Share

Aug 31, 2012

டீ காஃபி


ஏதோ ஒரு ஊரில் ரயில் பின்னிரவில் நிற்கும் போது  ‘டீ , காஃபி’ , ‘ டீ காஃபி’ என்ற கூவல் ரயிலில் அரைத் தூக்கத்தில்  காதில் விழுகிறது.அந்த நேரத்திலும் டீ,காஃபி சாப்பிடும் பயணிகள்.

சென்னையிலிருந்து திருச்சி திரும்பிக்கொண்டிருந்த போது அதிகாலை மூன்று மணி ‘டீ, காஃபி டீகாஃபி என்ற கூப்பாடு.விழித்தபோது தொழுதூர் மோட்டலில் பாட்டு”சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்,கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாள்”
அந்த அதிகாலையில் அந்தப் பாடல் -எவ்வளவோ தடவை கேட்ட பாடல்-
ஆஹா இன்றும் நினைவில்.


ஊர்,ஊரா எத்தனை டீகடை, காபி கிளப். எப்ப பாத்தாலும் ஏராளமா டீ, காபி சாப்பிட்டுக்கொண்டு  இருக்கிறார்கள்

மதுரை ஏ.ஏ ரோட்டில் டீகடை  வைத்திருந்த குருட்டுபிராசம்-ஷார்ட் சைட், ஆனால் கண்ணை டாக்டரிடம் காட்டமாட்டார். செக் செய்து கண்ணாடி போடவும் மாட்டார். கண்ணை அடிக்கடி இடுக்கி உற்றுப் பார்த்து தான் ஆளை அடையாளம் தெரிந்து கொள்வார்.  பெயர் பிரகாசம். மதுரை சல்லிகளுக்கு குருட்டு பிராசம் போடுவது டீதானா என்ற சந்தேகம்.
காலை எட்டுமணி. பிராசத்தின் கூரைக்கடையில் ஏற்கனவே ஆட்டுமூக்கன்,ஒத்தக்காதன்,மண்டைமூக்கன்,கொலாப்புட்டன் உட்கார்ந்து ரெண்டு வட்டை டீயை பகிர்ந்து குடித்துக்கொண்டு தினமலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

’’யோவ் எம்.ஆர்.ஆர் வாசு செத்துட்டானாம்யா’’
”’ஓவர் குடி! தேங்கா சீனிவாசனும் வாசுவும் சந்திச்சி பேசிக்கிறதை   குமுதத்தில படிச்சேன்.தேங்காக்கிட்ட சொன்னான்.’எனக்கு நாலு பொண்டாட்டி இப்ப. ’ ’மூணு தானே மாப்பிளே’னு தேங்கா சீனிவாசன் கேக்கறான். வாசு’ இப்ப ஒண்ணு ஆசைப்பட்டுச்சி அதையும் முடிச்சிக்கிட்டேன்’னான்.

தொல்லை உள்ளே நுழைந்தான். டீக்கடையில் ஒரு பத்துபேர்.
நல்லா சவுண்டா தொல்லை சொன்னான்”யோவ் ப்ராசம்! குடிக்கிற மாதிரி ஒரு டீ போடுயா”
”இங்க குண்டி கழுவத்தான் டீ போடுறோம்”spontaneous ஆக குருட்டுப்பிராசம் பதில்.


சமயவேல் கவிதை-

வாருங்கள்

உனக்கும் எனக்கும்
எனக்கும் அவனுக்கும்
இவனுக்கும் உனக்கும்
கடைசியில் ஒன்றுமில்லை
என ஆனது

அதனாலென்ன வாருங்கள்
டீ குடிக்கப் போகலாம்
என்றேன் நான்.


தேவதேவன் கவிதை -

ஒரு காதல் கவிதை

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;
ஒரு காபி சாப்பிடலாம், வா.



.“If this is coffee, please bring me some tea; but if this is tea, please bring me some coffee.”
-Abraham Lincoln



http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_07.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_17.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-34.html





Aug 30, 2012

எம் ஆர் ராதா வாழ்வில் பிராமணர்கள்

நேற்று  2.9.12 தேதியிடப்பட்ட ஜூனியர் விகடனில் கழுகார் பதிலில் இந்த பதிவின் முதல் பாராவில் உள்ள விஷயம்  இடம்பெற்றுள்ளது.அதனால் இந்த பதிவு மீள் பதிவு செய்யப்படுகிறது.

 ‘பி.எஸ்.ஞானம்’ என்ற என் பதிவில் பாசமலர் படம் பார்க்கும் பெண்கள் எப்படி அந்த வில்லி நடிகையை திட்டுவார்கள் என்று எழுதியிருந்தேன். அதன் பின்னர் ஆனந்த விகடனில்  வெளியான சுகாவின் தொடர்கட்டுரையில் ஷோலே படம் பார்ப்பவர்கள் தியேட்டரில் அம்ஜத்கானை எப்படித்திட்டுவார்கள் என்று எழுதப்பட்டிருந்தது

Nov 23, 2009



 சங்கரதாஸ் சுவாமிகளை " நாடக உலகத்தந்தை " என எல்லோரும் சொல்வதை எம்.ஆர் .ராதா ஏற்றவரல்ல.' நாடக உலகின் தந்தை ஜெகந்நாதய்யர் தான் 'என எப்போதும் உறுதியாக ராதா சொல்வார்.

" மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சபா." முதலாளி ஜெகந்நாத அய்யர்.

ஜகன்னாத அய்யர் நூறு வருடங்களுக்கு முன் தன் நாடகக் கம்பெனியில் நடிகர்களிடம் ' சம பந்தி போஜனம் ' கொண்டு வந்து புரட்சி செய்தவர் .

கிட்டப்பா இந்த நாடக கம்பெனியில் சேர தன் அண்ணன் தம்பிகள் ஐந்து பேரோடு வந்தார் ." கிட்டப்பா ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது ''ன்னு சொல்லி ஜகன்னாத அய்யர் திருப்பி அனுப்பி விட்டார்.

ஜகன்னாத அய்யர் கம்பெனியிலிருந்து என் . எஸ் . கே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி கொல்லம் போய் டி .கே .எஸ் . கம்பெனியில் சேர்ந்து விட்டார். ஜகன்னாத அய்யர் உடனே போலீசில் ' கம்பெனி நகையை திருடி விட்டான் ' என்று என் .எஸ் .கே மீது புகார் கொடுத்து விட்டார் . போலிஸ்
என் .எஸ் . கே யை விலங்கிட்டு அவரை ஜகன்னாதய்யரிடம் அழைத்து வந்தார்களாம் . மீண்டும் கம்பெனியில் சேர்ந்தார் என் .எஸ் .கே .

எம் . ஆர் .ராதாவின் நடிப்பு வாழ்க்கைக்கு அஸ்திவாரம் பலமாகப் போட்டவர் ஜகன்னாத அய்யர் தான் . இவர் மீது ராதாவுக்கு மிகுந்த மரியாதை.

ராதா தன் வாழ்க்கையில் ரொம்ப உயர்ந்த இடத்தில் வைத்து தொழுகையே நடத்திய உத்தமர் ஒருவர் உண்டு . அவர் ஜட்ஜ் கணேசய்யர் ."கண் கண்ட தெய்வம் கணேசய்யர் " என்று நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.
"விமலா அல்லது விதவையின் கண்ணீர் " என்ற நாடகத்திற்கு நாகையில் சனாதனிகள் தடை செய்யவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது அந்த நாடகத்தை ஜட்ஜ் கணேசய்யர் பார்த்து விட்டு ராதாவை வானளாவ புகழ்ந்து நாடகம் நடப்பதற்கு தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கினார் .



தான் காதலித்த ஒரு பெண்ணை சக நடிகர் சைட் அடித்தார் என்பதற்காக ராதா கோபமாகி அந்த நடிகர் மீது திராவகத்தை ஊற்றிய போதும் கணேசய்யர் அந்த கேசில் இருந்து காப்பாற்றினார்.

இந்த திராவகம் வீசப்பட்ட நடிகர் பின்னாளில் ராதா எம்ஜியாரை சுட்ட கேசில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார் .ஆனால் அவர் ராதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டார் . ஏனென்றால் அந்த நடிகர் அந்த நேரத்தில் ராதாவின் நண்பர் ஆகியிருந்தார் . நண்பரானது எப்படி என்பது புரியாத புதிர் என்கிறார் ராதா .

திராவிட கழக மாநாடு ஒன்றில் கொடி பிடித்து குதிரையில் ராதா வந்த போது அந்த குதிரையை ஒரு காங்கிரஸ் காரர் சீண்டி அதன் பின்னங்கால்களால் உதை வாங்கி இறந்து போனார் . அவரை எச்சரித்தும் அந்த ஆள் மீண்டும் குதிரையை சீண்டியதை தொடர்ந்ததால், ராதா தான் டெக்னிக் ஆக குதிரை கடிவாளத்தை பிடித்து உதைக்கும்படி செய்திருக்கிறார் . அந்த கேசில் இவருக்கு தூக்கு கூட கிடைத்திருக்க வேண்டியது. அப்போதும் ராதாவுக்கு ஆபத் பாந்தவராக கணேசய்யர் தான் காப்பாற்றியிருக்கிறார் .

