Share

Sep 23, 2022

சினிமா எனும் பூதம் - பாகம் 2 வாங்குவதற்கு உடுமலை.காம்



சினிமா எனும் பூதம் - பாகம் 2

புத்தகம் வாங்குவதற்கு

Whatsapp / Call 73 73 73 77 42

https://www.udumalai.com/cinema-enum-bootham-part-2.htm

சினிமா எனும் பூதம் - பாகம் 2 சின்னவர் வெளியிட்டார்

"தமிழ் சினிமா பற்றி பலரும் அறியாத தகவல்களை ரசிக்கும்படியான நடையில் எழுதி பரவலான வரவேற்பைப் பெற்ற R.p. Rajanayahem  சாரின் ‘சினிமா எனும் பூதம்’ நூலின் 2-ம் பாகத்தை சமீபத்தில் வெளியிட்டு மகிழ்ந்தேன். நான் ரசித்து படித்த நூலின் 2-ம் பாகமும் வெற்றிபெற ராஜநாயஹம் சாருக்கு என் வாழ்த்துகள்."

- 'சின்னவர்' திரு.உதயநிதி ஸ்டாலின்

https://m.facebook.com/story.php?story_fbid=3421335598079882&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=655582319265862&id=100044422989688

https://www.facebook.com/100006104256328/posts/2771091533104295/

https://www.facebook.com/100006104256328/posts/2771611203052328/

Sep 13, 2022

Cinema - The most beautiful fraud

மீள் பதிவு 2014

Dec 22, 2014

Cinema -The most beautiful fraud!

 ஜிப்பா வேஷ்டியுடன் பசுமணி. சர்வர் வேலை செய்து கொண்டே சினிமாவில் பாடல் எழுத வாய்ப்புக்காக முயற்சியில் இருப்பதாகச்சொன்னார்.

அப்போது வைரமுத்து கூட சினிமாவுக்கு பாடல் எதுவும் எழுதியிருக்கவில்லை.

பசுமணி இறந்து விட்ட தன் காதலிக்காக தான் எழுதிய பாடலை பாடிக்காண்பித்தார்.

‘பாடு என்று பாடச்சொல்லி கேட்டு நின்றவள்
நான் பாடும்போது பாவத்தோடு ஆடி நின்றவள்
இன்று பார்வை மூடி பாடையோடு பயணம் போனதேன்
என்னை பாதிக்கவிஞன் ஆக்கி விட்டு பறந்து போனதேன்’

சோகமாக என்னைப்பார்த்து தன் கண்களை துடைத்துக்கொண்டார்.

“ நான் ஒரு வித்தியாசமான ஆளு சார்!”என்றார்.

நான் “சொல்லுங்க!”

“ நான் ஒரு இலட்சியவாதி! கேட்டா ஆச்சரியப்படுவீங்க!”

அவரே சொல்லட்டும். ஆச்சரியப்படுவது பற்றி யோசிக்கலாம்
- அமைதியாக புன்முறுவலுடன் அவரைப் பார்த்தேன்.

" 'தப்புத்தாளங்கள்’ பார்த்து விட்டு நான் என்ன செய்தேன் தெரியுமா?”

கன்னத்தில் கை வைத்தவாறு அவர் பீடிகையை எதிர்கொண்டேன்.

“என் காதலி இறந்த பிறகு ரொம்ப சோகமாக பைத்தியம் பிடித்தது போல இருந்தேன். ஒரு நாள் “தப்புத்தாளங்கள்” பாலச்சந்தர் படம் பார்த்தேன். ரஜினி என்னை ரொம்ப பாதித்தார். அந்தப்படம் பார்த்து விட்டு நான் ஒரு காரியம் செய்தேன்.”

இந்த இடத்தில் மீண்டும் நிறுத்தி விட்டு மந்தகாசமாக ஒரு சிரிப்பு சிரித்தார்.
“ ‘தப்புத்தாளங்கள்’ பார்த்து விட்டு உடனே ஒரு விபச்சாரிக்கு வாழ்வு கொடுத்தேன். ஆமா சார்! ஒரு விபச்சாரியை கல்யாணம் செய்து கொண்டு விட்டேன். ஆனா அந்த கல்யாணம் நிலைக்கல..”

