என்று குறிப்பிட்டு அவரால் சொல்லத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதுமே கிடையாதாம். 1975ல் அவ்வளவு வசதி, வீடு,நகைகள் எல்லாம் போய் விட்டதாம்.

 

அனைத்தையும் இழந்து 

ஒரு சின்ன வாடகை வீட்டில் குடியேறி, 

நடிக்க கிடைத்த

 சின்ன,சின்ன வாய்ப்புகள் கூட 

இல்லாமல் ஆகி 

வீட்டின் முன்னே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு காகிதக்கப்பல் 

செய்து கொடுத்துக்கொண்டு 

அந்த சின்ன வீட்டு வாசல் படியில் 

உட்கார்ந்து இருந்திருக்கிறார்.


The ups and downs of life have made it so difficult to understand.

2019,மார்ச் மாதம்  இறந்தார். 


..........................

Oct 12, 2021

'மீரா' படமும் பாரத ரத்னா விருதும்

 மீரா படமும் பாரத ரத்னா விருதும்

- R.P. ராஜநாயஹம்


கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நடித்த "மீரா" படத்தின் ப்ரிவியூ பார்த்து விட்டு

 வெளியே வரும்போது,

சர் டி.விஜயராகவாச்சாரியார் கேட்டார் : 

“ Now do you surrender the title

 ‘the nightingale of India’?”

சரோஜினி நாயுடு பதில் :“I have already done it.”


"மீரா " படம் பற்றி

இந்த படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி தவிர இன்னொரு பாரத ரத்னா

சின்ன எக்ஸ்ட்ரா ரோலில் நடித்திருக்கிறார்.

 டி.எஸ்.பாலையாவின் உதவியாளராக 

தாடி வைத்த இளைஞர் ஒருவர் வருவார்.

 அவர் தான் இன்னொரு பாரத ரத்னா. 

எம் ஜி யார். 


பாரத ரத்னா அவார்ட் பற்றி


எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின், இரண்டு வருடம் கழித்துத் தான்

 ஒரு மகத்தான மனிதருக்கு 

பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. 

பி.ஆர்.அம்பேத்கர். 


எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது 

கொடுத்த பின்னால், 

மூன்று வருடம் கழித்துத் தான்

இன்னொருவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது.

யார் தெரியுமா?


இந்தியாவின் இரும்பு மனிதர் 

சர்தார் வல்லபாய் பட்டேல். 


.........................


மீள்  2008

Oct 10, 2021

Copy cat chithra lakshmanan

 சந்திரபாபு பற்றி நான் 2013ல் எழுதிய கட்டுரையில் ஹிண்டு ரங்கராஜன் நேரடியாக சொன்ன நூறு ரூபாய் விஷயத்தை குறிப்பிட்டிருந்தேன். அவர் சொல்லும் போது 

நான் கேட்ட விஷயம். எந்த பத்திரிக்கையிலும் இதை அவர் சொல்லவில்லை.


 என் பதிவு லிங்க் :


https://rprajanayahem.blogspot.com/2013/02/blog-post_26.html?m=0


 சென்ற 2020 ல் வெளி வந்துள்ள என் 'சினிமா எனும் பூதம்' நூலில் சந்திர பாபு பற்றிய பதிவில் இடம் பெற்றுள்ளது. 

அது மட்டுமல்ல. 2014 ல் வெளி வந்த என்னுடைய 'சினிமா பதிவுகள்' நூலிலும் இடம் பெற்றிருக்கிறது. 

இதனை இங்கே என் நூலில் உள்ள விஷயம் என்பதை மறைத்து சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார். 

இது தவறு. வேதனைப் படுகிறேன். 


 கலைஞர் டிவியில் 'சினிமா எனும் பூதம்' எனும் தலைப்பிலேயே என்னை வைத்து Episodes எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சந்திர பாபு பற்றியும் இந்த விஷயம் பேச இருக்கிறேன்.


நூற்றுக்கணக்கான பேர் ராஜநாயஹம் எழுத்தை திருடி போட்டுள்ளார்கள். 

'இது இப்படி ராஜநாயஹத்துக்கு தான் நடக்கிறது.'

