Share

Jan 30, 2009

ஜக்ஜித் சிங் - ஏ ஆர் ரஹ்மான்

உலகின் உன்னத கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் ! ஏ ஆர் ரஹ்மானின் இசை திறமையை கேள்விக்குள்ளாக்குகிறார் . வெகு ஜனங்களும் , சினிமாக்காரர்களும் 'இவன் யார் எங்கள் ரஹ்மானின் இசையை விமர்சிக்க? கேள்வி கேட்க ? எங்கள் ரஹ்மான் உலகையே கலக்கி விட்டவர் ' என ஆவேசப்படுவார்கள் . ஆனால் நான் இந்த ரஹ்மான் பரவசத்திற்கு ஆட்படவே மாட்டேன் .

ஜக்ஜித் சிங் கஜல் பற்றி உண்மையான ஞானம் உள்ளவர்களும் , உண்மையான இசை ஆர்வம் உள்ளவர்களும் ஜக்ஜித் சிங்கின் தார்மீக கோபத்தை அங்கீகரிப்பது , செவி சாய்ப்பது தவறே கிடையாது . ஏ ஆர் ரஹ்மான் பெற்ற பெரும்புகழ் அவரை கடவுளாக்கினால் அது ஏற்றுக்கொள்ளவே முடியாது . சினிமாக்காரன், சினிமா மெல்லிசை ரசிகன் எப்போதும் ஜால்ரா தட்டி மிகுந்த பரவச போதையில் தான் இருப்பான்.

இது சாஸ்த்ரீய சங்கீத கலைஞர்களின் இசையை கனப்படுத்தும் பதிவு . ஏதோ இளையராஜா ரசிகர்களுக்கு குஷிப்படுத்துவதாக என நினைக்க வேண்டாம் . இளைய ராஜா ரசிகர்கள் பலர் குஷியாகி பின்னூட்டம் அனுப்புகிறார்கள் ! ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களின் கோப பின்னூட்டங்களை பற்றி சொல்ல தேவையில்லை . ரஹ்மானுக்கு ஆதரவாக 'தேச பக்தி ' பின்னூட்டங்கள் கூட !

இளைய ராஜா , ஏ ஆர் ரஹ்மான் சினிமா இசைக்கும் சாஸ்த்ரீய சங்கீதத்துக்கும் எந்த ஸ்நான பிராப்தியும் கிடையாது . சினிமா இசை பல தழுவல்கள், ஒப்பனைகள் கொண்டது .

கர்நாடக சங்கீத கலைஞர்கள் , ஹிந்துஸ்தானி கிளாசிகல் கலைஞர்கள் எவருடைய இசை அந்தஸ்தையும் ஏ ஆர் ரஹ்மானின் பிம்பம், வேறு எந்த சினிமா இசையமைப்பாளனின் புகழ் பிம்பமும் பாதிக்காது.

வித்வத் வேறு , பிராபல்யம் வேறு .

Jan 28, 2009

ப்ரோமோத் முத்தலிக்

ப்ரோமோத் முத்தலிக் - ஸ்ரீ ராம் சேனா தலைவன் .


நாற்பத்தெட்டு கிரிமினல் கேஸ் . இவற்றில் பெரும்பான்மையான கேஸ் இவர் பஜ்ரங் தளத்தில் இருக்கும்போதே பதியப்பட்டவை . இப்படி இவ்வளவு கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆள் எப்படி சிறையில் இல்லாமல் வெளியே இருக்க முடிகிறது . ஸ்ரீராம் சேனா அமைப்பை எப்படி நிறுவிட அனுமதி கிடைக்கிறது . 'பெண்களை காக்க வேண்டியது , கலாச்சாரத்தை காக்க வேண்டியது எங்கள் கடமை. ஹிந்து கலாசாரத்தை காக்க வேண்டாமா ' என்று மார் தட்டி, மங்களூர் ரெஸ்டாரன்டில் இளம்பெண்கள் மீது ஈவு இரக்கமில்லாமல் மிருகத்தாக்குதல் நடத்திய பின்னும் பெருமிதம் கொள்ள முடிகிறது .


ஒரு அமைப்பு தரும் திமிர் , வக்கிரம் இப்படி பிரவகிப்பதை கட்டுப்படுத்த என்ன வழி ?


இந்தியா முழுவதும் இப்படி அமைப்புகள் , கட்சிகள் பிரதான கட்சிகளின் விஷேச பராமரிப்புடன் கிளம்பி விட்டன .


அபத்த விகார நோய்க்கூறு , மதம் , இனம் , மொழி,கட்சி சார்ந்து குணப்படுத்த முடியாத கொள்கைஒனாய்களை வெறி பிடித்து அலைய விட்டிருக்கிறது .


அவரவர் வெறிக்கு தக்க சட்டதிட்டங்களை சமூகத்தில் திணித்து ' ஒழுங்கு ', 'சீர் ', என்று கூக்குரல் இட்டு மிரட்டுகின்றார்கள் . ஒற்றை பரிமாண பார்வையுடன் உலகை மாற்றி விட ஆவேச அழிச்சாட்டியம்!


முத்தலிக் கைது நடவடிக்கை மிகப்பெரிய கண்துடைப்பு . சிரித்துக்கொண்டே மீடியா விளம்பரம் கிடைத்து விட்ட பூரிப்புடன் அந்த ஆள் கிளம்புகிறார் . காவல் துறை ஏதோ சொந்தபந்தம் போல் அவருடன் !

மறுநாள் கோர்ட்டுக்கு வரும்போது முத்தலிக் மூஞ்சில் லேசாக கலவரம் தெரிகிறது . உள்ளே சில மனசாட்சியுள்ள போலீஸ் கவனிப்பு பலமாய் இருந்திருக்கும் போல .அல்லது நிலவரத்தின் தீவிரம் புரிந்து ' ஏலி ஏலி லெமா சபக்தானி ' என்று கர்நாடக ஆளுங்கட்சி கைவிட்டு விட்டதை புலம்புகிறார் .

'ஹிந்துத்வா பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு என்னை இப்படி கைவிடலாமா '

சமரசமாக எடியுரப்பா ' ஹோட்டல் நடன கலாச்சாரத்தை ஒழிப்பேன் ' என்று இருண்ட முகத்துடன் 'மங்களூர் அம்னிசியா ஓட்டலை , அங்கு கூடிய பெண்களை' சாடுகிறார் .

'ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி விட்டார்கள் அரசியல் எதிரிகள் . ஒரு சாதாரண லோக்கல் நிகழ்வு இது' - எடியூரப்பா சொல்வது !


'காண்டாமிருகங்களை ஈர்குச்சிகள் காயப்படுத்தாது .' - சுந்தர ராமசாமி சொன்னது !

Jan 27, 2009

What If !