இந்த தன் குற்றங்களை சொல்லும்போது ராதா இந்த விஷயங்கள் பத்திரிகையில் வெளிவரும்போது ஜட்ஜ் கணேசய்யர் கெளரவம் பாதிக்கப்படக்கூடாதே என்ற பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறார் .

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டீசாருக்காக யுத்த எதிர்ப்பு நாடகங்கள் நடத்துவதற்கு ராதாவுக்கு மிகப்பெரிய தொகையை ஏற்பாடு செய்து கணேசய்யர் உதவி செய்தார். அவர் வாழ்வில் மகத்தான திருப்பம் இந்த உதவி . அப்போது
எம்.ஆர்.ராதா தளுதளுத்து கண்ணில் நீர் பொங்க கணேசய்யரை கையெடுத்து கும்பிட்டு சொன்னார் " தெய்வம் வெளியே இல்லே. நமக்குள்ளே தான் இருக்குன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கிறேன் . இன்னிக்குத் தான் அந்த தெய்வத்தை நேருக்கு நேராப் பார்க்கிறேன். "

ராதா வாழ்விலிருந்து முழுவதுமாக வறுமையை அகற்றியவர் ஜட்ஜ் கணேசய்யர் தான். புகழ், பணம், செல்வாக்கு எல்லாமே அப்புறம் ராதாவைத்தேடி ஓடி வந்து குவிந்தது .

ராதா மதித்த இன்னொரு பிராமணர் திருவாரூர் சர் ஆர் . எஸ் . சர்மா. அவரைப் பற்றி ராதா பூரிப்புடன் சொன்னது " அவர் ஆரியர்களுக்கு கொடுத்ததை விட திராவிடர்களுக்குக் கொடுத்தது தான் அதிகம்."

பரத நாட்டிய கலைக்கு பிராமணர்களால் தான் உன்னதப் பெருமை கிடைத்தது என ராதா அழுத்தமாக நம்பினார்." ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதக்கலை பிராமணர்களால் புனிதமான கலையாயிடிச்சி. அந்தக் கலைக்காக பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அர்ப்பணம் செய்றாங்களே!" பரவசமாக சொல்கிறார் .

'சிறைச்சாலை சிந்தனைகள் ' என்ற நூல் ராதா அப்போது எம்ஜியார் கேசில் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் விந்தன் அவரை பேட்டியாக எடுத்தது.
ராதாவின் ஒவ்வொரு அமர்க்களமான,அடாவடியான கருத்துகளுக்கும்
( அவருடைய அபிப்பராயங்கள் பல பாமரத்தனமானவை ) விந்தன் comments தான் நூலில் ஒரு செயற்கையான குறை. ஏனென்றால் ப்ளாகில் வருகின்ற பல அபத்த பின்னூட்டங்கள் போலவே இருக்கின்றன விந்தன் தன் பேட்டியில் எம் ஆர் ராதாவின் பேச்சில் பிரமித்து ஏதேதோ சொல்வது .

கதிரில் வெளிவந்த தொடரை முழுவதும் பைண்ட் செய்து ஒரு நண்பர் வைத்திருந்ததை 25வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன் . ஆனால் இப்போது வெளி வந்துள்ள நூலில் பல விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன என தெரிகிறது .

அவர் காலத்து மற்ற நடிகர்களைப் போலவே ராதா நிறைய..நிறைய்ய பலவீனங்கள் கொண்ட மனிதர். ஆனால் அவரிடம் ஏனைய நடிகர்களிடம் இருந்த hypocrisy கிடையாது என்பது தான் அவரின் குண விஷேசம். தான் செய்த மோசமான தவறுகளைக்களைக்கூட வெளிப்படையாக பேசிய ஒரே தமிழ் நடிகர் ராதா மட்டுமே.
ராதா அவருடைய அபூர்வமான தனித்துவமான நடிப்புக்காக மிகுந்த கவனத்துக்குரியவர்.

Aug 29, 2012

கரிச்சான் குஞ்சு என்ற அதிமானிடன்


Oct 2, 2008


 சாரு நிவேதிதா வின் முதல் நாவல் ’எக்ஸிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும்’விமர்சனத்தில்(’மேலும்’ பத்திரிக்கை மே மாதம், 1990) நான் குறிப்பிட்டேன் .

"கு.ப .ரா எட்டடி பாய்ந்தால் கரிச்சான் குஞ்சு தன் 'பசித்த மானிடம் ' நாவலில் பதினாறடி பாய்ந்து விட்டார் ."
முப்பது வருடங்களுக்கு முன் மீனாக்ஷி நிலையம் வெளியிட்ட நாவல் .
தி.ஜா தான் மீனாக்ஷி நிலையம் செல்லப்பனிடம் இந்த நாவலை பிரசுரிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் . நாவலின் தனி தன்மைக்காக மட்டுமல்ல . கரிச்சான் குஞ்சு வின் மகளுக்கு அப்போது கல்யாண செலவுக்கு பணம் தேவை பட்டது . செல்லப்பன் வியாபார நோக்குடனும் , இதை வெளியிடுவதினால் பின்னால் கலாச்சார காவலர்களின் அச்சுறுத்தல் களுக்காக வும் தயங்கியிருக்கிறார் . தி .ஜா வின் வற்புறுத்தல் தான் 'பசித்த மானிடம்' நூலை பதிப்பிக்க காரணம் ஆகியிருக்கிறது . என்னிடம் செல்லப்பன் இந்த விஷயத்தை நாவல் வெளியான மூன்றாம் ஆண்டு நான் நாவலை வாங்கிய போது தெரிவித்தார் . கலாச்சார காவலர்களின் பார்வைக்கு இது தப்பி விட்டதற்கு காரணமே இந்த நாவல் வெளியான விஷயமே அவர்கள் கவனத்திற்கு செல்ல வில்லை என்பது தான் . (அரசியல் கட்சிகாரர்களுக்கும் அப்போதெல்லாம் இப்போது போலவே படிக்கிற வேலையெல்லாம் கிடையாது .)அதன் காரணமாகவே விற்பனையும் படு மந்தம் . செல்லப்பன் என்னிடம் பேசும்போது பசித்த மானிடம் நாவல் பிரசுரம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை பற்றி தான் ஆதங்கமாக பேசினார் .
இலக்கிய பத்திரிகைகள் கூட இந்த நாவலை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை . க . நா . சு . சுந்தர ராம சாமி , வெங்கட் சுவாமிநாதன் , பிரமிள் போன்றோர் கூட பசித்த மானிடம் பற்றி பிரமாதமாக பேசவில்லை .
ஒரு மிக சிறந்த நாவலின் கதி பாருங்கள் . கோவை ஞானி , அ .மார்க்ஸ் கொஞ்சம் தாமதமாக கரிச்சான் குஞ்சு பற்றி கட்டுரை எழுதி பிற கட்டுரைகளுடன் புத்தகங்களாக வந்தன .
ஆதவன் தான் கரிச்சான் குஞ்சு ஆளுமை பற்றி மிக அழகாக சொன்னார்
' அறிவை மறைத்து வைத்து இயல்பாய் இருப்பது சிரமமான காரியம் . அது கரிச்சான் குஞ்சுவுக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது '
முன்பெல்லாம் மறு வாசிப்பு செய்கிற நாட்களில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மூன்று மாதம் ஒதுக்குவேன் . அப்படி மறு வாசிப்புக்காக கரிச்சான் குஞ்சுவுக்கு ஒதுக்கி ' பசித்த மானிடம் ' நாவல் மற்றும் அவரது சிறுகதைகள் மறு வாசிப்பு செய்த போது அவரை கண்டடைந்ததற்காக மிகவும் சந்தோசம் அடைந்திருக்கிறேன் .
தேவர்களுக்கு வாகனங்கள் !
சனீஸ்வரனுக்கு வாகனம் காகம் . பிள்ளையாருக்கு எலி . முருகனுக்கு வாகனம் மயில் . எமனுக்கு வாகனம் எருமை .
இப்படி குபேரனுக்கு வாகனம் என்ன தெரியுமா ? மனிதன் !
கரிச்சான் குஞ்சு ஒரு சிறுகதையில் சொல்வார் " பேஷ் பேஷ் . என்ன அழகாக வேதத்தில் எழுதி இருக்கிறான் . குபேரனுக்கு வாகனம் மனிதன் . பணக்காரன் மனிதர்கள் மீது தானே சவாரி செய்கிறான் . அதிலும் ஏழை எளியவர்கள் பணம் படைத்தவனுக்கு வாகனம் என்பது சரிதானே . பேஷ் பேஷ் ."
ஏழை எளியவர்கள் தானே பணம் படைத்த குபேரனுக்கு வாகனம் .
இப்போது என்னுடைய முந்தைய பதிவை -' விவசாயி - உழவும் வாழ்வும்' மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் .