என்று பல எழுத்தாளர்கள் வருத்தப்பட்டு

 என்னிடம் சொல்கிறார்கள். 


கருப்பையா சுந்தரா கார்த்திகேயன் தான் 

 இந்த சித்ரா லட்சுமணன் பேச்சை Worst copy cat என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் போட்டு விட்டு 

என் கவனத்திற்கு கொண்டு வந்தார். 


உடனே நானும் அந்த வீடியோவில் இது

 என் சினிமா எனும் பூதம் நூலில் உள்ள பதிவு என்பதை குறிப்பிட்டேன். 


நண்பர்கள் பா. அசோக், சரவணன் மாணிக்கவாசகம்,

கோபாலகிருஷ்ணன் சுந்தர ராமன், 

சரவணகுமார் அய்யாவு, 

வாசுதேவன் காத்தமுத்து, 

ராஜா ஹசன் ஆகியோர் வீடியோவில் இது

 R. P.  ராஜநாயஹம் பதிவு என்பதை சுட்டிக் காட்டியும் சித்ரா லட்சுமணனிடமிருந்து response இல்லை.


நண்பர்கள் அந்த சித்ரா லட்சுமணன் வீடியோவில் 

கண்டனம் தெரிவிக்க வேண்டும். 

https://m.facebook.com/story.php?story_fbid=3166296983583746&id=100006104256328



கீழே சித்ரா லட்சுமணன்  வீடியோ லிங்க் :


https://www.facebook.com/163266385391942/posts/331656651886247/

மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

 மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 

அவர்களுக்கு 

என் நெஞ்சார்ந்த நன்றி. 


செப்டம்பர் துவங்கி கலைஞர் டிவியில் 

R. P. ராஜநாயஹம் 

'சினிமா எனும் பூதம்' 

Episodes shooting and recording

  நடந்து கொண்டிருக்கிறது. 


R. P. ராஜநாயஹம் One man show. 


கலைஞர் டிவி C. E. O.  கார்த்திக், 

Program head  ஆண்டனி, 

Production executive  சொக்கலிங்கம் 

ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. 


(எப்போது Telecast என்ற கேள்வி

 கேட்க வேண்டாம்.)


https://www.facebook.com/100006104256328/posts/3095728433973935/


https://m.facebook.com/story.php?story_fbid=3094999020713543&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3165799520300159&id=100006104256328

Oct 3, 2021

நடிகர் வீரராகவன்

 நடிகர் வீரராகவன். 


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். வெங்கடேஸ்வரா பால் கோவா கடையை 

'சிங்கு' கடை என்பார்கள். அதையொட்டி கோவிலுக்கு நுழையும் பகுதியில் பத்து வைஷ்ணவர்கள் சூழ நடு மையத்தில் அமர்ந்திருந்தார். 


அவரைப் பார்த்தவுடன் புன்னகையொன்றை

 என் முகத்தில் கவனித்தவுடன் 

எழுந்து இரு கை கூப்பி வணங்கினார். 

பதில் வணக்கம் செய்து விட்டு 

அவரிடம் சென்றேன்.

 சினிமா நடிகராக அடையாளம் கண்டதால் 

எழுந்து நின்று வணங்கினார் என்பது

 பெரிய விஷயம். 


அவர் மேஜர் சுந்தர்ராஜனின் தாய் மாமா. 

பிரபலமான 'ஞான ஒளி' நாடகத்தில் 

ஆண்டனியாக மேஜர் நடித்த போது 

இவர் தான் இன்ஸ்பெக்டர் லாரன்ஸாக நடித்தவர். 


எல். ஐ. சி. யில் வேலை பார்த்துக் கொண்டே திரைப்படங்களிலும் நடித்தவர். 


சென்னையில் ஷூட்டிங்கில் அவரை நான் பார்த்ததுண்டு. 

பாண்டி பஜார் பகுதியில் 

ஒரு பள்ளிக்கூடத்தில் ஷூட்டிங். 

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிக் கொண்டிருந்தார்.

வீரராகவன் பேராசிரியராக. 

அம்பிகாவும், ரவீந்தரும் கல்லூரி மாணவர்கள். 

பாடத்தை கவனிக்காமல் வகுப்பில் 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு, சைகையால் பேசிக்கொண்டு.. 

