Share

Mar 9, 2009

கண்ணில் தெரியும் கதைகள்

1 .முசாரப் டெல்லி வந்து இந்தியா டுடே கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்து விட்டார் . இவர் கார்கில் யுத்தத்திற்கு பின் அதிபராக முன்னர் டெல்லி வந்த போது இவர் வரும் பாதையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்போது ஒரு வீட்டையே இடித்தார்கள் . இப்போதும் அவர் தன்னை அதிபராகவே நினைத்து கொண்டு தான் ' இந்தியா விட்டு கொடுத்து அனுசரிக்காவிட்டால் இன்னும் நிறைய கார்கில்களை சரித்திரம் பார்க்க வேண்டியிருக்கும்' என பேசியிருக்கிறார் . பங்களா தேஷ் போர் , பாகிஸ்தான் பிரிவினைக்கும் இந்தியா தான் காரணம் என முசரப் சொல்லும்போது ' எங்கள் எதிர்ப்பு, ராணுவ அரசியல் நடவடிக்கைகள் பற்றி கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது . எங்கள் நாட்டையே சிதைத்து பிளவுபடுத்தியவர்கள் தானே நீங்கள்' என்ற தொனி தெரிகிறது .

முஸ்லீம் நாடு என தன்னை நினைக்கும் பாகிஸ்தான் தன் நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களை விட இந்தியாவில் அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுவது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் .

பாகிஸ்தானில் மற்றொரு திருப்பம் எந்த நேரமும் தயாராய் இருக்கும் போல .ராணுவ புரட்சி பற்றிய ஹேஷ்யங்கள் உலா வரும் வேளையில் ஜெனரல் கியானி(கயானி ?) விரலை உயர்த்தி அதிபர் சர்தாரியை 'ஒழுங்கா வேலைய பார்க்கலேன்னா பார்த்துக்க . நான் பிஸியாக வேண்டி வந்துரும் ' என்று கடுமையாக எச்சரித்துள்ளார் . அமெரிக்கா சொல்லி தான் கியானி இப்படி சர்தாரியை கண்டித்துள்ளாராம் .

2 .ஒரிஸ்ஸாவில் பதினோரு வருட பிஜேபி கூட்டணியை ஆளுங்கட்சி பிஜு ஜனதா தளம் இழந்தவுடன் உடனே உடனே ஓடிபோய் நவீன் பட்நாயக்குக்கு இடதுசாரிகள் நேசக்கரம் நீட்டுகிறார்கள் .

பேஷ் பேஷ் ..

3 .ஜெயலலிதாவின் இன்றைய 'பகல் லஞ்ச் தவிர்க்கும்' சின்ன உண்ணாவிரதம் வைகோவின் பொருந்தா கூட்டணி குற்றவுணர்வை நீக்கி விடுமோ ?

கொஞ்ச நேரம் மதியம் உண்ணாவிரத மகிமையை ஜெயா டிவி யில் பார்த்தேன் . அவனவன் சூடத்தை கொளுத்துரான் , துண்டை போட்டு தாண்டுறான் .தோப்புக்கரணம் போடுறான் . தெய்வத்திற்கு இடைவிடாத பூஜை .அம்மன்நடுவில் தேஜசுடன் ஜெகஜோதியாய் அமர்ந்து பூரிப்புடன் அத்தனை தீபாராதனையையும் அம்மா திருப்புகழ் மந்திரத்தையும் ஏற்று புன்னகைக்கிறார் .

இலங்கை மக்கள் துயரம் இவர்களுக்கு பொருட்டே இல்லை . அம்மா ஆராதனைக்கு ஒரு மேடை.

பலே பலே ..

"நீதி ,குற்றமற்ற தன்மை இரண்டுமே ஒன்று சேரமுடியாதபடி பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன . 'குற்றமில்லா தன்மை' சிலுவையிலும் 'நீதி ' அலமாரியிலும் காணப்படுகின்றன ."

இது ஆல்பர் காம்யு தன் " வீழ்ச்சி " நாவலில் சொல்வது.

4 comments:

  1. why invite a dictator and a fascist leader to our
    country and listen to his unwarranted comments and threats....!
    But one thing is clear.. that he has given a warning to India being present in India and that needs some guts I suppose...He has gone to the extend of declaring war
    right in front of all those so called VIP gathering..!
    Can any Indian do this in Pakistan and come out alive..!

    ReplyDelete
  2. to Arumugam, he can talk about india in india. (at least we have that freedom to certain extent). if the bozo talked about pakistan in pakistan, he'd have been history by now. it doesn't need any guts. all it takes is some common sense. Musharaf has lot of that and also he has the knack of shamelessly going back on his words and deny everything he has ever said.

    ReplyDelete
  3. //'பகல் லஞ்ச் தவிர்க்கும்' //

    நக்கல் ஸ்வாமி.

    ReplyDelete
  4. Also Musharraf participated in India Today Conclave over video conference from Islamabad.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.