...........................

Sep 1, 2009


நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது!?
கரிச்சான் குஞ்சு எழுதிய "பசித்த மானிடம்" நாவலில்
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேசனில் தனியிடம் பார்த்து அமர்ந்து கணேசன் பணத்தை தன் பையில் இருந்து எடுக்க முயற்சி செய்யும்போது போலீஸ் பசுபதி பார்க்கிறார் . கணேசன் குஷ்டரோகி .
" இந்த ஊருக்கு நான் புதியவன் . பிச்சையெடுத்து சாப்பிட்டு பிச்சைக்காரர்களுடன் கலந்து வாழ முடிவு செய்திருக்கிறேன் " என்கிறான் .
பசுபதி தீவிர ஆன்மீகவாதி ." எவ்வளவு பழுத்த ஞானம் இருந்தால் இந்த முடிவுக்கு வர முடியும் !" புல்லரித்து ,செடியரித்து, மரமரித்து சிலிர்த்துப் போகிறார் .
கணேசன் உள்ளதை உள்ளபடி சொல்கிறான் "அப்படி கிடையாது நான் ஒரு அழுகல் , எச்சிக்கலை நாய் . மலத்தில் மகிழும் பன்றி."
பசுபதி விடுவதாய் இல்லை . மேலும் சிலிர்த்து " நாய் போல் பன்றி போல் , நாணம் இல்லா நக்கனுமாய் , பேய் போல் ,பித்தனைப்போல் பிரம்மவித்து தோன்றிடுவான் !" ஒரு செய்யுள் எடுத்து விட்டு கணேசனை வழிபடுகிறார் .
கணேசன் " நான் உதவாக்கரை . காசுபணம் சுகபோகம் கண்டவன் .பண்ணின பாவத்தால் அழுகிச்சொட்டுகிறது உடம்பு .நான் ரொம்ப நல்லாயிருப்பேன் முன்னெல்லாம் . அந்த உடம்பு செத்துப்போயிடுச்சி ; இது புது உடம்பு " யதார்த்தமாய் இப்படி சொல்வதையும் பசுபதி தத்துவார்த்தமாக எடுத்துக்கொண்டு "கொஞ்சமா பேசினீங்க . ஆனால் நிறைய சொல்லிட்டீங்க . அதிலேயும் ரத்தினச்சுருக்கமா , பழைய உடம்பு செத்துப்போயிடுச்சின்னு சொன்னீங்களே ! இதுவரை எனக்கு புரியாத ஞானங்கள் எல்லாம் புரியுதுங்க !" வியந்து கணேசனை சித்தன் என்றே நம்புகிறார் .
பசுபதி பின்னால் போலீஸ் வேலையிலிருந்து ரிட்டயர் ஆனதும் சேத்ராடனங்களுக்கு சாமி கும்பிட கிளம்பும் முன் " சாமி ! நல்லா பாருங்க என்னை . கண்ணால் வரும் ஞானம் பொன்னாலும் வராது .உங்க கண்பார்வை பட்டதால் நீங்க காட்டிய எல்லா தத்துவங்களும் எனக்கு நல்லா புரியது "
இல்லாத ஒன்றை இருப்பதாக பாவித்து சாதாரண சராசரி அல்லது சராசரிக்கும் கீழானவர்களை மகான் ஆககாட்டும் வறட்டு ஆன்மீகத்தை கரிச்சான் குஞ்சு சத்தமில்லாமல் ,கோஷமே இல்லாமல் பசித்த மானிடத்தில் மட்டுமல்ல
"குச மேட்டு சோதி " சிறுகதையிலும் காட்டுகிறார் .
கோவில் கோபுரத்தடியில் விவாதம் செய்யும் நண்பர்களில் ஒருவன் சொல்கிறான் " இந்த நவீன காலத்திலும் வீண் பிரமைகள் . நம்புவது நல்லது என்றால் நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது " என்று இந்த மூட குருபக்திப் பற்றி சொல்கிறான் . ஒரு வேடிக்கையை அப்போதே நடத்தி காட்டுகிறான் .அங்கே இருக்கிற ஒரு பைத்தியத்தைக் கிளப்பி கடைவாசலில் ஒரு சீப்பு பழம் வாங்கி தருகிறான் .அந்தப் பைத்தியம் பழத்தை தின்னும்போது அதன் வாயிலிருந்து நழுவி விழுவதை பிடிக்க ஏந்துவது போல தன் கையை நீட்டிக்கொண்டே நிற்க ஆரம்பிக்கிறான் . சீப்பு ,சீப்பாக பைத்தியம் சாப்பிடுகிறது . கூட்டம் கூடிவிடுகிறது . " என்ன ? என்ன !"
இவன் சொல்கிறான் " ஒரு துளி எச்சல் கேட்கிறேன் . சாமி தரமாட்டேன்னுது !"
இருபத்தாறு மாதத்தில் குசமேட்டில் அந்த பைத்தியம் விஷேசமான மகானாக ஆக்கப்பட்டு ஆஸ்ரமம் , பூஜை, மேல்நாட்டு வெள்ளைக்கார பக்தர்கள் என்று அமர்க்களப்பட்டு விடுகிறது !

" ஒரு மாதிரியான கூட்டம் " கரிச்சான் குஞ்சுவின் குறுநாவல் . மயிலாப்பூரில் வசிக்கும் ஜெயாவின் 'அப்பா , அம்மா , அக்கா ,தம்பி' இவர்கள் தான் மிக பலகீனமான 'ஒரு மாதிரியான' கூட்டம் . பெரியப்பாவிடம் டெல்லியில் வளரும் பெண் ஜெயா . பெரியப்பா ரொம்ப ஸ்ட்ராங் கேரக்டர் . ஜெயாவின் பெரியப்பா அவளுடைய அப்பா பற்றி இப்படி சொல்கிறார் :" என் தம்பி ஒரு வெறும் ஆள் ,சுத்த உதவாக்கரை , குதிரை ரேஸ் , சீட்டாட்டம் நு சூதாடியே வீணாப் போனவன் . இப்போ இந்த (காஞ்சி ) பெரியவாள் பைத்தியம் வேற ஏற்பட்டிருக்கு. வெறும் ஆஷாடபூதித்தனம் ,பூஜை ,கீஜை ன்னு வேற கூத்தடிக்கிறான் "
காஞ்சி மடத்தின் மீதான போலி அனுஷ்டான பித்து பற்றி இப்படி ஒரு பிராமண எழுத்தாளர் நாற்பது , ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதி இருக்கிறார் !
மறைந்த மகத்தான எழுத்தாளர் ஆதவன் சொல்வார் :
"தி ஜானகிராமன் கதைகளில் ஆஷாடபூதித்தனத்திற்கும் ,போலி அனுஷ்டானங்களுக்கும் எதிரான ஒரு கோபம் எழுத்தில் இழையோடக்காணலாம் . கரிச்சான் குஞ்சு கதைகளும் அது போலத்தான் "

.........

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_01.html


http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_21.html

 

 

ந.பிச்சமூர்த்தி


Oct 9, 2009



மகமாயி - வேஷ்டி

சாதாரணமா இந்த நவீன யுகத்தில் ஏழ்மையில் உள்ள ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால் "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது.

முகத்தில் அம்மைத்தழும்பு. ஒரு ஏழைப்பெண். இவள் பெயர் பார்வதி . இவளைப்பற்றி ந .சிதம்பர சுப்பிரமணியம் " என்று வருவானோ " என்ற சிறுகதையில் விவரிக்கும் அழகு : " லக்ஷ்மியின் அருள் அவளிடம் விழவில்லையானாலும் மகமாயி யின் கருணை அவள் மேல் விழுந்து முகத்தில் அநேக இடங்களில் பதிந்திருந்தது ."


வீட்டில் அறைக்குள் சூரிய வெளிச்சம் விழுவதும் பின் மறைவதும் சாதாரணம் தான். இதை ந.பிச்ச மூர்த்தி ' வலி ' சிறுகதையில் எப்படி விவரிக்கிறார் :

கண்ணுக்கு எதிரே வெள்ளைத்துணி பறந்தது .... ஒன்றுமில்லை . எதிர்ப்புரத்து சன்னல் வழியாக சூரியன் நுழைந்து சுவரில் வெள்ளைத்துணியைக் கட்டிக்கொண்டிருந்தான் ...

