Share

Oct 11, 2008

கவிஞர் கம்ப தாசன்

கு.ப.ரா வின் சிஷ்ய பரம்பரை என்று தங்களைப்பற்றி அடையாளப்படுத்தி கொள்பவர்கள் உண்டு .
தி.ஜானகிராமன் , எம்.வி. வெங்கட்ராம் , கரிச்சான் குஞ்சு ,சுவாமினாத ஆத்ரேயன் , கவிஞர் கம்பதாசன் போன்றவர்கள் .

கவிஞர் கம்ப தாசன் . அழகானவர் . ரோமன் முக அமைப்பு கொண்டவர் .
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் சிவாஜி கணேசனுக்கு சந்திர பாபு ஒரு பாடல் பின்னணி பாடியிருக்கிறார் . " Jolly life! Jolly Life!! தாலி கட்டினால் Jolly life! " என்ற அந்த பாடலை எழுதியவர் இந்த கம்ப தாசன் !
'மல்லிகா ' படத்தில் " வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே , ஏனோ அவசரமே , என்னை அழைக்கும் வானுலகே " என்ற பாடலையும் கம்ப தாசன் தான் எழுதினார் .
பல டப்பிங் படங்களுக்கு பாடல்கள் எழுதினார் .

சோற்றில் ரசம் ஊற்றுவதற்கு பதிலாக பிராந்தியை ஊற்றி சாப்பிடும் அளவுக்கு போதை மன்னன் . பாரதிமணி யின் மாமனார் க.நா .சு இதை நேரில் பார்த்திருக்கிறார் .

பல நல்ல கலைஞர்கள் போல இவர் வாழ்க்கையும் வறுமை துயரில் முடிந்தது .
கம்ப தாசன் பற்றி சிலோன் விஜயேந்திரன் (இவர் இப்போது மறைந்து விட்டார் )ஒரு நூல் எழுதி வெளிவந்தது .

2 comments:

  1. பல அறியாத தகவல்கள்...நன்றிகள் பல.

    ReplyDelete
  2. Kambadasan has also written the beautiful songs 'Paarthal pasi theerum' (Mangayarkkarasi) and 'Arul thaaram deva maathave' (Gnanasoundari)

    N.Ramakrishnan

    a mail sent to R.P.Rajanayahem by N.Ramakrishnan

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.