Share

Oct 30, 2018

ஆறாது, ஆறாது அழுதாழும் தீராது - 24.10.2018


24.10.2018
N.Muthuswamy dies. There are no words that can fill the void in my life.
It hurts when I lose my god father.
A piece of my heart is broken forever.
When someone that is special to us is gone it can be difficult to continue living life.
எங்க மாமிக்கும் நடேஷ் சாருக்கும் ரவி சாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது?
எத்தனை சாமி வந்தாரோ, எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒன்னா சேந்து முத்துசாமி ஆனாரோ
பத்து சாமி வந்தாலும் முத்துசாமி ஆவாரோ என்று அவர் பிறந்த நாள் அன்று பாடினேன்.

ஆலமரம் விழுந்து விட்டது,
மகான் மறைந்து விட்டார்,
போன்ற வார்த்தைகளெல்லாம் cliche.
இவரால் எப்படி ஆயிரம் பேருக்கும் மேல் அப்பாவாக இருக்க முடிந்திருக்கிறது.


மீளவே முடியாத துயரில்.
ந.முத்துசாமி சார் இழப்பு தாங்கவே முடியாத நிலை.
ஆறாது, ஆறாது
அழுதாழும் தீராது, ஆனாலும் வழியென்ன தாயே..
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல.

Oct 29, 2018

ரோகி இச்சிச்சதும் பாலு,வைத்தியன் கற்பிச்சதும் பாலு



டெங்கு காய்ச்சல் வந்தா ட்ரிப் ஏத்துவாங்க. நோயாளி பழங்கள் நிறைய சாப்பிடனுமாம். 
எனக்கு பழங்கள் ரொம்ப பிடிக்கும். டெங்கு வந்தா ஹையா ஜாலி தான். நான் நிறைய பழங்கள் சாப்பிட்டுக்கொண்டே மண்டய போடுவேன்.
சொலவடை. ’ரோகி இச்சிச்சதும் பாலு, வைத்தியன் கற்பிச்சதும் பாலு’. நோயாளிக்கு பசும்பால் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஏங்கியிருக்கிறான். டாக்டர் வந்து “ நிறைய பால் நல்லா சூடா குடிங்க” என்று சொன்னாராம். நோயாளிக்கு வாயெல்லாம் பல்லு.
பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என்று பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.
நான் பாலகனாய் இருந்த போது டிங்கி ஜுரம் பிரபலம்.
டிங்கி ரொம்ப நல்ல காய்ச்சல். மூன்று நாள் தான் ஒருத்தர படாத பாடு படுத்தும். அப்புறம் போயிந்தே! காணாமல் போய் விடும். நான் நாலாவது நாள் எந்திரிச்சி குளிச்சி பள்ளிக்கூடம் போகணும்னு பிடிவாதம் பண்ணேன். வீட்டில விடல. நாளைக்கு போகலாம்னு அம்மா, அப்பா சொல்லிட்டாங்க.
பள்ளிக்கூடத்துக்கு போனா மூணு மிஸ்ங்க டிங்கி காய்ச்சல் லீவு. ஒரே ஜாலி.
ஆனா பசங்க எல்லாம் ’உனக்கு டிங்கி வந்துடுச்சா’ ’எனக்கு டிங்கி வந்துட்டு போயிடுச்சு’ன்னு குசலம் பேசிக்கிட்டானுங்க. ஒருத்தன் ‘ எனக்கு இனிமே தான் டிங்கி’ன்னு பரவசமானான்.
காய்ச்சல்னா அப்படி ’டிங்கி’ மாதிரி இருக்கணும்.
இப்ப டெங்கு, பன்றிகாய்ச்சல்லாம் கொலகார காய்ச்சலா இருக்கு.
ம்.. காலம் கெட்டுப்போச்சு.
அந்தக்காலத்துல காய்ச்சல் refresh button மாதிரி. நல்ல காய்ச்சல் வந்து போன பின் முகத்துல ஒரு அழகான களை வரும். உடம்பு கூட பூசுன மாதிரி ஆகி ஒரு பாலீஷ் வந்துடும்.
Feed a cold, Starve the fever னுவாங்க. ஜலதோஷமா? மூச்சு முட்ட நல்லா சாப்பிடு. சளி பறந்துடும். காய்ச்சலா? வயித்த காயப்போடு.
இன்னொரு காய்ச்சல். மன்மதன் அம்பால் வருவது.
ஸ்டீஃபனோ பென்னி சொன்னது “ If you meet an angel, you will have fever".
தாஸ்தயேவ்ஸ்கி நாவல்கள் படிப்பது எவ்வளவு அற்புதமான விஷயம். திரும்ப ரிவைஸ் பண்ணுவது எவ்வளவு நல்லது. Crime and punishment, Brothers Karamazov, Idiot, White nights..
ஆனா மெரிடித் சொன்னான் “ தாஸ்தயேவ்ஸ்கி நாவல்கள் படிப்பதால் சீக்கிரமாகவோ, தாமதமாகவோ மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட நேரிடும்”
இது நிச்சயம் தாஸ்தயேவ்ஸ்கிக்கு compliment தான்.