Cinema is the most beautiful fraud in the world. - கோடார்ட் இப்படி சொல்லியிருக்கிறார்.

நான் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு கவிஞர் பசுமணியிடம் சொன்னேன்.
“ நீங்க “சிகப்பு ரோஜாக்கள்” தயவு செய்து பார்க்காதீங்க...பார்க்கவே பார்க்காதீங்க..”

Cinema can fill in the empty spaces of your life and your loneliness.
- Pedro Almodovar

What is in the frame and what is out?



சினிமா எடுக்க ஒரு துப்பாக்கியும், ஒரு சூப்பர் ஃபிகரும் இருந்தால் போதும் - இப்படி கிண்டலாக குறிப்பிடுவார் கோடார்ட்.
 
 Godard
ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தில் தான் ஷூட்டிங் நடக்கும். பின்னால் பொள்ளாச்சி,கோபிசெட்டிப் பாளையம்,மேட்டூர் எல்லாம் கோடம்பாக்கம் போலவே மாறி காரைக்குடியும் கோடம்பாக்கம் தான்.

மேட்டூரில் லாட்ஜை விட்டு அதிகாலை நெருஞ்சிப்பேட்டைக்கு 'ராசுக்குட்டி' படத்தின் ஷூட்டிங் போக வெளியே வந்து காருக்காக காத்திருந்த வேளை.

எஸ்.டி.டி பூத்தில் நுழைந்து போன் செய்கிறேன்.
கீர்த்தி போனை எடுத்தவுடன்,உடனே,உடனே " அப்பா! நீ வாங்கிக் கொடுத்த பந்தை அஷ்வத் தொலைச்சிட்டான்!"
அவனுக்கு பேசுவது ஹலோ யாரென்றெல்லாம் கேட்கத்தேவையேயில்லை. இது அப்பாவே தான். அப்போது தினம் இந்த ஒரு கால் தானே,அதுவும் அதிகாலையில் வீட்டுக்கு வரும்.

போன் பேசி விட்டு பூத்தை விட்டு வெளியே வந்தால்
ஒரு சலசலப்பு....
ஆச்சரியப்பட்டு ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்தது.
ஒரு கான்ஸ்டபிள். ஒரு இன்ஸ்பெக்டர்.
கான்ஸ்டபிள் கத்தி கூப்பாடு போட்டு அந்த இன்ஸ்பெக்டரை கண்டபடி கடுமையாக மிரட்டி திட்டி அடித்துக்கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டரை அந்த கான்ஸ்டபிள் முதுகில் ரெண்டு தட்டு பலமாக தட்டி 'ஏறுடா! வேனுல'
இன்ஸ்பெக்டர் - " இவனால தான் லேட்டு.என்னை அடிக்கிறீங்க.."
கான்ஸ்டபிள் : (மீண்டும் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் தன் கையில் இருந்த லத்தியால் குத்தி) என்னை டென்ஷன் பண்ணாதடா.
இன்ஸ்பெக்டர் : என்னை ஏண்ணே அடிக்கிறீங்க.. நான் என்ன பண்ணேன்...
கான்ஸ்டபிள் : எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்னை. உன்னை கொன்னுடுவன்டா!

கொஞ்ச நேரத்தில் விஷயம் பிடிபட்டது.
இரு பக்க வி.எம். லாட்ஜிலும் கிருஷ்ணா லாட்ஜிலும் இன்னொரு படக்குழுவினரும் இருந்தார்கள்.
வசனம் பேசத்தேவையில்லாத எக்ஸ்ட்ரா கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் ரோலெல்லாம் அவசரத்திற்கு ப்ரொடக்சன் ஆட்களே தான் செய்ய வேண்டியிருக்கும்.
இந்த (இன்ஸ்டண்ட்) இன்ஸ்பெக்டர் அந்த பட கம்பெனியில் எல்லோருக்கும் காபி தருகிற ப்ரொடக்சன் அசிஸ்டண்ட்.
கான்ஸ்டபிள் ட்ரஸ்ஸில் இருந்தவர் ப்ரொடக்சன் மேனேஜர்.