யோவ் அதனால என்னய்யா ?
நீ எவனா இருந்தா எனக்கென்ன ? அள்ளி உடாதே .. ஆளை உடு
ஒன் கதை எனக்கு எதுக்குயா ? போய்யா..ஏய் ... போ ..
என்னை பத்தி ஒனக்கு என்ன தெரியும் ? ஒன் ஜோலி மயித்தை பாத்துகிட்டு போ ..
....
அலட்சியம் ,சலிப்பு .. ஆயாசம் ... விட்டேத்தி நிலை
இந்த உணர்வை வெளிப்படுத்தும்
கூலரிட்ஜ் கவிதை :

What if you slept?
And What if , in your sleep you dreamed?
And what if in your dream you went to heaven
And plucked a strange and beautiful flower?
And what if, when you awoke you held the flower in hand?
Ah, what then??


- Coleridge


ஆத்மாநாம் ' என்னை விடுங்கடா டே ' என கூப்பாடு போட்ட கவிதை :

' நான் யாராய் இருந்தாலென்ன ? நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?
அனாவசிய கேள்விகள் . அனாவசிய பதில்கள்.

எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள் .'


Jan 26, 2009

மத்திய அரசு பத்ம விருதுகள் .

ஏ ஆர் ரஹ்மான் குளோபல் அவார்ட் வாங்கி ஆஸ்கார் விருது வாங்கி விடவும் வாய்ப்பு வந்திருக்கிறது .
தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்ம பூஷன் விருது பெறுகிறார் . அடுத்த வருடம் அசோகமித்திரனுக்கு கொடுக்க வேண்டும் . செய்வார்களா ? அசோகமித்திரனுக்கு ஞான பீட விருது வேறு இன்னும் தரப்படாமலே இருக்கிறது . எழுத்து , எழுத்தாளர் என்றதகுதி அளவுகோலில்
ஒரு அசோகமித்திரன் பத்து ஜெயகாந்தனுக்கு சமம் .
கிட்டத்தட்ட உத்தேசமாக
நாற்பது வருடங்களுக்கு முன்னரே தி.ஜானகிராமன் ,
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சுந்தர ராமசாமி , கி .ராஜநாராயணன் , அசோகமித்திரன்,நகுலன் ,இந்திரா பார்த்தசாரதி ,
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஆதவன்
ஜெயகாந்தனை முந்தி சென்று விட்டார்கள்.
அருணா சாய்ராம் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் .கர்நாடக சங்கீதம் செய்த புண்ணியம் அருணா சாய்ராம் . எம் .எஸ் .சுப்புலக்ஷ்மி திறமைக்கு சற்றும் குறைந்தவரல்ல அருணா . இது என் அசைக்க முடியாத நம்பிக்கை .
அந்த காலத்தில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,வி நாகையா போன்ற நடிகர்கள் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார்கள் . எம்ஜியார் ரிக்க்ஷாகாரன் " ஓதம்! ஓதம்! "நடிப்பிற்கு (!)பாரத் விருது வாங்கினார் .ஆனால் எம் ஆர் ராதா, எஸ் வி ரங்காராவ் போன்ற உன்னத கலைஞர்கள் அரசு விருதுகள் கௌரவமின்றி தான் மறைந்தார்கள் . Unsung ! Unhonoured!! Unwept!!!
இன்று வரை வந்துள்ள நகைச்சுவை நடிகர்களில் சத்தியமாக முதன்மையானவர் நாகேஷ் !
எழுத்தாளர் சுஜாதாவின் வார்த்தைகள் -நாகேஷ் பற்றி -'காலபிரமானம் ! மின்னல் வேக மாற்றம் !'
நாகேஷுக்கு ஈடு என அதன் பின் யாரும் கிடையாது . இன்றும் நாகேஷ் நடிக்கிறார் என்றாலும் 1962 துவங்கி 1970வரை நாகேஷின் உச்ச பட்ச சாதனை ! இவர் அந்த காலத்தில் பத்மஸ்ரீ அவார்ட் வாங்க முடியவில்லை . இன்னும் காலதாமதமில்லை . மிக சிறந்த விருது கொடுத்து மத்திய அரசு கௌரவிக்கவேண்டிய மகத்தான கலைஞன் நாகேஷ் ! அவருக்கு கிடைக்காத கௌரவம் இன்று விவேக் பெற்றுள்ளார். வடிவேலு விடம் உள்ள Inbuilt Humour அவரை விவேக்கை விட முன்னணியில் நிறுத்துகிறது. வடிவேலுக்கும் இந்தபத்மஸ்ரீ விருது கிடைக்கவேண்டும். அடுத்த வருடங்களில் வாங்கி விடுவார் .
கலைவாணர் என் எஸ் கே ,தங்கவேலு ,சந்திரபாபு , சோ ,தேங்காய் சீனிவாசன் ,சுருளிராஜன் , கௌண்டமணி ,எஸ்.வி.சேகர் , வடிவேலு ,விவேக் போன்ற கலைஞர்களுக்கு ஈடாக இந்தியாவில் மற்றமொழி காமடியன்கள் யாருமே கிடையாது . உரைபோட ஆள் கிடையாது . தமிழனின் நகைச்சுவை உணர்வின் தரம் அப்படி .

The incarnation of Good

Mangalore Pub Assault

சிவ சேனா ,நவ நிர்மான் சேனா கேள்விப்பட்டிருக்கிறீர்கள் . இப்போது கர்நாடகத்தில் ஸ்ரீ ராம் சேனா என்று ஒன்று பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . Self-styled moral police force!

Amnesia ( பெயரின் அபத்தம் ! இதை மறக்க முடியுமா?) என்ற ரெஸ்டாரன்ட் . ( barஎன்று சொல்லவேண்டுமா) மங்களூரில் . அதில் கூடியிருந்த இளம் பெண்களை , வாலிபர்களை ஸ்ரீ ராம் சேனா கலாச்சார காவலர்கள் மிக கடுமையாக தாக்கி பண்பாடு காத்திருக்கிறார்கள். பெண்களை அடிக்கும் வீரமிலா நாய்கள். ஈனப்பிறவிகள்.

People believe themselves to be the incarnation of good
have a distorted view of the world.
- Todorov

நாற்பது சேனாக்காரர்களில் ஒரு பத்து பேரை கடமையே என கர்நாடக அரசு சலிப்போடு கைது செய்து 'பிரச்சனை யை விடுங்க' என்கிறது .

இந்த தாலிபன் போக்கு பஜ்ரங்தல் , விஹெச்பி , சிவ சேனா , நவ நிர்மான் சேனா மட்டும் தான் என எண்ணிவிடக்கூடாது .தமிழகத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி , விடுதலை சிறுத்தைகள் , திராவிடகழகம் , ஏன் எல்லா அரசியல் கட்சிகளிடமும் அவற்றில் இருப்பவர்களிடமும் பரவி இருப்பது தான் .