Oct 26, 2018

கூத்துக்கு பிள்ளை பெத்து கோமாளின்னு பேர் விட்ட கதை


என் அம்மாவிடம் எப்போதும் கோமாளி சேட்டை நிறைய செய்வேன். மிகையான நடிப்புடன் கொனஷ்டையுடன் ஏதாவது செய்வேன்.
“ தாயும் தன் பிள்ளையை தள்ளிடப்போமோ?” - இதை நிறைய விதமாக பல விதங்களில் உருக்க பாவம் சொட்ட சொட்ட ஆடிப் பாடுவேன்.
வினோதமாக கைநாட்டு பாமர பாணியில், முகத்தை அஷ்ட கோணலாக்கி உச்ச குரலில் சோகம் தளும்பிச் சொட்ட பாடுவேன்.
“ சிலர் சிரித்தான், சிலர் அழுதான், சிலர் சிரித்துக்கொண்டே அழுதான்”

In the trueman there is a joker concealed.

’லாலி பப்பி, லாலி மம்மி 
லாலி பப்பி, லாலி மம்மி’ தொர இங்க்லீஷ் பாட்டு கூட பாடுவேன்.
இது ஏதோ சிறுவனாய் இருந்த காலத்தில் மட்டுமல்ல. திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் பெரியவர்களாகி, அம்மாவின் கடைசி காலம் வரை.
அம்மாஎப்போதுமே சிரிக்காமல், திகைத்தவாறு சொல்வாள்
“ கூத்துக்கு பிள்ளை பெத்து கோமாளின்னு பேர் விட்ட கதையாய் இருக்கு”
Mighty lines.
அம்மா இறந்த இரண்டு வருடத்தில் கூத்துப்பட்டறைக்கே வந்து சேர்ந்தேன். ’எங்கும் சுற்றி ரங்கனைச்சேர்’. முத்துசாமியிடம் வந்து சேர்ந்தேன்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். அம்மாவிடம் செய்த கோமாளி சேட்டைகளையெல்லாம்
என் மனைவியிடம் ஆடி பாடிக்காட்டிக்கொண்டிருக்கிறேன்.
தாய்க்குப் பின் தாரம்.
எப்போது இந்த பாடி நடிக்கிற ஆசை, தாகம் தீரும்?
கைக்கட்டு, வாய்க்கட்டு. கால்கட்டோடு பாடையில் ஏறும் போது தான்.




Oct 21, 2018

வட சென்னை சிறைக்காட்சிகள்

சிறைச்சாலை மனித மனத்தை வளப்படுத்துவதில்லை. சிறையில் குற்றத்திற்கு தண்டனை இல்லை. சிறையில் கைதிக்கு பாதுகாப்புமில்லை. எதற்கு தான் சிறைச்சாலை? கைதிகளை மனித குணத்திலிருந்து உடைத்தெடுக்கிற சிறை, ஒருவருக்கொருவர் அபாயகரமானவர்களாகவும் ஆக்கி விட சிறந்த இடம்.