( கொஞ்ச நேரங்கழித்து )

சூரியன் கட்டிய வெள்ளை வேஷ்டி சுவரில் பாதியும் தரையில் பாதியுமாகக் கிடந்தது .

(இன்னும் நேரங்கழித்து )

கீழே புரண்ட துணியை சூரியன் எடுத்துக் கொண்டு போய் விட்டான் .

........

Dec 24, 2009


மாய யதார்த்தம்
A realistic setting is invaded by something too strange to believe.
"காட்டில் திரியும் வேங்கை நிலவில் மரத்தில் நகத்தை ஆழப் பதித்து விட்டுப் போய் விடுகிறது . அதைப் பின்னரோ மறுநாளோ பார்த்த பிராணி கிலி பிடித்து உயிரை விட்டு விடுகிறது!வேட்டையாட வேண்டிய கஷ்டமில்லாமல் உணவு "

-ந. பிச்சமூர்த்தி ' பஞ்சகல்யாணி ' கதையில் புலியின் புத்திசாலித்தனமான உணவுத் தேடல் பற்றி. The peculiar attitude on the part of tiger towards it's prey!
இங்கே புலி மரத்தில் வரைகிறது .


கோவையிலுள்ள தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். கவிஞன் வரையும் மரம். வரைந்த பின் பறந்து விட்ட பறவைகள் மீண்டு வந்து அமர்ந்த மரம். Illogical Scenerio!

COLERIDGE FORMULA வுக்கு உதாரணம்.

Willing Suspension of Disbelief in constituting the poetic faith.

Justification of the use of fantacy and non-realistic elements in creative writing.

பறவைகளை வழி நடத்து

பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும்
அது பறந்து விட்டது
மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன்
அதுவும் பறந்து விட்டது
நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள் பறந்து கொண்டே இருந்தன
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.

.........


Nov 26, 2008


பட்ட மரம்

அந்த பட்ட மரம் தனிப்பட்டு ,தலைவிரி கோலத்தில் நின்று
மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது
.....................
" ஆமாம் மரம் தான் . ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்
கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா ? விரிக்கப்பட்ட சாமரம் போன்று
ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது ?...
அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது ? எதற்காக ?

--- மௌனி
' அழியாச்சுடர் ' கதையில்
........................................




காம்பு இற்றுப்போச்சு ...
நான் பூக்க மாட்டேன் .
காய்க்க மாட்டேன்
பழம் தர மாட்டேன் .
குயிலுக்கும் கிளிக்கும் என்னிடம் வேலையில்லை .
மரம் கொத்திப்பறவை வந்து
ஏணி மீது ஏறுவது போல் படிப்படியாக ஏறி
இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.
நான் ஓய்ந்து விட்டேன் . ஒடுங்கி விட்டேன் . காய்ந்து விட்டேன் .

--- ந . பிச்சமூர்த்தி
'அடுப்புக்கு எதிரில் ' கதையில்

.........

http://rprajanayahem.blogspot.in/2012/07/individual-choice.html


 

Aug 28, 2012

What a piece of work is a Man!

 R.P.ராஜநாயஹம் யார் ?

 

  இலக்கிய உலகில் திணிக்கப்பட்ட அடையாளங்கள் 

 

தி.ஜானகிராமனின் பரம ரசிகன்.

அசோகமித்திரனின் சீடன் .

Shakespearean scholar!


 .....
 



மணிக்கொடி சிட்டி ராஜநாயஹத்திற்கு கொடுத்த பட்டம் - கலியுக கர்ணன்

கோணங்கி கொடுத்த பட்டம் - வசீகர கோமாளி

கல்லூரி கால நண்பர்களுக்கு - GABIE. இன்றைக்கும் பால்ய நண்பர்கள் எல்லோரும் 'கேபி ' என்றே அழைக்கிறார்கள்.

உறவினர்கள் அனைவருக்கும் -துரை
( R.P.ராஜநாயஹம் என்ற என் பெயர் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் மிகவும் அந்நியமானது . எங்கள் குடும்பங்களில் பலருடைய பெயரில் ராஜநாயஹம் உண்டு . தாத்தா பெயர் என்பதால் பல ராஜநாயஹம்! அதனால் துரை என்றால் மட்டும் தான் நான் என்பது அவர்களுக்கு புரியும். )


ஜெயமோகன் எனக்கு கொடுத்த பட்டம் - காலச்சுவடின் ஒற்றன்

காலச்சுவடு கொடுத்த விருது - ஊட்டி வரை உறவு !

சாரு நிவேதிதா கொடுத்த பட்டம் -
லியர் மன்னன்
ராஜநாயஹம்!

பாரதி மணி கொடுத்த பட்டம் -
'அண்டி உறைப்பு 'ராஜநாயஹம்!
சில உண்மைகளையும், தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், ஒரு தைரியம் வேண்டும்.அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறைப்பு'

எஸ்.ராமகிருஷ்ணன் என்னைப் பற்றி - ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்!

யமுனா ராஜேந்திரன் அவர்கள் ராஜநாயஹத்துக்கு சூட்டிய பட்டம்
- ‘எழுத்தாளரின் எழுத்தாளர்’

 .................................

ராஜநாயஹம் எழுத்து 

 

பல படங்களில் வயதானவராக நடித்த ரங்காராவ் தனது முதுமையை அடையும் முன்பே இறந்து போய்விட்டார் என்ற தகவலை நண்பர் ராஜநாயஹம் வலைப்பக்கத்தில் ஒரு முறை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
திருப்பூரில் வாழும் எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.
- எஸ்.ராமகிருஷ்ணன்
www.sramakrishnan.com

..........................................................

எனக்குத் தெரிந்து R.P.ராஜநாயஹம் அவர்கள் தமிழ் படங்கள் பற்றியும், உலகப் படங்கள் பற்றியும் தெளிவான அறிவு உடையவர். அவர் பாலைய்யா, சுப்பைய்யா பற்றியும் பேசுவார், பெட்ரிக்கோ பெல்லினி பற்றியும் பேசுவார். ரோமன் பொலன்ஸ்கி படத்தையோ,பெட்ரொ அல்மொடொவர் படத்தையோ முன்வைத்து நம்ம ஊர் படத்தை விமர்சனம் செய்யமாட்டார்.
-குட்டிபிசாசு
kuttipisasu.blogspot.com

............................................................................


wandererwaves.blogspot.com
பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு;
அண்மைக்காலம்வரை ஜெயமோகனை அடிக்க காலச்சுவடு உசுப்பேத்திவிடும் அடியாள் என்ற அபிப்பிராய அறியாமை மட்டுமே R.P.ராஜநாயஹம் பற்றி எனக்கு இருந்ததென்பதற்கு, இவரை முதலிலே அறிய நேர்ந்த இவரது இலக்கியபத்தி+பக்தி எழுத்துகளும் காரணம். அப்படியான தப்பபிப்பிராயம்மட்டும் இப்போது மாறவில்லை; இவரை எதிர்_ஜெயமோகன் கருத்துப்பிம்பவடையாளமாக வைத்திருந்தது(ம்) மாறி, மாற்று_ஜெயமோகன்(_would be) கருத்துப்பிம்பவடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்டேன்; இலக்கியமென்பது உருகிப்பருகி ஆனந்திக்கமட்டுமே என்ற அமுதகலசமதுவந்திகளாக இரண்டுபேரும் தோன்றுகின்றார்கள்.


.......................................................................


என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.
- பஞ்சரு பலராமன்
Velichathil.wordpresscom

.........................................................................

NARAIN frind feed :சுவாரஸ்யம் என்னைக்
கும் நிஜமாகாது. ஆனா, R .P R யோட 2 வருஷ பதிவுகளை பாருங்க.இது வெறும் சுவாரஸ்யம் மட்டும் கிடையாது, அதுக்கு மேல!
ராஜநாயஹம் மாதிரி ஒரு ஆளை நாம இன்னமும் சரியான இடத்துல வைக்கலன்னு தோணுது

.....................


பிடித்ததை படித்ததில்...1
writerprc.blogspot.com


தமிழில் எழுதுபவர்கள் மிக குறைவு என்றே நினைத்தேன், ஆனால் தேடியதில் சில புதுமையான, இனிமையான தளங்கள் என் திறையில் அகப்பட்டது. அவைகளில் சில..

http://rprajanayahem.blogspot.com/

http://jyovramsundar.blogspot.com/

http://vijisekar.wordpress.com/

http://nizhalkal.blogspot.com/

http://nagarjunan.blogspot.com/

..........


ராஜநாயஹம் பற்றி

மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்

கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.

அசோகமித்திரன் : நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.

டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு ! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?


சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம்.

ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம்.
அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

.....

Sep 24, 2009



யார் நீ?