எஸ். ஏ. சந்திரசேகர் சிரித்த முகத்துடன்

 இயக்கிக் கொண்டு இருந்தார். இயக்குநராக பிரபலமாகாத காலம். 


வீரராகவன் எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் காணப்படுவார். 

படங்களில் கூட பொதுவாக சிரித்த முகத்துடன் தான் ஜட்ஜாக, வக்கீலாக, டாக்டராக,

 போலீஸ் ஆஃபிசராக, அப்பாவாக, 

பெரிய மனிதராக நடிப்பார். 


மேஜருக்கு பெரிய குளம் சொந்த ஊர். 

வீர ராகவன் சொன்னார் " நான் கும்பகோணம்"


உடனே நான் இலக்கியம் பேச ஆரம்பித்தேன். 

அவர் கு. ப. ரா, மௌனி, தி. ஜானகிராமன் படித்திருக்கிறார். திரிலோக சீதாராம் கூட அவருக்கு அறிமுகம். 

தமிழ் படங்களில் துணை நடிகர் ஒருவர்

 எம். வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு பற்றியெல்லாம் பேசியது வித்தியாசமாக இருந்தது. 


ஒரு நடிகராகவே அவர்  பேசுகையில் தன்னை காட்டிக் கொள்ளவில்லை. 

ஒரு பெரியவரிடம் அளவளாவிய திருப்தி.

Coincidence in a surprising way

திருப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்தவர் அப்போது அங்கே பாங்க் மேனேஜராக இருந்த சரவணன் மாணிக்கவாசகம். 

தானே ராஜா, தானே மந்திரி என்று வாழ்ந்து விட்டு எப்படி இனி கை கட்டி வேலை பார்க்கப் போகிறேன் என்ற கலக்கம் சொல்லி முடியாது. 

பதற்றம் அதிகமாய் இருந்தது. 


பெரும் பொருளாதார வீழ்ச்சி வீழ்த்தி விட்ட நிலையில் வேறு வழியுமில்லை. 


சரவணன் பேங்க் கிளம்பும் போது ஒரு போன். 

எங்கள் இருவருக்கும் நண்பன் பேசியிருக்கிறான். 

"சரவணா, என்னய்யா இது. தோழர் (என்னைப் பற்றி தான் குறிப்பிடுகிறான்) எப்படிய்யா கை கட்டி வேலை பார்ப்பான். கனவுலயும் நடக்காதுப்பா. 

கோபத்தில சட்டுனு எவனாயிருந்தாலும் கைய நீட்டிடுவானேய்யா. நம்பவே முடியல "


சரவணன் மையமாக 'இல்லண்ணே, தோழரோட நெலம. வேற வழியில்ல' 


'என்னமோய்யா, அவனப்பத்தி ஒனக்கு தெரியாததா?" 


சரவணன் மீண்டும் விளக்கம் சொல்லி முடித்து திருப்பூர் டிராபிக்கில் இருபது நிமிடத்தில் 

காரில் பேங்க் சேர்ந்த பின் ஒரு போன் கால். 

அதே நண்பன் தான். "யோவ் சரவணா, தோழர் வேலைக்கு சேர்ந்திருக்கிற கம்பெனிக்கு இப்ப நீ போன் போட்டுக் கேட்டுப் பாருய்யா. இன்னேரமே தோழர் நிச்சயமா கோபத்தில எவனயாவது அடிச்சிருப்பான்யா!" 


பஞ்சம் பிழைக்கப் போயிருந்த திருப்பூர் வாழ்க்கையை எதிர் கொள்ள மனதை எவ்வளவு திடப்படுத்தினாலும் தேம்பி அழும் நிலை. 

கோபத்தை வெளிப்படுத்தி விடக் கூடாது என்ற சங்கல்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன். 

ஆனால் என் கோபம் impulsive act. 

கலக்கமும் பயமும் பதற்றமும் நிரந்தரமான விஷயம். 


.. 


ஆஃபிஸில் மூன்றாவது கேபினில் இருந்த போது ஒரு போன் கால். அது முதல் கேபினில் இருந்த ஒருவருக்கு. நான் அந்த கால் அங்கே போகும் படி டிரான்ஸ்பர் செய்தேன். அந்த நபர் மற்றொரு போனில் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் 'உங்களுக்குத் தான்' என்று சைகையால் தெரிவித்தேன். 

