Share

Oct 21, 2018

வட சென்னை சிறைக்காட்சிகள்

சிறைச்சாலை மனித மனத்தை வளப்படுத்துவதில்லை. சிறையில் குற்றத்திற்கு தண்டனை இல்லை. சிறையில் கைதிக்கு பாதுகாப்புமில்லை. எதற்கு தான் சிறைச்சாலை? கைதிகளை மனித குணத்திலிருந்து உடைத்தெடுக்கிற சிறை, ஒருவருக்கொருவர் அபாயகரமானவர்களாகவும் ஆக்கி விட சிறந்த இடம்.

மகாநதியில் கமல் ஹாசன் சிறையின் சிக்கலான இழைகளை மனதை பிசைகிற விதமாக காட்டி கலங்க வைத்ததுண்டு.
அதற்கு பிறகு வெற்றி மாறனின் வடசென்னையில் கோரமான சிறை முகத்தை இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது.
மனம் பதைபதைக்கும் விதமாக.
ரொம்ப திகைப்பாக, பயமாயிருக்கிறது.
இப்படியா? இவ்வளவிற்கா?
விலங்கு பூட்டப்பட்டவர்கள் சிறையில் மனித விலங்குகளாவது தான் யதார்த்தமா?
வட சென்னையில் உச்சமான விஷயம் சிறைச்சாலை சூழல் படமாக்கப்பட்டுள்ள விதம்.
யதார்த்தம் இது தான் எனும் போது வெளியே அரசியல், கட்சி, மீடியா எல்லாமே மிகப்பெரிய பகடி தான் என்றாகிறது.
மற்ற படி வடசென்னை படத்தில் எதுவுமே புதியதானதோ, புதிரானதோ இல்லை.

சந்திரா கதாபாத்திரம் விசித்திரம். ஆண்ட்ரியா புருஷன் அமீர் கொல்லப்பட்ட பின் சமுத்திர கனி மனைவியாகி, கொலைகாரர்களை பழிவாங்க தனுஷை தயார் படுத்துவதாக, காய் நகர்த்தும் சூத்ரதாரியாக கொக்கு தலையில் வெண்ணைய் வைத்து, காதை பின்னால் சுற்றி வளைத்து தொடுவதாக காட்டுவதெல்லாம் லாஜிக்கே இல்லாத திரைக்கதை விந்தை.

கதாநாயகி வசனத்தில் ’மக்குக்கூதி’  அசத்தல்.
One more feather in Dhanush’s cap.

https://rprajanayahem.blogspot.com/2018/02/blog-post_27.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.