சினிமாவில் சிகரெட் புகைக்கும் சீன் இருப்பது தவறில்லை என்று இப்போது தீர்ப்பு நீதிபதிகள் வழங்கி விட்டார்கள் .அன்புமணியின் முட்டாள்தனத்திற்கு சவுக்கடி .( என்னிடம் புகை பிடிக்கும் வழக்கம் , மது அருந்தும் பழக்கம் கிடையாது ,சீட்டு விளையாட்டு எதுவும் கிடையாது )

திருமாவளவன் ' காங்கிரசை தமிழகத்தில் வேரோடு வெட்டி சாய்ப்பேன் ' என்பது கூட தாலிபான் குண கூறு தான் .( நான் காங்கிரஸ் காரன் கிடையாது )

தங்க பாலு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என மிரட்டுவது கூட கலாச்சார காவல் பண்பே .

பிராந்தி ,விஸ்கி குடிக்கலாம் , பனைமரப்பால் கள்ளுக்கடை கூடாது என்பது கூட முட்டாள் தனமான பாசிசம் அன்றி வேறன்ன ?

Jan 25, 2009

நாட்டு நடப்பு

அசோக் சக்ரா விருது பதினோரு பேருக்கு கொடுக்கப்படுவதான அறிவிப்பில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கசாப் நிகழ்த்திய கோரத்தை எதிர்த்த போது உயிர் விட்ட இன்ஸ்பெக்டர் ஷிண்டே நிராகரிக்கப்பட்டிருப்பது ரொம்ப அபத்தமாக தெரிகிறது. கீர்த்தி சக்ரா விருது இவருக்கு . என்ன அளவுகோல் இது ?

பிரதமர் கலந்து கொள்ளாத குடியரசு தினம் நாளை . இந்திய சரித்திரத்தில் இது தான் முதல் தடவை . ரோபோட் மாதிரி மன் மோகன் சிங் கூட்டத்தினரை பார்த்து கையாட்டும் அழகு நாளை காணக்கிடைக்காது . ஆபரேசன் முடிந்து அடுத்த ஒரு மாதம் முழுக்க ஒய்வு .இருபத்து ஐந்து வருடமாக பிரணாப் முகர்ஜி யின் முன் ' பிரதமர் நாற்காலி ' நடத்தும் பகடி கொஞ்சநஞ்சமல்ல . இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன் ராஜீவிடம் ' நான் தானே இப்ப பிரதமர் ' என்று வெகுளித்தனமாக கேட்டு ராஜீவ் கேபினெட்டில் அங்கம் வகிக்கும் வாய்ப்பையே இழந்தவர் !பிரதமரின் நிதித்துறையை மட்டும் இப்போது பிரணாப் நிர்வகிப்பார் . நாளை டெல்லியில் நடக்க இருக்கும் குடியரசுதின கொண்டாட்ட மரியாதை உதவி ஜனாதிபதிக்கு என்று முதலில் சொல்லி அப்புறம் ராணுவ மந்திரி ஏ. கே. ஆண்டனி ( யந்திர துப்பாக்கி யின் இனிசியல் தான் இவருக்கும் ) தான் குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரதமருக்கு 'டூப்'என்று முடிவு செய்திருக்கிறார்கள் .


இலங்கை பிரச்சினை முழுக்க தமிழக அரசியல்வாதிகளால் மீண்டும் நையாண்டி செய்யப்படும் அவலம் தொடர்கிறது. இவர்களின் வினோத கூட்டணிகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் இனி காட்ட முடியாது .
திமுக குடும்பம் ' பொதுக்குழுவை ,செயற்குழுவை கூட்டி முடிவெடுக்கும் ஜனநாயகம் பற்றிய அக்கறை மிகுந்துதன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாதே என்று நொந்து தவிக்கிறது.( பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக நாளும் இல்லை !) அடடே ! பொதுக்குழு ,செயற்குழு உறுப்பினர்கள் ' அது எப்படி ? கருணாநிதி சுயமாக எங்களை கேட்காமல் முடிவெடுக்கலாம் . தாட் பூட் தஞ்சாவூர் ' என்று மீசையை முருக்குவார்களோ ?தொடையை தட்டி உண்டு இல்லை என்று பார்த்து விடுவார்களோ ?
அண்ணா திமுக - மதிமுக கூட்டு இன்னும் தொடர்கிறது . ஜெயலலிதாவின் ' இலங்கை இராணுவம் ' வக்காலத்து அறிக்கை கூட மதிமுகவை சுரனையடைய செய்யவில்லை . கம்யுனிஸ்ட்கள் ஜெயலலிதா கைவிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் ' அது அவரது சொந்த கருத்து ' என்று நழுவுகிறார்கள் .
திருமா வளவனுடன் பிஜேபி தலைவர்கள்இலகணேசனும் ,திருநாவுக்கரசரும் போஸ் கொடுக்கிறார்கள் . பேஷ் , பேஷ் . ரொம்ப நன்னா இருக்கிறது . திருமாவுக்கு சவால் விட தமிழக காங்கிரஸ் அவசர அவசரமாக தன் கட்சிக்குள்ளே தலித் அரசியல்வாதியை தேடிக்கொண்டிருக்கிறது .

'சத்யம் ' பற்றி அன்றாடம் எல்லோரும், சகல தரப்பினரும் அளவளாவி களிப்பெய்துகிறார்கள்.

சென்னை தமிழ் சங்கம நிகழ்வில் ' பாட்டெழுதி 'வாசிக்கப்போன புலவர்கள் அவமானபடுத்தப்பட்டதாக செய்தி . உண்மையா ? என்னடா இது சோதனை .



We live at the edge of the miraculous.
All that matters is that the miraculous become the norm.

- Henry Miller

Foucault’s pendulum

சுருக்கமாக எழுதுவதன் ஆபத்து அதிகம் . சரியாக புரிந்துகொள்ளாமல் போகும் நிலை ஏற்படத்தான் செய்கிறது . ஆனால் சுருக்கமாக எழுதுகிற என் பிடிவாதத்தை நான் தளர்த்தப்போவதில்லை .

டா வின்சி கோட் நாவல் பற்றி தான் எல்லோரும் அறிவர் . டான் பிரவுன் நாவல் மிகவும் பிரபலம் . டாம் ஹேங்க்ஸ் நடித்து படமாய் வந்து பலரும் எதிர்த்து , எல்லோரும் பார்த்து ரசிக்கப்பட்ட படமானது .
ஆனால் அதை படித்தவர்கள் , படம் பார்த்தவர்கள் அறியாத நாவல் “Foucault’s pendulum “.
உம்பெர்டோ ஈகோ எழுதிய நாவல் “Foucault’s pendulum “.
ஈகோ டாவின்சி கோட் எழுதிய டான் பிரவுன் பற்றி சொல்வார் :“Don Brown is one of my creature.”
பூக்கோவின் பெண்டுலம் பற்றி சொல்ல ஈகோ வின் மேற்கண்ட ஒரு வரியே போதும் .
பூக்கோவின் பெண்டுலம் வாசிக்க சுலபமானது அல்லாமல் கடினமானது என்பதில் இரு கருத்து இல்லை . டா வின்சி கோட் மாதிரி விறு விறு என்று வாசித்து தள்ளமுடியாது தான் . ஈகோவின் 'பூக்கோவின் பெண்டுலம் ' நாவலை வாசிக்க ஒரு திறன் தேவை . ஆனால் அந்த விஷேச வாசிப்புக்கான சன்மானம் மிகவும் மகத்தானது .
Foucault’s Pendulam – the thinking person’s Da Vinci Code !

