விடிகாலையில் போன் அழைத்தது. யாரென்று பார்த்தால் நண்பர்.
“டேய்சப்ளையரு, ஆர்பி ராஜநாயஹம் எழுத ஆரம்பித்திருக்கிறார்” என்றார் நண்பர். ( என் பெயரைச் சொல்லுவதில் உனக்கு என்னடா அவ்வளவு காண்டு? சப்ளையர் சப்ளையருன்னு காய்ச்சி எடுக்கிறாயே நீ – இது எனது நண்பருக்கு )
”அட ! அப்படியா?”
இப்பதிவு எழுதக் காரணம் ஆர்பிராஜநாயஹம் அவர்கள் மட்டுமே ! சுவாரசியமான எழுத்துக்கும், ஏகப்பட்ட சரக்குக்கும் சொந்தக்காரர் அவர் ஒருவர் தான் இருக்கிறார்.
ஆர்பிரா எழுத வந்து விட்டால் எழுத்துலகில் ஒருத்தன் கூட தான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளவே மாட்டார்கள். ஓடியே போவார்கள். எழுத்து என்ன பிராந்திக் கடையில் கிடைக்கும் சரக்கா? சரக்கு அடிக்கிறதைப் பற்றி எழுதியே “ஏய் நானும் ஒரு எழுத்தாளர்னு சொல்லிக்கிட்டு திரிவதற்கு”.
ஆர்பிரா சார் ! முதலில் உங்களுக்கு ஒரு சலாம்
கலைஞரின் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவினைப் படித்தேன். இதோ அதற்கான இணைப்பு கீழே. கலைஞர் தன் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டார். அதன் முழு உண்மையும் கீழே இருக்கிறது.
அன்பு நண்பர்களே எனது தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பேர் வருகின்றீர்கள். அப்படியே ஆர்பி. ராஜநாயஹம் சார் தளத்திற்கும் சென்று படித்து விடுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
தகவல் பெட்டகமாய் கொட்டும் அவரின் எழுத்தை வாசிப்பது மட்டுமின்றி பின்னூட்டமும் இட்டு அவரை மேலும் மேலும் எழுத தூண்டுங்கள். அதன் பலன் கிடைப்பது நமக்கு மட்டுமே !
- அனாதி
.....................
தினகரன் வெள்ளிமலரில்
தினகரன் 17-08-2012 வெள்ளிமலர் டைரக்டர் பதில்களில் “சிரிப்பு நடிகர்களில் உங்கள் சிந்தனையில் நிற்பவர் யார்?” என்ற கேள்விக்கு பதிலாக “சமீபத்தில் மறைந்த என்னத்தை கன்னையா.குறிப்பாக ஆர்.பி.ராஜநாயஹம் என்பவர்,தனது வலைப்பதிவில் எழுதிய குறிப்புகளை படிக்கும் எவருமே இதை ஒப்புக் கொள்வார்கள்.” என்று ஆரம்பித்து என் பதிவிலிருந்து சில விஷயங்கள் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.
http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_8.html



ஐயா நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்,முக்கியமான கட்டுரை இது.