When everything gets answered, it's fake! Cinema is the ultimate pervert art!

ராசுக்குட்டி படத்தின் ஷூட்டிங் போது வில்லன்களின் ஒருவனான நளினி காந்த்  அடிக்கடி  ஷாட் முடிந்தவுடனே கதாநாயகன் காலில் விழுவான்.
"மன்னிச்சிக்கங்கண்ணே.. டயலாக் பேசும்போது உங்களை டேய்னு சொல்லிட்டேன்."

பாக்யராஜ் " டேய்! இது நடிப்பு தானே!"
திரும்பி அஸிஸ்டண்ட்களிடம் சலித்துக்கொள்வார் "இவன் ரொம்ப நடிக்கிறான்."

ராசுக்குட்டி படத்தில் பாக்யராஜுக்கு 'டூப்' போட்ட ஸ்டண்ட் நடிகர் சங்கர் பின் மஹா நதி படத்தில் நடித்து 'மஹாநதி சங்கர்' ஆக பிரபலம்.

'மஹாநதி' படத்தில் ஜெயில் வார்டராக வந்து கமலை சித்திரவதை செய்வார். பட ரிலீஸ் போது படக்கம்பெனிக்குப் போய் படம் பார்க்க டிக்கெட் கேட்டிருக்கிறார். அலட்சியப் படுத்தியிருக்கிறார்கள். 
கமல் ஹாசனிடம் " டிக்கெட் கேட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க சார்.." னு அழுது விட்டாராம்.

The Birds படத்தில் பறவைக்கூட்டம் ஊரையே என்ன பாடு படுத்தும். ஹிட்ச்காக் தோளில் எப்படி சௌஜன்யமாக சினேகமாக அமர்ந்திருக்கின்றன!


.....................................

மீள்

Good morning

6.15 A.M

இன்று காலை ஜன்னலுக்கே வந்து
Good morning சொன்ன நிலா

Sep 11, 2022

ஷம்மியுடன் ஒரே சந்திப்பு

முதல் சந்திப்பு என்பதாகத்தான் அப்போது நினைத்திருக்கிறேன்.
ஆனால் அந்த ஒரே சந்திப்பு தான் என்றே ஆகியிருக்கிறது.

மீள் பதிவு

09. 12. 2016

ஷம்மி

ஷம்மி என்ற செல்லப்பெயரால் அறியப்படும் எம்.சண்முகம் அவர்கள்                     19 வருடம் சன் டிவியில் பிரபலமாக இருந்தவர். அவர் செய்தி வாசிக்கும் நேர்த்தி பற்றி இன்று கூட சிலாகிப்பவர்கள் உண்டு.
இப்போது நியூஸ் 7 சேனலில் தலைமைப் பதவியில் இருக்கிறார்.

மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியின் முன்னாள் மாணவர்.

முகப்பொலிவுடன் கூடிய சண்முகத்தின் கணீர் குரல். கணீர் குரலில் ‘கனிவு’ இருப்பது அவருடைய தனித்துவ விஷேசம். Powerful voice with compassion!
பரந்த அளவில் இலக்கிய அறிவு.
நியூஸ் 7 சேனலில் ந.முத்துசாமியின் ’பேசும் தலைமை’ நிகழ்ச்சிக்காக ஸ்டுடியோ போயிருந்த போது ஷம்மியை சந்திக்க வாய்த்தது.
உரையாடல் கலையில் அவருடைய சீர்மையை வார்த்தையில் விவரிக்க முடியாது.
நிறைவான உரையாடல் எப்போதும் சாத்தியப்படுவதில்லை. அன்று ஷம்மியுடன் பேசியதை எந்நாளிலும் மறக்கவே முடியாது. திருப்பாவை, த்ரூஃபோ!
திருப்பாவை மூன்றாவது பாடல்’என்னை இழந்த நலம்’ வரிகள் பற்றிய பிரமிப்பு, த்ரூஃபோவின் ’Woman next door’ திரைப்படம், சாக்லேட் மூலப்பொருள் தயாரிப்பில் குழந்தைத்தொழிலாளிகளின் நெஞ்சை உறையச்செய்யும் சோகம் பற்றிய டாகுமெண்ட்ரி….. நவீன தமிழ் இலக்கியப்பரிச்சயம்.
ஏதோ அருவியின் அருகில் இருக்கும்போது ஏற்படும் சுகானுபவமாக ஷம்மியுடன் இருந்த தருணம்.