மகாநதியில் கமல் ஹாசன் சிறையின் சிக்கலான இழைகளை மனதை பிசைகிற விதமாக காட்டி கலங்க வைத்ததுண்டு.
அதற்கு பிறகு வெற்றி மாறனின் வடசென்னையில் கோரமான சிறை முகத்தை இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது.
மனம் பதைபதைக்கும் விதமாக.
ரொம்ப திகைப்பாக, பயமாயிருக்கிறது.
இப்படியா? இவ்வளவிற்கா?
விலங்கு பூட்டப்பட்டவர்கள் சிறையில் மனித விலங்குகளாவது தான் யதார்த்தமா?
வட சென்னையில் உச்சமான விஷயம் சிறைச்சாலை சூழல் படமாக்கப்பட்டுள்ள விதம்.
யதார்த்தம் இது தான் எனும் போது வெளியே அரசியல், கட்சி, மீடியா எல்லாமே மிகப்பெரிய பகடி தான் என்றாகிறது.
மற்ற படி வடசென்னை படத்தில் எதுவுமே புதியதானதோ, புதிரானதோ இல்லை.

சந்திரா கதாபாத்திரம் விசித்திரம். ஆண்ட்ரியா புருஷன் அமீர் கொல்லப்பட்ட பின் சமுத்திர கனி மனைவியாகி, கொலைகாரர்களை பழிவாங்க தனுஷை தயார் படுத்துவதாக, காய் நகர்த்தும் சூத்ரதாரியாக கொக்கு தலையில் வெண்ணைய் வைத்து, காதை பின்னால் சுற்றி வளைத்து தொடுவதாக காட்டுவதெல்லாம் லாஜிக்கே இல்லாத திரைக்கதை விந்தை.

கதாநாயகி வசனத்தில் ’மக்குக்கூதி’  அசத்தல்.
One more feather in Dhanush’s cap.

https://rprajanayahem.blogspot.com/2018/02/blog-post_27.html

Oct 19, 2018

கம்புக்கூட்டன்


ஒரு சொலவடை. ’வேதநாயகம் பிள்ளை போல சடைச்சிக்கிறானே’ன்னு. அவரு எந்த வேதநாயகம்பிள்ளை? மாயூரம் வேதநாயகம் பிள்ளையா? அல்லது வேறு யாராவதா? யாருக்கும் தெரியாது.
சின்ன வயசில அதாவது வாலிப வயசில கம்புக்கூட்டன் தன் ஒட்டிப்போன கன்னத்தை எப்படி உப்ப வைப்பது என்று ரொம்ப சடைச்சிக்குவான். அது அவனுடைய ஆதாரக்கவலையாய் இருந்தது. கன்னம் இன்று வரை உப்பவே இல்லை.

இப்ப கம்புக்கூட்டனுக்கு அறுபத்தஞ்சு வயசு. எப்படியிருக்கான்னு விசாரிச்சா, இப்ப ’சாப்பிடுறதுக்கு பல் இருந்தா போதும்’னு சடைச்சிக்கிறான். எப்பவும் இந்த கவலை தான்.
ஆசைகளும், நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு வியர்த்தமானவை?

