Share

Oct 23, 2008

மண்வாசனை பாண்டியன் .

நேற்று விஜய் டிவி யில் ஏதோ போட்டிக்காக ஒரு இளைஞரும் பெண்ணும் பாடிய பாடலை கவனிக்க நேர்ந்தது . 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு , பூத்திருச்சி வெட்கத்தை விட்டு '

உடனே மறைந்த நடிகர் பாண்டியன் பற்றி நினைவலை .

அப்போது மண்வாசனை படம் தயாரிப்பில் இருந்தது .படம் ரிலீஸ் ஆகவில்லை .மதுரையில் மீனாக்ஷி யம்மன் கோவில் எதிரே என் நண்பர்கள் சவ்வாஸ் சகோதரர்கள் கடையில் பேசிகொண்டிருந்தேன் . அப்போது நடிகர் பாண்டியன் வந்தார் . சவ்வாஸ் நிஜாம் அறிமுகபடுத்தினான் . ' பாரதி ராஜா வின் புது படத்தின் ஹீரோ .'

நான் சொன்னேன் பாண்டியனிடம் ' பாரதி ராஜாவின் ஹீரோ என்பது சரி . ஆனால் நடிகர் சுதாகர் மாதிரி ( தமிழ் சினிமாவிலிருந்து )காணாமல் போய்விடாதீர்கள் . ' என்றேன் .

இன்று

உலகத்திலிருந்தே காணாமல் போய்விட்டார் . பாவம் .

1 comment:

  1. பாண்டியனின் வட்டார மொழி,
    தனி அழகு

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.