"மனித நாகரீகம் மற்றும் மொழி தோன்றிய பின் மனிதனின் நீண்ட வரலாற்றில் சட்டென்று விடை தர முடியாததோர் அசாத்தியமான கேள்வி இந்த " யார் நீ? " எந்த விடையும் பூரணமாக இருக்கமுடியாது ."
- அசோகமித்திரன் 'விழாமாலைப்போதில்'

கரு இல்லாத முடடையில்லே
குரு இல்லாத வித்தையில்லே
என்றாலும் நீ யார் ? கேள்வி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . நதி மூலம் ,ரிஷி மூலம் கண்டுபிடிக்க தவிப்பு தொடர்கிறது .
நான் யாராய் இருந்தால் உனக்கென்ன ?

Question: Who the hell are you?

My reply : Didn't I ever mention it?!


Even Eminence requires a luxurious,deluxe frame to make it presentable.

ரயில் சிநேகம் -ப்ளாக் சிநேகிதம் ஒரு ஆராய்ச்சி பதிவு யாராவது எழுதிப் பார்க்கலாம் . பெரிய பிரமைகள் தேவையே இல்லை. நேர்மையேயில்லாத முகமற்ற Anonymousகளின் பின்னூட்ட உலகமல்லவா ?
Comments are free, but Facts are sacred!

தத்துவவாதி சோப்பன்ஹீர் யாருடைய துணையும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்தான்.அவனுக்கு துணை ஒரே ஒரு நாய் மட்டுமே . அதற்கு கொஞ்சம் தத்துவார்த்தமாக அவன் ' ஆத்மா ' என்று பெயரிட்டிருந்தான் . யார் அந்த நாய் ? 'ஆத்மா' என்பது தான் பதிலாக இருக்கமுடியும் . ஆனால் அந்த நகரத்தில் இருந்த மனிதர்கள் எல்லோருமே அந்த நாயை " குட்டி சோப்பன்ஹீர்" என்று தான் அழைத்தார்கள் .அவன் அந்த நாயின் பெயர் ' ஆத்மா , ஆத்மா , ஆத்மா ' என்று எவ்வளவோ ,எப்படியெல்லாமோ வற்புறத்தி சொல்லிப் பார்த்தும் கூட அந்த முட்டாள் ஜனங்கள் "குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்" என்றே செல்லமாக அந்த நாயை குறிப்பிட்டார்கள்.


அப்படியானால் சோப்பன்ஹீர் என்பவர் யார் ?
அந்த அசந்தர்ப்பமான மனப்போக்குள்ள ஜனங்கள் இந்த தத்துவவாதி சோப்பன்ஹீர் அவர்களை " பெரிய ஆத்மா " என்று கூட சொல்வார்கள் தானே!
அடையாளச்சிக்கல் கர்ணனுக்கு, ஏகலைவனுக்கு மட்டுமில்லை ..ஆத்மா என்ற நாய்க்கு கூடத்தான் இருந்திருக்கிறது என்பதே மகத்தான சோகம்!

..........................

Aug 27, 2012

பாலா படங்கள்

Feb 8, 2009


பாலா படங்களில் சில விஷயங்கள் Repeatஆகின்றன. Similarities தெரிகின்றன.எல்லா படங்களுமே Morbid வகையாய் இருக்கின்றன. கதாநாயகர்கள் ரொம்ப மூர்க்கமானவர்கள்.

நந்தா சூரியா, பிதாமகன் விக்ரம், நான் கடவுள் ஆர்யா மிகவும் பலசாலிகள். போலீஸ் இவர்களை கண்டு மிரள்கிறது .
நந்தா சூரியா, நான் கடவுள் ஆர்யா தாய்உறவு சீராக இல்லை. நந்தா சூரியா தாயின் உதாசீனம் கண்டு மன உளைச்சல் அடைகிறார். நான் கடவுள் ஆர்யாவின் உதாசீனம் தாயை கலங்கி தவிக்க விடுகிறது. நந்தா சூரியா மைனர் ஜெயில் என்றால் நான் கடவுள் ஆர்யா பால்யத்தை காசி மடம்.
கதாநாயகி சேது விக்ரமிடம் ,நந்தா சூரியாவிடம் , நான் கடவுள் ஆரியா விடம் அப்ரோச் செய்யும் காட்சிகள் ஓரளவு ஒத்த தன்மை கொண்டவை . பயந்து பயந்து பேசுவது.
பழைய பாடல்களுக்கு சூரியா சிவாஜி, சந்திரபாபு மாதிரி சிம்ரனுடன் ஆடுவார் .
நான் கடவுளிலும் எம்ஜியார், சிவாஜி, ரஜினி வேசமிட்டு பல பாடல்களுக்கு ஆடுகிறார்கள். கதாநாயகி நிறைய பழைய பாடல்கள் பாடுகிறார்.
பிதாமகன், நான் கடவுள் கதாநாயகர்கள் இருவருமே எதிரியை துவம்சம் செய்ய, சூழலை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். உசுப்பி விட்ட பிறகு தான் கொந்தளித்து எழுகிறார்கள்.இருவருமே உலக அளவுகோலின் படி மன நிலை பிறழ்ந்தவர்கள்.அப்படி தான் வேறுபட்ட கதாபாத்திரங்களையும் மீறி தெரிகிறார்கள்.
'சேது' படத்தில் நெஞ்சை உருக்கும் மனநிலை பிறழ்ந்த பைத்தியங்கள். 'நான் கடவுள் ' படத்தில் நெஞ்சை நிம்மதியில்லாமல் அடித்து காயப்படுத்தி ரணப்படுத்தி விடும் மறக்கவே முடியாத உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். எல்லா பிச்சைக்காரர்களின் முகங்களும் அவர்களின் ஊன வுருவங்களும் படம் பார்த்து விட்டு வந்த பின்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன.
கவிஞர் விக்கிரமாதித்தன் நடிகராக ஒரு நல்ல ரௌண்டு வந்து நிறைய சம்பாதிக்கவேண்டும். என் ஆசை இது.
வடிவேலை சில பல படங்களில் நிம்மதி இழக்கச்செய்யும் 'அந்த நான் கடவுள் முருகன் ' இந்த படத்தில் செமை நடிப்பு .
'நான் கடவுள் 'கதை யாருடையது ? பாலாவுடையது என்று தான் டைட்டில் வருகிறது . ஆனால் படத்திற்கு வசனம் எழுதிய ஆள் தன்னுடைய'ஏழாவது உலகம் 'நாவல் தான் 'நான் கடவுள் ' படத்தின் கதை என்று ஆங்கிலப்பத்திரிக்கையில் கூட குறிப்பிடுகிறார் . அப்படியானால் ' கதை ' தன்னுடையது என்று ஏன் பாலா போட்டுக்கொள்ள வேண்டும் .திரைக்கதை இவருடைய பெயரில் வருவது யதார்த்தமானது தான் . இயக்குனர் பெயரில் வருவது நியாயம் கூட .
பாலா ! Your whole future is before you! வயதும் காலமும் , திரையுலகின் மரியாதை,மதிப்பும் இன்னும் நிறைய உங்களிடம் இருப்பதால் இன்னமும் கூட தமிழ் திரையுலகத்தின் முதல் தர நம்பிக்கை நீங்கள் தான் !
Miles to go before you sleep!
இந்த 'நான் கடவுள் 'படத்தை எடுக்க மூன்று வருடம் தேவை தானா? ரொம்ப ஓவரா தெரியலே!
படத்தில் லாஜிக் ரொம்ப இடிக்கிறது.
மலையாள ப்ரோக்கரை துவம்சம் செய்யும்போது ஆர்யா ஒரு பார்வை பார்த்ததும் மலைகோயில் பக்தர்கள் ஓடி ஒளிவது, அந்த மலையாள ப்ரோக்கரை ஆர்யா என்ன செய்தார் என்பதை ஒருத்தர் கூடவா ஒளிந்திருந்து பார்க்க முடியாது. போலீஸ் ரொம்ப திணறி.......

தீவிரவாதிக்குரிய சகல கல்யாண குணங்களும் பாலாவின் நாயகர்களுக்கு இருக்கின்றன.நந்தா சூரியா வுக்கு ஒரு ராஜ்கிரண். நான் கடவுள் ஆர்யாவுக்கு ஒரு காசி சாமியார்.கதாநாயகி கடைசியில் கதாநாயகனால் கொலை செய்யப்பட காசி சாமியாரின் மூளை சலவை தான் காரணமா? காசி சாமியார் சொன்ன ஒரு வாக்கியம் கதாநாயகனின் நினைவிற்கு வந்தவுடன் கொலை செய்யும் கதாநாயகன். இது தான் தீர்வா ?

இப்படி காட்சி பார்க்கும்போது ஸ்ரீராம் சேனா, பஜ்ரங் தள தொண்டர்கள்,சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய கொலைகாரன் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் எல்லோரும் ஏன் கொள்கை ஓநாய்கள் ஆகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.