இளந்தாரியா இருக்கிறப்ப கம்புக்கூட்டன் அவனோட பொக்கவாய்  பாட்டிய கன்னத்தில, கை விரல்களை மூடி  குத்துகிற மாதிரி வைத்து அழுத்துவானாம். இதனால் முகம் பக்கவாட்டில் திரும்பிய நிலையில் பாட்டி சிரமமெடுத்து ஈனஸ்வரத்தில் கூக்குரல் எழுப்பி கத்துவாளாம். “கம்புக்கூட்டா, கருவாயா, கம்புக்கூட்டா, கருவாயா”
ஆரப்பாளையம் பார்க்கில் கிழவி கத்துவதை அப்படியே குருவிமண்டையன் நடித்துக்காட்டியதுண்டு.
கூப்பாட்டை ஆம்ப்ளிஃபையர் வைத்து விஸ்தாரமாக பெருக்கியது போல அலறலாக செய்து காட்டுவது
காதில் இன்னமும் கூட ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஏ.ஏ.ரோட்ல கம்புக்கூட்டன் யாராவது ஒருத்தனுக்கு ஒரு நாள் சாயந்தரம் அஞ்சு மணிக்கு டீ வாங்கிக்கொடுத்தான்னா, மறு நாள் அதே நேரத்துக்கு வந்து முந்தின நாள் இவன் கிட்ட டீ வாங்கி குடிச்சவன முழிச்சி முழிச்சி பார்ப்பான். ’இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே’ என்ற தோரணையில். இன்னேரம் டீ சாப்பிட கூப்பிட்டிருக்கணுமேன்னு.
’சபாஷ் மீனா’ படத்தில கண்ணாடி ஜன்னல குலதெய்வம் கல் வீசி உடைச்சிருப்பான்னு முடிவு பண்ணி ஜன்னலுக்கு கண்ணாடி மாட்ட வரும் சிவாஜி “இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே” என்று வெள்ளந்தியாக வீட்டுக்காரரை குழம்பிப்போய் பார்க்கும் போது கல் விழும். கொஞ்ச லேட்டு.

இந்த சபாஷ் மீனா காட்சி சார்லி சாப்ளின் நடித்த “The Kid" படத்தில் இருந்து உருவப்பட்டது. அதி மதுர ’மதுர பக்கி’களுக்கு சபாஷ் மீனா தான்  தெரியும்.

Oct 18, 2018

Jose Saramago’s The tale of the unknown island


ஜோஸெ ஸரமாகோ எழுதிய இந்த புனைவை நாவல் என்று சொன்னால் நம்பாதீர்கள். குறுநாவலுமல்ல. இது சிறுகதை தான்.

A man went to knock on the king's door and said, ‘Give me a boat’
அறியப்படாத தீவை தேடிப்போக ஆசைப்படுவதாக ஒருவன் ஒரு படகு வேண்டும் என்று அரசனை கேட்டுப்பெறுகிறான்.
Don't you know, If you don't step outside yourself, you'll never discover who you are.
அவனோடு அரண்மனை வேலைக்காரி ஒருத்தியும் தொழிலில் மாற்றம் வேண்டி அவனுடனே சேர்கிறாள். படகை சுத்தம் செய்கிறாள். படகை செலுத்த மாலுமிகள் கிடைக்கவில்லை. படகில் அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்கும் போது அவன் கனவில் அவள் வரவில்லை என்று அவனுக்கு வருத்தம். Follow your dream and your dream will follow.
கடலில் பயணம் சாத்தியமில்லை. அவள் தான் அறியப்படாத தீவா?
His dream makes him realise his unknown island in this woman.
Dreams are skilled magicians, they can change the consistency of things and people.
ஒவ்வொரு மனித ஜென்மமுமே ஒரு தீவு தான்.
வாசகன், கனவுலக சஞ்சாரி, காதலர்கள் இந்த புனைவின் Sub text பற்றி கண்டடைவார்களாக. இதிலுள்ள மனோதத்துவம், மையல் பற்றி புரிந்து கொள்வார்களாக.
Liking probably is the best form of ownership and ownership the worst form of liking.
உங்களுக்கு எது தேவை என்பதில் எச்சரிக்கையாயிருங்கள். அது கிடைத்தாலும் கிடைத்து விடலாம், பார்த்துக்கொள்ளுங்கள்.
..this is the way fate usually treats us, it's right there behind us, it has already reached out a hand to touch us on the shoulder while we're still muttering to ourselves, It's all over, that's it, who cares anyhow.
இந்த கதையில் முழுக்க கமா தான். நிறுத்தற்குறி இல்லை. வாக்கியங்களில் கமாவுக்கு பிறகு, முதல் எழுத்து கேப்பிடல் லெட்டரில் இருப்பது தான் வாசகனுக்கான சலுகை. The entire story is made of one gigantic sentence.