ஈகோ வின் பிரபலமான மற்றொரு நாவல் பிரதியின்பம் என்பதற்கு உதாரணமான The Name of the Rose. மர்ம நாவல்கள் அத்தனையையும் மிஞ்சிய திகில் நாவலான இதை வாசிப்பதே 'சுகம்'. ஆனா 'பூக்கோவின் பெண்டுலம் 'வாசிப்பது ஒரு 'தவம்.'

The Name of the Rose திரைப்படமாக 'ஷான் கானரி' நடித்து இருபத்து இரண்டு வருடம் முன் வந்தது . ஷான் கானெரி நடித்த ஜேம்ஸ் பாண்டு படங்களை விட மிக தரமான த்ரில்லர் .

உம்பர்டோ ஈகோவால் The Name of the Rose நாவலும் எழுதி Foucault’s Pendulam நாவலையும் எழுத முடிந்திருக்கிறது ! சாதனை தான் !!

Jan 20, 2009

குபரா பற்றி சஞ்சய் சுப்ரமணியம்

கர்நாடக சங்கீத இளம் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் ப்ளாக் ' தமிழில் எழுதுவோம் '
கு ப ராவும் சிறுகதைகளும்
எனக்கு சிறுகதைகளில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நாவல், மற்றும் மனித சரித்திரங்கள் ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கு ப ராஜகோபாலன் எழுதிய சிறுகதைகளைப் படித்துக்கொண்டிடுக்கிறேன். இது வரை இந்த மாதிரி கதைகள் தமிழில் படித்ததில்லை. "சிறிது வெளிச்சம்" என்று ஒரு கதை. 60-70 வருடங்களுக்கு முன்பு இப்படியும் எழுதியிருக்க முடியுமா என்று தோண வைக்கிறது. ஆங்கிலத்தில் economy of expression என்று கலையைப்பற்றி சொல்வதுண்டு. அனாவசியமாக கையில் இருப்பதை அள்ளித்தரக்கூடாது. இசையில் கூட இந்த உவமை பொருந்தும். பல வருடங்களுக்கு முன் ஒரு கச்சேரி செய்தவுடன் ஒரு விமர்சகர் சொன்னார் "எல்லாத்தையும் இதே கச்சேரில கொட்டாதே! அடுத்த கச்சேரிக்கு கொஞ்சம் மீதி இருக்கட்டும்!" அந்த மாதிரி கு ப ராவின் கதைகளில் ஒரு அனாவசியம் இல்லாத ஒரு சொல் நடை. கொஞ்சம் சொல்லி நிறைய அனுபவிக்க முடியும் என்று காட்டக்கூடிய தன்மை.
Posted by Sanjay at 12:26 AM
Labels:

2 comments:
srigudi said...
உங்கள் தமிழார்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி !நீங்கள் சிவாவிஷ்ணு கோயிலில் பாரதியார் பாடலை கச்சேரியின் தொடக்கத்திலேயே பாடியதற்குத் தான், நான் "உங்களைப் போன்றவர்கள் பாடுவதால் தமிழ்ப்பாட்டின் 'status' கூடுகிறது" என்றேன். சற்று கோபத்துடன் "என்னிக்கும் ஒசத்தியாத்தான் இருந்துண்டிருக்கு. நாங்கதான் அதனால் பயனடைகிறோம்" என்ற அர்த்தத்தில் நீங்கள் பதிலளித்தது உங்கள் தன்னடகத்தையே காட்டுகிறது ! சிவகுமார்
October 4, 2008 10:48 AM
k_bomman said...
Very glad to see that you enjoyed Ku.Pa. Ra's superb short story collections titled "AAtramai" . I am also a regular of the blogs of Jeyamohan. pl. try the blogs of r.p.rajanayahem too. I have listened to many of your concerts (once live at Kuwait) and all your podcasts. Great going.
December 18, 2008 6:35 AM

observation

" பாரிஸ் கார்னருக்கு பஸ்ஸிலே ஒரு தடவை போய் வந்தா கதை எழுத பத்து தீம் கிடைக்கும் " தி.ஜானகிராமன் இப்படி சொல்வாராம் .

அமுத்துலிங்கத்தின் 'பூமத்திய ரேகை 'கதையில் ஒரு சின்ன அப்சர்வேசன் : 'உப்பு என்று சொல்வது போல அவள் உதடுகள் எப்பவும் குவிந்து போய் இருக்கும் '

செஸ் விளையாட்டை வேடிக்கை பார்க்கிறவனுக்கு தான் நல்ல நல்ல ஐடியா தெரிய வரும் . காயின் மூவ் பண்றது சம்பந்தமா .

லைவ் கிரிக்கெட் டிவி இலே பார்க்கிறவன் தோனிக்கு ஐடியா சொல்வான் .ஹர்பஜன் சிங்கை திட்டுவான் .கிடந்து தவித்து ,தத்தளித்து தக்காளி விப்பான் .

The brain is wider than the sky.
-Emily Dickenson

Jan 19, 2009

கடல்

' கடல் தன் காதலை பூமிக்கு சொல்வதற்காக திரும்ப திரும்ப தழுவி செல்கிறது . பூமி அதை உதாசீனம் செய்து மறுக்கும்போது பெரும் சத்த இரைச்சலோடு கல் பாறைகள் மீது அறைந்து சொல்கிறது . சமாதானமாகாமல் சூறைக்காற்றாக வீசி தன் மனதை வெளிப்படுத்துகிறது . கடலின் அலைகள் காதலின் கைகள் !'

பாப்லோ நெருடா முக்கிய கதாப்பாத்திரமாக வரும் Il Postino ( The Postman) படத்தில் பாப்லோ நெருடா கடல் பற்றி சொல்வதாக இந்த வசனம் வரும். ஆஹா !அருமையான படம் . யமுனா ராஜேந்திரன் இந்த ' போஸ்ட்மேன்' படம் பற்றி நல்ல கட்டுரை எழுதியுள்ளார் .

நேர் எதிர்மறையாக ஜோசப் கான்ராட் சொல்கிறார் . சுனாமியை பார்த்து விட்டோம் .அனுபவித்தவர்கள் கான்ராட் சொல்வது சரி என்று தான் சொல்ல முடியும் .மனிதனின் 'நிம்மதியின்மை ' யின் கூட்டுக்களவானி தான் கடல் என்று கான்ராட் அபிப்பராயபடுகிறார் . கடல் மனிதனுடன் சிநேகமாக இருந்ததில்லை .