"கொலை " என்பது ஏனைய சினிமாக்காரர்களுக்கு "சாதாரண கத்திரிக்காய் " !பாலாவுக்கும் அப்படித்தான் என்பது அவருடைய படங்களிலிருந்து தெரியவருகிறது.
'பருத்தி வீரன்' அமீர் , 'சுப்ரமணியபுரம்' சசிகுமார் ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்களும் தங்கள் அடுத்த முயற்சிகளில் இந்த' கொலை 'என்ற தீர்வை உதறி தள்ளி நல்ல படைப்பை தரவேண்டும். படம் பார்ப்பவனின் கபாலத்தில் தாக்கி காயப்படுத்த இந்த 'கொலை'யை விட்டால் வேறு தீர்வே கிடையாதா?

'அன்பே சிவம்' படத்தில் நிறைய உரையாடல் கமல், மாதவன் இடையே அந்த படத்தின் கதையை செழுமைப்படுத்தியது. ' நான் கடவுள் ' தீம் 'அகம் பிரமாஸ்மி' பற்றி விளக்கம் ஏதும் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது. இதுவும் ஏதோ காசி சாமியாரின் ஒற்றை வாக்கிய மூளைசலவை போல பதிவாகிவிட்டது.



Aug 26, 2012

எம்.ஜி.ஆர் பாடல்கள்



சைதை துரை சாமியின் ஒரே மகன் திருமண நிச்சய தார்த்தத்தின் போது (06-06-2010)அவருடன் பேசும்போது அவர் தன் செல்போனைக் காட்டிச்சொன்னார்: ”தலைவரின் 80 பாடல்கள் இந்த மொபைலில் இருக்கிறது. எப்போதும் நேரம் கிடைக்கும்போது கேட்டுக்கொண்டிருப்பேன்.”
அன்று அந்த விஷேசத்தில் பெண் வீட்டார் சார்பாக நான் கலந்துகொண்டிருந்தேன். சைதை துரைசாமி அப்போது மேயர் கிடையாது. எம்.ஜி.ஆர் பாடல்களை யாரும் கேட்டதில்லையோ என்ற ஒரு பந்தாவான தோரனணயில் அவர் படகோட்டி பட ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்”பாடலை  பரவசத்துடன் விளக்கி சொன்னார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனான சிறுவன் ஒருவன் எந்த அளவுக்கு உற்சாகமாக பிரமிப்புடன் பேசுவானோ அப்படி சைதை துரைசாமி பேசினார்.  தனக்கு 59 வயது என்றார்.

......................

எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.


சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான  எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று”  கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு  ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான்  “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள்  “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
 வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
 ( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.



solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற  (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.

அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.

”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.

’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”


அதே போல உற்சாகத்தையும்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் சம்பத் அன்று ”பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா ” பாடலின் பிரத்யேக விசேஷத்துவம் பற்றி  சொல்வார் “ ’பேசுவது கிளியா’ பாடலில் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளின் இனிமையும் Sychronize ஆனது போல எந்த பாட்டுக்கும் ஆனதேயில்லை.”

”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

 “முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும்  நானா பார்த்திருப்பேன்.”

குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”


சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’

சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார்.  விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர்  பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

 தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’

’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’


ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
 பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’



‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”

ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’

”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.



”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு  என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!



........


http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_20.html













Aug 24, 2012

பாலமுரளியின் திரை இசைப் பாடல்கள்


பின்னனிப் பாடகி பி.சுசிலா விழா. சிலமாதங்களுக்கு முன் நடந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
பாலமுரளி கிருஷ்ணா சுசிலாவுடன் இனணந்து “தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது நேரினிலே, மரகத தோரணம் அசைந்தாட, நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட பாட”
பாலமுரளி கிருஷ்ணா அனாயசமாக அதிக சிரமப்படாமல் பாடினார்.
”மாங்கனி கன்னத்தில் தேனூற
இருமைவிழி கிண்ணத்தில் மீனாட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் மேனி தள்ளாட ஆட
தங்கரதம் வந்தது வீதியிலே”

அதே சமயம் சுசிலாவும், சௌந்தர் ராஜனும் பி.பி.ஸ்ரீனிவாஸ் மூவரும் பாடியபோது முதுமை காரணமாக ரொம்ப சிரமப்பட்டு பாடினார்கள். அது ஒரு குறையாகத்தெரியவில்லை. குழந்தையின் மழலை போல யாழைவிட குழலைவிடவும் ரசிக்கத்தக்கதாய் நெகிழ்த்தியது.
சுசிலா,டி.எம்.எஸ் இருவரும் பாடிய ’ நான் மலரோடு தனியாக “ பாடலில் டி.எம்.எஸ் ”என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்” என்று தளர்ந்து போன நடுங்கும் குரலில், ஓடுவது போன்ற பாவனையுடன் பாடியது ரசிக்கத்தக்கதாக இருந்தது.

முதியவர் தான் என்றாலும் கூட பாலமுரளி மட்டும் இயல்பாக நன்றாக பாடினார்.

https://www.youtube.com/watch?v=8boZ15p_B2w

பாலமுரளி கிருஷ்ணா கர்நாடக சங்கீத பாடகர் என்பதால் தான் அந்த விசேசப்பயிற்சி அவரால் இந்த ’தங்கரதம் வந்தது’ஆபோகி ராகப்பாடலை இந்த வயதிலும் நன்றாக பாட முடிந்திருக்கிறது.ஸ்ரீதரின் ‘கலைக்கோயில்’ படத்தில் இடம்பெற்றப்பாடல்.

பாலமுரளி சினிமாவுக்காகப் பாடிய பாடல்களில் மிகப்பிரபலமான திருவிளையாடல் பட “ ஓரு நாள் போதுமா,இன்றொரு நாள் போதுமா” பாடல் காட்சியில் டி.எஸ்.பாலைய்யாவின் நடிப்பு  அந்தப் பாடல் மிகப் பிரபலமாக காரணம்.
’சாது மிரண்டால்’ படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்காக அவர் பாடிய பாடல்
“ அருள்வாயே நீ அருள்வாயே திருவாய் மலர்ந்து அருள்வாயே”

”சுபதினம்” என்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் முத்துராமனுக்கும் புஷ்பலதாவுக்கும் ஒரு பாடல்.  ரொம்ப நல்ல டூயட் பாடல். பாலமுரளி -சுசிலா பாடியது.
”புத்தம்புது மேனி இசைத்தேனி தூங்கும் மலர் மஞ்சமோ”

”கண்மலர்’’ (கிருஷ்ணன்) பஞ்சு வின் தம்பி ’பட்டு’ இயக்கிய படம். ஜெமினி,சரோஜாதேவி,சௌகார் ஜானகி, நாகையா நடித்த படம். இந்தப் படத்தில் “ பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க வாழ் நாள் நடந்ததையா நடராஜா” என்ற எஸ்.ஜானகி பாடலுக்கு ஒரு தொகையறா பாலமுரளி பாடியிருந்தார் கேதார் கௌளை ராகத்தில். படத்தில் வி.நாகையா தொகையறாவுக்கு நடித்தார்.

”அம்பலத்து நடராஜா
உன் குணத்தை காட்டுதற்கு
என் குலத்தைத் தேர்ந்தெடுத்ததேனையா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டினிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனய்யா”

”கவிக்குயில்” படத்தில் ரீதிகௌளை ராகத்தில் பாலமுரளியின்
“ சின்னக்கண்ணன் அழைக்கிறான் ராதையை,பூங்கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக்கண்ணன்அழைக்கிறான்”

https://www.youtube.com/watch?v=LLpYjs0kkGg

கண்ணதாசன் மூன்றாம் திருமணம் செய்துகொண்டதைத்தொட்டு பின் எழுதிய பாடல் பாலமுரளி பாடியது. பாலசந்தரின் ‘நூல்வேலி’ படத்தில் இடம் பெற்றது. ஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம்.

“மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே”

சமீபத்தில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல்பாண்டியராஜின் ’பசங்க’ படத்தில்
”அன்பாலே அழகாகும் வீடு”

பாலமுரளி கிருஷ்ணாவின் திரைப்படபாடல்கள் தனியாக வெளியிடப்பட்டிருக்கிறதா?