.

Oct 16, 2018

"In the mood for Love" directed by Kar-Wai Wong


ஒரு படத்தின் ஷுட்டிங் பீகிங்கில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஸ்க்ரிப்ட் தரப்பட வேண்டும் என சீன அரசு கேட்கிறார்கள். டைரக்டர் படமெடுக்க ஸ்க்ரிப்ட் உபயோகப்படுத்துபவரல்ல. அதாவது ஸ்க்ரிப்ட் கிடையாது. அதனால் வேறு வழியில்லாமல் பீகிங்கில் இருந்து ஷூட்டிங் விலக்கிக்கொள்ளப்பட்டது.
கேன்ஸ் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட வேண்டிய ஒரு வாரம் முன் கூட ஷூட்டிங் முடிந்திருக்கவில்லை. அவ்வளவு நெருக்கடியில் படத்தை முடிக்க வேண்டியிருந்திருக்கிறது.
“In the mood for love" என்ற ஹாங்காங் படம். 21ம் நூற்றாண்டில் பி.பி.சியின் 100 மிகச் சிறந்த படங்களில் 2வது ரேங்கில் இருக்கிறது.
சாவதற்கு முன் பார்த்து விட வேண்டிய ஆயிரம் படங்கள் என்பதான லிஸ்ட்டில் கூட இருக்கிறது.

கார்-வாய் வாங் இயக்கியிருக்கிறார்.
He remembers those vanished years. As though looking through a dusty window pane, the past is something he could see, but not touch. And everything he sees is blurred and indistinct.
நேற்று கூத்துப்பட்டறையில் பேராசிரியர் டாக்டர் சி.ரவீந்திரன் அவர்கள் வழி காட்டுதலோடு திரையிடப்பட்டது.
கல்யாணமான ஒரு பெண் ஒரு கல்யாணமான ஆணுடன் உறவு கொள்ள நேர்வது என்பது நான்கு பேர் சம்பந்தப்பட்டது.

மன உளைச்சலுக்குள்ளாகும் அவளுடைய கணவனும், அவனுடைய மனைவியும் தான் இதில் முக்கிய பாத்திரங்கள்.
 His wife and her husband are having an affair. 
"For us to do the same thing," they agree, "would mean we are no better than they are." 

இவர்கள் சந்திப்பில் கண்ணியம் காக்கப்படுகிறது. பழி வாங்கும் விதமாக இவர்கள் தங்களுக்குள் காதல் கொண்டு விடாமல், உடல் சம்பந்தம் ஏற்பட்டு விடாமல் தவிர்க்கிறார்கள்.
It is a restless moment. She has kept her head lowered... to give him a chance to come closer. But he could not, for lack of courage. She turns and walks away.
முக்கிய கதாபாத்திரங்களின் ரகசிய extra - marital relationshipல் இருக்கும் அந்த life partners படத்தில் காட்டப்படுவதில்லை.
ஒரு உரையாடலில் வருவது : In the old days, if someone had a secret they didn't want to share... They went up a mountain, found a tree, carved a hole in it, and whispered the secret into the hole. Then they covered it with mud. And leave the secret there forever.