The sea has never been friendly to man.
At most it has been the accomplice of human restlessness.

தி.ஜானகிராமன் கடலையும் மௌனத்தையும் இணைத்து அலையோசையை விவரிக்கிறார் .
' நிசப்தமாய் இருந்தது . கடலலை மட்டும் அந்த மௌனத்தின் மீது மோதி ஏறி , கலைந்து விழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது '


'குழந்தை ஷேக்ஸ்பியர்' ஆர்தர் ரைம்போ வின் மிக பிரபலமான பிரஞ்சு கவிதை கடலை சூரியனுடன் இணைத்து ' சாசுவதம் ' என்பதை விளக்குகிறது .

It Has been found again! What?
Eternity.
It is the Sea mingled with the Sun.

Jan 16, 2009

சாது

பனசை மணியன் தான் இறப்பதற்கு முந்தைய நாள் இந்த சம்பவத்தை என்னிடம் கூறினார் .

அப்போது சாண்டோ சின்னப்பா தேவரின் 'தேவர் பிலிம்ஸ் ' சில் பனசை மணியன் வேலை பார்த்திருக்கிறார் . ஒரு ஷூட்டிங் வெளியே அவுட் டோர் போயிருந்திருக்கிறார்கள் . அங்கே பக்கத்து மலையில் ஒரு முருகன் கோவில் . படப்பிடிப்பு குழுவினருடன் தேவர் அங்கே போயிருக்கிறார் . மலைஏறும் போது அங்கே ஒரு மௌன சாமியார் குடில் . பனசை மணியன் உள்பட பலரும் அந்த சாதுவை தரிசித்து அங்கேயே அமர்ந்து விட்டார்கள் . தேவர் அந்த மஹானை பார்த்தவாறே மேலே போயிருக்கிறார் ." எனக்கு முருகன் தான் . வேறு யாரையும் நான் தொழமாட்டேன் " என்று அர்த்தம் .

மேலே தரிசனம் செய்துவிட்டு தேவர் சாவகாசமாய் இறங்கியவர் தன் குழுவினர் இருந்த மௌன சுவாமி குடிலில் வந்து உட்கார்ந்திருக்கிறார் . புன்னகையோடு சாமி இவரை பார்த்திருக்கிறது . சாண்டோ சின்னப்பா தேவரும் புன்னகையோடு அவர் கண்ணை உற்று பார்த்திருக்கிறார் . கண்ணையே உற்று ,உற்று .. திடீரென்று தேவர் நா தழுதழுக்க " நான் ஒரு மடையன் !" என்று கண்ணில் நீர் பெருக விம்மினாராம் . மௌன சாமி அருகில் இருந்த சிலேட்டில் ஏதோ எழுதி தேவரிடம் காட்டினாராம் .

"உன்னிலும் நான் ஒரு அடிமடையன் !"

சாண்டோ சின்னப்பா தேவர் உடனே எழுந்து சாஷ்டாங்கமாக மஹானின் காலில் விழுந்து விட்டார் !

..

A Greatman is always willing to be little.

- Emerson

Down to Earth

ஒ ஏ கே தேவர் என்று ஒரு வில்லன் நடிகர் . குரல் கணீர் என்று இருக்கும் ." வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை " என்ற அவர் வசனம் 'மஹாதேவி ' படத்தில் பிரபலம் . இவர் அந்த காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் இவரோடு ராயப்பேட்டையில் ஒரு கவிஞர் ஒரே அறையில் தங்கியிருந்தார் . பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ! நிர்பந்தமான ஒரு சூழலில் ( பணத்தட்டுப்பாடு தான் )ஒரு தடவை ஒ ஏ கே தேவர் அறையிலிருந்த புத்தகம் பேப்பரை எல்லாம் எடைக்கு போட்டு காசு வாங்கி விட்டார் . பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வந்து பார்க்கிறார் . இவர் எழுதிய பல கவிதைகளையும் தேவர் வீசைக்கு பேப்பர்க்காரனிடம் போட்டு விட்டதை கண்டறிந்து பதறி வேதனைபடுகிறார் . ஒ ஏ கே தேவர் அவரை தேற்றி ஆறுதல் சொன்னாராம் .

" இதை விட நீ நல்லா நிறைய கவிதை எழுதிடுவே . கவலைப்படாத கல்யாணி . ஒன் மூளைக்கு பிரமாதமா நீ எழுதுவே பாரு ! பேப்பர்காரனாவது காசு கொடுத்தானேன்னு நாம சந்தோசப்படனும் "

Jan 13, 2009

திருமங்கலம் தேர்தல் முடிவு

சமத்துவமக்கள் கட்சி வாங்கியுள்ள850 வோட்டு சுயேட்சை வேட்பாளர் பரமசிவம் வாங்கிய வோட்டை விட சுமார் இருநூறு வோட்டு குறைவு . 850நாடாக்கமார் தானா திருமங்கலத்தில் . தொகுதியே தேவர் தொகுதி என்று சால்ஜாப்பு சொல்லி தப்பித்துக்கொள்ள வேண்டும் . பேசாமல் இந்த கட்சியை கலைத்து விடலாம் . இல்லாவிட்டால் திமுக , அண்ணா திமுக வில் ஐக்கியமாகி விடலாம் . பாவம் சும்மா உரலை இடிக்க வேண்டுமா . அந்த ரெண்டு கட்சியிலும் சரத் குமார் அவமானப்பட்டதால் தானே சமத்துவ மக்கள் கட்சி தோன்றியது . கட்சிக்கு புத்துயிர் அளிப்பதற்காக , படுதோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி ராதிகாவை (!)தலைவராக்கி மகிழலாம் !!!! சமத்துவ மக்கள் கட்சி மாநாடு , சரத் குமார் தமிழக சுற்றுப்பயண செலவுகள் , தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் உள்ளூர் ச.ம.க பிரமுகர்கள் கட் அவுட்,பேனர் , போஸ்டர் ,தோரண ஜபர்தஸ்து ... அடடா பணம் எப்படியெல்லாம் விரயமாகிறது ! இவருடைய சகலைபாடி நடிகர் ராம்கி (ராதிகா தங்கச்சி நிரோஷா புருஷன் ) பாண்டி பஜாரில் பிளாட்பாரத்தில் Fast food stallஅல்லது கையேந்திபவனோ என்னவோ போட்டு நடத்தி வருகிறார் என்று கொஞ்ச நாள் முன் வாரப்பத்திரிக்கை ஏதோ ஒன்றில் படித்தேன் .சரத் குமார் Capacity க்கு அப்படி ஸ்டால்கள் தமிழகமெங்கும் நிறுவி நல்ல பிசினஸ் செய்யமுடியும் !

