Share

Oct 10, 2008

பெங்களூர் இரவிச்சந்திரன்

பிரதாப் போத்தன் நடிக்க வந்த புதிதில் குமுதம் அரசு கேள்வி பதில்

கேள்வி :பிரதாப் போத்தன் ?

அரசு பதில் : பத்து கமல் ஹாசனுக்கு சமம் .


கமல் ஹாசன் அப்போது எப்படி புண் பட்டிருப்பார் .

இது போல தான் இந்த எழுத்தாளர் பற்றியும் -
பெங்களூர் இரவிச்சந்திரன் !
சிலர் அப்போது சொன்னார்கள் . சுஜாதாவையே இவர் மிஞ்சி விடுவார் .
நம்புங்கள் .
என்னிடமே ஒருவர் இப்படி சொன்னார் . சுஜாதாவை இமிடேட் செய்த எழுத்தை பற்றி !! ' இவருடைய எழுத்து நடை சுஜாதாவை விட விறுவிறுப்பானது'



அந்த அளவுக்கு இவரது எழுத்து நடை ! விறுவிறுப்பு மிக்க எழுத்து !

சுஜாதாவின் நண்பர் என அறியப்பட்டார் . அவருடைய 'இந்திய பாஸ்போர்ட் ' சிறுகதை தொகுப்பை "இந்த புத்தகம் மட்டுமல்ல .இனி நான் எழுதி எத்தனை புத்தகங்கள் வந்தாலும் அத்தனையும் சுஜாதாவுக்கே சமர்ப்பணம் " என்று எழுதி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவர். சுஜாதா தான்
அதற்கு முன்னுரை . ரொம்ப சுவாரசியமான எழுத்து .
" பெண்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள் . தன்னுடைய காதலன் யார் என்பதை தன் கணவனிடம் கூட சொல்ல மாட்டார்கள் ."

சுஜாதா தன் நண்பர் என இரவிச்சந்திரனை பெருமையுடன் எழுத்தில் அடிக்கடி குறிப்பிடுவார் .
இரவிச்ச்சந்திரன் தன்னை " கவிஞர் புவியரசின் மாணவர் "என பெருமையுடன் குறிப்பிட்டு கொள்வார் .
அடுத்து "சிந்துவெளி நாகரீகம்" என சிறுகதை தொகுப்பு . அடுத்து" இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் " சிறுகதை தொகுப்பை பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு சமர்ப்பணம் செய்து விட்டார் . அப்புறம் ' இனி ஒரு சதி செய்வோம் ' என ஒரு தொகுப்பு .
இவர் கையெழுத்து மிக அழகாக இருக்கும் .
சுஜாதா இவரால் ரொம்ப பட்ட பிறகு ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டார்
" என்னுடைய அனுபவத்தில் கையெழுத்து அழகாய் உள்ள அயோக்கியனை பார்த்திருக்கிறேன்"
பண மோசடி இவரது பலவீனம் . ஏமாற்றி யாரிடமும் பெரும் தொகையை பறித்து விடுவார் .
இவருடைய இந்திய பாஸ்போர்ட் , சுயம்வரம் , பார்சல் போன்ற கதைகள் அதிசயிக்க தக்க தரமானவை .

ஒரு கட்டத்தில் இவரை எல்லோரும் புரிந்து கொண்டார்கள் .எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் .
என்ன ஆனார் என யாருக்கும் தெரியவில்லை .
சுஜாதா பலரிடமும் இவர் என்ன ஆனார் தெரியுமா என விசாரித்துகொண்டிருந்தார் .
இவரை அறிந்த எல்லோருமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விசாரித்துகொன்டார்கள் .
"இரவிச்சந்திரனை பற்றி ஏதாவது தெரியுமா ?" " எங்கே இருக்கிறார் தெரியுமா "

பதிலே கிடைக்கவில்லை .


இப்போது சுரேஷ் கண்ணன் இவரை பற்றி "தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்பட்டதாக இங்கே முந்திய பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளார் .




1 comment:

  1. I was just reading "Indira Gandhiyin Irandavathu Mugam" - Had several interesting stories in Sujatha style of writing.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.