அவரை சந்திக்க அந்த கண்ணாடி அறைக்கு வெளியே இருந்து அவரைப் பார்த்து புன்னகை செய்த போது ‘உங்களை எதிர்பார்த்திருந்தேன்’ என்ற தோரணையில் உடன் தலையசைத்து அழைத்து ஏதோ பல வருடங்கள் பழகிய நட்பு போல் மிக சகஜமாக பேச ஆரம்பித்தது… தடைப்பட்ட ஒரு உரையாடலை, விட்ட இடத்தில் இருந்து தொடர்வது போன்ற அனுபவமாக அந்த முதல் சந்திப்பு எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

...

Sep 10, 2022

Saranga Teri Yaad Mein


முகேஷின் பிரபலமான 
 " Saranga Teri yaad mein" பாடலை
ஒரு குடும்ப நிகழ்ச்சியில்
 கிருஷ்ணா ஜி என்ற தன்னுடைய Cousin அச்சர சுத்தமாக சுதியோடு பாடியதை கேட்டு 
திருச்சி ஜம்புநாதன் (Retired Asst. Engineer BSNL) நெகிழ்ந்து போனதைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்ததுண்டு.

ஜம்புநாதன் நாடக இயக்குநர்.

லிங்க் கமெண்ட் பாக்ஸில்

Jambu Nathan 

saaranga teri yaad mein ...

In the musical note of your memory

saaranga teri yaad mein ...

In the musical note of your memory

https://youtu.be/IQSGfiPnjXU

Sep 7, 2022

சினிமா எனும் பூதம் பாகம் -2

சினிமா எனும் பூதம்
பாகம் - 2

விலை : ரூபாய் 240/

தோட்டா கம்பெனி வெளியீடு

தோட்டா ஜெகன் தான் பப்ளிஷர்

விரைவில் R.P. ராஜநாயஹம் நூல்

சினிமா எனும் பூதம் இரண்டாம் பாகம் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பணம்.

மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சினிமா எனும் பூதம் பாகம் - 2 பதிப்புரை

சினிமா எனும் பூதம்
பாகம்- 2 
நூலுக்கு தோட்டா ஜெகன் எழுதியுள்ள
பதிப்புரை

வசிப்பதே வாசிப்பதற்காக தானோ என நான் ஐயம் கொள்ளும் அளவில் அய்யா R. P. ராஜநாயஹம் அவர்களின் வாசிப்பறிவு மிக, மிக விசாலமானது. அந்த பரந்த வாசிப்பின் காரணமாய், அவரால், அவரால் மட்டுமே, ஷேக்ஸ்பியரின் மக்பெத் பற்றி கட்டுரை எழுதும் போது மௌனியின் வரிகளை உள்ளே கொண்டு வர முடிகிறது. 

மிகவும் செல்வந்த, அதிகாரமிக்க குடும்பத்தில் பிறந்தவர் 
R. P. ராஜநாயஹம் அவர்கள்.  வாசித்ததை மட்டுமில்ல, கேட்டது, பார்த்தது, அனுபவித்தது, உணர்ந்தது என அனைத்தையும் எழுத்தில் எல்லோரும் விரும்பவது போல கொண்டு வருவது எல்லோருக்கும் சாத்தியமானது கிடையாது.  அவரது இசையறிவும், ரசனையும், பரந்த வாசிப்பும் உயர்தரமானது மட்டுமல்ல உண்மையானதும் உன்னதமானதும் கூட.