விஜயகாந்த் கட்சி - கருப்பு எம்ஜியார் ! எம்ஜியார் எந்த காலத்தில் ,எந்த தொகுதியில் டெபாசிட் இழந்திருக்கிறார்!ராமதாஸ் , வைகோ மாதிரி மிரட்டல் அரசியல் , கூட்டணி மூலம் பொதுத்தேர்தலில் இரண்டு சீட் ,மூணு சீட் வாங்கலாம் .எம் எல் ஏ சீட் எட்டு , எம் பி சீட் ஒன்னு பேரம் பேசி வாங்கி அதிலே பாதியாவது ஜெயிக்க விஜய காந்த் கட்சிக்கு நல்ல தகுதி . 'கொடுக்கிற பணத்தை வாங்கிக்கங்க . வோட்டு எனக்கு போட்டுடுங்க ' என்று மன்றாடிகேட்டு , ஆண்டவனோடு ,மக்களோடு விஜயகாந்த் போட்ட கூட்டணி படுதோல்வியடைந்து விட்டதால் இனிமேல் திமுக , அல்லது அண்ணா திமுக வோடு கூட்டணி போட்டு தேறி விடலாம் .

' பணபலம் , அதிகார துஷ்பிரயோகம் 'போன்ற வார்த்தைகளை உபோயோகிக்க ஜெயலலிதாவுக்கு எந்த யோக்கியதையும் தகுதியும் கிடையாது . வழக்கம் போல வாக்குபதிவு எந்திரம் துவங்கி ,பல காரணங்களை தோல்விக்கான காரணமாக கருதிக்கொண்டு சமாதானம் அடையவேண்டியது தான் .

மக்களை ரொம்ப அவமானபடுத்தக்கூடாது . மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !!!

இடைத்தேர்தல் வெற்றி தோல்வி காரணங்களை ரொம்ப அலச தேவையே இல்லை .நுணுக்கமாக ஆராய திருமங்கலம் இடைத்தேர்தலில் விஷயம் ஒன்றுமில்லை.

Jan 11, 2009

ஜோஷ் வண்டேலூ எழுதிய ' அபாயம்'


ஜோஷ் வண்டேலூ எழுதிய 'அபாயம் ' நாவல் தமிழில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது . மறக்க முடியாத நாவல்.
A Flemish Novel translated from English to Tamil
By N.Sivaraman.

‘Man is left alone in this world.’ இந்த மேற்கோள் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அது இந்த நாவலில் தான் வருகிறது .
நகுலன் பாருங்க ! ஜோஷ் சொன்னதையும் தாண்டி " எனக்கு யாருமே இல்லை . நான் கூட " என வேதனைப்பட்டவர் !!

' கடைசியில் பார்க்கப்போனால் , என்ன செய்வதென்பதை நாமே தான் முடிவு செய்ய வேண்டும் . மனிதன் கடைசியில் தனித்தே தான் நிற்கிறான் . யாரும் அவனுக்கு உதவி செய்ய முடியாது .' என்று ஜோஷ் வண்டேலூ சொல்வார் .
'தப்பி ஓடுவது என்பது ஒரு முடிவற்ற பிரமைக்கு ஒருவர் ஆட்படுவது தான் . அமைதியாக வசிப்பதற்கு இடமே இல்லை .'
' எங்க போனாலும் ஒன் நிழல் ஒன் கூட தான் வரும் ' என்று நம்ம ஊர் கிழவிகள் சொல்வது இதை தான் !

'நம்பிக்கை' - ' நம்பிக்கை என்பது மெதுவாக ச்செல்லும் இரவு நேர வண்டி . அது நகருக்குள் தேடியவாறு குலுங்கிகுலுங்கி ச்சென்று ஒவ்வொரு நிறுத்தத்திலும் அசைவற்று நிற்கிறது . எல்லா நிறுத்தங்களிலும் ஜனங்கள் காத்திருக்கிறார்கள் . கண்டக்டர் கத்துகிறான் . ' இடமில்லை , அடுத்த வண்டி வருகிறது .......' நாம் அடுத்த வண்டிக்காக எப்போதுமே காத்திருக்கிறோம் ! நமக்கு இடம் கிடைக்கும் வகையில் ஒருவரும் ஒரு போதும் வண்டிகளிலிருந்து இறங்குவதே இல்லை !!

கதிரியக்கப் பாதிப்புகளுக்கு உள்ளாகி,சுவாரஸ்யத்துக்குரிய மருத்துவ ஆராய்ச்சிப்பொருள்களாக மாறிவிட்ட பெண்ட்டிங்,துபோன்,மார்ட்டின் மோலினார்.
சிலர் பலிகடா ஆவது நிச்சயம் என்ற தெளிவுடன் தான்  முடிவு எடுக்கப்படுகிறது.

அன்பு,இரக்கம், சமூகத்தில் எல்லோரது பாதுகாப்பு பற்றிய அக்கறை ,நேர்மை ஆகியவற்றை விட விஞ்ஞான முன்னேற்றமும்,பொருளாதார மேம்பாடும் முக்கியமானவை என்று கருதும் சமூகத்தில் 'அபாயம் ' என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல.

நாவலின் கசப்பான யதார்த்தம் ' முன்னேற்றம் என்று அழைக்கப்படுவது
' அபாயம்' தானே?'

அபாயம் படித்த போது நிஜமாகவே ரொம்ப நாள் ரொம்ப ரொம்ப பயமாக இருந்தது . பாதிப்பு சொல்லி முடியாது .





Jan 10, 2009

கல்பற்றா நாராயணன்

ஒரு மலையாளி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் . நல்ல இலக்கிய ரசிகர் . மலையாள கவிஞர் கல்பற்றா நாராயணன் கவிதைகள் இரண்டு சொன்னார் . மனதில் அந்த இரண்டு கவிதைகளும் அப்படியே 'பச்சக்' என்று ஒட்டிக்கொண்டன . அவர் எனக்கு தமிழில் மொழிபெயர்த்து சொன்னதை என் நினைவிலிருந்து சொல்கிறேன் . இந்த இரண்டு கவிதைகளில் ஒன்று குழந்தையையும் , அடுத்தது இறந்த பிணத்தையும் முன் வைத்து கல்பற்றா நாராயணனால் எழுதப்பட்டு இருப்பது ஒரு முரண் நகை .
ஆயாசம் , பிடிவாதம் என இரண்டை தொடுகிறார்.