Aug 23, 2012

ஜான் ஆப்ரஹாம்

Sep 24, 2008


'பல்த்தசார் 'என்ற பிரஞ்சு படத்தை தழுவியது தான் 'அக்ரகாரத்தில் கழுதை 'என விமலாதித்த மாமல்லன் என்னிடம் கூறினார்.
அக்ரகாரத்தில் கழுதை படத்திற்கு வெங்கட் சாமிநாதன் வசனம் எழுதியிருந்தார்.
சுந்தர ராம சாமி அதன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஆசைபட்டிருந்தார். ஆனால் நடக்கவில்லை.
எம்பி சீனிவாசன் நடித்தார். சாவித்திரி நடித்தார். விருது வாங்கிய படம்.அதன் இயக்குனர் ஜான் ஆபிரஹாம்.
ஜான் ஆபிரஹாமை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது விருது பட இயக்குனர் என அவர் ஏ வி எம் ஸ்டுடியோவில் பிரபலம். ’அம்மே அறியான்’ பட எடிட்டிங் வேலை என்று நினைக்கிறேன். எடிட்டிங் காக ஏவிஎம் மிற்கு வருவார்.
நான் அவரை நான்கைந்து முறை பார்த்த போதும் ஒரே சம்பவம் தான்அல்லது ஒரே மாதிரி சம்பவம் நடந்தது.
நீட்ஷேயின் “The eternal recurrence of the same event”

ஆட்டோ வந்து நிற்கும். ஜான் ஆபிரஹாம் சீட்டில் உட்கார மாட்டார். கால் வைக்கிற இடத்தில் வெளிக்கி இருப்பது போல் குந்தி இருப்பார். அவர் கூட வருபவர் இறங்க சொல்லி கெஞ்சுவார். ஆபிரஹாம் ரொம்ப அழுக்காக ஆடை யுடன் எப்போதுமே குளிக்காதவர் என்று பார்த்தவுடன் தெரியும்படி உடலும் ரொம்பவே அழுக்காக இருப்பார். ஆட்டோவில் சிரித்துகொண்டே குந்திய நிலையில் இறங்க மறுப்பார். ஆட்டோகாரன் கத்துவான். இவர் இறங்க மாட்டார். எடிட்டிங் ரூமிலிருந்து இவருடைய எடிட்டரும் வந்து மலையாளத்தில் இறங்கும்படி கெஞ்சுவார் . இவர் சிரித்துகொண்டே மறுப்பார். வெகு பிரயாசைக்கு பின் இவரை சிலர் ஒன்று சேர்ந்து வலுக்கட்டாயமாக ஆட்டோ விலிருந்து இறக்குவார்கள்.

அடுத்த முறையும் அதற்கடுத்த முறையும் அதற்கடுத்த முறையும்
ஆட்டோ வந்து நிற்கும் .நான் காண நேர்வது அதே காட்சி தான். “Recurrence of the same event!”

நான் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் ' ராஜநாயஹம் ! அவார்டு வாங்கனும்னு ஆசைப்பட்டா கடைசியில் இப்படி தான். தரைக்கு இறங்கி வா. நீயும் வித்தியாசமா படம் பண்ணனும்னு நினைக்கிறியா ? பார்த்துக்க.உனக்கும் இது தான் கதி ' என எல்லோரும் அங்கே ஜான் ஆபிரகாமை வேடிக்கை பார்க்க கூடியிருக்கும் போது என்னை பார்த்து உற்சாகமாக சத்தம் போட்டு சொல்வார். வெராண்டாவில் உள்ளவர்கள் சிரிப்பார்கள் .

'மோகமுள் நாவலை படமாக்கனும். கோபல்ல கிராமத்தை படமாக்கனும், தந்திர பூமி சினிமாவாக எடுக்க முடியுமா,புளியமரத்தின் கதை கட்டாயம் நான் தான் இயக்கி வெளிவரணும், வண்ணநிலவனின் ’கடல்புரத்தில்’நாவலை படமாக்கனும் ' இப்படி கனவு கண்டு கொண்டிருந்த என்னுள் ஜான் ஆப்ரஹாம் நிலை இடி போல் உரத்து இறங்கியது.
வேதனையை சொல்லி முடியாது. ஜான் ஆப்ரஹாமின் கால் தூசு பெறாத சினிமாக்காரன் எல்லாம் இப்படி அவரை ஏளனமாக பார்த்தான்.


ஒரு சம்பவம்

கொச்சிகோட்டையில் பரிக்ஷா ஞாநியை அறிமுகம் செய்தபோது ஜான் சிரித்தபடி சொன்ன பதில்

 ' நான் அஞ்ஞானி! '

...............................................

Where is Abel ? Bible
ஜான் எங்கே ?
ஜான் !
ஸல்ஃப்யுரிக் அமிலத்தால் நிரம்பி வழிகிற
உன் இதயமான
அந்தத் தட்டு தான் எங்கே ?
வெறுமையான
கல்லறை இதனருகே
புகை அங்கிக்குள்
எரிந்து கொண்டிருக்கும்
சகோதரத்துவத்தைக்
குலுக்கிப் போட்டுக்கொண்டு விட்ட
உன் நிர்வாண ஜுவாலை
எங்கே எங்கே
-    பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் சச்சிதானந்தன் மொழிபெயர்த்தை தமிழில் மொழிபெயர்த்தவர் நாகார்ஜுனன்
மீட்சி 35  1991
 

.................................................................................................


Sep 27, 2008


நாகார்ஜுனன் said...

ராஜநாயஹம்,சொந்த அனுபவங்கள் தாண்டி ஜானின் சினிமாவைப் பார்க்க வேண்டிவரும் போது ஆச்சர்யமாக இருக்கும் என்பது சரிதான்.
உங்கள் அனுபவமும் அப்படித்தானிருக்கிறது..

ஜானின் 21-ஆம் நினைவு நாளை ஒட்டி நான் எழுதிய நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை என்ற மூன்று பதிவுகள் இதோ


http://nagarjunan.blogspot.com/2008/06/1.html

http://nagarjunan.blogspot.com/2008/06/2.html

http://nagarjunan.blogspot.com/2008/06/3.html
September 27, 2008 12:03 AM

Sep 29, 2008 

ஞாநி விளக்கம்

வணக்கம்.

நான் ஜான் ஆபிரஹாமை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். சங்கீத நாடக அகாதமியின் நாடக விழா எர்ணாகுளத்தில் நடந்தபோது, கூத்துப்பட்டறையின் நாடகமும் இடம் பெற்றது. அதற்கு வந்திருந்த தமிழக நாடகக்காரர்கள் சிலர் அப்போது அம்மெ அறியன் படத்துக்கு மக்களிடம் நிதி திரட்டும் பணியை தொடங்க இருந்த ஜானை சந்திக்கச் சென்றோம். ஜானும் அவர் குழுவினரும் கையால் எழுதிய சுவரொட்டிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.கொச்சி கோட்டை சுவரில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று ஜான் பேசி உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவதைத் தொடங்கி வைத்தார். அதை நான் எடுத்த புகைப்படமும், அன்றே படகுத்துறையில் ஜானையும் ஒரு குழந்தையையும் நான் எடுத்த புகைப்படமும் ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியிட்ட ஜான் பற்றிய நூலில் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. சுவரொட்டி எழுதும் இடத்தில் ஜானிடம் என்னை ஞாநி என்று அறிமுகம் செய்தபோதுதான், ஜான் சிரித்தபடி தான் அஞ்ஞானி என்று சொன்னார்.பின்னர் அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தோம். பின்னர் எப்போதும் நான் ஜானை எங்கேயும் சந்திக்கவில்லை. ஜான் படங்களில் அ.கவும் அ.அ.வும் எனக்குப் பிடித்த முயற்சிகள். செரியச்சனோட குரூர நிருத்யங்களில் சில காட்சிகள் நன்ராக அமைந்திருக்கும். ஜான் உருவாக்கிய அக்ரஹாரத்தில் கழுதையில் நடித்த இசை மேதை எம்.பி.சீனிவாசன் என் மதிப்புக்குரிய நண்பர். ஜானுடன் ஒடெசா திரைப் பட இயக்கத்தில் பங்கேற்ற பிரகாஷ் மேனனும் என் நண்பரே. பிரகாஷ் மேனன் இன்றும் சென்னையில் மலையாள டி.வி தொடர் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது தொடர்பு இலை. ஜான் பற்றிய ஜெயமோகனின் ஒரு குறிப்பு முற்றிலும் உடன்பட முடியாதபோதும் நம் பரிசீலனைக்குரியது. அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதை வசன நூலை அடிப்படையாகக் கொண்டு பரீக்‌ஷாவின் மேடை நாடகமாக்கலாம் என்று ஒரு முறை நினைத்தோம். அது கைகூடவில்லை.

.............

யமுனா ராஜேந்திரன்

முற்றிலும் உடன்படமுடியாதபோது எதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும்? ஜான் பற்றிய சீனிவாசனின் நூலில் எனது இரு கட்டுரைகள் உள்ளன. ஓரு கட்டுரை ஜெயமோகனுக்கான எதிர்விணை. பிறிதொன்று அம்மா அறியான் படம் குறித்தது. ஞானி விரும்பினால் அவரது உத்தேச மறுபரீசீலனையை ஒரு விவாதமாக முன்னெடுப்பது எனக்கு விருப்பமாக இருக்கிறது.
யமுனா ராஜேந்திரன்

http://rprajanayahem.blogspot.in/2008/10/pd.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_7735.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post_12.html




Aug 22, 2012

கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்

 Aug 1,2008

   Rimbaud.PNG

ETERNITY

It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!

பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான். குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன். 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன்.
ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான். Baby of the poets!26 வயதிற்குள் இவன் வாழ்வே முடிந்துவிட்டது .
இங்கே தமிழில்" ஆடு புழுக்கை போடுவது போல அப்பப்ப மொத்தம் மொத்தமா தொடர்ந்து போடும்"கவிஞர்கள் எப்போ நிறுத்தபோறான்களோ?

பால் பருவத்தில் எழுதுவதாக பூரித்து புளகாங்கிதமடையும் மடையன் எல்லாம்
ரைம்போ,கீட்ஸ் பற்றி எப்போ தான் தெரிந்துகொள்ளபோறான்?
"நான் இருக்கேனே பல விதமான கற்பனையை அப்படியே மனசில அமுக்கி வச்சுகிட்டு
தவிக்கிறேன்யா. அதையெல்லாம் எடுத்து வெளியே விட வேண்டாம?"னு
அல்லாடுறான்களே். சான்ஸே இல்ல!

Shit!புழுக்கையை போட்டுக்கங்க.என்னை எதுக்குடா  மோந்து பாக்க சொல்றீங்க?

...................

Aug 27, 2008


ரைம்போவும் ஆத்மாநாமும்



'One evening, I took “Beauty” in my arms.
I found her bitter and I insulted her'
- Arthur Rimbaud
in “ A season in Hell”


நாகார்ஜுனன் Blog ல் ஒரு சின்ன சுவாரசியமான விவாதம்

"நரகத்தில் ஒரு பருவம் - ஆர்தர் ரைம்போ - 1"
2 Comments -

ஆர். பி. ராஜநாயஹம் said...

"ஒரு மாலை "அழகு" என் கையில் அமர்ந்தாள். அவள் கசப்பாய் இருக்கக் கண்டேன். அவளை அவமானப் படுத்தினேன்" என்ற ரைம்போவின் வரிகள் ஒருவேளை ஆத்மாநாமுக்கு inspiration-ஆக இருந்திருக்கலாம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. கவனிக்க: நான் ஆத்மாநாம் காப்பியடித்ததாகச் சொல்லவில்லை. வரிகள் ஏறக்குறைய இவைதாம்: "கடவுளைப் பார்த்தேன். எதுவும் கேட்கத் தோன்றவில்லை. புன்னகைத்தார். போய்விட்டார்."
26-Aug-2008 12:59:00

நாகார்ஜுனன் said...

சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. ஆத்மாநாம் வரிகள் நான் வாசித்தவைதாம். ஆனால் ரைம்போவைத் தமிழாக்கும்போது உறைக்கவில்லை. அந்த அளவு போதலேரும் ரைம்போவும் புதுக்கவிதைக்குள் நுழைந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது...
26-Aug-2008 13:04:00
..............
Sep 28,2009

வைகறை

நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்தர் ரைம்போ கவிதைகளில் ஒன்று.
ரைம்போ வைகறையை கனவிலும் கண்டிருக்கிறான்!
'' முத்தமிட்டேன் வேனில் வைகறையை "சூரியன் உதயமாவதற்கு முன் அந்த அதிகாலை வைகறை.
"இறந்து கிடந்தது நீர் " அப்போது .
'தன் பெயரை இயம்பிய மலர்' பற்றி ரைம்போ குறிப்பிடுகிறான்.
" அவளை(வைகறையை ) சேவலிடம் காட்டிக்கொடுத்தேன் " (அப்புறம் தான் 'அடடே அப்படியா. நல்லவேளை!கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேனே' சுதாரித்து சேவல் கூவியிருக்கும்! "கொக்கரக்கோ")

குழந்தை சேக்ஸ்பியர் ரைம்போ ''கண்விழிக்க ஆனது உச்சிப் பொழுது."கனவில் வைகறை. யதார்த்தம் உச்சிப் பொழுது. அதனால் தான இருபது வயதை எட்டியவுடன் கவிதை எழுதுவதையே நிறுத்தி விட்டான் போலும்!


வைகறையில் இருட்டு பிரிந்து சூரிய உதயம் செய்யும் எழுச்சி விந்தையை பாரதி குயில் பாட்டில் விவரிக்கிறான் :
"புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி மண்ணைத்தெளிவாக்கி,நீரில் மலர்ச்சி தந்து
( இறந்து கிடந்த நீருக்கு மலர்ச்சி!)
விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் சோதி.. "

பாரதி " வைகறையின் செம்மை இனிது " என்று ரசித்து வசன கவிதையில் சொன்னவன் அல்லவா!


சூரிய வெளிச்சம் இருட்டிய பூமி மீது விழுகிற கணங்களை பிரமிள் தன் படிமங்கள் கொண்டு படம் பிடிக்கிற அழகு அபூர்வமானது.
" பூமித்தோலில் அழகுத் தேமல் "
" பரிதி புணர்ந்து படரும் விந்து "
"கதிர்கள் கமழ்ந்து விரியும் பூ "
" இருளின் சிறகைத் தின்னும் கிருமி "
"வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி "
.......................................................


http://thisrecording.com/storage/poetpc.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1260396218576




Dec 26, 2009


A life full of sweet stupidities!


One of the first truly dissent voices to emerge in French poetry.

The poet who stopped writing poetry!

ரைம்போ - A White nigger.

"My life was nothing but sweet stupidities! "

"Ah! To return to life! To stare at our deformities. "ஆர்தர் ரைம்போ முழங்காலில் புற்று நோயால் 37வயதில் இறந்த பின் தான் அவன் சகோதரி இசபெல் ஒரு உண்மையை அறிய நேர்ந்தது. தன் சகோதரன் ஒரு கவிஞன் என்பதை அவள் ரைம்போவின் மரணத்தில் தான் தெரிந்து கொண்டாள். 
 

ரைம்போ சிறுவனாக இருக்கும்போதே ஊர் சுற்றக்கிளம்பிய Boy genius! An infant Shakespeare! Baby of the French poets!உடல் இச்சையை மறுத்த கிறிஸ்துவத்தை வெறுத்தவன். தன் பெற்றோரை வெறுத்தவன்.
“You,my parents, have ruined my life, and your own.”

   


பிரஞ்சு கவிஞன் வெர்லைன் தன் கருவுற்ற மனைவி பாரிசில் தன் தகப்பன் வீட்டுக்கு சென்ற போது ரைம்போ வை தன்னுடன் வாழ அழைத்தான். அப்போது ரைம்போவுக்கு 17வயது .வெர்லைன் 27 வயது இளைஞன். அதன் பின் இருவரும் காதலர்கள் ஆகி விட்டார்கள். வெர்லைன் தன் மனைவியை திட்ட ஆரம்பித்தான்.
The devastating love affair of Verlaine and Rimbaud...
there were reestablishing of cordial relations and partings with wife Mathilde and Partings and reconciliations with Rimbaud.
சுருக்கமாக சொன்னால் வெர்லைன் தாம்பத்தியம் ஒரு சர்க்கஸ் போல ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் வெர்லைன் துப்பாக்கியால் ரைம்போவை சுட்டு விட்டு ஜெயிலுக்கு போனான்.




ரைம்போவின் Bad Blood


“Does this farce has no end?
My innocence is enough to make me cry. Life is the farce we all must play.”

"Where we are going? To battle? I am weak!
The others go on ahead..tools...weapons..
give me time."
"Fire! Fire at me! Here! Or I 'll give myself up!
..Cowards! I will kill myself. I'll throw myself beneath the horses hooves! Ah!
I ll get used to it.
That would be the French way, the path of honor! "




Night in Hell
I will tear the veils from every mystery...
mysteries of religion or of nature, death, birth,the future,the past,
cosmogony and nothingness,
I am a master of Phantasmagoria.


இறந்து கிட்டத்தட்ட 80வருடங்களுக்குப் பின் ஆர்தர் ரைம்போ 1968ல் பிரஞ்சு கலகக்கார மாணவர்களால் வழி பாட்டுக்குரிய புரட்சிக்காரனாக ஏற்றி உயர்த்தப் பட்டான்.

ஆர்தர் ரைம்போவாக லியோனார்டோ டி கேப்ரியோ நடித்து
Total Eclipse என்ற படம் 1995 ல் வெளிவந்திருக்கிறது. ரைம்போ-வெர்லைன் இருவருக்கிடையேயான வன்மையான உணர்வுப்பூர்வமான ஓரின உறவைப் பற்றிய படம்.




 http://images5.fanpop.com/image/photos/26000000/Leo-as-Arthur-Rimbaud-in-Total-Eclipse-leonardo-dicaprio-26095950-1066-580.jpg