Oct 14, 2018

படிமம்


ஆல்பர் காம்யு இளமையில் விதவையாகி விட்ட தன் அம்மாவுக்கு கணவர் பற்றிய நினைவு காலத்தால் மிஞ்சியிருக்காதது பற்றிய ஒரு உவமானமாக
” காட்டுத்தீயில் எரிந்து போன பட்டாம்பூச்சியின் சிறகின் சாம்பலைப்போல” என்கிறார் ‘முதல் மனிதன்’ நாவலில்.
அலெசாண்ட்ரோ பாரிக்கோவின் ‘ பட்டு’ நாவலில் காட்சி.
ஆகாயத்தில் ஏராளமான பறவைகள்.
நீல நிறத்தில் சிறகுகள் அகலமான, ஏராளமான பறவைகளால் வானம் கீறப்பட்டிருந்தது. சிறகுகளால் ஆகாயத்தையே கிழித்து ஒழித்து விட ஆசைப்பட்டவை போல அந்த பறவைகள் உயரே மேலும் கீழும் பறந்து கொண்டிருந்தன.
ஜான் பான்வில் நாவல் ’கடல்’
கடலின் சின்ன சின்ன அலைகள் உயிரோடு வந்து, மிகப் பழங்காலத்தில் நிகழ்ந்த ஒரு பெரும் அழிவினைக்குறித்து சுவாரசியத்துடன் கள்ளக்குரலில் என்னிடம் பேசுகின்றன. அது ட்ராய் நகர வீழ்ச்சி பற்றியா, அட்லாண்டிஸ் புதைந்தது பற்றியா என்பது காதில் தெளிவாக கேட்கவில்லை.





Oct 12, 2018

’ராஜநாயஹம் நடிப்பு’ பற்றி மருதன் பசுபதி


இந்த அக்டோபர் மாத ”அயல்சினிமா” இதழில் ’அஜ்ஜி’ மராட்டிய படம் பற்றி மருதன் பசுபதி எழுதியிருக்கிறார்.

அந்த கட்டுரையில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ சுஷ்மா தேஷ்பாண்டேயின் உடல் மொழியை துல்லியமாக செய்யக்கூடிய வெகுசில தமிழ் நடிகர்களில் கூத்துப்பட்டறை குரு சோமசுந்தரத்தையும்
R.P.ராஜநாயஹம் அவர்களையும் சொல்லலாம்.”
சுஷ்மா தேஷ்பாண்டே நடித்து தேவஷீஸ் மகிஜா இயக்கிய படம் அஜ்ஜி.

Oct 8, 2018

குட்டி தமிழ்வாணன்


ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.
எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.
கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.
கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’
Worst Arrogance. Thinking too much of oneself.
 Superiority complex.

அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

 கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார். ‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

Oct 5, 2018

உப்பு விற்கப் போகவில்லை


உப்பு விற்கப்போகவில்லை.
7ந்தேதி அசோகமித்திரன் பற்றி பேசப்போகிறேன்.
மிக கனத்த மழை அன்று என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.What is likely to occur.

"For me, everything becomes allegory."
- Charles Baudelaire

இதையும் மீறி அன்று இந்த நிகழ்வு நடந்தேறட்டும்.
Rain, rain go away, Come again some other day.

Worrying about the bad weather is the last refuge of monotonous,conventional persons.
When we are together, why should we care about the weather.

............




Rev. Emmanuel Dossan greets R.P.Rajanayahem

"I'd read a few of your posts in your blog even before they appeared on the fb. They are witty, sarcastic and unique in its literary style. Besides your astounding memory exhibited in the details of your writing, they are mostly biographical and autobiographical. Any biographical note always influences the other. Whenever I read your writings I cannot but recall my own past. I think all the readers have the same feel. COngrats sir"
............

Oct 4, 2018

People Advising others


சாணக்கியம் எப்படியெல்லாம் விரிகிறது. ராதாகிருஷ்ணன் பிள்ளையின் தூண்டில்.
How to write a book பெரிய விஷயமா? ஆனால் அடுத்த கொக்கி. How to make it a best seller.. இத வாங்கி படிக்க வெள்ளந்தி எழுத்தாளர்கள் எத்தனை பேரோ?
இந்த புத்தகப் பிரதிகள் எவ்வளவு பிரதி விற்றிருக்கிறதோ?

Advising other wise writers is an insult. 




கல்கண்டு தமிழ்வாணன் “நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார். 


தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது. 
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.

The advise you tell others is the advice you need to follow.