1. சிறு குழந்தைகள் கொட்டாவி விடுவது பார்க்க அழகு தான் இல்லையா ?
அந்த கொட்டாவிக்கு அர்த்தம்- ' இந்த உலகம் சுவையாக இல்லை .'
கொட்டாவி விட்ட பின் அந்த குழந்தைகள் ரொம்ப ஆயாசத்துடன் இந்த போரடிக்கும் உலகத்திற்கு முதுகை காட்டி குப்புற படுத்துக்கொள்கிறார்கள்
..
2. உயிரிழந்தவர்கள் ரொம்ப பிடிவாதமானவர்கள் .
அவர்கள் வாயில் கங்கை நீரை விட்டாலும்
குடிக்க மறுப்பார்கள் .
செத்தவர்களை பார்த்து நாம் முட்டி தேம்பி அழுதாலும் அவர்கள் சட்டையே செய்யமாட்டார்கள் .
செத்தவர்களின் மடங்கிய கை விரல்களை உடைத்தால் தவிர விரித்து விட முடியாது .
இறந்தவர்களை மண் மூடும்போது கூட ,அல்லது நெருப்பு அவர்களை சுட்டு எரிக்கும்போதும் சரி கொஞ்சம் கூட முகம் சுண்டவே மாட்டார்கள் .
அவர்கள் மாட்டோம் மாட்டோம் என்ற முடிவில் பிடிவாதம் மிக்கவர்கள் .

Jan 8, 2009

உலக நடப்பு

அதிர்ச்சி -
சத்யம் கம்ப்யுட்டர் விவகாரம் - கணக்கு வழக்கு மூலம் நிறைய பொய் .
பங்கு சந்தை வீழ்ச்சி .

நகைச்சுவை - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துர்ரானி டிஸ்மிஸ் . அவர் செய்த பெரிய தவறு 'கசாப் பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் ' என்ற உண்மையை சொல்லி விட்டார் . ஜனாதிபதி சர்தாரியிடம் மட்டும் கன்சல்ட் செய்து பிரதமர் கிலானியைதர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டார் .

பாகிஸ்தான் வெளியிட்டுள்ள ராணுவ ரகசியம் - கசாப் பாகிஸ்தானி தான் .

செழிப்பு - திருமங்கலம் வாக்காள பெருமக்கள் . உபயம் : திமுக , அண்ணா திமுக
( இன்றைய செய்திகளில் ஒரே சந்தோசமான செய்தி இது மட்டுமே தான் )


பாட்டாளி ராமதாஸ் சிந்திக்க வேண்டிய விஷயம் : தாஸ்மாக் கொஞ்சம் முன்னதாக அடைக்கப்படுவதால் 'ப்ளாக் 'க்கில் பாட்டில்கள் அதிக விலைக்கு தாஸ்மாக் கடைகளிலேயே விற்கப்படுகின்றன .(இரவில் கடை மூடிய பின்னும் ,காலை கடை திறப்பதற்கு முன்னும் )

கன்னித்தீவு சிந்துபாத் கதை : விடுதலை புலிகள் - 'கிளிநொச்சியை மீண்டும் கைப்பற்றுவோம் '

தீர்வு இல்லாத நிரந்தர சோகம் : இலங்கை தமிழர்கள் .


மத்திய அரசு வெளியிடாத முக்கிய செய்தி : தள்ளாத முதுமை காரணமாக பிரணாப் முகர்ஜி யின் ' போர் நிறுத்தம் வேண்டி இலங்கைக்கு செல்லவிருந்த நெடும் தூர பயணம்' ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

போராட்டம் : ந்தியன் ஆயில் , பாரத் பெட்ரோல் கம்பெனி அதிகாரிகளுக்கு லச்ச ரூபா சம்பளம் போதவில்லை .

O wonder !
How many goodly creatures are there here!
How beauteous Mankind is!
O brave new world!
That has such people in it!
-Shakespeare in ‘ Tempest’


Jan 7, 2009

சினிமாவுக்கு கதை , சினிமாவுக்கு வசனம்

சினிமாவுலகிலே எழுத்தாளனுக்கு எந்த மரியாதையும் கிடையாது . எந்த காலத்திலேயும் தமிழ் சினிமாவில் எழுத்தாளனை மதிக்கவே மாட்டார்கள் . கதை வசனம் எழுதி சம்பாரித்து யாரும் பெரிதாய் உயர்ந்ததில்லை .

ஏ எல் நாராயணன் கார் வாங்கிய ஒரேசினிமா கதை வசனகர்த்தா என்று சினிமாவுலகில் அறியப்பட்டிருந்தார் .


இலக்கியவாதிகள் சினிமாவிற்கு போகும்போது ரொம்ப அவமானப்படுவார்கள் .


சினிமாவுக்கு போகாததால் க நா சு மட்டும் தப்பித்தார் . ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்கள் துவங்கி இன்று இ பா , கி ரா ,சு.ரா, எஸ்.ரா வரை சினிமா ஈர்த்திருக்கிறது .

ஜெயகாந்தன் ' சினிமா காரபயளுக மேனாமினுக்கிகளை வச்சி தொழில் பண்ற மாமாக்காரங்க 'ன்னு நல்லா திட்டி தீர்த்திட்டார் .' ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் ' புத்தகம் படிச்சா ஜெயகாந்தன் எந்த அளவுக்கு காயப்பட்டிருக்கிறார் என அறியலாம் .


.அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் வேலை பார்த்தார் . ஆனால் தன் படைப்பை படமாக்கவோ ,கதை வசனம் எழுதவோ அலைந்ததில்லை .

டிவி இலே காட்டினாங்கே .
சமீபத்தில் 'நான் கடவுள் ' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினவன் எல்லாம் பாலா வுக்கு ஜால்ரா அடிச்சானுங்க , படத்தின் பற்பல வல்லுனர்கள் பற்றி குறிப்பிட்டாலும் அந்த படத்து கதை எழுதுனவன் யாரு , வசனம் எழுதுனவன் யாரு ன்னு ஒரு பயலும் பேசவே இல்ல .

Unhonoured, Unsung

இது தான் அந்த எழுத்தாளனுக்கு கிடச்ச மரியாதை ! ஐயோ பாவம் ! அவன் தலையிலே ஒத்த விதி ! ஒரு நாய் கூட சீந்தலே !!

சரி ! அவனும் ஜெகம் பிராடு தானே !