அந்த ஆள் மற்றொரு போனில் தொடர்ந்து பேசி வைத்து விட்டு என்னிடம் 'நான் ஒரு போனில் பேசிக்கொண்டிருக்கும் போது எப்படி இன்னொரு கால் டிரான்ஸ்பர் செய்யலாம்' என்று கோபமாக சத்தமிட்டு, சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆட ஆரம்பிச்சிட்டார். 

மனதை உறைய வைத்துக் கொண்டு கண்ணை மூடி அவமானத்தை ஜீரணித்தேன். 


ஒரே வாரம். செய்தித்தாளில் பரபரப்பு செய்தி. 

அந்த நபர் புகைப்படத்துடன். கடன் கொடுத்த ஒரு முதிய கிழவியை கொலை செய்து விட்டார். கொலை செய்து சாக்கில் பிணத்தைப் போட்டு மறைத்து, பிடி பட்டு கைது. 


.. 


எதிர் கேபினில் இருந்து ஒருவர் "சார், இங்க வாங்க" என்று கூப்பிட்டார். தோரணையில் அது வெட்டிப் பேச்சுக்குத் தான் என்று தெரிந்தது. 

அதோடு எனக்கு வேலையுமிருந்தது. 

"எனக்கு வேலை இருக்கு " என்றேன். 


அந்த ஆளுக்கு கௌரவப் பிரச்சினையாகி விட்டது. 

" சார், இனிமே இந்த கேபினுக்குள்ள நீங்க நொழஞ்சா கால வெட்டுவேன் சார் "என்று சீரியஸா கோபமாக சத்தமா ஒரு சவுண்டு. 


அவமானத்தால் துடித்துப் போனேன். 


ஒரு பத்து நாள். அந்த நபரை கட்டு விரியன் கடித்து, சீரியஸாகி.. விதி முடிஞ்சவனத் தான் கட்டு விரியன் கடிக்குமாமே. 


ஆஸ்பத்திரி, படுக்கைன்னு ஆறு மாதம் படாத பாடு பட்டு  அந்த ஆளு பொழச்சிட்டாலும் பழைய ஆளாயில்ல. 


...


என் தலைப்பு 'Coincidence in a surprising way'  என்பதே இவை தற்செயலானவை என்று வலியுறுத்துகிறது. 


Things just happen. Things doesn't happen for a reason. 

ஆனால் ஜப்பானிய விஞ்ஞானி மிச்சியோ காக்கு (Michio Kaku) சொல்கிறார் :

Everything in this universe is governed by an intelligence, not by chance 


அவர் சொல்லும் இன்னொன்று :

For those who believe, 

no explanation is necessary;

 for those who do not believe, 

  no explanation will suffice.

.. 

Oct 2, 2021

ஆன்ம லாபம்

 


நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன். எந்த போதை பழக்கமும் இல்லாதவன்.


உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்? 

மது, புகை, சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்? 

என்ன லாபம் கண்டாய்?”


என் பதில் : “ஆன்ம லாபம்”




தெய்வ நம்பிக்கையும் கூட

 இல்லாமல் தான் இருக்கிறேன். 


கட்டிப் பார்

 கட்டிப் பார் 


பால்கனியில் இருந்து காணக்கிடைக்கும் காட்சி. 

Shattered Expectation. A broken dream. 


அஸ்திவாரத்துடன் சற்றே எழும்ப முயன்று கால்வாசியாய் குறைப்பட்ட வீடு. 

வான் நோக்கி ஐய்யோவென்று நீட்டிய கம்பிகள். 

சுற்றிலும் மழை நீர். 

பக்கத்தில் 

ஒற்றை மூங்கில் மிஞ்சிய 

சிதைந்து மக்கிப் போன குடிசையில்

 இப்பவும் கூட

 ரெண்டு மூணு வீணான சிமெண்ட் மூட்டைகள். 


A wrong understanding of construction. 

Miscalculation.


https://m.facebook.com/story.php?story_fbid=3156625371217574&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3142252262654885&id=100006104256328