Share

Mar 6, 2009

சென்னை ஹைகோர்ட் கலவரம் பற்றி சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட் சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் பற்றி மிக கடுமையான கண்டனத்தை முன் வைத்திருக்கிறது. வக்கீல்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறது . ரவுடிகள் , காலிகள்என்ற வார்த்தை பதங்களால் வக்கீல்களை சாடியிருக்கிறது ( Hooligans,Miscreants) இவை ஒன்றும் மிகையான வார்த்தைகள் அல்ல . போலீஸ் எந்த அளவுக்கு கொடூரமான அமைப்போ அதற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல வக்கீல்கள் . இவர்கள் செய்ய முயன்ற அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல . காலித்தனத்தை யாரும் தட்டிகேட்க கூடாது என்பது தானே இவர்களின் வாதம் .

இந்த சென்னை ஹைகோர்ட் கலவரம் பற்றி சாரு நிவேதிதா " வக்கீல்கள் -போலீஸ் மோதல் இரண்டு ரவுடிகளின் மோதல் " என்று எழுதியிருந்தது நூற்றுக்கு நூறு சரியானது .

இப்போது வக்கீல் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட் சொல்வதை ஏற்கமுடியாது என்று எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார்கள் . இவர்கள் கூட்டமாக தாங்கள் செய்வதை யாருமே தட்டி கேட்கவே கூடாது என்று பிடிவாதம் , அழிச்சாட்டியம் செய்கிறார்கள் . இவர்கள் மேலும் பிரச்னையை சிக்கலாக்க அடுத்த நடவடிக்கைகளில் இறங்குவார்கள் .

உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் மெத்தனம் கலவரத்திற்கான காரணங்களில் ஒன்று என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் . உயர் நீதிமன்ற நீதிபதிகள் வக்கீல்களிடம் தேவையில்லாத கரிசனத்தை காட்டியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் .அதாவது வக்கீல்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறார்கள் !

உச்சநீதிமன்றத்தின் இந்த விமர்சனம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.

4 comments:

  1. an honest comment by Srikrishna.. you cannot except any decent behaviour from the advocates in Tamilnadu, and in particular those who have affiliations with one kazhagam or other -- they behave as rowdies in law college, behave as hooligans in their profession, and feel they are second to the almighty!!

    ReplyDelete
  2. போலீஸ் இல்ல பொறுக்கி....வக்கீல் இல்ல வக்கிர ரவுடி....என நொடிக்கொருதரம் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. i know for a fact that in the USA and many of the developed countries, studying Law is the toughest thing. And very difficult to get in to. And the lawyers make a lot of money as well. Hence, it attracts very good talent.
    in india, studying law is the last option one takes. (barring a few). hence, it attracts those from bottom of the filth.
    this applies to cinema and cinema making as well.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.