எப்படி இந்த மனிதரால் ஜெயகாந்தனை பற்றியும் எழுத முடிகிறது, ஜோதிலட்சுமி பற்றியும் எழுத முடிகிறது என் வியந்திருக்கிறேன். சுந்தரராமசாமி பற்றி சொல்கிறார், அதே வேளையில் ஸ்ரீதேவி பற்றியும் எழுதுகிறார். மதுரை சோமுவின் கச்சேரியை ரசித்ததை பற்றியும் எழுத முடிகிறது, அதே சமயம் மம்முட்டி நடித்த மலையாள படத்தையும் பற்றியும் பேச முடிகிறது. போர்ஹேவின் சிறுகதையை சிலாகிக்கும் அவரால், டி.எஸ்.பாலையாவின் Family tree பற்றியும் பேச முடிகிறது. 

அவருக்கு மட்டும் எப்படி இப்படி அனுபவங்கள் அமைகின்றன என நான் பொறாமைப்பட்டதும் உண்டு. யாருக்கும் கிடைக்காத இடங்களில், நேரங்களில் உண்மைக்கு ஒரு சாட்சியாய் அவர் இருந்திருக்கிறார். 

 என்னை பொறுத்தளவில், வெவ்வேறு துறைகளிலும் இதுவரையிலான சிறந்த தமிழ் ஆளுமைகளை கணக்கெடுத்தால், அதில் கண்டிப்பாக இடம் பெறுவார்  R.P.ராஜநாயஹம்.  

R. P. ராஜநாயஹம் எழுதிய 'சினிமா எனும் பூதம்'  ( முதல் பாகம் ) புத்தகத்தை வாசித்த, மாண்புமிகு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனது ட்வீட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில், கீழ்க்கண்ட விமர்சனத்தை ஜூலை 6, 2020ல் பதிவு செய்தார். 

"ஒவ்வொருவரையும் கூகுள்செய்து கண்டறிந்து, ‘ஓ, இவரா… இவருக்குப்பின் இப்படியொரு கதையா’ என்று ஆச்சரியப்படும் வகையில் திரைத்துறையை ‘சினிமா எனும் பூதம்’ நூலில் அடக்கி நமக்குள் கடத்துகிறார் 
R. P. ராஜநாயஹம். 
எண்ணிலடங்கா தகவல்களை எளிமையாக நேர்த்தியாக எப்படிச்சொல்ல முடிகிறது என மலைத்தேன்.

இதில் ‘கலைந்த ஒப்பனை’ என்றொரு பகுதி. வேறொருவர் நடிக்க வேண்டியது, அவர் திடீரென இறந்ததால் அவ்வாய்ப்பு இவருக்கு வரும். நடித்துவிடுவார். அக்காட்சிகள் எடிட்டிங்கில் போய்விடும். அதைப் படிக்கும்போது ஒரு பக்கம் நகைச்சுவையாகவும், மறுபக்கம் எவ்வளவு போராட்டம் என்று வருத்தமாகவும் இருந்தது.

இதில் ‘movie connoisseur’ என்ற வார்த்தை பிரயோகம் வரும். அதாவது சினிமா வல்லுநர்.உண்மையில் 
R. P. ராஜநாயஹம்
 ஒரு movie connoisseur. சினிமா குறித்து பலர் எழுதியிருந்தாலும் பலரும் மறந்த கலைஞர்களை நினைவுகூர்கிறீர்கள். வாழ்த்துகள் சார். நிறைய எழுதுங்கள்!"

மேலே கூறிய நிகழ்வே, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

R. P. ராஜநாயஹம் அய்யா அவர்களின் எழுத்துக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான அன்பர்களில்  நானும் ஒருவன். அந்த ஒரு தகுதியோடு அவரது இந்த நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். 

உண்மையுடன்,
'தோட்டா' ஜெகன்

https://m.facebook.com/story.php?story_fbid=3407078352838940&id=100006104256328

Sep 6, 2022

R.P. Rajanayahem Write ups - Advocate Sumathi

R.P. Rajanayahem Write ups 

Advocate Sumathi:

"The lucidity in his writing is amazing 
He is an encyclopedia of cinema and 
an avid reader of literature both
 English and tamil. 
Sir, we are true lovers of your writing.

WHAT A WRITE UP SIR
I AM GIVING YOU STANDING OVATION"

- Kasturi Sumathi


Photo: Sumathi and 
her brilliant daughter Simhanjana

"தாயும் சேயும் நலம்"
...

(R.P.R picture drawing
By 
Muralidharan Krishnamurthy )