Jan 6, 2009

Carnal Thoughts -16

திடும் டம்
மகளுக்கு சாந்தி முகூர்த்தம் ! அம்மாகாரி பாலை மகள் கையில் கொடுத்து ' மாப்பிள்ளை கிட்டே சூதானமா நடந்துக்க . அவர் சொன்னபடி கேட்டுக்க ' என சொல்லி முதல் இரவு அறைக்குள் அனுப்பினாள்.மாப்பிள்ளை உள்ளே அறையில் ஆயத்தமாய் ஏற்கனவே உள்ளான் .
அறைக்குள் மகள் நுழைந்த ஒரு நிமிடத்தில் ' திடும் டம் ' சுவர் அதிரும்படி ஒரு சத்தம் . அம்மாகாரிக்கு குழப்பம் .
மறு நாளும் பெண் இரவில் அறைக்குள் நுழைந்தவுடன் அதே ' திடும் டம் ' சுவர் மீண்டும் அதிர்ந்தது .
மகளிடம் கேட்க தாயாருக்கு கூச்சம் . மகள் அடுத்த நாள் மாப்பிள்ளையுடன் ஊருக்கு போனவள் வளைகாப்பு போட்டு அழைத்து வந்த போது தான் மீண்டும் தாய் வீடு வருகிறாள் . பிரசவத்திற்காக .
அம்மா ஆர்வம் அளவுக்கு மீறி விட்டதால் ஒரு நாள் கேட்டே விடுகிறாள் .
'அது என்னடி சத்தம் . நீ அறைக்குள் நுழைந்ததும் சுவரே அதிர்கிறதே '
' என்னை அறையில் ஒரு மூலையில் நிறுத்தி விட்டு மாப்பிள்ளை அறையின் எதிர் சுவரிலிருந்து ஓடி வந்து ஏறுவாரும்மா ' மகள் பதில் நாணத்துடன் .' ரொம்ப சுகமா இருக்கும்மா !'
' ஒங்கப்பா கிட்ட நான் என்ன சுகத்தை கண்டேன் ' தாய்
'அப்பா கிட்டே இன்னைக்கு ஒன்னை அப்படி செய்ய சொல்லுமா'
அன்று அப்பா இருந்த அறைக்குள் அம்மாவை பாலை கையில் கொடுத்து மகள் அனுப்பினாள் .
கசமுசா என்று பேச்சு சத்தம் தான் முதலில் கேட்டது .
அப்பா : வேணாண்டி .. எனக்கு பயமா இருக்கு ...சின்னஞ்சிறுசுக செய்யறதை நம்ம செஞ்சு பாக்கறது விஷப்பரிட்சை ..
அம்மா : என் தூமைய குடிக்கி .. சான்ட்டைய குடிக்கி ....மரியாதையா நான் சொல்றபடி செய் ..
கொஞ்ச நேரத்தில் ....
'திடும் டம் ' நல்ல சத்தம் ! சுவர் அதிர்ந்தது !
ஆஹா யான் பெற்ற இன்பம் என் தாயும் ......
மறு நாள் காலை . திறந்திருந்த அறையில் மகள் நுழைந்த போது அம்மா விசனமாக சுவர் மூலையில் .
'என்னம்மா ?'
" அட போடி கண்டார ஒலி . ஒன் பேச்சை கேட்டு இப்ப ஒங்கப்பனை ஆளை காணோம் டி பாவி மகளே ."
அம்மாவின் Vagina லூசா தொள தொளன்னு இருந்ததால் .....அப்பா மொத்தமா முழுசா உள்ளே போய்விட்டார் !

Jan 5, 2009

Doctored News, Motivated News

Journalism – the ability to meet the challenge of filling the space !

'உலகம் இதிலே அடங்குது ,உண்மையும் பொய்யும் புழங்குது' என்று சிவாஜி 'குலமகள் ராதை ' படத்தில் செய்திப்பத்திரிக்கை பற்றி பாடுகிற காட்சி உண்டு .

மனோஜ் தமிழின் முக்கிய சிறுகதை எழுத்தாளர் . அவருடைய 'புனைவின் நிழல்' சிறுகதை படிக்க மிகவும் சுவாரசியமானது . செய்தியை,பேட்டி யை தினபத்திரிக்கையில் நிறைக்க அந்த காலங்களில் நடந்த தகிடு தத்தங்களை அப்படியே ஒரு குறுக்கு வெட்டாக எடுத்துக்காட்டும் சிறுகதை . இந்த இன்டர்நெட் யுகத்தில் அப்படிப்பட்ட தவறுகளுக்கு வாய்ப்பு மிகக்குறைவு என்றாலும் கடந்த கால செய்திப்பத்திரிக்கை பற்றிய வரலாற்று ஆவணமாகவே மனோஜின் 'புனைவின் நிழல் ' சிறுகதையை வைக்கமுடியும் . செய்தித்தாள் ,பத்திரிகை வேலைகளை 'விபச்சாரம் ' என்றே டால்ஸ்டாய் கோபத்துடன் குறிப்பிட்டார் .

டிவி தினசரி செய்திகளை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது . மகாமோசமான மூளை சலவை டிவி செய்திகள் மூலம் நடக்கின்றன .

அந்த காலத்திலே சன் டிவி சேட்டை சொல்லி மாளாது .இருக்கிற டிவி செய்திகளில் அகமட்டமானது, ஆகமட்டமானது , ஆகாககாக மட்டமானது ஜெயா டிவி செய்திகள் . 'திமுக என்ற கட்சியின் இருப்பு , அது ஆட்சியில் இருப்பது குறித்த எரிச்சல் 'தான் ஜெயா டிவி செய்திகள் .சகிக்க முடியாத செயகைத்தனமான Doctored News, Motivated News தான் எல்லா சேனல்களும் தரும் செய்திகள் என்றாலும் ஜெயா டிவி தான் ரொம்ப ஓவர் . 'மைனாரிடி திமுக அரசு' இந்த வார்த்தை தான் ஜெயா டிவி செய்தியில் எப்போதும் ஒலிக்கிறது . ஆட்சியில் ஜெயலலிதா இருந்தகாலத்திலேயும் கருணாநிதி, அந்த கட்சி திமுக பற்றி வெட்டி புரணி தான் ஜெயா செய்திகள் .

தெற்கே வயித்தெரிச்சலை 'பூலாப்பு' என்று சொல்வார்கள் .

Jan 3, 2009

பிரார்த்தனை

அந்தோனி டிமெல்லோ ஒரு கிறித்துவ பாதிரி . நிறைய குட்டிகதைகள் எழுதியுள்ளார் . மதத்திற்கு விரோதமான கருத்துக்கள் அந்த கதைகளில் இருப்பதாக அவர் மீது கத்தோலிக்கம் கண்டனம் வைத்தது .அவர் எழுதிய குட்டி கதை ஒன்று .

' ஒரு பாதிரி ஜெபம் செய்ய ஆரம்பிக்கிறார் . அப்போது மழைக்காலம். அதன் காரணமாக அவருடைய சர்ச் ஒட்டியுள்ள வீட்டை சுற்றி தேங்கிய குட்டையில் தவளைகள் சப்தம் .

பாதிரியார் பிரார்த்தனைக்கு இந்த தவளை சத்தம் குந்தகம் விளைவிக்கின்றன என எண்ணி அயர்ச்சியாடைகிறார் .

“Quiet . I’m at prayer” என்று ஒரு கூப்பாடு போடுகிறார் .

தவளைகள் அனைத்தும் நிசப்தமாகி விடுகின்றன . பயங்கர அமைதி !

பாதிரி சந்தோசமாக உரக்க கூவி பிரார்த்திக்கிறார் .

“My Father! Who art in heaven!”

வானத்திலிருந்து ஒரு அசரிரி

“OK! I am hearing you.
But why did you stop the prayer of the Frogs?!”