Share

Oct 25, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி"

'நெடுங்குருதி' நாவலை நான் தான் திருப்பூரில் அறிமுகம் செய்து பேசினேன் . எஸ் .ராமகிருஷ்ணனை சென்னையில் இருந்து இந்த நாவல் பற்றிய கருத்தரங்கத்திற்கு அழைத்து அந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்தேன் . என் நண்பர் எம் .சரவணனை அதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சொல்லி கேட்டேன் . சந்தோசமாக முன்வந்தார் . எனக்காக கூட இப்படி நான் யாரிடமும் எதுவும் கேட்டதே இல்லை .இப்படி நான் சாதாரணமாக யாரையும் கேட்டதில்லை . அதற்கு முன்னும் பின்னும் . எப்படியோ இந்த நாவல் பற்றி அப்படி நான் ஒரு நிகழ்வு நடத்த நினைத்தேன் .
நாவல் அத்தியாயம் மொத்தம் 99 . பெரிய நாவல் 469 பக்கங்கள் கொண்டது .
கோடை காலம் ,காற்றடி காலம் , மழைக்காலம் , பனிக்காலம் என நான்கு பாகங்கள் .
நாகு , ரத்னாவதி , வேணி , திருமா , வசந்தா , ஜெயக்கொடி , வடுவார்பட்டி குறவர்கள் லட்சுமணன் , ஈரத்துணி கள்ளன் சீனி ,லயோனல் , ஜெசிந்தா , துந்தனா வாசிக்கும் பரதேசிகள் , வேல்சிதுரை , சிங்கி கிழவன் , பண்டார மகள் , தேவானை ஜெயராணி ,மல்லிகா, சேது .வசந்தா , சங்கு ,கிட்நா , நாகுவின் தாத்தா , நாகுவின் அய்யா , அம்மா , அம்மாவோட மயினி ,பக்கிர் , பக்கிரின் மனைவி , ஆதி லட்சுமி , மரக்கடை வியாபாரி அஷ்ரப் , ரத்னாவதியின் அத்தை ,என்று நிறைய கதாபாத்திரங்கள் .
"மழை நீண்ட உரையாடலை ப்போல நகரோடு பேசி ஓய்ந்தது . மழை வெறித்த பிறகு தெருவில் இறங்கிப்போகின்றவர்களின் பேச்சு கூட நனைந்திருந்தது ." எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து நடை !
ஒரு பானை சோற்றில் இருந்து ஒரு சோறு இங்கே வைக்கிறேன் : "சிங்கிகிழவன் ஒரு திருடன் . செத்துப்போன சிங்கியுடன் ஆடு புலி ஆடுபவன் . சிங்கி கிழவன் குழந்தைகள் கழுத்தில் அணிந்த நகைகளை கழட்ட மாட்டான் . குழந்தைகள் ஏங்கிபோய் விடுவார்கள் என விட்டு ப்போய் விடுவான் !"
நெடுங்குருதி கருத்தரங்கம் பற்றி என் உரை பற்றி உயிர்மையில் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள் . கோவையில் இருந்து கூட வாசகர்கள் வந்திருந்தார்கள் .
நான் ஆரம்பமாக நாவலை அறிமுகப்படுத்தினேன் . தொடர்ந்து எஸ்.ராமகிருஷ்ணன் தன் படைப்பை பற்றி பேசிய பின் நானும் மீண்டும் நாவல் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினேன் . வாசகர்கள் கேள்வி பதில் என நிகழ்வு விரிந்தது .

2004 ல் நடந்த நிகழ்ச்சி . அதற்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து கோவை நண்பர் கவிஞர் தென் பாண்டியன் சொன்னார் . " நீங்கள் பேசிய விஷயங்கள் தான் பின்னர் நான் நெடுங்குருதி நாவல் படிக்கும்போது அதனை புரிந்து கொள்ள மிகவும் உதவியாய் இருந்தது . இன்றும் நெடுங்குருதி பற்றிய உங்கள் உரையை என்னால் மறக்க முடியவில்லை ."
திருப்பூரில் முகம் தெரியாத சிலர் என்னுடைய 'நெடுங்குருதி ' பேச்சு பற்றி இது போல அடிக்கடி குறிப்பிட்டார்கள் .
அந்த உரை மட்டுமல்ல .திருச்சியில் நான்காண்டுகள் தமிழ் இலக்கிய கழகத்தில் மணிக்கணக்கில் நான் பேசியதைகூட நான் எழுத்தில் கொண்டு வர முயற்சித்ததில்லை .
திருப்பூரில் கவிஞர் காயாதவன் ,நான் ஹெமிங்க்வே யின் கிழவனும் கடலும் நாவல் பற்றி நிகழ்த்திய உரை பற்றி தென் பாண்டியன் சொன்னதை போல அடிக்கடி குறிப்பிடுவார் .
திருச்சியில் ஒரு பேராசிரியர் தான் உரை நிகழ்த்தும் முன் சொல்வார்

"R P ராஜநாயஹம் போல என்னால் பேசமுடியாது .மணிக்கணக்கில் பேசினாலும் சுவாரசியம் குறையாமல் பேசுவார் . கேட்பவர்கள் ரசிக்கும்படியாக பேசுவார் "
நான் குறிக்கிட்டு சொல்வேன் “ I feel flattered!”
உடனே அவர் " flattery கிடையாது . இது தான் fact. எல்லோருக்கும் தெரிந்த உண்மை " என்பார் .
என் நண்பர் திருச்சி பேராசிரியர் காசியப்பன் சொல்வார் " உங்கள் ஆற்றல் எல்லாம் காற்றில் வீணாகிறது . எழுதாமலே !"

2 comments:

  1. without interest no one speak hrs
    without sarakku one cant admire people

    Base is ENERGY
    Neither created nor destroyed; it simply changes form.

    Now its in Blog form.

    Carry on RP

    More than 50 times I am opening ur blog in a day. Not only me...they are so many...

    ReplyDelete
  2. Yes I agee wholeheartedly with d.r.ashok. Your blog has an alluring quality which is irresistible.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.